Monday 25 March 2019

துக்கடா துணுக்குகள் !

'கரவல் ' என்றால் என்ன ?
நீங்கள் உங்கள் மனைவிக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கி வந்து ,கொடுக்கும் முன் மனம் மாறி நீங்களே வைத்துக் கொள்கிறீர்கள் ! அது தான் கரவல் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவன் 'அசகாய சூரன் 'என்பார்கள் !அப்படி என்றால் என்ன பொருள் ?

‘வேறுதுணைவேண்டாதுபகைவரைவெல்லும்வீரன்’
என்று பொருள் ! அதாவது தனி ஒருவன் அவ்வளவு பலம் கொண்டவன் ! படங்களில் வரும் எம் .ஜி .ஆர் போல !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------'உக்கடம் 'என்பது கோவையில் ஒரு இடம் .அதன் பொருள் என்ன ?'உக்கடம் ' என்றால் 'கண்காணிப்பு கோபுரம் 'என்று பொருள் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
'அழகி 'கேள்விப்பட்டிருப்பீர்கள் .'அழகியன்,அழகியள் ' ?
அவ்வாறும் சொற்கள் உள்ளன தமிழில் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காக்கா கடிக்குமா ?கடிக்காது ,கொத்தும் ! பின்னர் ,'காக்கா கடி ' என்று சொல்வதேன் ?
ஒரு தின்பண்டத்தை ஒரு கடி கடித்துவிட்டு ,மற்றவருக்கு காக்கா போல் பகிர்வது ,'காக்கா கடி'யாகும் !

No comments:

Post a Comment