உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் மொழிக்கு பலவிதமான சிறப்புகள் உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அந்த மொழியை பேசும் தமிழ் இனத்தை அழிவினின்று பாதுகாக்கும் ஒரு பெரும் படையாகவும், பாதுகாப்பு அரணாகவும் தமிழ் மொழி இருப்பது தான்.
அதாவது தமிழை கைவிடாமல், எல்லா சூழ்நிலையிலும், தமிழையே பேசிக் கொண்டிருந்தால், தமிழினத்தை ஒரு காலத்திலும் அழிக்க முடியாது என்னும் பெரும் உண்மையை தமிழ் இனம் உணர்ந்ததால் தான் , தமிழை எப்போதும் போற்றி பெருமைப்படுத்தி கொண்டிருந்தார்கள்.
இப்படி தமிழ் மொழி, தமிழர்களுக்கு ஒரு பெரும் பாதுகாப்பு படையாக செயல்படுவதை அறிந்த தமிழினத்தின் எதிரிகள், தமிழ் இனத்தை வீழ்த்த ஒரே வழி, அவர்களுடைய மொழியை முதலில் அழிப்பது தான் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் /வைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஆரியர்கள், வடமொழியை புகுத்தி தமிழ் இனத்தை அழிக்க முற்பட்டார்கள். இப்போது பல ஆரியர் அல்லாதவர்கள், குறிப்பாக தெலுங்கர்கள்,அதே உத்தியை பயன்படுத்தி, வடமொழியான சமஸ்கிருதத்தை கொண்டு, தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஆக , தமிழர்கள் தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற எளிதான ஒரு வழி என்னவென்றால், எல்லோரும் சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மட்டும் பேச வேண்டும். உடனே, இனத்தின் விடுதலை ஆரம்பமாகிவிடும்.
தமிழர்களுக்கு எதிராக போரிடுபவர்கள், ஒரு நாளும் படைக்கலன்களோடு வந்து நேரடியாக போராடுவதில்லை . அப்படி வந்தால் அது தமிழர்களுக்கு எதிரான போர் என்று தெரிந்துவிடும். மாறாக, மறை முகமாக கருத்தியல் ரீதியாக போர் தொடுத்து, அதை தொடர்ந்து தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மறைமுகப் போர் என்பதால், அதனால் தாக்கப்பட்டு பலவீனப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அது தெரிவதில்லை. அப்படி ஒரு உணர்வு வருவதும் இல்லை.இதை அவர்கள் தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அந்த மறைமுக போருக்கு,முக்கியமான ஆயுதம் என்னவென்றால் சமஸ்கிருத சொற்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சமஸ்கிருத சொல்லுக்கு அழிக்கும்/குழப்பும் பெரும் திறன் உள்ளது என்பது இதை தீர ஆராய்ச்சி செய்த மொழி அறிஞர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
நான் என்ன சொல்கிறேன் என்பது பலருக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம். ஆதலால் அதை விளக்கு முகமாக ஒரு சிறிய எடுத்துக்காட்டை சொல்லுகிறேன்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி சொன்ன ஒரு கருத்து அகில இந்திய அளவில் பேசு பொருளாக மாறி நீதிமன்றத்திற்கு கூட சென்று விட்டது. அவர் சொன்ன கருத்துக்கு எதிராக பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்கள் .அவர் அப்படி என்ன தான் சொன்னார்.
"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் "என்று பேசினார்.
ஆதாரம் :https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-sanatana-dharma-row-did-rahul-gandhi-call-a-senior-dmk-leader-on-the-issue-536093.html
"சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்."என்று அவர் சொன்னதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது .இதோ சனாதனம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு அகராதி தரும் பொருள்.
ஆதாரம்: Sanskrit Dictionary
ஆக, சனாதனம் என்கிற ஒரு சொல்லே சமஸ்கிருதத்தில் கிடையாது என்பது தெளிவாகிறது. அப்படி இல்லாத ஒரு சொல்லுக்கு, ஒரு இல்லாத பொருளை கற்பித்து ,ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் அதை பொருள் கொள்வது, சமஸ்கிருதத்தின் ஒரு தனி குழப்பும்/அழிக்கும் திறன் என்று சொல்லலாம். இந்த சொல்லுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு பொருள் இல்லாத வரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதை பொருள் கொள்ளலாம். அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் அவர் பேசியது தவறு என்று சொல்ல முடியும் ?
