தமிழ் நாடு சட்டசபை தேர்தல் 2021 ,தமிழகத்தின் ,தமிழ் இனத்தின் வாழ்வா சாவா போராட்டம் என்றால் அது மிகையாகாது .தமிழக மக்கள் முன் தெளிவான 3 தேர்வுகள் உள்ளன .
1) தமிழ் இனத்தை ,பண்பாட்டை ,மொழியை ,பொருளாதார வாய்ப்புகள் எல்லாவற்றையும் அழிப்பதை வெளிப்படையான கொள்கையாக அறிவித்து வாக்கு கேட்கும் ஆரிய மலர் கட்சியும் ,தமிழ் இனத்தை பலியிட்டு ,சுய லாபம் தேடும் ஒரு இலைக்கட்சி கூட்டு .
2)தமிழர்களை ஆரிய பேயிடமிருந்து காப்பாற்றும் பலமுள்ள திராவிடப் பேய் கட்சி கூட்டு .
3)தமிழ் தேசியம் பேசும் ,ஆட்சியில் முன் அனுபவமில்லாத ,நாம் தமிழர் கட்சி .
இதில் யாருக்கு வாக்கு போடக்கூடாது என்பது வெகு முக்கியமானது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் பாஜகவை அதன் கூட்டணியை ஏன்_நிராகரிக்க_வேண்டும்..?
#காரணம்_1
பாஜக தமிழர்களுக்கான கட்சியல்ல..! அது தமிழரல்லாத பார்ப்பனர்களின் நலன் காக்கும் கட்சி..!!
#காரணம்_2
பாஜகவின் தேசிய கலாச்சாரம் தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை..!!
#காரணம்_3
பாஜக தமிழரல்லாத வட இந்தியர்களின் வாழ்வியலை முன்நிலைப்படுத்துகிறது..!!
#காரணம்_4
தமிழர்களிடம் வழிபாட்டு முறையில் வேறுபாடுகள் இருந்தாலும், நம் வாழ்வியலில் வேறுபாடுகள் இல்லை. பாஜக அதில் வேறுபாட்டை விதைக்க முனைகிறது..! அதை தமிழகம் ஒருநாளும் ஏற்காது..!!
#காரணம்_5
பாஜக முன்வைக்கும் தேசியம் இந்து தேசியம். தமிழகம் மதவழி தேசியத்தை ஒருநாளும் ஏற்காது..!!
#காரணம்_6
பாஜகவின் மொழிக்கொள்கை தமிழை மூன்றாம் தர மொழியாக்கி இந்தியை, சமஸ்கிருதத்தை முன்நிறுத்துகிறது..!! தமிழர்கள் தங்கள் மொழியை விழியாக கருதுகின்றனர்..!
#காரணம்_7
பாஜக மக்களின் ஒற்றுமையை விரும்பாத கட்சி..! தமிழகமோ யாதும் ஊரே, யாவரும் உறவே..! ( கேளிர் ) என்ற உயரிய கொள்கையை உலகிற்கு அளித்த மண்..!
#காரணம்_8
பாஜகவின் தேசிய முழக்கத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது..! தமிழர்களின் ஆளுமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர்..!
#காரணம்_9
பாஜகவின் மேட்டிமை தன்மையை சுயமரியாதையுள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கட்சி உயர்சாதியினரின் நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பதால் சமூக நீதி மண்ணான தமிழகத்தில் பாஜகவால் வேர்ப்பிடிக்க இயலாது..!!
#காரணம்_10
தமிழர்களை, தமிழ் மொழியை, தமிழரின் பண்பாட்டை, அவர்தம் கலாச்சாரத்தை தொடர்ந்து அவமதித்து வரும் பாஜகவை தங்களுக்கான இயக்கமாக தமிழர்களால் ஏற்க முடியாது.. !
(இதன் ஆசிரியர் பெயர் தெரியாது.நல்ல கருத்துக்களுக்காக பகிர்கிறேன் )
No comments:
Post a Comment