Friday, 24 August 2018

தமிழ் நாடு தமிழர் கையை விட்டு மெதுவாக நழுவுகிறதா ?

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தமிழ் நாட்டின் ஒரு சிறந்த அடையாள உணவாக உருவெடுத்து உலகெங்கிலும் பேசப்பட்டு வரும் ஒரு உணவு  .சமீபத்தில் சென்னையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி  கடைக்கு சென்று பார்த்தால், உணவு ஆணை எடுப்பவருக்கு தமிழ் தெரியாததை கண்டு திடுக்கிட்டேன் .தமிழ் நாட்டில் ,தமிழ் உணவிற்கு ,தமிழ் அறியாத ஒரு வடவர் ,அதுவும் தமிழ் நாட்டின் தலை நகரில் ஆணை எடுப்பது எதை காட்டுகிறது ?
                                             நீங்கள் சொல்லலாம் ,தமிழர்கள் கூடத்தான் வட இந்தியாவில் வேலை செய்யவில்லையா ?மும்பையில் எவ்வளவு தமிழர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ?நாம் அங்கு செல்லும் போது ,அவர்கள் இங்கு வருவதில் என்ன தப்பு ?நியாமான கேள்விதான் !
                                 தமிழர்கள் அங்கு செல்வதற்கும் ,வடவர் இங்கு வருவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது .தமிழர் அங்கு சென்றால் இந்தி படித்து அங்குள்ளவர்களை மதித்து வேலை செய்வார் .அங்கு வேலை செய்து பிழைப்பதை தவிர ,பெரிய அளவில் சொத்துக்கள் வாங்குவதோ ,அவர்களை அடக்கி ஆளவோ நினைப்பதில்லை .ஆனால் ,இங்கு வரும் பானி பூரிக்காரர்கள் கூட தமிழ் கற்பதில்லை ,வரும் போதே அவர்கள் பணிவோடு வருவதில்லை .ஒரு ஆளப்பிறந்தவரின் ஆணவத்தோடு தான் வருகிறார்கள் .இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று தப்பாக ஆனால் உறுதியாக நம்புகிறார்கள் .படித்தவர் ஆனாலும் பாமரர் ஆனாலும் மோதியைப் போல் அதை உண்மையென்று நம்புகிறார்கள் .
                                  மெதுவாக ஆனால் ஒரு திடமான திட்டத்தோடு அவர்கள் காய் நகர்த்துகிறார்கள் .ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற தமிழ் நாட்டின் எல்லா மத்திய அரசு நிறுவனங்களிலும் பெருமளவில் வடவர்கள் நுழைந்து கொண்டு இருக்கிறார்கள் .ஊழியர்கள் எண்ணிக்கையில் தமிழ் நாட்டின் நிறுவனங்களில்   தமிழர்களின் சதவிகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது ஒரு உண்மை .நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தக்காரர்கள் கூட வடவர்கள் அதிகம் வந்து ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் .தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ,தபால் காரர் போன்ற வேலைக்கு கூட வடவர்கள் ஏதோ சித்து வேலை செய்து வருவதை நாம் கண் கூடாக காண்கிறோம் .தமிழர்களை போல் அவர்கள் அற வழியில் தான் பதவிக்கு வர வேண்டும் என்று எண்ணுவதில்லை .தேர்வு கேள்வி தாளை விலைக்கு விற்பது ,வாங்குவது ,விடைகளை பார்த்து எழுதுவது எல்லாம் அவர்கள் பண்பாடு .அவர்களிடம் அந்த வழியில் தமிழர் போட்டி போட நிச்சயம் முடியாது .
                                     இந்தியின் ஆதிக்கம் தென் தமிழ் நாட்டின் எல்லை வரை வந்து விட்டது .கோவையில் 'க்சிப்ட்ட 'என்று அசிங்கமான வடமொழி பெயருடன் ஒரு பல்லடுக்கு வீட்டு வசதி கட்டப்பட்டிருக்கிறது .இதுபோல் பல ,வாயில் நுழையாத வடமொழி பெயருடன் கோவையில் முளைத்திருக்கிறது .வடவர்கள் தமிழ் நாட்டின் பெருவீட்டு திட்டங்களில் அதிகம் நுழைந்து விட்டனர் என்பது கண்கூடு ..அங்கிருக்கும் காவல்காரர்கள்க்கு கூட   தமிழ் தெரியாது .