அப்படி ஒரு குழப்பமான சிந்தனையை விதைக்கும் திறன் தான் சமஸ்கிருத சொற்களுக்கு உள்ளது. இப்போது இதையே தமிழாக்கி பேசினால் என்ன ஆகும்? முயன்று பாருங்கள். தமிழில் அப்படி ஒன்றும் பேச முடியாது. தமிழில் என்ன பேசினாலும் அதற்கு ஒரு நேரடி பொருள்தான் கற்பிக்க முடியும். குழப்பமான பொருள் கற்பிக்க முடியாது. இந்த ஒரு சொல்லைக் கொண்டு சமஸ்கிருத சொற்களின் திறனை ஓரளவு புரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அதுபோல இன்னொரு சொல்லை பார்ப்போம். JUSTICE என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராக சமஸ்கிருதத்தின் சொல் 'தர்மம்' என்பதாகும் . ஆனால், தர்மம் என்பதன் மக்கள் புரிந்து கொண்ட பொருள் என்னவென்றால்' அநியாயம்'என்பதாகும் .ஏனென்றால், தர்மம் என்றால்' சாதிக்கேற்ற நீதி', அப்படியென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி!அது ஆங்கிலத்தில் INJUSTICE .ஆக ,JUSTICE என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் INJUSTICE என்ற ,நேர் எதிர்மறையான பொருள் கொண்ட ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள்!😂😂
இனி, இதை போல் தமிழ் இனத்திற்கு முக்கியமான இன்னொரு சொல்லுக்கு வருவோம்.தமிழ்நாட்டில் வாழும் மற்ற மாநிலத்தவர், குறிப்பாக தெலுங்கர்கள், கடந்த சுமார் 50 வருடங்களாக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால்,தெலுங்கர்கள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பல தமிழர்கள் இன்னும் உணரவில்லை. உணர முடியவில்லை.பல தமிழர்கள் அந்தத் தகவலையே சந்தேகத்துடன் தான் கேட்கிறார்கள். பல தமிழர்கள் அதை இன்னும் நம்புவதில்லை. இதற்கு என்ன காரணம்?
இப்படி 5% தெலுங்கர்கள் ,85% தமிழர்களை எளிதாக ஆள்வதற்கு, அவர்களிடம் தனியாக ஒரு பெரும் படையோ அல்லது ராணுவமோ இல்லை .தெலுங்கு விட்டலாச்சாரியா படங்களில் வருவது போல் ஒரு மாய மோகினியும் மந்திரக்கோலும் இல்லை.பின்னர் எதைக் கொண்டு அவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள் ?
அவர்களின் வெற்றிக்கு காரணம் ஒரே ஒரு சமஸ்கிருத சொல் தான் ! அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மந்திரச்சொல். அதைக் கொண்டுதான் வீழ்த்த முடியாத தமிழ் இனத்தை வீழ்த்தி விட்டார்கள்!அந்த மந்திர சொல் தான் திராவிட என்னும் சொல்.அப்படி அந்தச் சொல்லில் என்னதான் இருக்கிறது? இதோ இதை படித்து பாருங்கள்.புரியும் .
திராவிடம் என்ற பெரும் சூழ்ச்சி
இந்த அரசை 'திராவிட மாடல் 'அரசு என்று சொல்கிறார்கள்.நாங்கள் 'திராவிட'இனத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள் . இப்போது நடப்பது 'திராவிட ஆட்சி 'என்று சொல்கிறார்கள். உண்மையில் தெலுங்கர்கள் தான் ,இந்த திராவிட முகமூடி அணிந்து நம்மை ஆள்கிறார்கள் என்பது ஏன் நமக்கு தெரிவதில்லை?ஏனென்றால், தமிழர்களும் அந்த திராவிட இனம் தான் என்று காலம் காலமாய் பொய் சொல்லி தமிழர்களை எல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள் . நான் கூட என் பள்ளி நாட்களில், தமிழர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக அவ்வாறு சொல்லி, தமிழர்கள்,தெலுங்கர்கள் எல்லாம் ஒரே இனம் தான். இந்த இனத்தின் பெயர் தான் திராவிடம் என்று ஒரு மா பெரும் பொய் சொல்லி,அதைக் கருவியாக கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆக, 5% தெலுங்கர் நம்மை ஆளும் போது, நம் திராவிட இனம் தான் நம்மை ஆளுகிறது என்ற ஒரு மாயையை உருவாக்கி நம்ப வைத்து விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில், அவர்களை எப்படி வீழ்த்துவது? முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். அதுபோல சொல்லை சொல்லால் தான் வீழ்த்த முடியும். எந்த சொல்லினால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ,அந்தச் சொல்லை தமிழர்கள் பயன்படுத்தாமல், அதற்குப் பதில், அதற்கு நிகரான தமிழ் சொற்களை பயன்படுத்தினால் போதும். உடனே விடுதலை ஆரம்பமாகிவிடும் .எப்படி ?
தமிழர்கள் எல்லோரும் தங்களுடைய பேச்சில்/ வழக்கில் தமிழ் சொற்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் .எந்த காரணம் கொண்டும் சமஸ்கிருத சொல் பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்யும் போது ,'திராவிட மாடல்' என்பது தமிழாக்கினால் 'தெலுங்கர் மாடல் 'என்று வரும்! ஆக,தமிழர் மாடல் அல்ல என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். 'திராவிடர் ஆட்சி' என்று சொன்னால் அதை தமிழில் 'தெலுங்கர் ஆட்சி'என்று சொல்ல வேண்டியிருக்கும் . உடனே தெரிந்து விடும், 85 சதவீத தமிழர்களை 5 சதவீத தெலுங்கர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற பெரும் உண்மை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிடும். 'திராவிட கழகம்' என்றால்' தெலுங்கர் கழகம்'என்று தமிழில் வந்துவிடும். 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று சொன்னால் 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று பொருள்படும்.ஆக தமிழர் கட்சி அல்ல திமுக என்பது தெரிந்து விடும். தமிழர் கட்சி என்றால் ' தமிழர் முன்னேற்ற கழகம் 'என்று பெயர் வைக்கலாமே !ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி எழும்.
இந்த கருத்து உருவாக்கம் வலுப்பெற்று இறுதியில் ,தமிழர் VERSUS தெலுங்கர் என்னும் அரசியல் நிலைப்பாடு வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். கே.என். நேரு என்றால் தெலுங்கர் என்று சொல்ல வேண்டி இருக்கும். கருணாநிதி என்றால் தெலுங்கர் என்று சொல்ல வேண்டியிருக்கும்.வைகோ , வெங்கடேசன், விஜயகாந்த் எல்லோரும் தெலுங்கு மன வாடு கூட்டம் என்பது மக்களுக்கு தெரிய வரும்.
மொத்தத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மைகள் எல்லாம் அம்பலம் ஆகிவிடும். தேர்தல் சமயத்தில் தமிழர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்,தெலுங்கர்களுக்கு வேண்டாம் என்ற முறையில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யலாம். தெலுங்கர்கள் இதுவரை செய்து வந்த ஏமாற்று வேலை ஒவ்வொன்றும் தெரிய ஆரம்பிக்கும். இறுதியில் தமிழ் தேசியம் மலரும்.
அந்த ஒரு சொல் அப்படி ஒரு பெரிய மந்திரம் சொல்லாக இருக்கிறது. எங்கெங்கு திராவிடம் என்று சொல் வருகிறதோ அங்கங்கு அதற்கு ஏற்ற தமிழ் சொல்லை பயன்படுத்தி பாருங்கள்.வெற்றி நிச்சயம். இதை ஒரு தனித்தமிழ் இயக்கமாக கொண்டு வந்து பிரபல படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி எப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது,தமிழை விட்டுவிட்டு வேறு மொழி சொற்களை பயன்படுத்தினால் தமிழனை அடிமையாக்கி விடலாம் என்ற பெரும் உண்மையை தமிழர் உணர ஆரம்பிப்பார்கள்.இறுதியில் ,தமிழினால் பாதுகாக்கப்பட்ட, ஒரு வீழ்த்த முடியாத, இனமாக தமிழர்கள் மாறிவிடுவார்கள். அப்படித்தானே அவர்கள் இருந்தார்கள் சமஸ்கிருதம் என்ற மொழி வரும் வரை!