Thursday, 26 October 2017

தமிழிசை தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா ?

சமூக ஊடகங்களில் தமிழிசை அவர்களின்  தோற்றத்தை கிண்டல் செய்து பல பதிவுகள் பார்த்து வேதனை அடைந்தேன் . தோற்றத்தை கிண்டல் செய்வது அயல் நாடுகளின் கலாச்சாரத்தில் இல்லை .ஏன் ,நம் இந்திய கலாச்சாரத்தில் ,குறிப்பாக தமிழக கலாச்சாரத்தில் அதிகம் உள்ளது ?
ஒருவரின் தோல் நிறத்தைக் கொண்டு ,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் என்று பிரிப்பது சாதிய கலாச்சாரத்தில் உள்ள ஒரு குணம் . தோற்றத்தையும் ,உடல் ஊனத்தையும்  கிண்டல் செய்வது அந்த குணத்தின்   இன்னொரு  வெளிப்பாடே .ஆதலால் தமிழ் கலாச்சாரத்தில் கருப்பாய் இருந்தால் யாரும் கிண்டல் செய்யலாம் என்று ஒரு அனுமதி உள்ளது .கிண்டலுக்கு ஆளாகி வெற்றி அடைந்த நடிகர்கள் வடிவேலு ,செந்தில் ,தவக்களை போன்றவர்கள் .கருப்பட்டி தலையா ,நாய் ,பேய் ...என்ன வேண்டுமென்றாலும் கருப்பாய் இருப்பவரை திட்டிக்கொள்ளலாம் .வெள்ளையாய் இருக்கும் ஹைச் .ராஜாவையோ ,விவேக்கையோ ,சரளாவையோ  அப்படி    திட்ட முடியாது !
ஆக , தோற்றத்தை கிண்டல் செய்வது சாதிய மரத்தின் ஒரு விஷக் கனி . விஷ  மரத்தை வெட்டாமல் , அந்த  கனியை அழிக்கமுடியாது .
(டுவிட்டரில் பதிவான என் கருத்து )

No comments:

Post a Comment