                                          தமிழ் நாட்டின் விமான நிலையங்களில் இந்தி ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது .சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் காவலர் ஒருவர் ,தமிழில் பேசிய பயணியிடம் இந்தியில் திமிராக பதில் சொல்லி தகராறு ஆகியது .தமிழ் நாட்டில் வேலை பார்க்கும் எவருக்கும் தமிழ் தெரிய வேண்டும் என்பது இன்னும் கட்டாயமாக்கப் படவில்லை .சிங்கப்பூர் விமான சேவை ,பிரிட்டிஷ் விமான சேவையெல்லாம் தமிழில் அறிவிப்பு செய்யும் போது ,தமிழின் பிறப்பிடமான இந்தியாவில் அதை புறக்கணிப்பது எப்படி நியாயம் ஆகும் ?
                                            ஆக ,தமிழ் நாட்டில்  தமிழர் இடம் ,மொழி ,பண்பாடு எல்லாம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது .தமிழ் நாடு தமிழர் கையயை விட்டு நழுவிக் கொண்டிருப்பதை இன்னும் கூட  நாம் உணரவில்லை என்றால் நாம் அறிவில்லாதவர்கள் என்று தான் பொருள் .
சரி ,இதற்கு தமிழர் என்ன செய்யலாம் ?
                                           தமிழ் நாட்டின் இந்த பரிதாப நிலைக்கு வடவர்கள் மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது .இதற்கு  பெரும் பொறுப்பு தமிழர்கள் தான் என்றால் அதையும்  மறுக்க முடியாது .எப்படி தமிழர்கள் இதற்கு பொறுப்பாக முடியும் ?
  • தமிழ் நாட்டில்  வேலையில்லாத தமிழர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் ?டெக்கான் கிரோனிகில் செய்தி படி 2018 ல்  1 கோடி பேர்  தமிழகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் .(தமிழ் நாட்டில் வேலையின்மை ) ஆனால் ,இவர்களுக்கு வேலை கொடுக்காமல் 10 லட்சம் வட இந்தியர்களை தமிழ் நாட்டில் வேலைக்கு இறக்கு மதி செய்து கொண்டு வருவது யார் ? வட வர்களா ? இல்லை !பெரும்பாலும் தமிழ் முதலாளிகள் தாம் முகவர்கள் மூலமாக அவர்களை இங்கு பணியமர்த்துகிறார்கள் . எடுத்துக்காட்டாக ,கோவை மருத்துவ மையத்தில், எங்கு பார்த்தாலும் ,தமிழில் ஒரு சொல் கூட தெரியாதவர்கள் தாம் ,உணவக சேவையிலும் சுத்தம் சேவையிலும் இருக்கிறார்கள் .ஏன் தமிழர்கள் தமிழர்களை பணியமர்த்தக் கூடாது ?உலகெங்கும் தமிழர்கள் வேலை செய்யும் போது தமிழ் நாட்டில் மட்டும் ஏன் செய்ய மாட்டார்கள் என்று நினைக்க வேண்டும் ?
  • அடுத்ததாக ,இங்கு உணவகத்தில் வேலை செய்யும் வடவரிடம்  'தண்ணி கொண்டு வா 'என்றால் அவர்கள் பாட்டுக்கு கேளாதது போல் போய் விடுகிறார்கள்.இதற்கு காரணமும் தமிழர் தான் .இறக்குமதி செய்யப்பட்ட  அவர்களுக்கு அடிப்படை தமிழ் கூட சொல்லி கொடுப்பதில்லை .அவர்களாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களுக்கு நாமாக தமிழ் சொல்லிக் கொடுத்தால் ,ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயமாக பயனடைவார்கள் .இப்போது வட மானில தொழிலாளர்களுக்காக தமிழ் கடை உரிமையாளர்கள் இந்தி படிக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள் .குறிப்பாக ,அலைபேசி மறு ஊட்டம் செய்ய வரும் வட வர்களிடம் பேச இந்தி படிக்கும் நிலை வருகிறது .கேரளா வரும் வடவர்களுக்கு ,கேரள அரசே இலவசமாக மலையாளம் கற்றுக் கொடுக்கிறது .அது போல் தமிழக அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ செய்யலாமே !
