அழிந்தது போதும் அயலவன் கையால் !
வந்தாரை வாழவைப்பேன் !ஆனால் ,
வீட்டாரை விரட்டி அடிப்பேன் !
நான் தான் தமிழன் !
என் வீட்டில் நுழைந்தவர்
விருந்தினர் வேடத்தில் வந்த
கள்ளப் பருந்தினர் என்று
வேடம் கலைந்ததும் தான்
நன்றாய் விளங்கிக்கொண்டேன் !
உடன் விலகிக்கொண்டேன் !
படுக்கையில் என் பக்கத்தில் தூங்கியவன்
பகைவனா !ஐயகோ !
அவ்வளவு அப்பாவியா நான் !
கண்ணாடி பார்த்தேன் !
கண்ணீர் விட்டேன் !
நம்பிய என் முகம்
தெரிந்தது பூஜ்யமாக !
முதுகில் என்ன மூட்டை கனம் ?
முக்கி முக்கி தூக்கிக் கொண்டு அலைகிறேனே !
அது என்ன மூட்டை ஐயா !
வடுகரும் வடவரும்
மலை முகில் ஆட்களும்
ஐம்பது ஆண்டுகளாக என் முதுகில் ஆனந்தப் பயணம் !
நானோ அடிமைப்பெண் எம்ஜிஆர் போல
கூனி குறுகி,
ஆனாலும் ,’தமிழன்டா !’என்று கத்தும்
அப்பாவி தமிழன் !
அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து நாவலந்தீவு வரை
முடி முதல் அடி வரை
முற்றாய் வியாபித்திருந்த நான்
இன்று அடிமையாய் !
ஒரு சிறு நிலத்தில்
கற்பனை திராவிடர்கள் கீழ் கைகட்டி சேவகனாய் !
கணியன் பூங்குன்றனார் கண்ணில் பட்டால்
கையெடுத்து வணங்கி ,காலில் வீழ்ந்து ,
கேட்பேன் நான் ஒன்று !
‘அழித்துவிடய்யா எழுதியதை !
போதும் நாம் பட்டது !’
வந்தாரை வாழ வைத்தோம் !
வாழ வைத்தவர்களோ
நன்றிக்கடன் தீர்க்க நம்மை
அழவைத்தார்கள் !
வாழ வந்தவர்கள்
ஆள வந்துவிட்டார்கள் !
தமிழ் பேசி ஏமாற்றி !
போதும் !போதும் !
என் வீடு எனக்கே !
எம் நாடு எமக்கே !
எல்லோரும் சொல்வதை
நாமும் சொல்வோம் !
நலமாய் வாழ்வோம் !
நிலத்தை காப்போம் !
நல்ல ஒரு, நாட்டு நாயைப் போல !
Sundar excellent and truthful thoughts. Highly poetical.Late hours is for sleep. We nerd rest during retirement.My love to everyone.
ReplyDelete