அவர்கள் பேசுவதை பார்த்தால் பல நேரம் நமக்கே ஒரு குழப்பம் வந்துவிடும். ஆமாம், இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது ;குரான் இருக்கிறது; வேதாகமம் இருக்கிறது.ஆனால் ,இந்த மனு தர்மம் எங்கிருக்கிறது ?யார் அதை அறிவார்? யார் அதை சொல்லிக் கொடுக்கிறார்? எந்த புத்தகக் கடைகளிலும் அது எளிதாக கிடைப்பதில்லையே ! அவ்வாறு இருக்கும்போது எப்படி அது வேலை செய்கிறது ?அது எப்படி நம்மை பாதிக்கிறது ? திருமா தான் ஏதோ குழப்புகிறாரோ ?என்றெல்லாம் நினைப்போம் . வாருங்கள் ,சிறிது ஆராயலாம்.
எல்லா நாடுகளிலும் சட்டம் என்பது ஒரே ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது .ஆனால் இந்தியாவில் மட்டும் சட்டம் செயல்படும் விதம் முற்றிலும் மாறாக ,ஒரு தனி விதமாக உள்ளது. எப்படி?
இந்தியாவில் மட்டும் சட்டங்கள் மூன்று வகைப்படும் .
1) எழுதப்பட்ட, செயல்படும் சட்டம்.
2) பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், எப்படித்தான் முயன்றாலும், செயல்படாத சட்டம். 3)மூன்றாவதாக, எங்கும் எழுதப்படாமல், ஆனால் தன்னாலே நிச்சயமாக செயல்படும் சட்டம்
என்று மூன்று விதமான சட்டங்கள் இந்தியாவில் உள்ளன .இது உங்களில் பலருக்கு மிகுந்த வியப்பை தரலாம் .பலர் இதை நம்ப கூட மறுக்கலாம்.மேலும் தொடர்ந்து படியுங்கள். எல்லாம் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும் .
இப்போது முதலாவது வகையான சட்டத்தை பார்ப்போம். இந்த வகை சட்டம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் எல்லோருக்கும் நிறைவேறும் ஒரு சட்டமாகும். இதில் நபருக்கு நபர் வேறுபாடு காட்டவேண்டிய தேவை அதிகம் இருக்காது .எடுத்துக்காட்டாக, போக்குவரத்து சட்டங்களை சொல்லலாம் .இரண்டாவது வகையான சட்டங்கள் சற்று வித்தியாசமானவை .அவைகள் ஒவ்வொரு சமூகத்தையும் ,சாதியையும் , மதரீதியான பழக்கங்களையும் பாதிக்கக்கூடிய சட்டங்களாகும் . அதாவது மனு நீதிக்கு எதிரான சட்டங்கள் இவைகள்.அப்படிப்பட்ட சட்டங்கள் ,என்னதான் நாம் முயன்றாலும் செயல்படுத்த முடியாத சட்டங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொண்டுவரப்பட்ட வன்கொடுமை சட்டத்தை சொல்லலாம். இதில் பாதிக்கப்பட்டவர் என்னதான் முயன்றாலும், அவர் உயர் நீதி மன்ற நீதிபதியாகவே இருந்தாலும், அந்த சட்டத்தை செயல்படுத்தவே முடியாது.காரணம்,அந்த சட்டத்தை செயல்படுத்தும் உயர் சாதி அதிகாரிகள் எல்லோரும் மனுநீதிக்கு கட்டுப்பட்டவர்கள். அதை நிச்சயம் செயல்படுத்த விடமாட்டார்கள்.அதற்கான மறைந்திருக்கும் உள்நோக்கம் என்ன என்பதை பின்னர் விளக்குகிறேன்.
இந்த இரண்டாவது வகையான சட்ட த்தைப்பற்றி விளக்க நீதிபதி கர்ணன் வழக்கை எடுத்துக்கொள்ளலாம் .இந்த நீதிபதி கர்ணன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாகும் . அவரை அவர் சாதியின் அடிப்படையில், சக நீதிபதிகளால் புறக்கணிக்கப்பட்டு ,அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார் .அந்த சம்பவத்தின் முழு விபரங்களும் கீழ்க்கண்ட இணைப்பில் ஆங்கிலத்தில் காணலாம் .
