Wednesday, 10 June 2026

பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பத்து கட்டளைகள்!

பாலியல் குற்றங்களை செய்ய எது தூண்டுகிறது?முதலில் அதை  தெரிந்து கொள்வோம் .

                                                           (படம் நன்றி- கூகுள் )

பாலியல் குற்றங்களை செய்ய தூண்டுவது இச்சையின் ஆவி என்பதாகும். இது பசி போல  ஒரு ஆவி என்பதால் அதை சட்டத்தினாலோ, தண்டனையினாலோ ஒருநாளும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் .ஆதலால், இச்சையின் ஆவியை கட்டுப்படுத்த ,சட்டம் ,தண்டனையைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் பொருளற்றது .அதனால் ஒரு பயனும் இல்லை .ஆவிகள் ஆட்களுக்குள் குடியிருக்கும்.ஆக ,மரண தண்டனையே கொடுத்தாலும் ,அந்த ஆவி திரும்பவும் வேறொருவர் வழியாக செயல் நடத்த வரும் .மரண தண்டனை என்பது ,அந்த ஆவி குடி இருந்த ஆளை  மட்டும் கொல்லும் . இச்சையின் ஆவியை கொல்ல முடியாது . அதனால் தான் எவ்வளவு தண்டனை கொடுத்தாலும், திரும்பவும் அதே போல குற்றங்கள் நடக்கின்றன . எடுத்துக்காட்டாக, சமீபத்தில் 25/052026 அன்று,விளாத்திகுளம் கற்பழிப்பு வழக்கில், தர்ம முனிஸ்வரன் என்ற கற்பழிப்பு குற்றவாளியை இரட்டை தூக்கு தண்டனை வழங்கி, கடுமையான தீர்ப்பு வெளியானது .இதற்கு மேல் ஒருவருக்கு தண்டனை கொடுக்க முடியாது . கடுமையான தண்டனை இச்சையின் ஆவியை கட்டுப்படுத்தும் என்றால் 25/05/2026க்கு அப்புறம் தமிழ்நாட்டில்  பாலியல் குற்றங்கள் எதுவும் நடந்திருக்கக்கூடாது. அப்படித்தானே? ஆனால் ,அதன்  பின்னர் தினமும் கிட்டத்தட்ட ஒன்று  நடந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளை கூட கற்பழிக்கிறார்கள். அதை தான் இப்போது நாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள்!எத்தனை முறை அதை பார்த்தாலும், இந்த உண்மையை அரசால் உணரவே முடியவில்லை என்பது ஒரு பெரும் வேதனை தான்.

ஆக, பாலியல் குற்றங்களை தடுக்கவே முடியாதா ?என்றால் , முடியும்!என்பதே பதில் .அப்படி என்றால் பாலியல் குற்றங்களை தடுக்க என்ன தான் வழி?

பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ,இச்சையின் ஆவியை கட்டுப்படுத்த வேண்டும்.சரி ,அதை எப்படி கட்டுப்படுத்துவது?

இதோ ,கீழ்க்கண்ட இந்த பத்து கட்டளைகளை கடைப்பிடித்தால் ,இச்சையின் ஆவியை மட்டுப்படுத்தி, பாலியல் குற்றங்களை பெருமளவு ஒழித்து விடலாம். இல்லை என்றால் ஒருநாளும் அது ஒழியாது என்ற சொற்களைக் குறித்து வைத்துக்  கொள்ளுங்கள்.

1) காமவெறியேற்றும் சூழ்நிலைகளை தடை செய்ய வேண்டும்.

காம வெறியேற்றும் திரைப்பட பாடல்கள், ஐட்டம் பாடல்கள் ,சமூக ஊடகங்களில் வெளியாகும் காமவெறி ரீல்ஸ் ,இவற்றையெல்லாம் சட்டத்தினால் தடை செய்ய வேண்டும்.பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பெண்ணின் கவர்ச்சி படத்தை சமூக ஊடகங்களில் போடுவது இப்போது ஒரு கெட்ட பழக்கமாகிவிட்டது. அதை முற்றிலும் மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய வேண்டும்.