  • தமிழ் நாட்டின் பணம் சுரக்கும் பசுக்கள் எல்லாம் அந்நியர் கையில் தான் உள்ளது .எடுத்துக்காட்டாக ,தமிழ் திரை துறையை சொல்லலாம் .மலையாளத்து மக்கள் திலகம் கன்னடத்து பைங்கிளியோடு ஆட ,பின்னணியில் ஆந்திர குயில் சுசிலா பாட கைத்தட்டலோடு காசும் கொடுப்பது மட்டும் ஏமாந்த தமிழர்கள் !எல்லோரையும் வரவேற்கும் தமிழனை மதிக்கிறார்களா வந்தவர்கள் ?இல்லை ,வீட்டார்களுக்கு விருந்தாளிகள் குழி பறிக்கிறார்களா ?விடை உங்களுக்கே தெரியும் !
  • காட்சி ஊடகங்களில் இந்தி விளம்பரங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் அதன் தமிழ் உரிமையாளர்களே .அவைகளை காட்ட முடியாது என்று தமிழுக்காக அவர்கள் மறுப்பதில்லை .பணத்திற்காக தமிழை விற்று விடும் அவல நிலையை தான்  காண்கிறோம் .
  • மத்திய அரசின் திட்டங்களை புரியாத இந்தியில் விளம்பரம் செய்து ,தமிழர்களுக்கு அதன் பயன் கொஞ்சமும் செல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் .எடுத்துக் காட்டாக ,மலிவு விலையில் மருந்து கிடைக்க ஒரு மத்திய அரசின் திட்டம் உள்ளது .இதன் பெயர் வாயில் நுழையாத 'ஜன் அவவ்சதி  கேந்திர '.எந்த தமிழருக்கும் இது புரிய வாய்ப்பில்லை .புரியாததால்  இந்த திட்டத்தின் கீழ் தமிழர்கள் பயன் பெற மாட்டார்கள் .இந்த போக்கை தமிழக அரசு எதிர்த்து ,அந்த திட்டங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் பெயரிட வலியுறுத்தலாம் .தமிழக அரசே செயல் படுத்தும் திட்டங்களுக்கு  அவர்களே தமிழ் பெயரிடலாம் .எடுத்துகாட்டாக ,'ஸ்வட்ச் பாரத் ' என்பது 'தூய்மை இந்தியா 'என மொழி பெயர்க்கலாம் .
  • தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை அதிகரிக்க முயற்சி எடுப்பதில்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒரு விடயம் ஆகும் .எடுத்துக்காட்டாக ,மும்பை தாராவியில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் .ஆனால் ,தாராவியின் பெயர் 'தமிழ் நகர் 'என்று மாற்றப்பட வில்லை .பெங்களூரில் 22 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் .பெங்களூரின் ஒரு பகுதிக்கும் தமிழ் பெயர் இடப்படவில்லை .ஆனால் ,தமிழ் நாட்டின் கோவையில் ,எங்கிருந்தோ வந்த தெலுங்கர்கள் ,ஒரு தெலுங்குபாளையம் 'என்று ஒரு பகுதிக்கு துணிச்சலாக பெயர் வைக்கிறார்கள் .'நாயுடு பேட்டை,கொண்டாரெட்டி பட்டி ,ரெட்டியார்பட்டி  'என்கிறார்கள் .வடஇந்திய மார்வாடிகள் ,சென்னையின் ஒரு பகுதிக்கு 'சௌகார்பேட் 'என்று பெயரிடுகிறார்கள் .தமிழ் நாட்டின் பல பகுதிகள் /தெருக்கள் தமிழர் அல்லாதவர் பெயரில் இருப்பதற்கு தமிழரின் ஏமாந்த குணமே காரணம் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள் ..தமிழ் நாட்டில் எங்கேயாவது ஒரு 'பறையனூர் ,நாடார் மங்கலம் ,வன்னியபுதூர் ,பள்ளனூர்  என்றெல்லாம் தமிழர் பெயரில் ஊர்களோ ,இடங்களோ பார்த்திருக்கிறீர்களா ? அம்மாதிரி பெயர்கள் பிரிவினையை தூண்டும் ஜாதிப் பெயர்கள் என்று சொல்லிவிடுவார்கள் .அது போல் தானே 'தெலுங்குபாளையம் '?அதை ஏன் நாம் எதிர்ப்பதில்லை ?இதுவரை இதைப்பற்றி சிந்தித்திருக்கிறீர்களா  ?
