Tuesday, 20 October 2020

விருந்தினரா இல்லை கள்ளப் பருந்தினரா ?

                                


பிழிந்தது போதும் தமிழனை சக்கையாய் !

அழிந்தது போதும் அயலவன் கையால் !

வந்தாரை வாழவைப்பேன் !ஆனால் ,

வீட்டாரை விரட்டி அடிப்பேன் !

நான் தான் தமிழன் !

என் வீட்டில் நுழைந்தவர்

விருந்தினர் வேடத்தில் வந்த

கள்ளப் பருந்தினர் என்று

வேடம் கலைந்ததும் தான்

நன்றாய் விளங்கிக்கொண்டேன் !

உடன் விலகிக்கொண்டேன் !

படுக்கையில் என் பக்கத்தில் தூங்கியவன்

பகைவனா !ஐயகோ !

அவ்வளவு அப்பாவியா நான் !

கண்ணாடி பார்த்தேன் !

கண்ணீர் விட்டேன் !

நம்பிய என் முகம்

தெரிந்தது பூஜ்யமாக !

முதுகில் என்ன மூட்டை கனம் ?

முக்கி முக்கி தூக்கிக் கொண்டு அலைகிறேனே !

அது என்ன மூட்டை ஐயா !

வடுகரும் வடவரும்

மலை முகில் ஆட்களும்

ஐம்பது ஆண்டுகளாக என் முதுகில் ஆனந்தப் பயணம் !

நானோ அடிமைப்பெண் எம்ஜிஆர் போல

கூனி குறுகி,

ஆனாலும் ,’தமிழன்டா !’என்று கத்தும்

அப்பாவி தமிழன் !

அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து நாவலந்தீவு வரை

முடி முதல் அடி வரை

முற்றாய் வியாபித்திருந்த நான்

இன்று அடிமையாய் !

ஒரு சிறு நிலத்தில்

கற்பனை திராவிடர்கள் கீழ் கைகட்டி சேவகனாய் !

கணியன் பூங்குன்றனார் கண்ணில் பட்டால்

கையெடுத்து வணங்கி ,காலில் வீழ்ந்து ,

கேட்பேன் நான் ஒன்று !

‘அழித்துவிடய்யா எழுதியதை !

போதும் நாம் பட்டது !’

வந்தாரை வாழ வைத்தோம் !

வாழ வைத்தவர்களோ

நன்றிக்கடன் தீர்க்க  நம்மை

அழவைத்தார்கள் !

வாழ வந்தவர்கள் 

ஆள வந்துவிட்டார்கள் !

தமிழ் பேசி ஏமாற்றி !

போதும் !போதும் !

என் வீடு எனக்கே !

எம் நாடு எமக்கே !

எல்லோரும் சொல்வதை

நாமும் சொல்வோம் !

நலமாய் வாழ்வோம் !

நிலத்தை காப்போம் !

நல்ல ஒரு, நாட்டு நாயைப் போல !

1 comment:

  1. Sundar excellent and truthful thoughts. Highly poetical.Late hours is for sleep. We nerd rest during retirement.My love to everyone.

    ReplyDelete