2)பெண்களை அதீத இடர் (UNDUE RISK )எடுக்கும்படியாக ஊக்கம் செய்யக்கூடாது

நீங்கள் சிங்கப்பெண்கள், எங்கு வேண்டுமானாலும்,எந்த நேரத்திலும், தனியாக போகலாம்,எதை வேண்டுமானாலும் ஆண்களைப் போல செய்யலாம் என்று ஒரு வெற்று வாக்குறுதி, கொடுத்து அவர்களை ஆபத்தான காரியங்களை செய்யும்படியாக ஊக்கம் அளித்தல் கூடாது.நீங்கள் எங்கு போனாலும், உங்களை சிங்கப்பெண் படை வந்து காப்பாற்றும் என்று ஒரு தப்பான நம்பிக்கையை  உருவாக்கக் கூடாது.தமிழ்நாட்டின் பெண்கள் ஜனத்தொகை 3.88 கோடி. இவ்வளவு பெண்களையும் பாதுகாக்கும் அளவுக்கு தமிழக அரசின் சிங்கப்பெண் படை இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் சிங்கப்பெண்ணும் பெண் தான் என்பதை நினைவு படுத்த வேண்டும். சமீபத்தில் ஒரு சிங்கப் பெண் அதிரடி படையை சேர்ந்த காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக ஒரு ஆணை இடை நீக்கம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

3)பாலியல் குற்றம் ஒன்று நடைபெற்றால் , அந்த குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தவுடன் ,கணக்கு சரியாகிவிடும் என்ற ஒரு தவறான கருத்தை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றன

இதை முழுவதுமாக நம்பும் மக்கள், அந்தப் பெண் இறந்து போனால் கூட ,அதை பற்றி அவ்வளவாக வருத்தப்பட்டு அழாமல் ,அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தால் போதும் என்று ,அந்தப் பெண்ணின் தாயை சொல்ல வைக்கிறார்கள் .அதில் பழிவாங்கும் உணர்ச்சி தான் மேலோங்கி நிற்கிறது. டெல்லியில் நடந்த நிர்பயா வன்கொடுமை வழக்கிலும், இதே போல் தான் அந்த பெண் இறந்ததை பற்றி அவர்கள் தாயார் கவலைப்பட்டது போலவே தெரியவில்லை .அவர்கள் கூறியெதெல்லாம் ,அந்த குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ,அது போதும் !என்பதுதான். அவனுக்கு மரண தண்டனையை வாங்கி கொடுத்தாலும், இறந்த பெண் திரும்ப வரப்போவதில்லை என்பதை உணர மறுக்கிறார்கள். குற்றவாளிக்கு மரண தண்டனையே கொடுத்தால் கூட, நடைபெற்ற சம்பவம், அது ஏற்படுத்திய தாக்கம், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, இழந்த மானம் ,இவைகள் எதையும் அந்த தண்டனை சரி செய்ய முடியாது ,அந்த தண்டனையினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை என்பதை ,ஊடகங்கள் பெரிதாக விவாதிப்பது இல்லை.அப்படி ஊடகங்கள் அதை பெரிதாக விவாதித்தால், அவற்றை முக்கியமான புள்ளிகளாக காட்டினால் , பெண்கள் தங்கள் சுய பாதுகாப்பை பற்றி சிந்திக்க ஆரம்பிப்பார்கள். இதனால் இவ்வளவு பாதிப்பு நமக்கு வரும் என்பதை நினைத்துப் பார்த்து ,ஒன்றுக்கு இரண்டாக சிந்தித்து முடிவெடுப்பார்கள் .இப்போது அப்படி அல்ல,பாலியல் குற்றம் நடந்தால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை , தண்டனை வாங்கி கொடுத்தால் அது போதும் ,என்ற ஒரு நினைப்பை பெண்களிடம் உருவாக்கி விட்டார்கள்.பாலியல் குற்றம் ஒன்று நடந்தால் அதனால் அந்த பெண்ணுக்கு எந்தவித இழப்பும் இல்லை என்று நினைக்க வைப்பது,பெண்கள் அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் இருக்க வைக்கிறது .பெண்கள் அதை குறித்து கவலைப்பட்டால் தான் ,தங்கள் பாதுகாப்பை பற்றி சரியான முடிவு எடுப்பார்கள் .இப்போது போனால் என்ன நடக்கும் என்பதை பற்றி சிந்திப்பார்கள். பெண்கள் ,கற்பழிப்பு குற்றங்களால் தங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நினைப்பதால் தான், பாலியல் குற்றம் நடந்தவுடன் காவல்துறைக்கு சென்று புகார் ஒரு பயம் இல்லாமல், ஒரு குற்ற உணர்வு இல்லாமல் ,அளிக்கிறார்கள் .ஊடகங்கள் அவர்களை துணிச்சலான பெண் என்று சொல்லி பாராட்டுகிறார்கள் .இந்த மாதிரி ஒரு குற்றம் தன்னுடைய சொந்த மகளுக்கு ஏற்பட்டால் இப்படி அவர்கள் பாராட்டுவார்களா? ஆக ஒரு சமூக பொறுப்பு இல்லாமல் ஊடகங்கள் நடந்து கொள்கிறது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் பல மடங்காக பதிவு ஆவதற்கும் இதுதான் காரணம்.இந்தப் போக்கு ஒரு தவறான விதை என்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலையை ஊடகங்கள் மாற்ற வேண்டும்.

4)பெண்கள் ஆண்களை,பாலியலாக,அறிந்தோ அல்லது அறியாமலோ, தூண்டி  விடுவதை  தவிர்க்க வேண்டும்.

  இயற்கையிலேயே பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்படும், ஒரு கிளர்ச்சி ஏற்படலாம் .இது இயற்கை .இதை பாலின கவர்ச்சி என்று சொல்வார்கள்.ஆதலால், முடிந்த அளவு பெண்கள் தங்களுடைய கவர்ச்சி பாகங்களை மறைத்து, ஆண்களுக்கு கிளர்ச்சியை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு சமூக பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் நாங்கள் எப்படியும் உடுப்போம், அது எங்கள் சுதந்திரம் என்று இயற்கையான இந்த விஷயத்தில் சொல்ல முடியாது .உங்கள் சுதந்திரம் அவர்களை கிளர்ச்சி உண்டாக்கும் என்றால் , அந்தக் கிளர்ச்சியின் விளைவுகளுக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள் என்பதை உணர வேண்டும். ஆக, கிளர்ச்சியூட்டும் உடைகளை அணியக் கூடாது. பெண் கவர்ச்சி பாகங்களை மூடி வைக்க வேண்டும் .முந்தானை போன்ற உடைகளால் மார்பகங்களை மூடி வைக்க வேண்டும் .கால்களின் கவர்ச்சி  வடிவங்கள் வெளியே தெரிய கூடாது .லெக்கின்ஸ் அணியும் போது கால்களின் வடிவம் தெளிவாகத் தெரியும் .மேலும் கால்களை கவர்ச்சியாக காட்டுவதற்கு லெக்கின்ஸ் வண்ணங்களை, தோல் போன்ற வண்ணங்களில் பல பெண்கள் அணிகிறார்கள் .இது தவறு.இவைகள் எல்லாம் இயற்கையின் விதிகள். கிளர்ச்சி என்பது இயற்கையில் உள்ளது .அதை சட்டத்தை கொண்டு அடக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் எப்படி மூடி வைத்தாலும் கற்பழிப்பு குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வாதம் செய்கிறார்கள். எத்தனை பூட்டு போட்டாலும் வீட்டில் திருடிக் கொண்டு போகிறார்கள் என்பதற்காக நாம் பூட்டு போடுவதை நிறுத்துவதில்லை. பூட்டு போட்டால் முடிந்த அளவு திருட்டை நாம் குறைக்கலாம் என்பதற்காக பூட்டு போடுகிறோம் .அது போல தான் இதுவும்பூட்டு ,

6) சொற்களின் தாக்கம்: எந்த சொல் சரி? கற்பழிப்பா அல்லது பாலியல் குற்றமா?

வார்த்தையின் வல்லமையைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.அதில் ஒரு வசனம் 'மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.'என்று உள்ளது . அதாவது ,ஒருவனின் வாழ்வும் சாவும் அவனுடைய வாயின் வார்த்தைகளினால் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது .ஆக ,சரியான சொற்கள் மிகவும் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். லஞ்சம் என்ற சொல்லை பயன்படுத்தினால், அது ஒரு கேவலமான காரியம் என்ற உணர்வு நமக்கு வரும் .அதையே அன்பளிப்பு என்று சொல்லிவிட்டால், அது ஒத்துக் கொள்ளக் கூடியதாக மாறிவிடுகிறது! அதுபோல கற்பழிப்பு என்று சொன்னால் நாம் ஏதோ இழக்க கூடாத முக்கியமான ஒன்றை இழந்து விட்டோம் என்ற ஒரு உணர்வு வரும். ஆதலால் ,பெண்கள் அது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அந்த சொல்லின் மூலம் வரும் .இழந்த கற்பு திரும்ப வராது என்ற எண்ணமும் அதில் வரும். ஆனால் ,அதே செயலை பாலியல் குற்றம் என்று சொன்னால், யாரோ ஒருவர் இந்த பெண்ணிடம் ஒரு குற்றத்தை செய்து விட்டு போய்விட்டார், அவ்வளவுதான் .அதில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை .குற்றம் செய்தது ஆண்  தானே! அதனால் ,அவருக்கு தண்டனை கொடுத்து விட்டால் ,அது ஒன்றே போதும் எனக்கு ,அதனால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை என்ற ஒரு எண்ணத்தை பெண்களிடம் அந்த சொல் உருவாக்கி விடுகிறது .இதனால் ,பெண்கள் பாலியல் குற்றம் நடந்தால் ,இழக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்று துணிச்சலாக, ஆண்கள் கூப்பிடும்போது  எங்கு வேண்டுமானாலும் ,எந்த நேரத்திலும் செல்கிறார்கள். இன்றைய செய்தி- ஒரு இளம் பெண் இரண்டு வாலிபர்கள் கூப்பிட்டார்கள் என்று காரில் சென்று ,ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறாள். அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இரண்டு வாலிபர்களும் மாறி மாறி கற்பழிப்பு செய்திருக்கிறார்கள் .அவள் அதைக் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், திருவைகுண்டம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதை  கற்பழிப்பாக எடுத்தால், அவள் முதலில் தனியாக ஆண்களுடன் துணிச்சலாக சென்றிருக்க மாட்டார்.பின்னர் கற்பழிப்பு நடந்த உடன், ஐயையோ இப்படி நடக்கக்கூடாதது நடந்து விட்டதே என்று மன முடைந்து கதறி இருப்பார், அழுது இருப்பார்,மன வேதனை அடைவார். இதைக் குறித்து வெளியே சொல்ல பயப்படுவார் . அதை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டுமா என்று யோசிப்பார் .ஆதலால், இதுபோன்று இன்னொரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வார் .எல்லா பெண்களும் அதேபோல கவனமாக இருப்பார்கள் .அதே குற்றத்தை' பாலியல் குற்றம்' என்று சொன்னால் ,அதை சும்மா சொன்னது போல், துடைத்தெறிந்து விட்டு போய்விடுவாள் அந்த பாதிக்கப்பட்ட பெண்.ஆக, பாலியல் குற்றம்  என்ற பதத்தை எடுத்து விட்டு கற்பழிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது நல்லது என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

7)உறவு முறைகளை மதிப்பது/பலப்படுத்துவது

எல்லாப் பெண்களையும்  தாயாக பார்க்க வைப்பது,இந்த இச்சையின் ஆவியை மட்டுப்படுத்தும்  ஒரு வழியாகும் .இன்னும் கூட தென் மாவட்டங்களில் ,சிறுமிகளையும் ,இளம் பெண்களையும் 'தாய் 'என்று அழைக்கும் முறை கிராம புறங்களில் காணலாம். ' ,தாயோ ,இங்க வாம்மா 'என்று மரியாதையுடன் சிறு பிள்ளைகளை கூட அழைப்பார்கள். அப்படி அழைக்கும் போது, இந்த காம கண் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்போதெல்லாம், இளம் பெண்களுக்கு கையைப் பிடித்து ,வளையல் போட்டு விடுவது ஆண்கள்தான் .வளையல் மணிக்கட்டில் நுழையாது என்பதால் ,அழுத்தி தான் போட்டு விடுவார்கள்.எனக்குத் தெரிந்து இதுவரையில் எந்த ஒரு ஆணும், எந்த ஒரு இளம் பெண்ணிடம் இதில் அத்துமீறி நடந்ததாக கேள்விப்பட்டதே இல்லை. அதற்கு காரணம் அந்த தாய் என்ற உறவு முறைதான்.குஜராத்தில் எல்லாப் பெண்களையும்  'சகோதரி 'யாக 'பெஹன் 'என்று அழைப்பார்கள் .இன்னும் அறிமுகமில்லா பெண்ணையும் 'அக்கா 'என்று அழைக்கும் முறை கோவையில் காணலாம் .

8)ஒரு ஆணுடைய பாதுகாப்பில் எப்போதும் பெண் இருப்பது

பெண்கள் முடிந்த வரை ,தனியாக செல்லாமல்,யாராவது  ஒரு ஆண் துணையுடன் செல்ல வேண்டும். அந்த ஆண், சகோதரனாகவோ, தகப்பனாகவோ அல்லது நம்பிக்கை கூறிய ஒரு ஆண் நண்பராகவோ இருக்கலாம் .ஆனால், தனியே செல்லாமல் ஒரு ஆண்  துணையுடன் செல்லும்போது, மற்ற ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு பயம் வரும். ஆதலால், அவர்கள் வீணாக ,ஏதாவது இந்த பெண்ணுக்கு செய்யலாம் என்று நினைக்க மாட்டார்கள் .ஆகவே, இந்த அறிவுரையை பெண்கள் எல்லா பெண்களும் கடைபிடிக்க வேண்டும் .இப்படி ஒரு ஆண் துணையுடன் போயிருந்தால், திருச்சியில் கற்பழிப்பு செய்யப்பட்ட அந்த 16 வயது பெண் காக்கப்பட்டு இருக்கலாம் .அவளுக்கு மது ஊற்றி கொடுத்து ,போதை ஏற்படுத்தி, கார் ஓட்டுநர் ஒருவர் கற்பழித்து இருக்கிறார்.

9)  பாலியல் குற்றங்களை குறைப்பதில் சட்டத்தின்/ஊடகங்களின் பங்கு

சமீபத்தில் திருச்சியில் ஒரு 17 வயது பெண் ஏழு சிறார்களால் சீரழிக்கப்பட்டாள்.இது  எப்படி நடந்தது என்றால் ,இந்த பையன்கள் அந்த பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக தனித்தனியாக தொடர்பு கொண்டு நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். பின்னர் அதை  பயன்படுத்தி ,அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்திற்கு ,ஒவ்வொருவரும் தனித்தனியாக வரவழைத்து ,அவளை பாலியல் இன்பம் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் இந்த பையன்கள் அழைக்கும் போதெல்லாம் போயிருக்கிறாள் ! இவள் 18 வயது நிரம்பாத இளம் பெண் .ஆதலால் ,இவள் இப்படி போவதற்கு பெற்றோருடைய சம்மதம் தேவை. அப்படி சம்மதம் வாங்கியதாக தெரியவில்லை .இப்போது ஏழு பேரும் சேர்ந்து அவளை கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது .இது நடந்த பிறகு,இந்த பெண் காவல்துறையை  அணுகி தன்னை இவர்கள் இப்படி சீரழித்து விட்டார்கள் என்று சொல்கிறாள் ! இந்த குற்றத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்த பெண் உடன்பட்டு இருக்கிறாள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆக ,இது சம்மதித்து செய்யப்பட்ட ஒரு பாலியல் உறவு .பின்னர் எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண் வந்து அந்த ஆண்கள் மேல் குற்றம் சுமத்துகிறாள் என்றால் ,இதில் அவளுடைய பங்கு இருப்பதால் இந்த குற்றத்தை பதிவு செய்யக்கூடாது .அவள் 18 வயது நிரம்பாதவள், ஆதலால் அவளுடைய சம்மதம் செல்லாது என்று வாதித்தால் ,அதேபோல 18 வயது நிரம்பாத அந்தப் பையன்களும் அறியாமல் செய்துவிட்டார்கள் என்ற வாதம் வரும் .ஆக, 18 வயது நிரம்பாத ஆணும் பெண்ணும் ,தன்னுடைய சட்டபடியான  காவலரான , பெற்றோரிடம் இதற்கு அனுமதி வாங்கினார்களா என்று கேள்வி எழுப்ப வேண்டும் என்பது சட்ட நிபுணர்கள் கருத்து.தற்போதைய அணுகு முறையில் பெண்கள் என்ன தவறு செய்தாலும் அதை விட்டுவிட்டு ,அவர்கள் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பது என்பது பழக்கம் ஆகிவிட்டது .இந்த பழக்கத்தை மாற்றி அந்த பாலியல் குற்றம் நடப்பதற்கு பாதிக்கப்பட்டவர் எந்த வகையிலாவது சம்மதம் தெரிவித்து இருந்தாலோ அல்லது பங்களித்து இருந்தாலோ , அந்த குற்றத்தை பதிவு செய்யக்கூடாது என்று நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்பது சட்ட நிபுணர்கள் கருத்து .இதனால் பெற்றோர்கள் தங்கள் 18 வயது நிரம்பாத மகள்களை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டுவார்கள், அவள் எங்கே செல்கிறாள் என்பதை கண்காணிக்க ஆரம்பிப்பார்கள் என்பது அவர்கள் கருத்து.

இன்றைய தமிழ்  அச்சு  மற்றும் காட்சி ஊடகங்கள் எல்லாமே வெறும் வியாபார நோக்கில் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது .அவைகள் சமூக பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர் .மக்களுக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதை சொல்லி காசு பண்ணுவதில் குறியாக இருக்கிறார்கள் . ஆக, அவர்களின் பங்கு இப்போது எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நிறைவாக இல்லை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. எடுத்துக்காட்டாக ,மின்மாற்றி பழுது பார்க்கும், போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாப சாவு என்று மட்டும் செய்தியை போட்டுவிட்டு விடுகிறார்கள்.அவர் இறப்புக்கு உண்மையில் என்ன காரணம்  என்பதை போட மாட்டார்கள். பொறுப்பான ஊடகம் என்றால் அந்த மின்ஊழியர்  தன்னை மின்சார அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கு கையுறைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் அணிய வேண்டும் என்ற விதியை பின்பற்றாதால் தான் இந்த பரிதாப சாவு ,என்பதை கடைசி பத்தியில் போட்டு விட வேண்டும் .அதை போடுவதில்லை. ஏனென்றால் இது ஒரு மரண செய்தி .அப்படி போட்டால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் .ஆனால் ,அப்படி போட்டால் தான் அடுத்ததாக பாதுகாப்பு கருவிகள்  போட்டு வேலை செய்வார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. அதே போலத்தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது சுய பாதுகாப்பில் அந்தப் பெண் என்னென்ன செய்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம், என்பதையும் போட வேண்டும் .அதை போடுவதே இல்லை. பெண்கள் பக்கம் எந்த தவறும் இல்லாதது போல ஒரு எண்ணத்தை ஊடகங்கள் உருவாக்குவது அவர்களுடைய சுய லாபத்துக்கு தான் .அதில் அவர்களுடைய சமூகப் பொறுப்பை தட்டி கழிக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.

10) உயிர் தேவை மையங்கள்  

உயிர் வாழ மனிதனுக்கு பல தேவைகள் உள்ளது .அதில்  உணவு முக்கிய பங்கு வகிப்பது போல, பாலியல் தேவையும் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் . மனித இனத்தை பொறுத்தவரையில் இனப்பெருக்கத்தின் தலைமை ஆண்களின் கையில் தான் உள்ளது என்பதே  பாலியல் விஞ்ஞானிகளின் கருத்து. ஆண்கள் தான்  அதை முன்னெடுத்துச் செல்கிறார்கள் .ஆண்கள் அப்படி இனப்பெருக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ,அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு பெரிய உந்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களைக் கண்டால், அவர்கள் அழகு /கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள் .பின்னர் பெண்களை ,அவர்கள் பின் தொடர்ந்து, காதல் செய்து ,உடலுறவு கொண்டு குழந்தைகள் பெறுகிறார்கள். ஆக ,இந்த பாலியல் நடவடிக்கைகள் எல்லாம்  ஆண்கள் கையில் தான் முற்றிலும் உள்ளது .அதை குறிக்கு முகமாக ஆண்களின் விந்து தான் பெண்களின் கர்ப்பப்பையில் ஒரு வேகத்துடன் விடப்படுகிறது .உடல் உறவில் விடப்பட்ட ,அந்த ஆண்களின் விந்தணுக்கள் மிக வேகமாக துருதுருவென்று நீந்தி பெண்களின்  கருவை நோக்கி படையெடுக்கின்றன. அதில் ஒரு விந்தணு தான் வெற்றி பெற்று ,கருவூட்டல் நடைபெறுகிறது .இது அழகான ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் போட்டி போடுவதை போல என்பதை  குறிக்கிறது. கடைசியில் ஒரு ஆண் தான் பொதுவாக வெற்றி பெறுகிறான் என்பதையும் இது குறிக்கிறது.இது எல்லாவற்றிலும் ,பெண்களின் செயல்பாடு ஆங்கிலத்தில் PASSIVE  என்று சொல்வார்கள் .அதாவது ஒன்றும் செய்யாமல் காத்திருப்பது என்று பொருள்.அதாவது, ஆண்களின் விந்தணுவை எதிர்பார்த்து கரு காத்திருக்கும். அவ்வளவுதான் .அது எங்கும் துள்ளிக்குதித்து ஓடுவதில்லை!துறுதுறு என்று அலைவதில்லை! இதுவே ,இயற்கையில் பெண்களின் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது .அவர்கள் வேலை ஆண்களின் பாலியல் நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பது தான் .அவர்களாக போய் பொதுவாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை என்பதே  இயற்கை.ஒரு சராசரி பெண் தன்னுடைய வாழ்நாளில் சுமார் 400 லிருந்து 500 கரு முட்டையை உருவாக்குகிறாள் என சொல்லப்படுகிறது .அப்படி என்றால் ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 42 வருடம் தான் பாலியல் நடவடிக்கையில் இருக்கிறாள் என்று பொருள் .கருமுட்டை உற்பத்தி நின்ற பிறகு பாலியல் ஆர்வம்  பெண்களுக்கு பொதுவாக குறைந்து விடும்.ஆனால் ஆண்களை பொறுத்தவரையில் அப்படி அல்ல. சுமார் 14 வயதில் ஆண்கள் பருவமடைந்து விந்தணுக்களை உருவாக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆரம்பித்தவர்கள், இனப்பெருக்கத்தின் தலைவர்கள் ஆவதால் அவர்களுடைய ஆண்மை என்பது சாகும் வரை தொடர்ந்து  அவர்கள் கூட வே வருகிறது .அதனால் தான் வயதான  ஆண்களுக்கு  கூட பல பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைந்த நிலையில் பார்க்கிறோம்.

ஆக, ஆண்களுக்கு இது ஒரு அடிப்படை உயிர் தேவை என்பதை அரசு உணர்ந்து, அந்த தேவையை தீர்த்துக் கொள்ள சட்டப்படியான வழிவகைகள் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து .அதாவது, உயிர்த்தேவை மையங்கள் அமைக்கப்பட்டு ,அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பாலியல்  தொழிலாளர்களை சேவைக்கு அமர்த்துவது ,இந்த உயிர் தேவையை தீர்த்துக் கொள்ள ஒரு வழிவகை செய்யும் .அப்படி ஒரு சட்டபூர்வமான வழி  இருக்கும் போது, இச்சை கொண்டவர்கள் சிறுமிகளையும், ஏன் கைக்குழந்தைகளையும் ,வயதான  பாட்டிகளையும் நாட வேண்டிய தேவை இருக்காது என்பது அவர்கள் கருத்து. இதற்கு ஏற்றாற்  போல் ,சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம், ஒரு வயது வந்த பெண், முழு சம்மதத்தோடு ,அவளுடைய உடலை விற்பதற்கு சம்மதித்து, உடலுறவு கொண்டால் ,அது குற்றமல்ல .அவளை காவல்துறை கேட்கக் கூடாது என்று ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது .ஆக ,உயிர்த்தேவை மையங்கள் உருவாக்கி, அதை ஒழுங்குப்படுத்தி நடத்துவது, பாலியல் குற்றங்கள் பெருமளவில் குறைவதற்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதே பாலியல் நிபுணர்கள் கருத்து.இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ் பெண்கள் வராமல் போக கலாம் .ஆனால் ,எப்படி தமிழ் திரைத்துறைக்கு மற்ற மாநிலத்து பெண்கள் ஈ மொய்ப்பது போல் வருகிறார்களோ, அதே போல இதற்கும் தகுந்த அளவு பணம் ஈட்ட வழி  இருந்தால் நிச்சயமாக வருவார்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

மேற்கண்ட பத்து கட்டளைகளை தீவிரமாக பின்பற்றினால் ,நிச்சயமாக தமிழ்நாட்டில், பத்து மாதத்தில், பெருமளவில் பாலியல் குற்றங்கள் குறைந்து விடும் என்று நம்பலாம்!நம் வீட்டு சிறுமிகளும், பெண்களும், பாட்டிகளும் நிம்மதியாக வாழலாம் என்பது நிச்சயம்!

 


Monday, 25 May 2026

தமிழ் இனத்தில் மட்டும் ஏன் தமிழரசன் ,தமிழ்ச்செல்வி போன்ற பெயர்கள் உள்ளன?