  • நம்மில் எத்தனை பேர் உத்தர பிரதேசில் நிலம் வாங்கி வைத்திருக்கிறோம் ?ஆனால் ,வட இந்திய நில நிறுவனம் ஒன்று கோவில்பட்டி அருகில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களே வாங்கி வட நாட்டவர் பெயரில் பதிவு செய்துகொண்டிருக்கிறது .நெல்லை மாவட்டத்தில் சுமார் 7000 ஏக்கர் நிலத்தை ஒரு பணக்கார மலையாளி வாங்கியிருக்கிறார் .ஊட்டி ,குன்னூர் ,கொடைக்கானல் போன்ற மலை ஊர்களில் எல்லாம் வடவரும் ,மலையாளிகளும் நிறைய சொத்துக்கள் வாங்குகிறார்கள் .கல்லூரி ,மருத்துவமனை ,வியாபார இடங்கள் என்ற பெயரில் தமிழ் நாட்டில் தமிழரல்லாதோர் இடங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள் .விற்பது தமிழர்கள் தாம் .தமிழர்கள் ,தமிழருக்கு தான் நில விற்பனையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏன் ஒரு உணர்வில்லை ?
  • முடிவாக ,தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா தொழிலகங்களும் ,நிறுவனங்களும் குறைந்த பட்சம் 75% தமிழர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்ற தமிழர்கள் கேட்க வேண்டும் .
இவையெல்லாம் செய்யா விட்டால் என்ன ஆகும் ?பெரிதாக ஒன்றும் நடக்காது !நாம் வீடில்லாத அனாதைகள் ஆவோம் !அவ்வளவு தான் !உலகாண்ட தமிழர்கள் தம் பெரும் நில பரப்பை மெதுவாக இழந்து ,இழந்து ,ஒரு சிறிய நிலப்பரப்பான தமிழ் நாட்டில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .அதுவும் போய்விடும் .அவ்வளவுதான் !
                                                                             சரி , நிலப்பரப்பை அதிகரிக்க தான் தமிழனுக்கு எண்ணம் இல்லை .இருக்கும் நிலப்பரப்பை காக்க வேண்டும் என்ற எண்ணமாவது தமிழனுக்கு உண்டா என்றால் ,அதுவும் இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது .
 இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர் தாம் என்பதை அறிஞர் அம்பேத்கர் அவர்களே சொல்லியிருக்கிறார் .பூர்வ குடிகளாக ஒரு சமயம் இந்திய துணைக்கண்டம் முழுவதும் தமிழர் கையில் இருந்தது .முதலில்  குமரிக் கண்டத்தை இழந்தோம் .பின்னர் சிந்து நதி பரப்பினை இழந்தோம் .சமீபத்தில் மொழிவாரி பிரிப்பின் போது தேவிகுளம் ,பீர்மேடு ,சித்தூர் ,கோலார் போன்ற நிலப்பரப்பு மொத்தம் சுமார் 70,000 சதுர கிலோமீட்டரை இழந்தோம் .
                             போதாதென்று ,இந்தியாவிற்கு வெளியே சுமேரியாவை இழந்தோம் .ஆஸ்திரேலியாவை இழந்தோம் .ஆப்பிரிக்காவை இழந்தோம் .ஈழத்தை இழந்தோம் .
                                               இப்போது இருப்பதோ சரியாக 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்புடைய ஒரு சிறிய தமிழ் நாடு தான் .இதையும் தமிழர்களிடம் இருந்து மெதுவாக சுரண்டும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது .ஒரு இனம் தம் நிலத்தை  இழந்தால் அது  அழியும் நிலைக்கு தள்ளப்படும் .அதனால் தான் நாய் கூட தன் நிலப்பரப்பை பகைவர்களிடமிருந்து உயிரைக் கொடுத்தேனும் காக்கும் .
                               தமிழ் நாட்டை  இழந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு ஒரே வழி தான் மிஞ்சும் .அவர்கள் கடல் வாழ் உயிரினமாக மாறி ,இந்து மாக்கடலில் குதிப்பது ஒன்று தான் அவ்வழி !
                    தூங்கியது போதும் தமிழா ! விழிக்கும் நேரம் வந்து விட்டது !ஏமாந்தது போதும் !எழுந்து வா நம் இனம் காக்க !நம் நிலம் காக்க !