Saturday, 4 April 2026

இந்த 2026 தேர்தலில் எந்தெந்த பிரச்சனைகளுக்காக வாக்களிக்க வேண்டும்?

 

                                                                                (படம் நன்றி :இந்து)

இன்னும் 20 நாட்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.நம்முடைய அடுத்த ஐந்து வருடங்களை தீர்மானிக்கக் கூடிய நாள் அது .அடுத்த ஐந்து வருடமும் செங்கோல் ஆளப்போகிறதா அல்லது  இப்போது போல கொடுங்கோல்  நீளப் போகிறதா என்பதை தீர்மானிக்கும் ஒரு நாள். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தவறு. ஏனென்றால் ஒரு கட்சி என்றால், அதற்கு இரண்டு முகங்கள் இருக்கலாம் .ஒரு நபர் என்றாலும்  அவருக்கு ஒரு மறைவான முகம் இருக்கலாம். ஆதலால் ,அதை விட்டுவிட்டு எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக  நாம் வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதே சரி .நாம் பட்டியலிடும் பிரச்சனைகளை தீர்த்து தருகிறேன் என்று சொல்லும் கட்சிகளுக்கு நாம் வாக்களிக்கலாம் .

இதுவரை இருந்த கட்சிகள் பல ,நான் அதைத் தீர்த்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்/ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு தடவை ஏமாறலாம் , இரண்டு தடவை ஏமாறலாம்! அறுபது வருடமாக ஏமாந்தால், அது நம்முடைய அறிவுத்திறனை தான் காட்டுகிறது. ஆக, கடந்த 60 வருடங்களில் ஆட்சி செய்த எந்த கட்சிக்கும் நாம் வாக்களிப்பது அர்த்தமற்றது. ஏனென்றால் ,திமுக என்றாலும் அதிமுக என்றாலும் ஒரு நாணயத்தின் இரு பக்கம்தான். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வைத்து நாம் தீர்மானித்து விடலாம். ஆக, அந்த இரு கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் .அதை தவிர மூன்றாவதாக தமிழக வெற்றி கழகத்தின் நடிகர் விஜய்  வந்திருக்கிறார். அவர் ,எந்த பிரச்சனைகளுக்காக நிற்பார் என்று இதுவரை அவருக்கே தெளிவாக தெரியவில்லை.களப்பணியாற்றுவதிலும் மிகுந்த சுணக்கம் காட்டுகிறார். ஆக, அவர் நம்முடைய பிரச்சனைகளுக்காக போராடுவார் என்று எதிர்பாக்கவும் முடியாது. பிரச்சனைகளை அவர் தெரிந்து இருக்கிறார் என்றும் நினைக்க முடியாது .

முதலில்  நம்முடைய தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு பார்ப்போம்:

  1. தமிழ்நாட்டின் இயற்கை வளக்  கொள்ளை!                                                                    தமிழ்நாட்டின் மலைகள்,ஆற்று மணல் போன்ற இயற்கை வளங்கள், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் கேரளாவுக்கும் ,கர்நாடகாவுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கேரளாவுக்கும் ,கர்நாடகாவுக்கும் சொந்த மலை உள்ளது. அவர்கள் அதை எடுக்காமல்,தமிழ்நாட்டின் வளங்களை, இங்கு ஆட்சி செய்பவர்களை கைக்குள் போட்டு ,எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன்வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 5x 365x 1 = 1825 லக்கம் டன் வருகிறது .இந்தப் போக்கில் போனால் , நம்முடைய எதிர்கால சந்ததிக்கு எந்தவிதமான இயற்கை வளங்களையும் நாம் விட்டு விடாமல், இறந்து விடுவோம் !ஒரு மலை உருவாக 200 கோடி ஆண்டுகள் ஆகிறது என்பது நிபுணர்கள் கருத்து .ஆக, இந்த வளக் கொள்ளையை  தடுத்து நிறுத்தும் கட்சி எந்த கட்சியோ ,அதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்.திமுக, அதிமுக,தவெக  மூன்றுமே நிச்சயமாக இதை நிறுத்தாது.
  2. எல்லா உயிர்க்கும் சுத்தமான விலையில்லா  குடிநீர்!                                                                                                     தமிழ்நாட்டின் எல்லா நீர்நிலைகளும், ஆறுகளும் ,ஆலை  கழிவுகளால் மாசடைந்து, குடிநீர் தகுதியை இழந்து விட்டன .பல நீர்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியாமல் செத்து மிதக்கின்றன .மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு நல்ல குடிநீர் வாங்குவதற்கு மாத்திரம் குறைந்தது 1200 ரூபாய் ஆகிறது. காக்காவும், குருவியும், ஆடுகளும், மாடுகளும், காசு கொடுத்து எப்படி தண்ணீர் குடிக்கும் ?என்ற ஒரு பெரிய கேள்வி இப்போது எழுகிறது . குருவிகள் நீரின்றி செத்து மடிகின்றன. இயற்கையில் சுத்தமான குடிநீர் எல்லோருக்கும்/எல்லா உயிர்க்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று எந்த கட்சி சொல்கிறதோ அதற்கு வாக்களிப்போம் .அதிமுக, திமுக,தவெக  அந்த பட்டியலில் இல்லை.
  3. லாப பணத்தில் மக்களுக்கு  பங்கு கொடுப்பது சரி !கடன் வாங்கி இலவசம் அளிப்பது தவறு!                                                                                                 தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை 10.70 லட்சம் கோடி! வட்டி மாத்திரம் ஒரு லட்சம் கோடி கட்ட வேண்டும்! இந்த சூழ்நிலையில் மேலும் கடனை வாங்கி ,அதை பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தாமல், இலவசங்கள் மக்களுக்கு கொடுப்பதற்கு பயன்படுத்துவது தவறான கொள்கை .அதனால், தமிழ்நாட்டின் கடன் சுமை கூடும் .வட்டி சுமை கூடும் .ஒவ்வொரு குடிமகனுக்கும் கடன் சுமை கூடும் .இலவசங்கள் கொடுக்காத கட்சி தான் தமிழ்நாட்டின்  வளர்ச்சிக்கு நல்ல கட்சியாக இருக்கும். அதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்..
  4. எல்லோருக்கும் ,உலக தர ,கல்வி மற்றும் மருத்துவ சேவைகள்  அரசு தரும் !                                                                                                                                           தற்போது அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் பள்ளிகள் /மருத்துவமனைகளுக்கு நிகராக இல்லை என்பதால் எல்லோரும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று லட்சக்கணக்காக பணம் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது .தனியார் இதனால் லாபம் அடைந்து பணக்காரர் ஆகிறார்கள் .இதற்காக வாழ்வின் சேமிப்பு எல்லாம் கரைத்து பொதுமக்கள் ஏழைகள் ஆகிறார்கள். ஆகவே ,இதை மாற்றி ,எந்த கட்சி ,அரசு அரசு பள்ளிக்கூடங்கள் தனியாருக்கு நிகராக மாற்றுகிறதோ ,அதுபோல அரசு மருத்துவமனைகளை தனியார் அளவுக்கு உயர்த்துகிறதோ  அந்த கட்சிக்கு வாக்களிக்கலாம்.
  5. முழு மதுவிலக்கு /போதை ஒழிப்பு!                                                                            தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தினால் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் .சுமார் 6 லட்சம் விதவைகள் இதனால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் . இதுபோல போதைப் பழக்கத்தினால் ,பலவிதமான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருமளவில் நடக்கிறது .இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் இவைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். எந்த கட்சி முழு மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு  இவைகளை ஆதரிக்கிறதோ, அதற்கு நாம் வாக்களிக்கலாம்.
இன்னும் பல முக்கியமான கொள்கை மாற்றங்கள் தேவைப்பட்டாலும், மேற்கண்ட கொள்கைகளை யார் செயல்படுத்துவதாக சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே நாம் வாக்களிப்போம் .தமிழ்நாட்டை காப்பாற்றுவோம் .ஆளுக்காக வாக்களிக்காதீர்கள் .அவர்கள் பேசும் கொள்கைக்காக வாக்களியுங்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிந்து வாக்களியுங்கள். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் ,அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை செய்து காட்டி விட்டார்கள் என்பதை ஒரு காலமும் மறக்காதீர்கள் .திரும்பவும் அவர்களுக்கே வாக்களித்து, முன்பு செய்த தவறை திரும்பவும் செய்ய வேண்டாம்! ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டின் தலை எழுத்து மாறும் நாள் என்பதை மறக்க வேண்டாம்.நன்றாக விழித்து, சிந்தித்து வாக்களியுங்கள் .நல்லதே நடக்கட்டும்.

Sunday, 22 March 2026

இம்முறை 1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தானா ?

தமிழ்நாட்டில் தற்போது பட்டியல் இனத்திற்கு 18%  கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது இந்த 18 % ல்  அருந்ததியர் என்ற தெலுங்கு சாதியினருக்கு 3% உள் ஒதுக்கீடு தரப்படுகிறது. அதை தவிர மீதி உள்ள 15 % இடங்களில்,ஆதி தமிழ் குடிகளான ,பரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்தவிதமான உள் இட ஒதுக்கீடும்  கிடையாது. அந்த இடங்களிலும் தெலுங்கு அருந்ததியர்களுக்கு மேலதிகமாக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு  எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம்:

  1. மொத்த பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு = 30 இடங்கள் 
  2. அதில் அருந்ததியர்களுக்கு 3% (3/18=1/6)                  = 05 
  3. அது போக மீதம் இடங்கள்                                           = 25 
  4. அந்த 21 இல் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை =22
  5.  மீதமுள்ள இடங்கள்                                                         =03                                     
இந்த 3 இடங்களை 1.5 கோடி பரையர்+ தேவேந்திர.குல வேளாளர் மக்கள் தாராளமாக பங்கிட்டு கொள்ளலாம். இந்த முறையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்கள். தற்போதைய அரசு, அதை முற்றிலும் ஆதரித்து,2026 ல் வெற்றி பெற்றால், அருந்ததியருக்கான அந்த  உள்ஒதுக்கீட்டை 3% லிருந்து 6%  ஆக்குவதாக வாக்கு கொடுத்திருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது.

இந்த 3% உள் ஒதுக்கீடு  மற்றும் முன்னுரிமை விதி காரணமாக, கிட்டத்தட்ட 90 % இடங்கள் அருந்ததிய மக்களுக்கு சென்று விடுகின்றன என்று புள்ளி விவரங்கள் சான்றளிக்கின்றன. இதன் காரணமாக,தமிழ்  1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர்  மக்களுக்கு ஒரு இடமும் கிடைப்பதே இல்லை என்ற ஒரு பெரும் குறை உள்ளது .விடுதலை சிறுத்தைகள் கட்சி,இதை  பேரளவில் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று முறையிட்டார்கள் .அது உச்ச நீதிமன்றம்  வரை சென்று, உள் ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பாகி விட்டது.முன்னுரிமை விதியை பற்றி அந்த தீர்ப்பில் என்ன சொல்ல ப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியினர்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் குடிகளான 1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர்களுக்கு  நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு, உள் ஒதுக்கீடு 5% தரப்படும் எனவும் , அருந்ததியர்களுக்கு மீதமுள்ள இடங்களில் முன்னுரிமை என்ற விதி நீக்கப்படும் என்றும்  அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதைத் தவிர தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் ஆதி தமிழ் குடிகளுக்கு  இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தங்களது தேர்தல் வரைவு செயல்பாட்டில் கூறியிருக்கிறார்கள்.

இதோ ,ஆதித்தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதிகள்:


வரைவு செயற்பாட்டு பக்கம் 297 லிருந்து நாம் தமிழர் கட்சி,ஆட்சிக்கு வந்தால், ஆதித்தமிழர்களுக்கு என்னென்ன செய்வார்கள் என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள். 

இதோ அதன் சுருக்கம்:

  1. தற்போது ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படும் மக்களை, ஆதி தமிழர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
  2. ஊர், சேரி என்ற  இரட்டை வாழ்விடங்களை ஒழித்து ஒன்றான பொது வாழ்விடமாக மாற்றப்படும் .பொது மயான கட்டமைப்பு உண்டாக்கப்படும்.
  3. ஆதித்தமிழர் ஜனத்தொகைக்கு ஏற்ப கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும்  இடப்பகிர்வு  கொடுக்கப்படும். நிதி பகிர்வு அவர்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப இருக்கும்.அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் அவர்களுக்காகவே செலவழிக்கப்படும்.
  4. பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டு, சட்டவழியில்  அதை உரியவர்கள் கைகளுக்கு சேர்ப்போம் .இதை உறுதியோடு செய்வோம்.
  5. அரசு கோயில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு,தொல் குடிகளுக்கு அவர்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப பங்கு கொடுக்கப்படும் .அது போல். கோயில் வணிக நிறுவனங்களிலும் பங்கு கொடுக்கப்படும்.
  6. சாதி எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களை ,சமூக போராளிகள் என்று அழைத்து , அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடும் கொடுக்கப்படும்.
  7. தாட்கோவுக்கு பதிலாக அயோத்திதாசர் பெயரில் குவையம் அமைக்கப்படும்.
  8. அரசு ஒப்பந்தங்கள்,ஏரி மீன் ஏலமிடல், மரவிளைச்சல், வணிக வளாகங்கள் ,இவைகள் எல்லாவற்றிலும் ஆதி தமிழர்களுக்கும் தொல்குடியினருக்கும் இடப்பகிர்வு  அளிக்கப்படும்.

  9. எல்லா சமூகத்தினர் தங்குவதற்கும் பொது விடுதி அமைக்கப்படும்.
  10. பட்டியல் சமூகத்தினர் இடப்பங்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வது சரியல்ல. தேவைப்பட்டால் ,அவர்களுக்கு உரிய பங்கீடு பொது ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படும்.
  11. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையான பட்டியல் பிரிவிலிருந்து அகற்றம் என்பது அரசாணை மூலம் உடனே நிறைவேற்றப்படும்.
  12. ஆணவக் கொலைக்கு எதிராக வாக்குறுதிகள்:                                                           






14.பள்ளிகளில் சேரும் போது மாணவரின் தாய் மொழியை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
ஆதிதமிழர்கள் மதம் மாறினாலும் அவர்களுடைய சலுகைகள் பாதிக்கப்படாது.
15.ஆதி தமிழர்களுக்கு தனியார் துறைகளிலும் இட பகிர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை இடப்படும்.
சீமானுக்கு தமிழ்நாட்டு பட்டியல் இனத்தவர் பெரும் ஆதரவு!
மேற்கண்ட தேர்தல் வாக்குறுதிகள் தவிர, நாம் தமிழர் கட்சியினர், பொதுத் தொகுதியில் 6 பட்டியலின வேட்பாளர்களை  நிறுத்தி,அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் மேல் ஒரு பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள் . விடுதலை சிறுத்தைகளின் தலைவர் அண்ணன் திருமா அவர்கள்' பரை யர் என்று சொல்லிக்கொண்டு யாரும்  இங்கு வரக்கூடாது' என்று சொல்லி,ஒரு கோடி படையர்களை பரையர்களின் வாக்குகளை உதறித் தள்ளி இருக்கிறார்கள் .ஆதலால் ,பரையர்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர், இந்த முறை பெருமளவில் அண்ணன் சீமானுக்கு வாக்களிப்பார்கள் என்று அரசியல்  ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தெரிவிக்கிறார்கள். அது நம்பும்படியாக இருக்கிறது. இதை முறியடிக்க வேண்டுமானால், அண்ணன் திருமா அவர்கள் தங்கள் கட்சிக்கு,திமுக தலைமையிடம் குறைந்தது 10 தொகுதிகள் கேட்க வேண்டும் .சில பொதுத் தொகுதிகளில் பட்டியலின  வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் .அப்படி செய்தால் தான் நாம் தமிழரை இந்த தேர்தலில்  முறியடிக்க முடியும் என்பது தேர்தல் பார்வையாளர்கள் கருத்து.

Thursday, 12 March 2026

இந்தியர்கள் , சின்ன சின்ன காரணத்திற்கு கூட ` உடனே சண்டை போடுவது ஏன் ?

 

                                                (படத்திற்கு நன்றி: பிக்ஸ்சாபை)

இந்தியர்கள் ஒரு சின்ன காரணத்திற்கு கூட  உடனே சண்டை போடுவது, உடனே அதை காணொளியாக பதிவு செய்து எதிராளியை அவமானப்படுத்துவது,மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது, அவர்களுக்கு இவர்களிடம் ஏதாவது வேலை என்றால் முடிந்த அளவு இழுத்து அடிப்பது போன்றவை எதைக் குறிக்கிறது ?ஆங்கிலத்தில் SADISM என்று சொல்லப்படும் இந்த மன நிலை ஏன் இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது?என்ன உளவியல் இந்தியர்களை மட்டும் இப்படி செய்யத் தூண்டுகிறது?

உனக்கு துன்பம் என்றால் அது எனக்கு இன்பம்!

ஒரு முறை சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு முன்பின் தெரியாத சிங்கப்பூர் வாசிகள் எல்லோரும் எங்களுடன் சிரித்து பேசினார்கள். பல சீனர்கள் தமிழை கொஞ்சி கொஞ்சி, அழகாக,ஆனால் கஷ்டப்பட்டு முயற்சி எடுத்து, எங்களிடம் பேசினார்கள் .'அண்ணாச்சி வாங்கோ ! இங்கே உட்காருங்கோ ' என்றெல்லாம் அழகாக பேசினார்கள் .அவர்களுக்கு நாங்கள் வேறு நாட்டவர் என்பது நன்றாக தெரியும் ,ஆனால் ,அவர்களுக்கு எங்கள் மீது  எந்தவித வெறுப்பும் இல்லை. மாறாக எங்களை மிகவும் அன்புடன் நடத்தினார்கள் .ஏன் இந்தியாவில் மட்டும் ,புதிதாக காணும் யாரும்  நம்மிடம் சிரித்து பேசுவதில்லை? அவர்களை  வியாபார நோக்கில் நாடினால் கூட, அந்தப் பணம் நம்மிடமிருந்து கிடைக்க, எந்த அளவு குறைவாக பேச முடியுமோ  அந்த அளவு தான் பேசுகிறார்கள்! எடுத்துக்காட்டாக, நேற்று  என்னுடைய கார் சக்கரம் காற்று இறங்கி ,அதை சரி செய்ய சென்றேன். அந்த சரி செய்தவரிடம் நான் என்ன பேசினாலும் ,பதிலுக்கு அவர்  ஒன்றுமே சொல்லவில்லை !அவர்  பாட்டுக்கு  வேலை செய்து கொண்டிருக்கிறார் ! இது எதனால் ஆயிற்று? என்று கேட்டாலும் ஒன்றும் பதில் இல்லை !என்னிடம் வியாபாரத்தை எதிர்பார்க்கும் அவர்  ஏன் என்னிடம் பேச கூட தயங்க வேண்டும்? இன்னொரு சம்பவம் .எதிர் வீட்டு நபர் ,நான் சிரித்தாலும் சிரிக்க மாட்டார்.ஐந்து வருடத்திற்கு முன்னால் நாங்கள் புதிதாக இந்தத் தெருவுக்கு குடி வந்தோம். வீடு புகு மனை விழாவிற்கு அழைத்த போதும் வரவில்லை .ஒரு நாள் ,அவருக்கு வர வேண்டிய ஆதார் அட்டையை  தவறுதலாக என் வீட்டில் தபால்காரர் போட்டு விட்டு சென்று விட்டார். எனக்கு எதிர் வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாது. ஆதலால் ,வேறு யாருடையதோ என்று எண்ணி,அந்த ஆதார் அட்டையில் இருந்த அலைபேசி எண்ணை அழைத்து ,உங்களுடைய ஆதார்  அட்டை எங்கள் வீட்டில் தவறுதலாக போட்டிருக்கிறார்கள் .உங்கள் வீடு எங்கே இருக்கிறது? வந்து வாங்கிக் கொள்ள முடியுமா? என்று கேட்டேன். நான் வெளியே இருந்து பேசியதால் எதிர் வீட்டுக்காரர் பதில் பேசியது எனக்கு இங்கிருந்து  தெரிந்தது. 'ஆஹா !இவர் ஆதார் அட்டை தான் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்'. உடனே எடுத்துக்கொண்டு அவரிடம் கொண்டு போய் நீட்டினேன். அவர் நன்றி சொல்வார் என்று எதிர்பார்த்தேன். பதிலுக்கு அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.' இந்த தபால்காரன் அதை ஏன் உங்கள் வீட்டில் போட்டான்? 'என்று ஒரு எரிச்சலான கேள்வி!

சரி ! இவர் ஏன் நன்றி சொல்வதற்கு, பதில் இப்படி சொல்ல வேண்டும்?ஒரே இ னத்தில் உடன்  வாழும் மக்கள் இப்படி  நடந்து கொள்வதெல்லாம் எதை காட்டுகிறது?ஒருவரை ஒருவர் அறவே வெறுக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைத்தான் அது தெளிவாக காட்டுகிறது . ஒரு அவசர தருணத்திற்கு கூட மகிழ்ச்சியாக பேசுவதற்கு தயங்கக்கூடிய மக்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தான் காட்டுகிறது இது.யாரிடமும் என்ன பேச வேண்டும் என்றாலும் பயமாக இருக்கிறது.தவறு செய்யும் சிறுவரைகூட அதை சுட்டிக்காட்டி  திருத்த முயன்றால் அவர்கள் உடனே முறைக்கும் நிலையை கண்கூடாக காண்கிறோம்.எதற்கும் உடனே சண்டைக்கு வந்து விடுகிறார்கள் என்பது ஒரு பொதுவான புகார். 

இதற்கு அடிப்படை காரணம் தான் என்ன?

இதற்கு அடிப்படை காரணம் என்ன ?வேறு எந்த நாட்டிலும் இது நடப்பதில்லையே !ஜெர்மனியில் விமான நிலையத்தில் நாம் புதிதாக காணும் ஜெர்மனியர்கள் நம்மைப் பார்த்து  புன்னகைத்து, வாழ்த்தி விட்டுப் போகிறார்கள் .ஏன் நம் நாட்டில் மட்டும் எப்படி நடக்கிறது என்று கேட்டால் உண்மையான காரணத்தை இந்தியர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள் .பல இந்தியர்களுக்கு அது தெரியாமலும் இருக்கலாம் அல்லது அவர்கள் உணராமலும்  இருக்கலாம்.

வெளிநாட்டவரின் பார்வை!

ஒரு வெளிநாட்டு பார்வையாளர்,இந்தியாவில் வந்து சில வருடங்கள் தங்கி இருந்து இந்திய சமூக முறையை ஆராய்ச்சி செய்தார். உண்மையான காரணங்களை அவர் ஆழமாக  அலசி சொல்லும் போது, இவ்வாறாக இருக்கிறதா என்று நாம் வியப்படைகிறோம்.முதலில் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த உடனே இன்னொரு சாதிக்காரனுக்கு எதிரியாக பிறந்து விடுகிறான் என்கிறார் அவர்!ஏனென்றால் ஒன்றிலோ ,அந்த சாதிக்காரனுக்கு, இவன் மேல் சாதி அல்லது கீழ் சாதி! எப்படி என்றாலும் எதிரிதான்!இரு நபர்கள் சமமாக இருந்தால் தான் இருவரும் நண்பர்களாக முடியும் .மேலாக இருந்தால் அவன் முதலாளி! கீழாக இருந்தால் அவன் அடிமை! இப்படி பொதுவாக இங்கு பிறக்கும் ஒவ்வொரு இந்தியனும் ,பிறந்த உடனேயே காரணமே இல்லாமல், அவன் பிறந்த சாதியின் அடிப்படையில், இன்னொருவனுக்கு தன்னாலே எதிரியாகி விடுகிறான்! ஆதலால், பார்க்கும் போதே இயல்பாகவே ஒரு சிரிப்பு இருக்காது .வராது .ஒரு முறைப்பு தான் இருக்கும் !எப்படி சண்டை போடலாம் என்று தான் எப்போதுமே அவர்கள் இருவருடைய மனநிலையும் இருக்கும்.இந்த நிலையில் ஒரு சின்ன பொறி தட்டினால் போதும்! உடனே அது பெரும் பிழம்பாய் மாறி,ஒரு பெரிய சண்டையாகி,தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கொலை வரை போய்விடும்!தென்காசி அருகே ஒருவர் அவருடைய சின்ன சரக்கு வாகனத்தை சாலையின் ஓரத்தில்  நிறுத்திவிட்டு பக்கத்துக் கடையில் டீ குடிக்க சென்றார். அவர் திரும்பி  வந்து பார்க்கும்போது ,அவர் வண்டிக்கு நேர்  முன்னாக இன்னொருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு எங்கோ  சென்று விட்டார் .இதனால் ,இவரால் வண்டியை எடுக்க முடியவில்லை. அவர் வரும் வரை இவர் காத்திருக்க வேண்டி இருந்தது. வந்தவுடன் கோபத்தில், ஏன் இப்படி நிறுத்தி விட்டு சென்றீர்கள்? என்று கேட்க ,அவர் பதிலுக்கு ,ஏன் என்று சொல்கிறேன் என்று ஒரு கத்தியை எடுத்து இவர் வயிற்றில் நேராக குத்திவிட்டார் !உடனே  குடல் சரிந்து ,அதே இடத்தில் அவர் அதிக குருதி இழப்பால் இறந்துவிட்டார்! ஒரு சின்ன விஷயம். அந்த வண்டியை நிறுத்தியவர் மேல் தான் தெளிவாக தப்பு உள்ளது என்று தெரிந்தும் ,அவர் ஏன் கத்தி வைத்து இவரை குத்திக் கொல்ல  வேண்டும்?அவர் கோபத்திற்கு காரணம் ,அவர் உள்ளே குடி கொண்டிருக்கும் அந்த பயங்கரமான சாதிய ஆவி தான் !நீ என்ன  என்னை கேள்வி கேட்பது ?என்ற அந்த மனநிலை தான் அவரை இந்த குற்றம் செய்ய தூண்டியது .இதுவே உண்மையான காரணம்.ஒரு தமிழ் படத்தில் ஒரு காட்சி வரும் .ஒரு பட்டியல் இனப் பையனை, ஒரு ஆதிக்க சாதி பையன்,அடி அடி என்று அடித்து   விடுவான்.அடிபட்ட  பையன்  வீட்டிற்கு  அழுது கொண்டே வந்து ,தன் அப்பாவிடம் முறையிடுவான்.' அப்பா ,நாம்  போய் அவனை திருப்பி அடித்து விட்டு வருவோம்' என்று சொல்லுவான் .அதற்கு அவன்  அப்பா, 'அப்படி முடியாத டா கண்ணா! ஏனென்றால் ,அவன் அடிக்க பிறந்த சாதி! நாம் அடிபட பிறந்த சாதி! 'என்று கண்ணீருடன் சொல்வார்! ஒருவருடைய சாதி என்னவென்று அறிய முடியாத சமூக ஊடகங்கள் வழியாக கூட நாம் யாருடனும் நண்பராக முடியாது. உங்கள் கருத்துடன் இன்னொருவர் ஒத்து போனால் கூட உங்களை பின்பற்ற மாட்டார்கள் . சமூக ஊடகங்களில்  எதிர் கருத்து கூறியவரை உடனே தனிநபர் தாக்குதல் தான் நடத்துவார்கள். பதில் கருத்து கூற மாட்டார்கள்.ஏனென்றால், அடிப்படை காரணம் மேலே நான் குறிப்பிட்ட அதே காரணம் தான்.ஆக உண்மையான காரணம், இதை விட்டுவிட்டு ஏதோ காரணங்களை சொல்லுவார்கள். சட்டம் ,ஒழுங்கு என்பார்கள்.அது ,இது, அறியாமை என்றெல்லாம் சொல்வார்கள் .

 உண்மையான காரணத்தை எப்படித்தான் மாற்றுவது?

உண்மையான காரணத்தை மாற்ற வேண்டுமென்றால், சாதிய கட்டமைப்பு குலைய வேண்டும் .அது உடைந்தால் தான் அது மாறும். சின்ன குழந்தைகளை கூட ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் அடிக்கிறார்கள். வீணாக பழி போடுகிறார்கள். மதிப்பெண்களை குறைக்கிறார்கள் .சாப்பாடு டப்பாவை தூக்கி எறிகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்த சாதி மனப்பான்மை என்ற ஆவி தான். அதை மாற்றாமல் ஒன்றும் ஆகாது, மாறாது  என்கிறார் அவர் .எதையும் மாற்ற வேண்டுமென்றால் முதலில் அது இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.ஆனால், இந்தியர்கள் இப்படி ஒரு சாதிய பாகுபாடு, இந்திய சமூகத்தில் உள்ளது என்பதை ஒருபோதும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் .இந்திய அரசு கூட ஒத்துக் கொள்ளாது .டர்பனில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் இந்தியாவில் சாதிய பாகுபாடு என்று ஒன்று கிடையவே கிடையாது என்று இந்திய அரசு ஒரு அறிக்கை விட்டது. ஆதலால் ,இதே போல ,  சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.இது ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் .இந்தியா ஒரு நாளும் இதை  ஒழிக்காமல் ஒரு நல்ல ஒற்றுமையான, வலிமையான,சமூகமாக வளர முடியாது ,மற்ற நாடுகளுடன் போட்டி போட முடியாது என்பதுதான் கண் முன்னே காணும் ஒரு பெரும் உண்மை. இதை மறைப்பதால்  அல்லது மறுப்பதால் நாம் ஒன்றையும்  சாதிக்க முடியாது என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும் .நம்முடைய தலையெழுத்து  இதன் நடுவே அமைதியாக வாழ முயற்சி செய்வது தான் !

Wednesday, 21 January 2026

பொது வெளியில், பெண்கள் ஆண்களை எப்படி நடத்த வேண்டும்?

                                         கடந்த வாரத்தில், கேரளாவில் நெஞ்சம் பதபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .பேருந்து பயணத்தில்,ஒரு பெண் முன்னால்  நின்று கொண்டிருந்த ஒரு ஆணின் முழங்கை, தன்னுடைய மார்பில் படும்போது படும்படியாக வைத்து விட்டு, பின்னர் அவர் வேண்டுமென்று இடித்து விட்டார் என்று பொய் குற்றச்சாட்டு கூறி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையை பெற்று விட்டார்! மறுநாள்,பட்ட அவமானம், மன உளைச்சல் தாங்காமல், அந்த 41 வயது உடைய ஆண் தற்கொலை செய்து கொண்டார் !இதை பல ஆண்கள் கண்டித்து, ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை இது என்று பதிவிட்டு இருக்கிறார்கள் .இந்த மாதிரி சூழ்நிலையில், பொதுவெளியில் பெண்கள் ஆண்களை எப்படி நட த்த வேண்டும் என்பதை குறித்து ஒரு பெரிய விவாதம் ,சமூக ஊடகங்களில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது .அதை குறித்து இங்கே நாமும் ஆராயலாம் .                     

                                                                                                 (படம் :நன்றி கூகுள் )
                                   பொதுவாக ,  ஆண் பெண் உறவுகளில்,பொதுவெளியில் ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை குறித்த சமூக நெறிகள் நன்றாக வகுக்கப்பட்டு, பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது நமக்கு தெரிந்ததே .ஆனால், பொதுவெளியில், பெண்கள் ,ஆண்களை எப்படி நடத்துவது என்பதைக் குறித்து, அப்படியான விரிவான நெறிமுறைகள் எதுவுமே இதுவரை வகுக்கப்படவில்லை என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுவரை அதற்கு ஒரு தேவை இல்லை என்றே  தோன்றுகிறது.ஆனால்,இப்போது, சில சமூக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டதால்,பெண்கள் பொது வெளியில் அதிகமாக உலாவுகிறார்கள் .ஆண்களுடன் அதிகமாக சமூக வெளிகளில்,அலுவலகங்களில், கடைகளில், வியாபாரங்களில் பேச வேண்டி இருக்கிறது .உடன் நடக்க வேண்டி இருக்கிறது.அதனால்,அந்த தேவையை குறித்து நாம் ஆராய வேண்டிய ஒரு அவசிய சூழ்நிலை இப்போது எழுந்துள்ளது.

                                                   ஒரு காலத்தில் இந்த சமூகம் முற்றிலும் ஒரு ஆணாதிக்க சமூகமாக இருந்தது.சமீப காலமாக ,ஆண்-பெண் சமத்துவம் என்ற கோட்பாட்டின் தாக்கம் அதிகமாகி கொண்டே வந்து, இப்போது ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது, எல்லா வகையிலும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று ஒரு தவறான நம்பிக்கையை ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்தில் திணித்து, பெண்களை தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆண்- பெண் என்பவர்கள்,இயற்கையில்,ஒரு ஜோடியாக , ஈருடல் ஓர்  மனமாய், இசைந்து வாழும்,ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்,இரு பாலியல் பிரிவினர் என்பதை முக்கியப்படுத்தாமல், ஆணுக்கு எதிர் பெண் என்று நிலை நிறுத்தி , ஒரு தவறான முழக்கத்தை கொண்டு வந்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஒரு ஞானமில்லா கூட்டத்தினர். அதன் ஒரு விளைவாக,பெண்கள் பொது வெளியில் ஆண்களை எப்படி என்றாலும் நடத்தலாம், அதற்கு அவர்களுக்கு பொதுமக்கள்ஆதரவு கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் உருவாகி இருக்கிறது.இந்த எண்ணம் பரவலாக இருப்பதால் ,பொது வெளியில் உலவும் பெண்களைக் கண்டால் ,ஆண்களுக்கு இப்போது அவர்களை அறியாமல் ஒரு பயம் பற்றிக்  கொள்கிறது .டெல்லி மாநகரத்தில் ஒரு பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், ஒரு ஆண் முன்னால் இருந்த பெண் மீது .மோத வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அந்தப் பெண் ,சற்றும் சிந்திக்காமல்,இவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ,அவனை  அடித்து அவமானப்படுத்தி விட்டார்.எந்தத் தவறும் செய்யாத அந்த ஆண், அந்த அவமானம் தாங்க முடியாமல், பின்னர் தற்கொலை செய்து கொண்டார். உண்மையில் அவர் வேண்டுமென்று மோதவில்லை என்பது பின்னால் விசாரணையில் தெரியவந்தது .ஆனால் ,அதனால் ஒரு பயனும் இல்லை.அந்தப் பெண்ணின் அவசர செய்கையினால் வீணாக ஒரு ஆண் உயிர் போய்விட்டது.ஆனாலும் ,அந்தப் பெண் நடந்த சம்பவத்திற்காக வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்கவில்லை.அப்படிப்பட்ட ஒரு அழுத்தமும் அவளுக்கு சமூக ஊடகங்களால் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், இப்போது சமூக ஊடகங்கள் பெண்களுக்காக பரிந்து பேசும் ஊடகங்களாக மாறி விட்டது .அரசியல் தலைவர்களும் பெண்களின் வாக்குகளுக்காக அவர்கள் என்ன தவறு செய்தாலும் ,அதை எதிர்த்துப் பேசுவதில்லை என்ற நிலை வந்து விட்டது.

                                            இந்த மாதிரி சம்பவங்களின் உச்சமாக, கடந்த 29/11 /2025 அன்று ,சென்னையில் சட்டக் கல்லூரி மாணவி  ஒருவர் ,கிளாம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி, தாம்பரம்  வரை மட்டும்  பயண சீட்டு எடுத்திருக்கிறார். தாம்பரத்திற்கு அப்புறம் சீட்டு  இல்லாமல் பயணிப்பதை பார்த்த  நடத்துனர்,பயண சீட்டு  வாங்க சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு இந்த சட்டக் கல்லூரி மாணவி, 'என்னை தாம்பரத்தில் இறக்கி விட்டிருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் கடமை தவறி விட்டீர்கள் 'என்றெல்லாம் ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது .இந்நிலையில் வாக்குவாதம் முற்றி ,மாணவி கடைசியில் தன்னுடைய செருப்பை கழற்றி, எல்லோர் முன்னிலையிலும் அந்த நடத்துனரை  கன்னத்தில் பளார் பளார் என்று அடித்திருக்கிறார்.இந்த சம்பவம் முழுவதும் உள்ளிருக்கும் காணொளி கேமராவில் பதிவாகி உள்ளது.

                                      இது மாதிரி ஒரு வன்செயல்,தமிழ் சமூக  பெண்கள் ஒரு போதும் செய்யவே மாட்டார்கள்.தாய் வழி சமூக கேரளா பெண்கள்,சில நேரங்களில்  பெற்ற மகனை கன்னத்தில் அறைவார்கள். ஆந்திராவில் ,அக்கா, தங்கைகள் கூட சகோதரன் கன்னத்தில்  அறைவார்கள்.ஆனால், தமிழ்நாட்டில் அம்மாதிரி பழக்கம் எதுவுமே கிடையாது என்பது தமிழர்களின் தந்தை வழி சமூக பண்பாட்டில் உள்ளது. வீட்டிலேயோ  அல்லது பொது வெளியிலோ பெண்கள், ஆண்களை தாக்குவதாக 1960 களில் கேள்வி பட்டதே இல்லை. ஆனால், இப்போது ஒரு பெரிய காரியமே இல்லாத ஒன்றை பெரிதாக்கி, தாக்கும் அளவுக்கு இந்த  பெண்ணுக்கு இந்த கோபமும் துணிச்சலும் தந்தது யார் ?பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?சமூகத்தின்  என்ன குறைபாடு,அவர்களை இது மாதிரி எல்லாம் செய்யத்  தூண்டுகிறது என்பதை இன்று நாம் ஆழமாக  ஆராயலாம்.

                                                      தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.தமிழ் சொற்கள் எல்லாம் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் இயல்பானது. அந்த வழியில் ஆண் என்றால் ஆள்பவன் என்று பொருள். பெண் என்றால்  பேணுபவள் என்று பொருள் .தமிழ் சமூகத்தில் இவர்களுக்கு அவர்கள் பெயருக்கு ஏற்றாற்  போல் பொறுப்புகளும் கடமைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.பொதுவெளியை நடத்துவதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா உலக நாடுகளிலும் இதே பழக்கம் தான் இருந்தது/இருக்கிறது. ஆதலால், பொதுவெளியில் ,ஆண்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அவர்களுக்கு முதல் வழி விட வேண்டும் ,அவர்களை துன்புறுத்தக் கூடாது,வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் , போன்ற பல விழுமியங்கள், ஆண்களுக்கு சிறு வயது முதலே கற்றுத் தரப்பட்டன. மேலும் ,இந்த மாதிரி விழுமியங்கள் ,எல்லா கதைகள், இலக்கியங்கள் போன்றவற்றிலும் முக்கியப்படுத்தப்பட்டு, சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டு வேரூன்றி விட்டது. ஒரு பெண் தவறிப்போய் ,ஒரு ஆணை அடித்து விட்டால் கூட, பதிலுக்கு அந்தப் பெண்ணை ஆண் அடிக்கக் கூடாது,அது பேடித்தனம்  என்ற எண்ணம் கூட சிறு வயது முதலே ஆண்கள் மனதில் வேரூன்றி  இருக்கிறது .பெண் என்றால் ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு  பாலியல் இனம் .பெண் என்றால் பெற்ற தாயின் ஒரு உருவம்.அதை துன்புறுத்தக் கூடாது. இரண்டாவதாக  மனித இனத்தின் இனப்பெருக்கத்திற்கு பெண்ணின் முக்கிய பங்கையும் மதிக்க வேண்டும்,பெண்கள் தாயைப் போன்று மதிக்க தகுந்தவர்கள், போன்ற எண்ணங்களும் ஆண்களின் மனதில் பல நூறு ஆண்டுகளாக விதைக்கப்பட்டிருக்கிறது.

                                                        இவ்வாறாக பொதுவெளியில், ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ,ஆண்களை அந்த நல்ல வழியில் நடக்க வைக்கிறார்கள் இந்த ஊடகத்தினர் மற்றும் பொதுமக்கள். இது நாகரிகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. சரி, இது இப்படி இருக்க, ஆண்கள் எவ்வளவோ தியாகங்களை செய்து, பெண்களை காப்பாற்றி, ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்து, பெரிய கடமைகளை செய்து, ஒரு தனிப்பெரும் பங்காற்றுகிறார்கள் . ஆனால், அப்படிப்பட்ட  ஆண்களை, பெண்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று இதுவரை பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் ஒருவரும் உணர்வதில்லை .அதற்கு முக்கியமான காரணம், பெண்கள் சமத்துவமாக பொதுவெளியில், முற்காலத்தில்  இருந்தது இல்லை என்பதுதான். ஆனால், இப்போது பெண்கள் சமமாக பொது வெளியில் எல்லாவிதமான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சொல்லப்போனால் ,அரசியலில் அடிதடி செய்யும் இடங்களில் கூட பெண்களின் பங்கு இப்போது உள்ளது.                                                                                              அப்படிப்பட்ட நிலையில், பொதுவெளியில், பெண்கள் ஆண்களை எப்படி நடத்துவது? குடும்ப சூழ்நிலையில், எப்படி ஆண்களிடம் பெண்கள் நடந்து கொள்வது? இவைகள் எல்லாம் பெண்களுக்கு போதிக்கப்பட்டு ,அதை சமூகத்தின் ஒரு முக்கிய கூறாக  மாற்ற வேண்டும். அப்படி இதுவரை செய்யவில்லை என்பதால் தான் இது போல ,பயண சீட்டு கேட்ட ஆண் நடத்துனரை  பொதுவெளியில் செருப்பால் அடித்து ஒரு இளம் பெண் அவமானப்படுத்தி இருக்கிறார். அவருடைய வயதுக்கு கூட, இந்த இளம் பெண், அதுவும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி, மதிப்பு கொடுக்கவில்லை என்பது அவள் செய்த காரியத்தைக் கொண்டு தெளிவாக தெரிகிறது.இந்தக் கட்டுரைக்கு ஒரு விளக்க படமாக, ஒரு இந்திய பெண். ஒரு ஆணை பொது வெளியில், இல்லை ஏன் வீட்டில் கூட, அடிப்பது போன்ற ஒரு காட்சியை கூகுள் தேடலில் ,எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒன்றுகூட கிடைக்கவில்லை! அதிலிருந்து இந்திய சமூகத்தில் எந்த அளவு இந்த செய்கை  மிகவும் மோசமாக கருதப்படுகிறது என்பது தெளிவாக புரிகிறது.

                                                                                         இந்திய சமூகத்தில் ஒரு ஆண், ஒரு பொறுப்புள்ள அப்பாவாக, அன்பான அண்ணன், தம்பியாக மேலும் மாமனாக, மச்சானாக, அத்தானாக பல முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட ஆண்களை பெருமைப்படுத்தாமல், ஏதோ அங்கும் இங்குமாக பொறுப்பற்று நடக்கும்,ஒரு  சில ஆண்களை பொதுமைப்படுத்தி, ஆண்கள் எல்லோரும் காமுகர்கள், குடிகாரர்கள் என்பது போல் ஊடகங்கள் சித்தரிப்பது ஒரு பெரிய சமூக சாபக்  கேடு.அதுவும்,குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் அதிகமாக ஆண்களைக் கேவலப்படுத்துகிறது .ஆண்களை பெருமைப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம்  எடுக்கப்படுவதில்லை .இவ்வாறாக தொடர்ச்சியாக ஆண்களை சிறுமைப்படுத்தி காட்டிக் கொண்டு ,பெண்களை உயர்த்தி காட்டிக் கொண்டே  இருக்கிறார்கள். இதனால் ,பெண்கள் தாங்கள் ஏதோ ஆண்களை விட பெரியவர்கள் என்ற ஒரு எண்ணத்தை விதைத்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஊடகத்தினர்.

                                   ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் , உடனே காவல்துறையை அணுகுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, அந்த ஆணை,பெண் அடிப்பது  சரிதான் என்பது போல் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.அப்படிப்பட்ட ஆண்களை, பாதிக்கப்பட்ட பெண்கள், சமூக ஊடகங்களில் காணொளியாக பதிவிட்டு, அவமானப்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நியாயப்படுத்த படுத்தும் ஒரு சூழ்நிலை வந்துள்ளது .குற்றம் நடந்ததா இல்லையா என்பதை குற்றம் சாட்டியவரே தீர்மானிக்க முடியாது, என்பதை மறந்து, இவ்வாறாக ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களை 'சிங்கப்பெண்கள்' என்று சொல்லி பெருமைப்படுத்துகிறார்கள். ஆண்கள் தான் செயல்களில் ஆற்றல் காட்ட வேண்டும் என்பது அவர்களுடைய இயற்கையில் உள்ளது .அது அவர்களின் விந்தணுக்களில் பிரதிபலிக்கிறது .விடுபட்ட விந்தணுக்கள் தான் பெண்ணின் கருமுட்டையை தேடி விறுவிறுவென்று நீந்தி செல்லும்.அது போல , பெண்களின் குணத்தை பிரதிபலிக்கும் விதமாக பெண்களின் கருமுட்டைகள் ஆண்களின் விந்தணுக்களுக்காக ஒரே இடத்தில் காத்துக் கொண்டிருக்கும். இது தான் இயற்கை .இந்த இயற்கையை  மாற்றும் படியாக எதுவும் செய்ய முடியாது. இதற்கு ஏற்றாற்  போல் தான் சமூக செயல்களும் நடக்க வேண்டும். இல்லை என்றால் ஆணின் குணம் பாதிக்கப்படும் .அதனால் இனப்பெருக்க மண்டலமும் சரியாக வேலை செய்யாது. குழந்தைகள் பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்து ,இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.ஜனத்தொகையில் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் 18 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் தற்போது தமிழ்நாட்டில் 12 குழந்தைகள் என்று இறங்கி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

                             மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, குடும்பமும் சமூகமும், அமைதியாக இயங்க பெண்கள், சில காரியங்களை மனதில்  கொள்ள வேண்டும். பெண்கள் ,ஆண்களை ,குடும்பத்தில் மற்றும் பொது வெளியில், எப்படி நடத்துவது என்பதைக் குறித்து ஒரு தெளிவான வரையறை வகுக்க வேண்டும். இதைக் குறித்து சமூகவியலாளர்கள் கருத்துக்களை கீழே காணலாம் :

  • பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வாழ்வில் ஒரு பெரும் பங்கை நிறைவேற்றுவது தான் அவர்களுடைய தலையாய கடமையாக கொள்ள வேண்டும் .இயற்கைக்கு எதிராக எந்தவித நிலைப்பாடும் எடுக்கக் கூடாது .எடுத்துக்காட்டாக, இயற்கையில் பெண்கள் என்பவர்கள் குழந்தை பெறுவதற்காகவே , ஒரு தனி பால் இனமாக படைக்கப்பட்டவர்கள். ஆதலால், நான் குழந்தை பெறமாட்டேன்,அது எனக்கு பிடிக்காது ,என்றெல்லாம் சொல்லக்கூடாது. மருத்துவ காரணங்களுக்காக அல்லது குழந்தை பெறுவதில் ஒரு இடர் இருந்தால், அப்படியான ஒரு நிலைப்பாடு எடுக்க வாய்ப்பு இருக்கிறது .இல்லை என்றால், இனப்பெருக்கத்திற்கு எதிராக பெண்கள் நடப்பதை  ஒத்துக் கொள்ள முடியாது .அது மனித இனத்திற்கே  எதிரானது என்பதை பெண்கள் மறுக்கக்கூடாது.குழந்தை பெறுவது என்று சொல்லும் போது, பெற்ற குழந்தைக்கு பாலூட்டுவது, பேணிக் காத்து வளர்ப்பது போன்றவைகளும் அடங்கும் .இவைகளை  துறந்துவிட்டு வேறு வேலைகளுக்கோ ,அல்லது சாதனைகளுக்கோ , அந்த நேரத்தில் செல்லக்கூடாது என்பது இயற்கையின் நியதி .அப்படி சென்றால் , மனித இனத்தின் இனப்பெருக்கம் என்பது பெருமளவில் பாதிக்கப்படும்.இதற்காக கணவனுடன் இசைந்து,வாழ்க்கை நடத்த வேண்டும்.ஆணின் பாலியல் தேவையை, அவர் கேட்கும் போதெல்லாம் நிறைவேற்ற வேண்டும் .வேதாகமத்தில் இதைக் குறித்து மிகவும் அழகான விளக்கம் தரப்பட்டிருக்கிறது .மணமுடித்த பின் பெண்ணின் உடல் மேல் கணவருக்கு உரிமை உள்ளது ;அதுபோல ஆணின் உடல் மேல் மனைவிக்கு உரிமை உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.பாலியல் உறவு வேண்டாம் என்றால் இருவரும் சேர்ந்து சில காரணங்களுக்காக முடிவெடுக்கலாம் என்று உள்ளது.
  • பொதுவெளியில் மற்றும் அலுவல் இடங்களில், பெண்கள் ஆண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். பேருந்து போன்ற நெரிசலான இடங்களில் பயணிக்கும் போது ,இயற்கையாகவே ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்ள நேரிடலாம். அது எல்லாவற்றையும் பாலியல் பார்வையில் பெண்கள் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால், பொதுவெளியில் அவர்கள் பயணம் செய்ய முடியாது . மிகவும் பலமான சந்தேகம் அப்படி நேர்ந்தால், அதைக் குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான புகார் அளிக்கலாம் .அது இல்லாமல் சட்டத்தை பெண்கள் தங்கள் கையில் எடுத்து, ஆண்களை அடிப்பது,சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துவது, போன்ற காரியங்களை செய்யக்கூடாது.தன்னிச்சையான நடவடிக்கைகள், சமூக உறவுகளில் பிளவுகளை ஏற்படுத்தி சண்டை சச்சரவை உண்டாக்கலாம்.
  • எந்த காரணம் கொண்டும் பெண்கள் ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டு கொண்டுவரக் கூடாது.ஒரு ஆண், ஒரு பெண் மீது கொண்டுவரும் புகாரை சமூகம் அவ்வளவு எளிதாக நம்பாது. ஆனால், ஒரு பெண் ஆண்மீது பொய்யான ஒரு புகாரை கொண்டு வந்தால் ,இந்த சமூகம், ஆண்கள் உட்பட எல்லோரும் உடனே அந்த பெண்ணுக்கு சாதகமாக வருவார்கள் .ஆதலால், பொய் குற்றம் சாட்டப்பட்ட ஆண், பல இடங்களில் ஒரு உதவியும் இல்லாமல், ஒருவரும் அவரை நம்பாமல், மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார். ஆதலால் ,அப்படிப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டையும் பெண்கள் கொண்டுவரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.டெல்லியில் அவ்வாறு ஒரு பொய் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஆண் மிகவும் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் .அதன் பின்னர் தான் அது பொய் குற்றச்சாட்டு என்று பொது வெளியில்  தெரிந்தது .அதன் பின்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை!சமீபத்தில் கேரளாவில் இது போல ஒரு சம்பவம் நடந்து  பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார் .குற்றவியல் சட்டத்தில் முக்கியமான அடிப்படை புள்ளி என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற நோக்கத்தை(mens rea )  குற்றம் சாட்டுபவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதாவது  வெறுமனே ஒரு சந்தேக அடிப்படையில் ,அவரை குற்றவாளி ஆக்க முடியாது .இரண்டாவதாக, குற்றம் சாட்டுபவர் அவரே நீதிபதியாகி,குற்றம் உண்மைதான் என்று, அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்து,குற்றம் சாட்டப்பட்டவரை அவமானப்படுத்த முடியாது.சட்டத்தில் இது குறித்து தெளிவான பார்வை உள்ளது .ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து போகலாம்; ஆனால் ,ஒரு நிரபராதி த ண்டிக்கப்படக்கூடாது என்பதே அந்தக் கொள்கை. ஆக, இது மாதிரியான காரியங்களில் பெண்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது. அதிகபட்சமாக ,வேண்டுமானால் காவல்துறை புகார் அளிக்கலாம்.பெண்களே  அவர்கள் குற்றசாட்டை  நியாயப்படுத்தி,சுய  நீதிபதியாக முடியாது.
  • ஆண் என்பதை தாண்டி அவர்களுடைய வயதுக்கும் பெண்கள் ஒரு மரியாதை கொடுக்க வேண்டும்.  குறிப்பாக தந்தை வயது உள்ளவர்கள், முதியோர்கள் போன்றவர்களை அவமானப்படுத்தும் படியாக  ஒரு போதும்  நடந்து கொள்ளக் கூடாது.கொங்கு பகுதியில் முதிய ஆண்களை பார்த்தவுடன், அப்பா என்று தான் பெண்கள் அழைப்பார்கள். அதுபோல வயதில் மூத்தவர்களை உடனே அண்ணா என்று சொல்லிவிடுவார்கள். இது ஒரு நல்ல பழக்கமாக தெரிகிறது.தமிழ்நாடு முழுவதும் இந்த முறையை பின்பற்றலாம்.
  • மொத்தத்தில் ஆண்கள் சமுதாயத்தின் ஆளுமைகள். பெண்கள் அவர்களுக்கு அடுத்தாற்  போல் தான் இயற்கையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இயற்கையை மதித்து, இரு பாலர்களும் இசைந்து வாழும் படியாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் ,ஆண்களின் மேல் ஆதிக்கம் செலுத்த ,அதுவும் பொதுவெளிகளில் செலுத்த நினைப்பது சரியில்லை என்பதுதான் பொது கருத்து. மேற்கண்ட எல்லாவற்றையும் சரியாக செய்தால் ,சமூகம் , அமைதியாக ஒரு சண்டை சச்சரவின்றி  நடந்து கொண்டிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அதை நோக்கி நாம் எல்லோரும் பயணிப்போம்.

Sunday, 18 January 2026

பெண்களுக்கு தங்கள் கவர்ச்சி எந்த அளவு ஒரு ஆணை கிளர்ச்சியூட்ட முடியும் என்று தெரியுமா?

 சமீபத்தில் ஒரு பழைய மலையாள படம் பார்த்தேன். படத்தின் பெயர் ரதிநிர்வேதம்(2011).மேற்படையாக பார்த்தால், அது ஒரு பாலியல் கிளர்ச்சி ஊட்டும் மஞ்சள் படம் போல தெரியும். பல காட்சிகள் அவ்வாறுதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால்,இறுதியில் அது சொல்லும் ஒரு பெரும் பாடம், பெண்கள் எல்லோரும் அறியவேண்டிய ஒரு பாடமாக அமைந்து விட்டது. 

                                         படத்தின் நாயகி ரதி சுமார் 23 வயது அழகான பெண்.  நாயகன் அவளை விட 8 வயது குறைந்த ஒரு ஒரு பதின்பருவ விடலை பையன்.இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயது முதல் நன்றாக பழகியவர்கள். ஒருவரை  ஒருவர் ஓடி பிடித்து , கண்ணாம்பூச்சி விளையாடி வளர்ந்தவர்கள். இப்போது பையன் 15 வயதளவில் ,வெளியூரிலிருந்து விடுமுறையை  கழிக்க வீடு  வந்திருக்கிறான் .பெண் என்பதால் அவன் சிறிது தயக்கம் காட்டினாலும்,நாயகி அவனுடன் முன்போலவே  ஓடி பிடித்து விளையாடுவது ,கண்ணாமூச்சி காட்டுவது போன்ற பல விளையாட்டுகளில் கள்ளம் கபடம் இல்லாமல் செய்வது அவனை பாலியலாக தூண்டுகிறது.என்னதான் அவன்  நாயகியை 'சேச்சி, சேச்சி' என்று அழைத்தாலும் ,அவளது  நெருக்கம் அவனை என்னவோ செய்கிறது.திருட்டுத்தனமாக  அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் ,குறிப்பாக அவளுடைய உடம்பின் பாகங்களை ரசிக்க வேண்டும் என்று அவனை அறியாமல் அவன் கண் அவள் மேல் செல்கிறது .அவள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்க்கின்றான்.அவள் வீட்டில் மாவு அரைக்கும் போது மேலாடை இல்லாமல், கேரளாவில் வழக்கமாக இருப்பது போல் ,கால்களையும் நன்றாக தெரியும் படி வைத்துக்கொண்டு ,மாவரைப்பதையும்  இவன் ஒளிந்திருந்து பார்க்கிறான்.வர வர அவனால் அப்படி ஒளிந்து பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை .என்ன முயன்றாலும் இது சிறிது சிறிதாக வளர்ந்து, ஒரு நிலையில் அவளை எப்படியும் அடைந்து விட வேண்டும் ,ஒரு முறையாவது அனுபவித்து விட வேண்டும் என்று எண்ணும் அளவு வளர்ந்து விடுகிறது.இவ்வளவு நடப்பதும் வீட்டில் இருக்கும் வயதான பெண்களுக்கு, அம்மாவுக்கு ,சித்திக்கு,அக்காவிற்கு  யாருக்கும் கொஞ்சம் கூட புரியவில்லை.(பெண்களுக்கு இது புரியாது!) அவர்கள் இந்த இரண்டு பேரையும் அப்படி கண் கொண்டு பார்க்கவும் இல்லை .இந்நிலையில் ஒரு சரியான தருணத்தில், நாயகன் நாயகியை   தன்னை அறியாமல் இறுக கட்டி  அணைக்கிறான். அவள்  தடுக்க நினைப்பதற்குள், வீட்டில் உள்ளவர்கள் நடந்ததை பார்த்து விடுகிறார்கள்.குறிப்பாக பெண்ணின் தாய் பார்த்து விட்டதால்,  பெரும் பூகம்பம் வெடிக்கிறது.

பெண்ணின் தாய் பையனின்  அம்மாவை திட்டி தீர்க்கிறார். இதன் விளைவாக இரு குடும்பங்களிடையே பெரும் பகை உருவாகிறது. இந்த நேரத்தில் தான் நாயகனின் அத்தான் ,இராணுவத்திலிருந்து  விடுமுறைக்காக  வீட்டிற்கு வருகிறார்.
                                   நடந்ததை எல்லாம் அறிந்து ,வீட்டின் மூத்த பெண்கள்  எல்லோரையும்  கூப்பிட்டு அவர் கொடுக்கும் அறிவுரை தான் ,எல்லா பெண்களும் அறிய வேண்டிய பெரும்  அறிவுரையாக இருக்கிறது. அவரும் இந்த பருவத்தை கடந்து வந்தவர் தான். அந்த அனுபவம் அவருக்கு இந்த அறிவுரை கொடுக்க கை கொடுக்கிறது. 
                            அவர் சொல்கிறார்' இவ்வளவு நடந்து இருக்கிறது. நீங்கள் இத்தனை பெண்கள் இருக்கிறீர்கள். ஒருவருக்கு கூட இது நடப்பது தெரியவில்லை. ஏன்? ஏனென்றால் உங்களுக்கு பெண்களின் எந்தெந்த செயல்கள் ஒரு பையனுக்கு  கிளர்ச்சியூட்டும், பாலியல் உணர்வை தூண்டும் என்பதை பற்றி ஒன்றுமே தெரியாது. உங்கள் உடம்பு  ஆண்களுக்கு எந்த அளவு கிளர்ச்சி உண்டாக்கலாம் என்பதும்  தெரியாது. ஆதலால்,அவனுக்கு காம உணர்வு  ஊட்டும் படியாக நடந்து கொண்டது அந்தப் பெண் ரதியுடைய குற்றம். அவள்  தான் இந்த உணர்வுக்கு மூல காரணம். இதை ஆரம்பித்து வைத்தது அவள் தான் .அதை கண்டுபிடிக்காமல் இருந்தது உங்கள் குற்றம் .இப்போது பெரும் சிக்கலுக்குள் இந்த பிரச்சனை போய்விட்டது. இவனை உடனே மேற்படிப்பிற்கு வெளியூர் அனுப்பிவிடலாம் 'என்று சொல்கிறார்.

பெண்களுக்கு அவர்கள் கவர்ச்சி எந்த அளவு என்பதை உணர முடியுமா?
                                                                        இந்தக் கேள்விக்கு, இந்த திரைப்படம் சொல்லும் தெளிவான  விடை 'பெண்களுக்கு அவர்கள் கவர்ச்சி எந்த அளவிற்கு ஆண்களை மயக்கலாம், வெறியூட்டலாம் என்பது சிறிது கூட தெரியாது ' என்பதுதான்.தமிழர் பண்பாட்டில் இதை முற்றிலும் உணர்ந்ததால்,பருவம்  அடையும் முன்பே பெண்களுக்கு இதை உணர்த்தி விடுவார்கள்.'பொம்பளையா அடக்கமா இருக்கணும்' என்று சொல்வார்கள். பெண்கள் தங்கள் இஷ்டப்படி கால் மேல் கால் போட்டுக் கொண்டு அல்லது காலை விரித்துக்கொண்டு அல்லது கால் தெரியும்படியாக இருக்க, தமிழர்கள் தங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். பருவம் அடைந்த பின் கட்டாயமாக தாவணி போட்டு விடுவார்கள். தாவணி சிறிது விலகினாலும் உடனே வீட்டில் உள்ள மூத்த பெண்கள் அதை சொல்லிக் காட்டுவார்கள். கண்டிப்பார்கள் . இந்த பழக்கம் பள்ளி வரை சென்று, பெண்களின் தாவணி சிறிது விலகினாலும், உடனே அவர்களுடைய பெண் தோழிகள்  அதை சில விதமான ஜாடை செய்து  காட்டுவார்கள். உடனே அதை புரிந்து கொண்டு ` ,இந்த பெண் அதை இழுத்து விட்டு விடுவாள் .இந்த பழக்கம் ,எப்போது தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்களோ ,  முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பாவாடை தாவணி என்ற உடையையே  இல்லாத மாதிரி .காலப்போக்கில் செய்து விட்டார்கள்!எடுத்துக்காட்டாக கேரளாவில், கீழ்கண்ட மேலாடை   இடாத ரவிக்கை அணிவதை மிகவும் சாதாரணமாக பார்க்கலாம்:
                                                            (படம் நன்றி: கூகுள்)

ஆனால், தமிழ்நாட்டில் இப்படி எந்த பெண்ணையும்,,எங்கும்  பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் மலையாள படங்கள் பரவ பரவ ,இது போன்ற காட்சிகளை சில தமிழ் படங்களிலும் காட்ட ஆரம்பித்தார்கள் .அதன் விளைவு இப்போது பல தமிழ் திரைப்படங்களில் இப்படியான காட்சிகள் மிக சாதாரணமாக  காட்டப்படுகிறது.
                                    தமிழ் குடும்பங்களில், சொந்த  தங்கை /அக்காவாக இருந்தாலும் பையன்களை நெருக்கமாக பழக விட மாட்டார்கள்.உடை மாற்றும் போதும் ஆண்களை  அறைக்குள்  அனுமதிப்பதில்லை. இரவில் தூங்கும் போது தனித்தனி அறைகளில் தான் படுப்பார்கள். சொந்த அம்மாவை கூட மகன் கட்டி அணைப்பது தமிழ் பண்பாட்டில் இல்லை. இவ்வாறாக ,பல நல்ல பாலியியல் பாதுகாப்பு பழக்கங்களை தமிழ் பண்பாட்டில் காணலாம்.இது போக , தமிழ் குடும்பங்களில்  உள்ள மூத்த பெண்கள் , பையன்களின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்பது உண்டு.
                                 ஆனால் வளர்ந்து வரும் நாகரீகம்,தமிழ் பண்பாட்டில் அன்னி யர்களின் ஆதிக்கம்,ஊடகங்களின் செல்வாக்கு   போன்றவை ,இது மாதிரியான நல்ல பழக்கங்களை மாற்றிக் கொண்டு வருகிறது என்பது ஒரு கவலைக்குரிய விடயம்  தான்.இப்போது மாறிக் கொண்டு வரும் உடைகள், குறிப்பாக, மேற்கத்திய உடைகள், வட இந்திய உடைகள், உடலை மறைப்பது போல இல்லாமல் ,கவர்ச்சியான பாகங்களை எடுத்துக்காட்டுவது போல அமைந்துள்ளது. குறிப்பாக, மேற்கத்திய மேற் சட்டைகள், லெக்கின்ஸ் என்று சொல்லப்படும் காலோடு ஒட்டிய உடை, மற்றும் இடுப்பில் வெட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாக இடுப்பு முழுவதும் தெரிவது போன்ற வட இந்திய உடைகள் ,காம கண்களை தூண்டுகின்றன .
                            தமிழ்நாட்டின் அழகான உடையான ,பாவாடை-தாவணி  தற்போது திரைப்படங்களில், பாடல் காட்சியில் மட்டும் வருகிறது. நேரில் யாவனும் யாரும் அணிந்து பார்க்க முடிவதில்லை. அந்த அளவு அந்த உடையை அழித்துவிட்டார்கள். நான் கூட ராமராஜ் ஆடை நிறுவனத்திற்கு, நீங்கள் வேட்டியை எந்த அளவு பரவலாக்கி இருக்கிறீர்களோ அதுபோல ஏன் பாவாடை தாவணியை  ஆக்கக் கூடாது என்று ட்விட்டர் செய்தி போட்டேன். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லை .அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற  காரணமாக கூட இருக்கலாம் என்று ஒரு நண்பர் சொன்னார் .அது உண்மையா என்று தெரியவில்லை.ஆனால், அந்த நல்ல பண்பாட்டு உடையை மீட்டெடுப்பது தமிழர்களின் கடமை என்று  நான் நினைக்கிறேன்.இந்த உடையின்  குணம் என்னவென்றால், இது அணிந்த பெண்களை ஒரு அழகான பட்டாம்  பூச்சி போல மெருகேற்றி காட்டும், ஆனால்,அதே நேரம்  காமக் கிளர்ச்சி ஊட்டாது
                                                             (படம் நன்றி: கூகுள்)
இறுதியாக இளம் பெண்கள் அறிய வேண்டியது என்னவென்றால் , அவர்கள் இயற்கையாக  ஆண்களை கவரும்/மயக்கும்  படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய அடிப்படை காரணம் இனப்பெருக்கம் தான் . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது .இந்த நிலையில் 
                             பெண்கள்  என்னதான் செய்ய முடியும்  என்று  நீங்கள் கேட்கலாம்.வீட்டில் திருட்டு நடப்பதை நாம் குறைக்க வேண்டுமென்றால், ஒரு பூட்டு போடலாம் .பூட்டு போட்டாலும் உடைத்து திருடலாம். ஆனால், பூட்டு போடுகிறோம். ஏனென்றால் அதை உடைத்து திருடுவது என்பது அதற்கு அடுத்தபடியான  முயற்சி . அதுபோல,பெண்கள்  இந்த இயற்கையான கவர்ச்சியை,மறைக்கும்  உடைகள் மூலம் தான் பூட்டு போட்டு குறைக்க முடியும். 
                   ஆனால்,மாறாக இதை அறியாத பெண்கள், மாதம்  2000 வரை செலவழித்து, அழகு நிலையத்திற்கு சென்று முடிந்த அளவு தங்கள் அழகினை கவர்ச்சிகரமாக்கி, ஆண்களை கவர்ந்து காம வெறியூட்டும்  கருவிகளாகி  கொண்டிருக்கிறார்கள் .அதனால் ,ஏற்படும் ஆபத்து அவர்களை (பெண்களை) தான் பாதிக்கும் என்பது அவர்களுக்கு பு ரியவில்லை. இப்போதே புள்ளிவிவரத்தை பார்த்தால்,1960 களில்  இருந்தது போல 10,000 மடங்கு அதிகமாக காம குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது புரியும் .சொந்த மகளை ,சொந்த அக்காவை,தங்கையை  பாலியல் துன்புறுத்தல் செய்யும் பரிதாப நிலைமை இப்போது நடந்து கொண்டிருக்கிறது .சிறு குழந்தைகளை கூட வயதான ஆண்கள் கூட  விட்டு வைப்பதில்லை போல தோன்றுகிறது. தினமும் செய்தித்தாளை திறந்தால் கட்டாயம் இது போன்ற வன்புணர்வு செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன.ஆனால் தமிழ் சமூகம் அந்தந்த சம்பவங்களுக்கு ஏதோ ஒரு நாள் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். பின்னர் அடங்கிப் போய் விடுவார்கள். இதன் அடிப்படை காரணம் என்ன ?அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்றெல்லாம் சிறிது கூட  சிந்திப்பதில்லை ..
                      இதற்கெல்லாம் என்ன மூல  காரணம் என்றால் ,காம குற்றங்களுக்கு அடிப்படையாக பெண்கள் ஒரு தூண்டுகோலாக  மாறிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது  தான் .அதை அவர்களால்  உணர முடியவில்லை என்பதுதான் பிரச்சனை .அதை சொன்னால் கேட்கும் மனநிலையில் அவர்கள் இப்போது இல்லை .பெற்றோர்களுக்கு கீழ்படிவதில்லை .சொந்த அப்பா சொன்னால் கூட கேட்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.இது போதாது என்று உடை அணிவது பெண்ணின் சுதந்திரம் என்றும் அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது ,அது பெண் உரிமையில் தலையிடுவதாகும் என்று ஒரு தவறான கருத்து ஊடகங்கள் வழியாக பரப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்பது பெண்களை  தான் என்பதை மறைத்து ஊடகங்கள் இந்த விஷம பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன என்பது வருத்தத்திற்குரிய விடயம்.
காம குற்றங்களை குறைப்பதற்கு பெண்கள் பங்களிக்க முடியுமா?
                      சட்டயியலில்   உரிமையியல்  சட்டம் என்று ஒன்று உள்ளது. ஆங்கிலத்தில் இதை  TORTS  என்பார்கள். அந்த சட்டத்தில் ஒரு கோட்பாடு  உள்ளது. அது என்னவென்றால், ஒரு குற்றம் நடைபெறுவதற்கு ,குற்றவாளி ஏதாவது ஒரு வழியில்  பங்களித்திருந்தால் ,அதை CONTRIBUTORY NEGLIGENCE  என்று சொல்லுவார்கள் .அதாவது, குற்றம் நடக்க  ஏதுவான அசட்டை என்று சொல்லலாம்.எடுத்துக்காட்டாக ,சாலை நடுவே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இரவில் ஒரு வாகனம் அவர் மேல் ஏறி அவர் இறந்து விடுகிறார். இந்த மரணத்தில் இறந்தவர் பாகத்தில் இந்த குற்றத்திற்கு ஏதுவான அசட்டை நடந்திருக்கிறது என்று சட்டத்தில் சொல்லுவார்கள். அவர் சாலை  நடுவே தூங்கவில்லை என்றால் இந்த மரணம்  நேர்ந்திருக்காது என்ற அடிப்படையில் அவ்வாறு சொல்லப்படுகிறது.
                                  காம குற்றங்களுக்கும்  இந்த கோட்பாடு பொருந்தும். வெறியூட்டும் படியாக ஆடை அணிவது அல்லது நடந்து கொள்வது போன்றவை காம குற்றங்களுக்கு வழி வகுக்கலாம்  .நான் சொன்ன எடுத்துக்காட்டில் பாதிக்கப்படுவது அந்த அசட்டையில் ஈடுபட்ட நபர் தான்.அவர் தான்  தண்டனைக்கு உள்ளாகிறார் .ஆனால் காம வெறி குற்றங்களில்  அப்படியல்ல. வெறியூட்டும் நபர் ஒருவராக இருக்கலாம். ஆனால், அதனால் வெறி  ஊட்டப்பட்ட ஆணின்  தாக்குதலுக்கு உள்ளாகும் பெண் வேறு நபராக இருக்கலாம்! எடுத்துக்காட்டாக, நடிகை சமந்தாவின் காம வெறியூட்டும் ஒரு திரைப்பட பாடலை பார்த்துவிட்டு, அந்த வெறியில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி பாப்பாவை,சில நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக சிறு பையன்களை கூட ,அவன் வெறியை தீர்த்துக்கொள்ள  வழியாக்கலாம் .ஆக ,இங்கு தவறு செய்வது ஒரு பெண் , தண்டனை பெறுவது வேறு ஒரு பெண் அல்லது ஆண் என்பது போல ஆகலாம்.
ஆக,அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுக்கலாம்?
  • காமவெறி என்பது ஒரு ஆவியாகும்,அதாவது இச்சையின் ஆவியாகும் .அதை சட்டத்தை கொண்டு அல்லது பிரம்பை கொண்டு கட்டுப்படுத்த முடியாது .ஆவியை கட்டுப்படுத்த ஆவிக்குரிய வழிகளை தான் பின்பற்ற வேண்டும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.
  • இப்போது காம ஆவியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம் .
  • முதலாவதாக பெண்கள் தங்கள் கவர்ச்சியினை முடிந்த அளவு மூடி மறைத்து உடை அணிய வேண்டும்  இறுக்கமான உடைகளை அணிந்து தங்கள் உடலின் வடிவத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கக் கூடாது.
  • அடுத்ததாக அவர்கள் நடந்து கொள்ளும் விதம் ஆண்களை கவரும் விதமாக இருக்கக் கூடாது.எடுத்துக்காட்டாக ,நைட்டி போன்ற  உடைகளை அணிந்து  பெண்கள், பொது வெளியில் வரக்கூடாது. காய்கறி எடுப்பதற்காக குனிந்து தங்கள் முன்னழகை  வெளியே தெரியும் படியாக காட்டக்கூடாது. இது மற்ற ஆண்களின் கண்களை இயற்கையாக  கவரும்.காம உணர்வை தூண்டும்.ஆண்களால்   அந்த உணர்வை  கட்டுப்படுத்த முடியாது என்பது பெண்களுக்கு தெரியாது.
  • இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் ஒரு முக்கியமான கோட்பாடு பெண் உரிமை என்பதாகும் . அது பெண்களுக்கு ஆபத்தான பலவற்றை  செய்யச் சொல்லி கற்பிக்கிறது.அவர்களுக்கு ஒரு அசட்டு தைரியத்தை கொடுக்கிறது .அவர்களால் ஆண்களை ,எந்நேரத்திலும் தனியாக எதிர்கொள்ள முடியும் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து நம்ப வைக்கிறது.வீட்டில் இருக்கும் ஆண்கள் அதாவது பெற்ற அப்பா,அன்பு  அண்ணன்,பாசமிகு  தம்பி ,யார் சொல்வது எதையும் கேட்கத் தேவையில்லை, வெளியே செல்லும்போது அவர்கள் துணை  தேவையில்லை போன்ற தவறான அறிவுரைகளையும் இந்த இயக்கம் கற்பித்து ,பெண்களை ஆபத்தான பாதையில் வழி  நடத்துகிறது.
  • இதில் முக்கியமான புள்ளி என்னவென்றால், தமிழர் பண்பாட்டில் பெண் உரிமை/ பெண் சமத்துவம் என்ற கோட்பாடு ஒருக்காலும்  இருந்தது  கிடையாது.தமிழர் சமூகம் ஆண்வழி சமூகமாக இருந்தாலும், பெண்கள் அவர்களுக்கு கிடைக்கும் எல்லா விதமான பயன்களையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வில் முன்னேறி எல்லா நிலைகளிலும் உயர்ந்து நின்றார்கள். பெரும் புலவர்களாக /கவிஞர்களாக திகழ்ந்தார்கள்.அரசனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்ட கண்ணகி யாகவும் இருந்தார்கள் .அந்த அளவுக்கு தமிழ் பண்பாட்டில் பெண்களுக்கு ஒரு மரியாதையும் அதே நேரம் பாதுகாப்பும் இருந்து கொண்டிருந்தது.தமிழர் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடக்காததால்,தமிழில்  அதற்கான சொற்கள் கூட கிடையாது .எடுத்துக்காட்டாக ,ஆங்கிலத்தில் RAPE  என்று சொல்லப்படும் சொல்லிற்கு  தமிழில் நிகரான சொல் கிடையாது. ஏனென்றால் ,அப்படி ஒன்று தமிழர் சமூகத்தில் நடந்ததில்லை. இப்போது நாமாக அதற்கு ஒரு சொல்லை உருவாக்கி ,வன்புணர்வு கற்பழிப்பு என்றெல்லாம் சொல்கிறோம். இவைகள் ஒன்றும் சங்க கால இலக்கியத்தில் காணப்படவில்லை.இன்றும் கூட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவும் பகலும் ஒரே இடத்தில் படுத்து உறங்கிய இளம் பெண்களும் ஆண்களும் சகோதர நட்பில் தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்த அந்த போராட்டத்தில் ஒரு பாலியல் குற்றம் கூட பதிவாகவில்லை. அதுதான் தமிழரின் உயரிய  பண்பாடு.
  • தமிழ் பெண்களின் இந்த பாதுகாப்பான சூழ்நிலை,உயர்வு எல்லாவற்றையும்  குலைக்கும் விதமாக, தமிழ்நாட்டில் வாழும் பெண் வழி சமூக வேற்று இன  மக்கள், பெண்ணுரிமை, பெண் சமத்துவம் போன்ற வேண்டாத கோட்பாடுகளை ,தமிழ்நாட்டில் நுழைத்து பெண்களுக்கு தீங்கிழைக்கும் பல பழக்கங்களை புகுத்தி ,அவற்றை நல்லது, முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வது என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து ,இப்போது பெண்களுக்கும் /சிறுமிகளுக்கும்   ஒரு பாதுகாப்பில்லாத ,பிரச்சனை சூழ்ந்த ஒரு நிலைமையை கொண்டு வந்து விட்டார்கள்.
  • இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் மிகவும் அருவருக்கத்தக்க ஒரு விடயத்தை,பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், ஆதலால் ஆண்களைப் போல் ,எந்நேரத்திலும் எங்கும் அவர்கள் நினைத்தபடி சுற்றலாம் என்று போதிக்கும் இந்த பெண் சமத்துவ இயக்கத்தோடு தொடர்பு படுத்தலாம் .காம வெறியில் அலையும் ஆண்கள் ,இப்படி எங்கு பார்த்தாலும் எளிதாக சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களை, வயது வேறுபாடு பார்க்காமல், பாட்டிகள், இளம் சிறுமிகள் போன்றவர்களை கூட தன் இச்சைக்கு பலியாக்குவது தற்போது மிக சாதாரணமாகிவிட்டது. 
  • அது போதாது என்று தன் காமவெறியை தீர்த்துக் கொள்ள பெற்ற மகளையே பலியாக்கும்  ஒரு கொடூரம் வேறு இப்போது அரங்கேறிக்   கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு அறமற்ற தீய எண்ணம் தமிழர் பண்பாட்டில்  வருவதற்கு எந்த வித இடமும்  இல்லை .ஆனால்,அதை மீறி  வந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? குடும்பத்து பெண்களிடம் கூட  உன்னுடைய காமப் பசியை தீர்த்துக் கொள்ளலாம் என்ற கொடூரமான எண்ணம் தமிழ் சமூகத்தில் எப்படி நுழைந்தது ?ஆய்ந்து பார்த்தால் இதற்கு காரணம் என்ன  என்பது தெரிய வரும், தமிழ்நாட்டில் வாழும் வேறு மொழி பேசும்  சிறுபான்மையினர்,அவர்தம் பண்பாட்டு கூறுகளை ,மெதுவாக ,அவர்கள்  கட்டுப்பாட்டில் உள்ள  அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் வழியாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு   இனத்தின் தலைவர்' உனக்கு காம இச்சை வந்து விட்டால் , நீ உன் அக்காவுடன், தங்கையுடன் வீட்டில் உள்ள எந்த பெண்களிடம் உறவு கொண்டு தீர்த்துக் கொள் 'என்று சொல்லி இருக்கிறார் என ஒரு பொய் பிரச்சாரம் தமிழக ஊடகங்களில் செய்யப்படுகிறது. யாரும் இப்படி நிச்சயமாக சொல்லி இருக்க முடியாது.அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த ஒருவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?ஆனால், பிரச்சனை அதுவல்ல .இப்போது அவர் சொல்லியிருக்கிறாரா இல்லையா என்பது  முக்கியமில்லை. பிரச்சனை என்னவென்றால், அப்படி ஒரு தீய எண்ணத்தை அது தமிழக பண்பாட்டில் விதைத்து விட்டது என்பதுதான் .வீட்டில் இருக்கும் சொந்த மகளை ,அக்காவை, தங்கையை, ஏன் அம்மாவை கூட காமப்  பார்வை பார்க்க சொல்லி,அது தவறில்லை என்று ஒரு தீய எண்ணத்தை அது விதைத்து விட்டது. அந்த தீய எண்ணத்தை பலப்படுத்துவது போல் ,தமிழ்நாட்டில் படங்கள் எடுக்கும் அவர்கள் (இனத்தால் தமிழர் அல்லாதவர்கள்), இந்த எண்ணத்தை திரைப்படங்கள் வழியாக பரப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக ,அக்கா மாதிரி இருக்கும் கௌதமியை பார்த்து , ஒரு குட்டி பையன்' சிக்கு புக்கு ரயிலே ,கலக்குது பார் இவ ஸ்டைலே ' என்று பாடும்படியான  ஒரு காட்சி. அதுபோல பாட்டிமார்கள் எல்லோரும் சேர்ந்து அருவி கரையில் காம கவர்ச்சியோடு ஆடுவது போல ஒரு காட்சி .மாணவர் தன் ஆசிரியையை காமக்கண்ணோடு பார்ப்பது போல ,ஆசிரியர் தன் மாணவியை காமக்கண்ணோடு பார்ப்பது போல, இளம் சிறார்கள் எதிர்பாலரை கா ம கண்ணோடு பார்ப்பது போல, இப்படி எல்லாம் காட்சிகள் அமைக்கிறார்கள். குறிப்பாக ,மலையாள திரைப்பட இயக்குநர்கள்  மற்றும் கதாசிரியர்கள் இப்படி பல திரைப்பட  காட்சிகள் அமைக்கிறார்கள் . தமிழர் அல்லாதவர்கள் இப்படி கேவலமாக படங்கள்  எடுத்து,தமிழ் நாட்டில்  பரவலாக்குகிறார்கள்.
  • இவ்வளவு ஒரு கேவலமான நடத்தை தமிழர்களின் அற பண்பாட்டில் எந்த காலத்திலும்  இருந்தது இல்லை.ஆனால், இப்போது பெற்ற மகளையே கற்பழிக்கும் குற்றம் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயமான காரணம் இதுதான் என்பதை நாம் உணரலாம்.தன் காம வெறியை தீர்த்துக் கொள்ள குடும்பத்திற்குள்ளே ஒரு எளிய வழி கண்முன்னே  இருக்கிறது என்ற கேவலமான ஒரு எண்ணத்தை இது பலமாக விதைத்து விட்டது.                                                                                                                                                    மேற்கண்ட கொடுமைகளிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால்,தமிழர்கள் தங்களுடைய அறவாழ்வுக்கு பழையபடி திரும்ப வேண்டும். தந்தை வழி சமூகத்தை பலப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான ஆட்சியை விரட்டி அடித்து விட்டு, தமிழர் தலைவர்களை ஆட்சிக்  கட்டிலில் அமர்த்த வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ் சமூகம் இந்தக் கொடுமைகளிலிருந்து பிழைக்கும், என்பது தமிழ் ஆர்வலர்கள் கருத்து.
                                

Wednesday, 5 November 2025

அன்புத் தாய்களை ,கொடூர பேய்களாக மாற்றுவது எது ?

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 14 குழந்தைகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது .இதில் ஒரு குழந்தை வயது 2 என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த குழந்தைகளை இழந்த தாய்களின் மனநிலை எப்படியாக இருக்கும்  என்று பார்க்கலாம்.

 குட்டியை இழந்த தாயின் மனம் பித்து பிடித்தது போல இருக்கும். அதையே நினைத்து, நினைத்து,ஊண் ,உறக்கமின்றி , மனம் கலங்கி வாழவே பிடிக்காமல் போய்விடும் .விலங்குகள் போல ,மனிதர்களும்  இதற்கு விதிவிலக்கல்ல .ஆனால் ,கரூர் கூட்ட நெரிசலில்  இறந்த குழந்தைகளின் தாய்களின்  மனம் அப்படியே தான் உள்ளதா?

இதைக் குறித்து @senthilvel79 அவர்களின் X பதிவு என்ன சொல்லுகிறது?

என் கணவரை விட எனக்கு அவரைத்தான் பிடிக்கும் என்று ஒரு பெண்மணி சொன்னதோ, தன் தாய் தந்தையரை விட தனக்கு விஜய்தான் முக்கியம் என்று இளைஞர்கள் சொல்வதோ, கூட்டத்தில் சிக்கி உயிரே போனாலும் விஜயை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று சில இளம் பெண்கள் சொன்னதோ இறந்து போன தன் குழந்தையின் புகைப்படத்தை கையில் வைத்து விஜய் ஒரு புகைப்படம் எடுத்தால் போதும் என்று ஒரு பெற்றோர் சொன்னதோ தன் இரு குழந்தைகள் இறந்த சூழலிலும் விஜய் மீது தனக்கு துளியும் கோபமில்லை என்று அக்குழந்தைகளின் தாய் சொன்னதோ தன் பிள்ளையின் விதி அவன் போய் சேர்ந்துட்டான் என்று ஒரு பெண்மணி சொன்னதோ…. இதயத்தை கனமாக்கியது எனில்…. விஜயை பக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்பு தன் குழந்தை மூலம்தான் தனக்கு கிடைத்தது என்றும், என்ன ஒன்று அதற்கு ஈடாக தன் குழந்தையின் உயிரைக் கொடுக்க வேண்டியது இருந்தது என்று சொல்லும் தாயின் வார்த்தைகள் இதயத்தை ரணமாக்கியது… விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை..

(நன்றி -X  செயலி )

தமிழரிடம் உலகத்தில் சிறந்தது எது என்று கேட்டால், அது தாய்மை என்று தான் சொல்வார்கள். பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பின்னர் தன் ரத்தத்தை பாலாக்கி ,அதை  ஊட்டி வளர்த்து, குழந்தையின் வாழ்க்கை தான் தன் வாழ்க்கை, அதற்காக எந்த தியாகமும் செய்யலாம், என்று நினைப்பதுதான் தாய் உள்ளம். அப்படித்தான் தாய்கள் இவ்வளவு நாளும் தமிழ் சமூகத்தில் இருந்தார்கள். 

அப்படி இருந்த தாய்கள் இப்போது, குழந்தைகளை கழுத்தை நெரித்து கொல்கிறார்கள். கிணற்றில் வீசி கொல்கிறார்கள். குழந்தை அழுதால்,பாசத்துடன்  பால் கொடுப்பதில்லை. குழந்தைகள் பெறுவதை ஒரு பெரும் பேறாக கருதிய காலம் போய், இப்போது அதை ஒரு \ பெரும் பாரமாக கருதுகிறார்கள். குழந்தைகள் தங்கள் சுதந்திரத்திற்கு எதிராக வந்த சனியன்கள் என்று கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு பால் புகட்டுவது கூட தங்கள் மார்பழகை  கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். பால் ஊட்டுவதற்காக தான் பெண்கள் மார்பு என்பதையே மறந்து விட்டார்கள். ஆக, குழந்தைகள் மேல் முற்றிலும், பாசமற்று போய் இருக்கிறது இப்போதைய தாய் சமூகம். குழந்தை பிறந்த இரண்டு நாட்களில், அந்தக் குழந்தையை விட்டுவிட்டு, மாவட்ட நீதிபதியாக பதவி ஏற்கிறார்கள் ஒரு பெண்மணி. அரசியலில் ஈடுபடும் இன்னொரு பெண்மணியை, போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு செல்கிறார்கள். அப்போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்கிறது. இந்தப் பெண்ணுக்கு பால் பொங்கி, ரவிக்கை  எல்லாம் நனைந்து, சேலை வழியாக தாய்ப்பால் கீழே வழிகிறது. பால் கொடுத்து விட்டு வர அனுமதி கேட்கிறார். ஆனால் காவல்துறைக்கு அதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. முடியாது என்கிறார்கள்.ஆதலால், குழந்தையை பட்டினி போட்டுவிட்டு காவல் நிலையம் செல்கிறார் அந்த தாய் !பச்சைக் குழந்தையை பார்ப்பதை விட ,அரசியல் அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அரசியலில் இருக்கும் இன்னொரு பெரிய பெண்மணியும், குழந்தை பிறந்த ஒரு மாதத்தில், அதற்குப் பாலூட்டாமல், மேடையில் போய் பெண் உரிமை பற்றி முழங்குகிறார்.இதை எல்லாவற்றிலும் மேலான ஒரு கொடுமை காணொளியாக வந்தது ,அது என்னவென்றால், தன் மூன்று வயது குழந்தையை கரூர் நெரிசலில் பறிகொடுத்த ஒரு தாய், விஜய் அழைப்பிற்கு செவி சாய்த்து ,சென்னை சென்று விட்டு, அவருடைய ஆறுதல் வார்த்தைகளை கேட்டுவிட்டு திரும்புகிறார். திரும்பும்போது பேருந்து உள்ளே அவர் மகிழ்ச்சியாக நடனமாடுகிறார் .பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. இப்படி ஒரு தாயா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இவர்களுக்கெல்லாம் தாய்மை பொங்கி நிற்கவில்லை .அதைவிட அவர்களுடைய சுயநலம்,பெண்ணுரிமை பேச்சு  போன்றவை தான் மேலோங்கி நிற்கிறது .குழந்தை என்ன ஆனாலும் பரவாயில்லை, எனக்கு என்னுடைய குறிக்கோள் தான் முக்கியம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இப்போதைய தாய் உள்ளத்தில் ,இந்தப் பெரிய ,கொடிய மாற்றம் எப்படி வந்தது?ஏன் வந்தது ?இதற்கு காரணம் யார் ?அதை பற்றி இப்போது அலசலாம்,வாருங்கள் .

                                               தமிழ் சமூகம் தந்தை வழி சமூகம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். தந்தை வழி சமூகத்தில், தாயின் பங்கு மிகவும் உயர்ந்த,தனி  இடத்தில் உள்ளது. தாயை அவளுடைய தாய்மை கடமைகளிலிருந்து ஒருபோதும் நீங்க விடாமல் இருக்க வைக்கும் சமூகம் தந்தை வழி சமூகம் ஆகும் .தாய்களுக்கு ,குழந்தைகளை பெற்று, பாலூட்டி, அன்புகாட்டி, வளர்ப்பதை தவிர வேறு எந்த வேலையும் கொடுத்து, அவர்களை திசை திருப்பி,அவர்கள் இயற்கை கடமைகளிலிருந்து தவற வைக்கும் சமூகம் அல்ல தமிழ் சமூகம்.ஆக, யார் எப்படி இருந்தாலும், எது எப்படி இருந்தாலும், ஒரு தாய்க்கு தன் குழந்தையை பேணுவது ஒன்றுதான் தெரியும் ,அது ஒன்று தான் முக்கியம் என்று போதிப்பது/கடைபிடிப்பது  தந்தை வழி சமூகமான தமிழ் சமூகம் .இதனால் தான்,உலகத்தில் சிறந்தது எது என்றால், அது தாய்மை தான்  என்று தமிழ் சமூகம் கொண்டாடியது.இவ்வாறு தாயினால்,பாலூட்டப்பட்டு , பேணப்பட்ட குழந்தைகள் ,அவர்கள் தலை முறை, ஒரு பொறுப்பான, ஒழுங்குள்ள தலைமுறையாக வளர்ந்து கொண்டிருந்தது .தாய் சொல்லை தட்டாதே! என்று ஒரு மொழி உண்டு .தாய் சொன்னால் குழந்தைகள் கேட்பார்கள். அந்த அளவு தாய்களுடைய அன்பும் ,பரிவும்  இருந்தது.

                    இப்படி இருந்த சமூகத்தில் தான் வெளிமாநிலத்தில் இருந்து ஒரு விஷமத்தனமான ஒருவர் தோன்றினார்.அவர் தாய் வழி சமூகத்தில் பிறந்தவர்.ஆதலால், தாய்களின் கடமையைப் பற்றி அறியாதவர் .அவர் பெண்களின் கடமை பிள்ளை பெறுவது அல்ல !குடும்பத்தை பேணுவது அல்ல !பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்! ஆகவே, அவர்களுக்கு ஆண்களைப் போல் எல்லாவித உரிமைகளும் உள்ளது !அவர்கள் கருப்பையை வெட்டி வெளியே எறிந்து விடலாம்! அவர்கள் நினைத்தபடி யாருடனும் உடலுறவு கொள்ளலாம்! பிள்ளை பெரும் இயந்திரம் அல்ல பெண்கள்! என்றெல்லாம் ஒரு தவறான உபதேசத்தை தமிழ் நாட்டு பெண்கள் மத்தியில் பரப்பி, அவர்களை நம்ப வைத்து, அவர்கள் சிந்தையின் திசையை முற்றிலுமாக மாற்றினார்.ஆனால் ,இந்த கருத்தியலை  அவர் பிறந்த இனத்தில் உள்ள யாரும் கடைப்பிடிக்க மறுத்து விட்டார்கள் .அவர்கள் யாரும் கருப்பையை வெட்டி போடவில்லை. இவருடைய நோக்கம்,தந்தை வழி தமிழ் சமூகத்தை, இந்த சிந்தனையை கொண்டு அழித்து விடலாம் என்பதே . அப்படி என்றால் தமிழ் சமூகத்தில் பெண்கள் எல்லோரும் குழந்தைகளை கைவிட்டு விட்டு, பெண்ணுரிமை பேசி வெளியே அலைவார்கள்!வேலை செய்வார்கள்! பணம் சம்பாதிப்பார்கள்! அழகு நிலையங்களுக்கு செல்வார்கள் !ஆனால் ,வீட்டில் குழந்தைகள் பட்டினியினால் அழும்.அந்நிய வேலைக்காரிகளின் கொடூர கைகளில் வளரும் அந்த குழந்தைகள்.இப்படியே போனால், விரைவில் தாயன்பு  இல்லாத அந்த புது தமிழ் சமூகம் அழிந்துவிடும் என்பதே அவருடைய நோக்கம். இதற்கு அவருக்கு தமிழ் நாட்டு ஊடகங்கள் எல்லாம் ஆதரவளித்தது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த வெளிமாநிலத்தவர்கள் 100 %ஆதரித்தார்கள். 

இந்த  போதனையின் விளைவுகள்  என்ன ?

தாய்மையின் தலையாய பண்புகள்  என்னென்ன?பெற்ற  தன் குழந்தைக்கு தன்  உயிரையே கொடுக்கும் ஒரு பேரன்பு, பிறந்த குழந்தைக்கு பாலூட்டி அரவணைத்து ,அல்லும் பகலும் கவனிக்கும் ஒரு பொறுப்பு ,சில சமயங்களில் எரிச்சல் உண்டாகலாம், ஆனாலும், குழந்தையை ஒரு பேறு  என்று தமிழ் சமூகத்தில் போற்றுவார்கள். ஆதலால் ,அந்தப் பேற்றை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதே முழு நோக்கமாக ஒரு தாய்க்கு இருக்கும். ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், அந்த வீட்டின் பேச்சு முழுவதும் அந்த குழந்தையை சுற்றி தான் இருக்கும். அது என்ன செய்தது ,அது எப்படி அழுதது என்று எல்லாவற்றையும் சொல்லி சொல்லி, குடும்பத்தினர் மகிழ்வார்கள். இந்த தாய்மை குணங்கள் எல்லாம் இப்போது இந்த விஷ  போதனையால் அழிந்து போய்விட்டது .ஆண்களின் குணமான போட்டி, பொறாமை, வன்முறை, எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணம் ,இவைகள் தான் இப்போது பெண்களை ஆட்டி படைக்கின்றன. ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் நாங்களும் செய்வோம் என்ற உறுதியுடன் வெளியே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.மகாராஷ்டிராவில், 7 மாத கர்ப்பிணி பெண் ஒரு காவலராக வேலை பார்க்கிறார். காவலர்கள் பளுதூக்கும் போட்டி ஒன்று நடந்தது .அதில் இவர்கள் கர்ப்பிணி என்பதால் தகுதியற்றவர் என்று தேர்வு குழு சொன்னது. அதற்கு எதிராக அவர்கள் போராடி,, 145 கிலோ எடையை கர்ப்பிணி பெண்ணாக தூக்கி சாதனை செய்திருக்கிறார். இப்படி தூக்கும் போது குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை .அது எப்படி இப்படி இருக்க முடிகிறது? அந்தக் குழந்தையின் மேல் வயிற்றில் இருக்கும் போதே அன்பு இல்லாமல் எப்படி இருக்க முடியும்?அந்தக் குழந்தையை விட இந்த சாதனை முக்கியமா?


                                                                      (படம் -நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா அக்டோபர் 28)

 சமூகப் பொறுப்பற்ற ஊடகங்கள் இதை சாதனை என்று போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறது. இது சாதனை அல்ல! வேதனை!கேரளாவில் ஒரு பெண் ஜேசிபி இயந்திரத்தை ஒட்டி சாதனை செய்து இருக்கிறார் என்று ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடைய  வீட்டை கவனிக்காமல், குழந்தைகளை கவனிக்காமல் ,ஜேசிபி இயந்திரத்தை ஓட்டுவது தான் குறிக்கோள் என்று ஒரு  இருந்தால் , அவர்களுடைய தாய்மை  அழிந்து அது பேய்மையாக மாறிவிடலாம்  என்பதை மறுக்க முடியாது.

இப்படியே போய்க் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலத்தில், பெண்மை என்பது மெல்ல மெல்ல அழிந்து விடும். பெண்களுக்கு குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லாமல் போய்விடும். அதை விட்டுவிட்டு, ஆண்களுடன் போட்டி போட்டு,பணம் ஈட்டுவது , சாதனை செய்வது போன்றவற்றில் குறியாக  அலைந்து கொண்டிருப்பார்கள் .இதனால் மனித குலத்தின் இனப்பெருக்க நிலை மெல்ல மெல்ல அழிந்து குழந்தைகள் பிறப்பது என்பது இல்லாமல் போய்விடும்.இது உடனே நடக்காவிட்டாலும், இப்போதே இது நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது கண் கூடு .இப்போதே பல பெண்கள் கருவூட்டல் மையத்துக்கு சென்று தான் குழந்தைகளை பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் .பெண்களை பெண்களாக இருக்க விடாமல் ஆண்களாக மாற்றும் இந்த விஷ போதனையை முற்றிலுமாக வேரறுப்போம். இல்லை என்றால் மனித குலத்திற்கு இது ஒரு ஆபத்து என்பதை நினைவு கொள்வோம்.

Monday, 13 October 2025

பட்டியல் இனத்தின் உயர்பதவி அதிகாரிகள் அந்த இனத்திற்கு ஏன் உதவி செய்வதில்லை?

 தமிழகத்தின் கீழ் சாதியாக கருதப்பட்ட சாதிகளில் தற்போது மிகவும் முன்னேறிய சாதி எதுவென்றால் அது சந்தேகமில்லாமல் நாடார் சாதிதான் என்று சொல்லலாம். ஒருகாலத்தில் கிட்டத்தட்ட தீண்டத்தகாத சாதியாக கருதப்பட்டவர்கள் அவர்கள்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே தீண்டத்தகாதவர்கள் நுழையும் போராட்டம் நடக்கும் போது, அதில் நாடார்  ஒருவரும் சேர்க்கப்பட்டார் .தென்திருவிதாங்கூர் எல்லைகளில் ஒரு சொல்  நிலவி வந்தது. அது என்னவென்றால்'புலையனை  தொட்டால் தான் தீட்டு! சாணானை  பார்த்தாலே தீட்டு!'என்பதாகும் . அதாவது நாடார்களை பார்த்தாலே தீட்டு என்ற அளவில் அப்போது அவர்களை  வைத்திருந்தார்கள்.அப்படியிருந்த  அந்த சமுதாயம் ,இப்போது கல்வி, செல்வம், அறிவு,தொழில் , விஞ்ஞானம் என்று எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் தலையாய 10 பணக்காரர்களில் ஒருவர் சிவ நாடார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

 இவர்கள் இந்த அளவு முன்னேறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் சாதிப் பெருமையும் ,ஒற்றுமையும் தான் . உதாரணமாக, ஒரு நாடார் சென்னையில் வந்து ஒரு சிறிய அளவில் பல சரக்கு கடை வைக்கிறார். அது வளர வளர ,அவர் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து,தெரிந்த  ஏழை நாடார் சமூகத்தினரை அழைத்து வந்து வேலை கொடுக்கிறார்.அதாவது ,நாடார்  ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்தால், அவர் நிலையை /பதவியை பயன்படுத்தி  கீழே இருக்கும் நாடார்களை ,ஒரு  கை கொடுத்து தூக்கி விடுகிறார். ஆக, இந்த நாடார் சமூகம் முழுவதும் ஒன்றாக வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வருகிறது.

இப்படியான ஒரு தூக்கி விடும் குணம்  உயர் பதவியில் இருக்கும் பட்டியலின அதிகாரிகளுக்கோ அல்லது உயர்ந்து வளர்ந்த பட்டியலின சாதனையாளர்களுக்கோ ஏன்  வரமாட்ட வரமாட்டேங்கிறது என்பதே இன்றைய ஆய்வின் நோக்கமாகும் .

இன்று உலக அளவில் உயர்ந்து நிற்கும் இசைஞானி இளையராஜா பரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் .தன்னுடைய திறமையினால் பல எதிர்ப்புகளை அவர் வென்று ,இன்று இசை உலகில் ஒரு  இமாலய உயரத்திற்கு வந்திருக்கிறார்.அவர் சாதனைகள்  உலகெங்கும் பேசப்படுகிறது . தமிழக அரசு கூட அவரை கௌரவித்து ஒரு விழா எடுத்துள்ளது. அந்த அளவு உயர்ந்து நிற்கும் அவர், தான் பிறந்து வந்த அந்த சமூகத்திற்கு, அதில் இருக்கும் ஏழை மக்களுக்கு ,அதில் உதவிக்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களுக்கு,என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.அவர் நினைத்திருந்தால், அவர் சமூகத்திற்காக, அதன் முன்னேற்றத்திற்காக, சூர்யா செய்தது போல ,ஒரு தனி அறக்கட்டளை நிறுவி இருக்கலாம். அதில் பலருக்கு படிப்பு உதவி செய்திருக்கலாம். பலரை அவருடைய இசை கூடங்களில் பணி அமர்த்தியிருக்கலாம் .ஆனால் அப்படி எதுவுமே அவர் செய்யவில்லை.அவர் நினைத்திருந்தால், அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி, தமிழக முதல்வரிடம் பல பரையர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். உயர் பதவிகள் வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி ஒன்றும் செய்ததில்லை.அப்படி என்றால் இளையராஜாவினால் பயன்பெற்றவர்கள் ஒருவர் கூட இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் .இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால்,அவரால் பயனடைந்தவர்கள் எல்லோருமே உயர்சாதியினரும், மற்ற மாநிலத்தவரும்  தான். ஒருவர் கூட அதில் அவர் சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது. அவர் குடும்பத்தினர் மட்டும் அவரால் பயனடைந்து இருக்கலாம். அவர்களும் யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை. இளையராஜா வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் கூட மற்ற சமூகத்தினாகத்தான் இருக்க முடியும் .ஏன் இப்படி இவர் சமூக சிந்தனை சிறிது கூட இல்லாமல் இருக்கிறார்?

இதே போல பல பரையர்கள் அரசு உயர் பதவிகளில் உள்ளனர்.ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஜி, முதன்மை செயலாளர் , செயலாளர் போன்ற பல உயர் பதவிகளில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதாவது உதவி கேட்டு அவர்கள் சமூகத்தை சேர்ந்த ஏழைகளோ அல்லது மாணவர்களோ சென்றால், அவர்கள் உதவி செய்வதே இல்லை என்பதே அந்த மக்கள் அவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.இவர்கள் ,அவர்களை தொடர்பு கொள்வதை கூட அவர்கள் விரும்புவதுமில்லை.  மற்ற சாதிகளில் ஒருவர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்றால் அந்த சமூகத்தினர் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் .ஏனென்றால்,அதனால் அவர்களுக்கும்  பயன் கிடைக்கும். ஆனால் ,சமூகத்தில் ஏற்கனவே எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு நிற்கிற பரையர்களுக்கு ,ஒரு விதமான உதவியும் கிடைக்காத இந்த அப்பாவி பரையர் சாதி மக்களுக்கு ,அவர்களில் யாராவது உயர் பதவி அடைந்தால், இந்த சமூகத்தை அவர்கள் மொத்தமாக விட்டு விட்டு,  மேல் சாதியினருடன்  ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள்  என்பதே அந்த சமூக ஏழைகளின் குற்றச்சாட்டு.அதில் பலர் ,உயர்ந்த நிலை வந்தவுடன், தன் சமூக பெண்களை கூட  திருமணம் செய்யாமல், வேறு சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்வது ஒரு பெரிய கொடுமை .தன் சமூக பெண்களை இவர்களே திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யார் வந்து திருமணம் செய்வார்கள்? என்பதே கேள்வி .இளையராஜாவும் அது போல், பிராமணர்களுடனும் ,தெலுங்கர்களுடனும் , மலையாளிகளுடனும்  ஐக்கியமாகிவிட்டார் .அவருடைய அடையாளத்தை முற்றிலும் மறந்து விட்டார் என்பதே  அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.இதில்  அவர் எந்த அளவுக்கு செல்கிறார் என்றால், இவருடைய சமூகத்திற்கு எதிராக படம் எடுக்கும்  சமூகத்தினருக்கு கூட, இவர் பட இசை அமைத்துக் கொடுக்கிறார் என்னும் குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.இவர் சமூகத்திற்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக எந்த நேரத்திலும் குரல் எழுப்புவது இல்லை. ஆக, இவரால் இந்த சமூகத்துக்கு  ஒரு எள்ளளவும் உதவி இல்லவே இல்லை .

இப்படியாக உயர்நிலைக்கு செல்லும் பரையர்கள் இந்த சாதியை விட்டு வெளியே போவதற்கும், வேறு சாதியினருடன் தங்களை அடையாளப்படுத்துவதற்கும், என்ன உளவியல் காரணம் உள்ளது ?என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இதைகுறித்து பேசுவதற்காக, எனக்குத் தெரிந்த உயர்பதவியில் இருக்கும் ஒரு பட்டியலினத்தை சார்ந்த அரசு அதிகாரியை நாடினேன். அவர் பேச தயாரானார் .ஆனால் ,ஒரே ஒரு நிபந்தனை போட்டார். அவருடைய பெயரை வெளியே சொல்ல கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. அது நியாயமான நிபந்தனை தான். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் இதைக் குறித்து பேசினேன் .அவர் சொன்ன காரணங்கள் கேட்க மிகவும் சுவையாக இருந்தது.அதைத்தான் உங்களுக்காக கீழே தருகிறேன்.

  1. பொதுவாக, அதிகாரமிக்க முக்கிய பதவிகளில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை போடவே மாட்டார்கள். அப்படி போட வேண்டிய சூழ்நிலை வந்தால் ,வேறு வழியே இல்லை என்றால் ,தமிழ் நாட்டில்  தெலுங்கு பட்டியலின நபரை போடுவார்கள்.
  2. இந்த இட ஒதுக்கீடு கொள்கையை முறையாக அமுல்படுத்துவதற்காக,மத்திய  அரசு ஒரு கையேடு ஒன்று  வெளியிட்டுள்ளது .அதன் பெயர்: BROCHURE .அந்தப் புத்தகத்தின் படி சரியாக போட்டால், பட்டியல் இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு, சுழற்சி முறையில் சரியாக கிடைத்து விடும்.எடுத்துக்காட்டாக, 2023 வருடத்தில் 100 பட்டியலின நபர்களை தெரிந்தெடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம் .ஆனால்,அவர்கள்  60 பேர் தான் தேறியிருக்கிறார்கள் என்றால், மீதி உள்ள 40 இடங்களும் 2024 வருடத்தின் இட ஒதுக்கீட்டில்  கூட்டி  அதிகமாக சேர்க்கப்படும். ஆக 2024 ல்,100+40= 140 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறாக, மூன்று வருடங்களுக்கு தொடர்ச்சியாக செய்ய வேண்டும் .அதற்குள் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த அதிகபட்ச இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என்று உள்ளது. அந்த சுழற்சி பதிவேடு ROSTER கண்காணிக்கும் அதிகாரி ,முடிந்த அளவு ஒரு பட்டியலின அதிகாரியாக போட வேண்டும் என்று ஒரு விதி உள்ளது . அப்படி ஒரு பட்டியலின அதிகாரியை ,வேறு வழியில்லாமல் எடுக்க வேண்டும் என்றால், அவர் மேலிடத்திடம் ஒத்துழைப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும். அதாவது அந்தப் பதிவேட்டில் தப்பாக பதிவு செய்ய வேண்டும்.பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டியதை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு கொடுக்கும் அதிகாரியாக இருக்க வேண்டும். அதாவது அந்தப் பதிவேட்டில் செய்யும் ஊழல் எல்லாவற்றிற்கும் கையெழுத்து போடும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி.
  3. ஒரு பட்டியலினத்தவர் ஒரு அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்தபட்டால், அதற்கு முன், இன்னுமொரு  எழுதப்படாத விதி உள்ளது .அது என்னவென்றால், இவர் எந்த காரணம் கொண்டும் தன் இனத்திற்கு சாதகமாக எதுவும் தவறி கூட செய்யக்கூடாது என்பதுதான்.அவரை அந்த வேலையில் அமர்த்துவதற்கு முன்பே அதை உறுதி செய்து கொள்வார்கள். அமர்த்தியபின் இதைக் குறித்து அவரை சுற்றி இருக்கும் மற்ற சாதி அதிகாரிகள் எல்லோரும் ,இவர் மேல் கண்ணும் கருத்துமாக கண்காணிப்பார்கள் .இவர் ஏதாவது அவர் சார்ந்த சமூகத்திற்கு நன்மை செய்கிறாரா, அப்படி செய்தால்  உடனே அவரை அந்த இடத்தை விட்டு மாற்றி விட வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள்.அப்படி நடந்தால் ,உடனே மேலதிகாரிகளுக்கு கோள் சொல்லி, இந்த சாதகமான  அதிகாரியை அந்த  இடத்தை விட்டு மாற்றி விடுவார்கள்.ஆகவே  தான் , பட்டியலின அதிகாரிகள் தன் இனத்திற்கு எந்த வித உதவியும் செய்ய மிகுந்த தயக்கம் காட்டுவார்கள்.அவர்களைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.இதை அவர்கள் தங்களை/தங்கள் பதவியை  பாதுகாத்துக் கொள்ளவே  செய்கிறார்கள்.
  4. அப்படி என்றால் அதிகாரம் உள்ள பதவியில் அமர்த்தப்பட்ட பட்டியல்    இன அதிகாரிகள் ,தங்கள் இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யவே வாய்ப்பில்லையா என்று கேட்டால், வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்லலாம். எப்படி எப்படி செய்யலாம் என்பதை என்னிடம் பேசிய அந்த அதிகாரி விளக்கினார்.முதலில் தன்னுடைய மேலதிகாரியிடம் மிகவும் பணிந்து, அடிமை போல் வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால்  அவர்கள் ஆங்காங்கே ஒரு சில எலும்பு துண்டுகளை வீச வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, ஊழியர்கள் நியமிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .இந்த பட்டியல் இன அதிகாரி தனக்கு வேண்டிய ஒரு தன் இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவரை பரிந்துரை செய்து கேட்கலாம் .அப்போது மேலதிகாரி சரி என்று சொல்லலாம் .அதாவது ,அவருக்குத் தெரிந்து ,அவராக தூக்கிப் போடும் ஒரு எலும்பு துண்டு போல அதை வைத்துக் கொள்ளலாம்.அதிகமாக பட்டியலின அதிகாரிகள் மிகவும் தன்மானமிக்கவர்கள் .ஆதலால், இந்த வழியில் செல்வதற்கு கூச்சப்படுவார்கள் .அதையும் மீறி ஒன்றிரண்டு பேர் அவ்வாறாக செய்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
  5. அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்தப்பட்ட சில பட்டியலின் அதிகாரிகள், அவர்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் சில நன்மைகளை, தங்கள் இனத்தவருக்கு செய்ய வாய்ப்புள்ளது.அதை மிகவும் நாசூக்காகவும் , புத்திசாலித்தனமாகவும், மறைமுகமாகவும் செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்யும் ஒன்று இரண்டு அதிகாரிகளையும் எனக்கு தெரியும் என்று என்னிடம் பேசியவர் கூறினார் .எடுத்துக்காட்டாக, 100 பேரை ஒரு இடத்திற்கு அனுப்ப வேண்டி இருக்கிறது என்றால், அதில் மெதுவாக ஒரு பட்டியலின நபரையும் சேர்த்துக் கொள்ள வைக்கலாம்.அவசரமாக நமது வங்கியின் லண்டன் கிளைக்கு ஒரு அதிகாரி தேவைப்படுகிறார், யார் யார் தகுதி உள்ளவர்கள் என்று கொடுங்கள் என்று மேல் அதிகாரி கேட்பார். உடனே இந்த பட்டியல் இன  அதிகாரி ,2 'பயோடேட்டா ' தாளை கொடுப்பார் .அதில் ஒரு முன்னேறிய சாதி நபரின் குறிப்பு இருக்கும் .ஆனால், அதில் ஏதாவது ஒரு பிரச்சனை மறைந்து இருக்கும்.இன்னொன்று , பட்டியலின  குறிப்பு. அது சிறந்ததாக இருக்கும்.குறிப்புகளை  கொடுத்துவிட்டு, மெதுவாக, சார், இவர் நல்ல திறமையானவர் தான். ஆனால், எஸ் .சி. என்பார். அவசரத்தைக் கருதி மேலதிகாரி பரவாயில்லை என்று அதை ஆமோதிக்கும்  சூழ்நிலையை உருவாக்குவார் !இப்படி ஒன்று இரண்டு நடந்திருக்கிறது என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
  6.  மொத்தத்தில் ,அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் பட்டியலினத்தவர்  , மற்றவர்களுக்கு அடிமையாகத்  தான் இருக்க வேண்டும். தனியாக அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த முடியாது .அவர்களை எப்போதும் கண்காணிக்க படுவார்கள். ஆகவே ,அவர்கள் உதவி செய்ய வில்லை என்றால், அவர்களை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது.அவர்கள் நிலைமை அப்படி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .இல்லையென்றால் ,பாராளுமன்றத்தில் 230   உறுப்பினர்கள் SC /ST  சார்ந்தவர்கள்.அவர்கள்  ஒன்று சேர்ந்து ,என்னவெல்லாம் செய்யலாம். ஆனால், அவர்கள் சேரவே மாட்டார்கள். சேரவே முடியாது என்பது  உண்மை . இது மாறுவதற்கு வாய்ப்பேயில்லை என்பதே பொது கருத்து.