அதை எதிர்த்து அவர் எல்லாவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து பார்த்தார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இறுதியாக தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வன்கொடுமை சட்டத்தின் சரத்துக்களை உபயோகித்து, அவரை துன்புறுத்திய நீதிபதிகள் மேல் தகுந்த ஆணை,உயர்நீதிமன்ற நீதிபதி என்ற முறையில் அவரே பிறப்பித்தார். ஆனால் கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதிலும், அவருக்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இருந்தும், அவரது ஆணைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் எந்த நீதிபதிகளை அவர் குற்றம் சாட்டினாரோ, அவர்களே அவர்கள் வழக்கை விசாரித்து, கர்ணனுக்கு,நீதிமன்ற அவமதிப்பு என்று ஆறு மாதம் சிறைத் தண்டணை வழங்கினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களே அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என்பது சட்டம் .ஆனால் அதை யெல்லாம் மீறி,அவர்கள் விசாரித்தார்கள் .அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றாலும் ஊடகங்களோ, ஜனாதிபதியோ இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவில்லை. இதைக் குறித்து ஜனாதிபதிக்கு கர்ணன் மனு கொடுத்தும், ஜனாதிபதியே இதில் தலையிட வில்லை. ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை இன்னொரு நீதிபதி தண்டிக்க முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றம் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதை 'IMPEACHMENT ' என்று சொல்வார்கள். ஆனால் அது எல்லாம் செய்யாமல் நீதிபதி கர்ணன் மீது ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நிறைவேற்றி விட்டார்கள். வேறு எந்த நாட்டிலும் இப்படி நடக்க சாத்தியமே இல்லை. மொத்தத்தில் இது முழு அராஜகம் தான்.மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் !என்போருக்கு இந்த சம்பவம் ஒரு சரியான பதிலாக அமைந்துள்ளது .
சமீபத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு நீதிபதியை அவமதித்ததாக அவர்மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டு, அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார் . அவர் உயர் ஜாதி சேர்ந்தவராதலால் அவருக்கு இறுதியில் ரூ 1 மட்டும் தண்டத் தொகையாக கட்டி விட்டு விடுதலை செய்து விட்டார்கள் ! இதுதான் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மேலான மனு தர்மம் !மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் ! என்பவருக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு .அந்த கதை இதோ !
இதோ மனுநீதி செயலில் இருக்கும் அன்றாட காட்சிகள் !
1.சாதி மறுப்பு திருமணம் செய்தால் கொலை செய்வார்கள் !
எல்லா நாடுகளிலும் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அது சட்டப்படியான திருமணம் ஆக அமைந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.ஆனால் , இந்தியாவில் மட்டும் அவர்கள் ஒரே சாதியாக இருந்தால் தான் மணம் செய்து கொள்ள முடியும். இல்லை என்றால் பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள்.இது மனுநீதியின் தாக்கம் .
2.தீண்டாமை கடைபிடிப்பு
மதுரை அருகே ஒரு ஊரில் ,இன்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செருப்பு அணியாமல் உயர்சாதி தெருக்களில் நடந்து செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் இறங்கி அதை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும்.
3.இன்னும் பல !(அருணன் கீச்சுகள் )
- எங்கே இருக்கிறார் மநு? சாெந்த சாதி திருமணத்தில் இருக்கிறார்!
- எங்கே இருக்கிறார் மநு?அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பதில் இருக்கிறார்!
- எங்கே இருக்கிறார் மநு? பாெதுத்துறை ஒழிப்பில் இருக்கிறார்! அங்குள்ள இடஒதுக்கீடு ஒழிப்பில் இருக்கிறார்!
- எங்கே இருக்கிறார் மநு? நாடாளுமன்றம்-சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மறுப்பில் இருக்கிறார்!
- எங்கே இருக்கிறார் மநு? 50% இடஒதுக்கீடு மறுப்பில் இருக்கிறார்!
- தொடரும் இந்த பட்டியல் .....
- --------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment