------------------------------------------------------------------------------------------
தினமும் அவன் பசியில் ,'அம்மா !ஏதாவது போடுங்கம்மா !
சாப்பிட்டு 3 நாள் ஆச்சு !'கத்துவான் .
பெரிய வீட்டில் உள்ளிருந்து ஒரு பதில் குரல்
'ஒண்ணும் இல்லை !போ !போ !
காலையில முழிச்சதும் இவன் குரல் தான் !சே !'
பட்டுடுத்து வயறு நிரம்பிய தம்புராட்டி
எரிச்சல் பட்டாள் !திட்டி தீர்த்தாள் !
இன்று ஒரு பெரும் மாற்றம் .
அவன் கையில் சாப்பாடு பொட்டலங்கள் !
ஆனால் தம்புராட்டி சாப்பிட்டு 9 நாள் ஆச்சு !
மாடியில் அவள் ,மடியில் பிள்ளைகள் !
எல்லோரும் பட்டினியில் !
நீந்தி அவன் சென்று பொட்டலத்தை கொடுத்தான் அவன் !
'பசி தாங்க மாட்டீங்கம்மா ,நீங்களெல்லாம் !
சாப்பிடுங்கம்மா !புள்ளைக்கும் கொடு தாயீ !
நிவாரண முகாம்ல எனக்கு கொடுத்தாங்க !
என்றான் கண்ணீர் மல்க அவன் !
தமிழ் தெரியாது என்று எப்போதும் சொல்லும்
தம்புராட்டிக்கு இன்று மட்டும்
தமிழ் தெரிந்தது !தமிழனும் தெரிந்தான் !
மழை வெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை விட்டு
தப்பிக்காத அந்த தமிழன் தெளிவாய் தெரிந்தான் !
அவனைப் பொறுத்த வரை அன்றும் பட்டினி தான் !
சுற்றி ஓடும் தண்ணீரை ,ஒரு மடக்கு குடித்தான் !
கவிஞர் ஆழிமலர்
தினமும் அவன் பசியில் ,'அம்மா !ஏதாவது போடுங்கம்மா !
சாப்பிட்டு 3 நாள் ஆச்சு !'கத்துவான் .
பெரிய வீட்டில் உள்ளிருந்து ஒரு பதில் குரல்
'ஒண்ணும் இல்லை !போ !போ !
காலையில முழிச்சதும் இவன் குரல் தான் !சே !'
பட்டுடுத்து வயறு நிரம்பிய தம்புராட்டி
எரிச்சல் பட்டாள் !திட்டி தீர்த்தாள் !
இன்று ஒரு பெரும் மாற்றம் .
அவன் கையில் சாப்பாடு பொட்டலங்கள் !
ஆனால் தம்புராட்டி சாப்பிட்டு 9 நாள் ஆச்சு !
மாடியில் அவள் ,மடியில் பிள்ளைகள் !
எல்லோரும் பட்டினியில் !
நீந்தி அவன் சென்று பொட்டலத்தை கொடுத்தான் அவன் !
'பசி தாங்க மாட்டீங்கம்மா ,நீங்களெல்லாம் !
சாப்பிடுங்கம்மா !புள்ளைக்கும் கொடு தாயீ !
நிவாரண முகாம்ல எனக்கு கொடுத்தாங்க !
என்றான் கண்ணீர் மல்க அவன் !
தமிழ் தெரியாது என்று எப்போதும் சொல்லும்
தம்புராட்டிக்கு இன்று மட்டும்
தமிழ் தெரிந்தது !தமிழனும் தெரிந்தான் !
மழை வெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை விட்டு
தப்பிக்காத அந்த தமிழன் தெளிவாய் தெரிந்தான் !
அவனைப் பொறுத்த வரை அன்றும் பட்டினி தான் !
சுற்றி ஓடும் தண்ணீரை ,ஒரு மடக்கு குடித்தான் !
கவிஞர் ஆழிமலர்
No comments:
Post a Comment