 தமிழன் என்றோர் இனமுண்டு!தனியே அவற்கொரு குணமுண்டு!என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் பாடினார். உண்மைதான். தமிழர்கள் என்றால் அவருக்கு தனியே சிறப்பான பல குணங்கள் உண்டு. அன்பே அவர்கள் வழி !அமுதே அவர்கள் மொழி !என்றார் அதே கவிஞர். எல்லா உயிருக்கும் அன்பு காட்டுவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஒரே இனம் தமிழினம் தான்! அவர்கள் தமிழ் மொழி  மேல் கொண்ட பற்று ஈடற்றது .தமிழ் அவர்களுக்கு வெறும் பேச்சு அல்ல ,அது மூச்சு என்று சொல்லுவார் சீமான். தமிழை மூச்சாக கொண்ட தமிழர்கள், அதை தங்கள் பெயர்களிலும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் வெளிப்படையாகவே காணலாம் .வேறு எந்த மொழி சார்ந்தவரும் அந்த மொழியை வைத்து அவர்கள் பெயரை வைப்பதில்லை. எடுத்துக்காட்டாக ,மலையாளம் பேசும் ஒருவன் ,மலையாள சேட்டா என்று பெயர் வைப்பது இல்லை. தெலுங்கு பேசும் ஒருவன் தெலுகுகொடுக்கு( தெலுங்கு மகன்)என்று பெயர் வைப்பது இல்லை .ஆங்கிலம் பேசும் ஒருவன் 'சன் ஆப் இங்கிலீஷ்' என்று பெயர் வைப்பது இல்லை. ஆனால், தமிழர்கள் மட்டும் தமிழ் மகன்,தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன், தமிழ் இனியன், செந்தமிழன் என்றெல்லாம் பெயர் வைப்பதை பார்க்கிறோம். இது தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு என்று நாம் ஒருபுறம் கருதினாலும், இவ்வாறு பேர் வைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் ஒளிந்து இருக்கிறது என்பதை கூர்ந்து பார்த்தால் தான் தெரியும்.

அது என்ன அப்படி ஒரு அரசியல், இந்த பெயர்கள் பின்னால் ஒளிந்திருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம் .இந்த மாதிரி பெயர்கள் வைப்பவர்கள் பின்னணியை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .அப்படி பார்க்கும்போது உங்களுக்கு ஒரு பெரிய உண்மை தெரியும் தெரியவரும்.

தமிழினத்தின் தொல்குடிகள் என்று பார்த்தால் யார் யாரை குறிப்பிடலாம்?

  • பறையர் 
  • பள்ளர் 
  • தமிழ் வன்னியர் 
  • முக்குலத்தோர் 
  • சாணார் 
  • கோனார் 
  • முதலியார்
  • தமிழ் செட்டியார் 
  • கௌண்டர் 
  • இது போல சில 
நீங்கள் உற்று நோக்கினால் ,தமிழரசன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை  இந்த தமிழ்க்  குடிகள் பொதுவாக வைப்பதில்லை. ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? என்று சொல்வது போல இவர்கள் யாரும் நாங்கள் தமிழர்கள் என்று பெருமையாக தம்பட்டம் அடிப்பதில்லை. அப்படி என்றால் யார் யார் ,பொதுவாக இப்படி தங்கள் பெயரை தமிழை போற்றும் பெயர்களாக வைக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் ,உங்களுக்கு ஒரு பெரிய உண்மை வெளியே தெரிய வரும்.
 நம் அருகில் இருக்கும் மற்ற மாநிலங்களில் ,அந்த மாநிலத்தின் இனம் அல்லாதவர்கள், அந்த மாநிலத்திற்குள் புகுந்து ,அவர்கள் அடையாளங்களை திருடி அவர்களை ஆள்வதற்கு முயற்சிப்பதில்லை.எடுத்துக்காட்டாக, கேரளாவில் ஒரு தெலுங்கர் உள்ளே நுழைந்து மலையாள பெயர் வைத்துக்கொண்டு ,எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், கேரள மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு ,மாநில அரசியலுக்கு வர முயற்சித்தால் ,அவர்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். அவர்களை ஒருபோதும் கேரளாவை ஆள விட மாட்டார்கள். ஆதலால், அப்படி ஒரு அடையாள திருட்டு முயற்சியை , கேரளாவில் தெலுங்கர்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால், தமிழர்களை பொருத்தவரையில், அவர்கள் தமிழ்நாட்டில் உள் வரும் எல்லா மக்களையும், இருகரம் கூப்பி வரவேற்று ,அவர்களும் ஒரு பக்கம் வாழ்ந்து விட விட்டுப் போகட்டுமே,என்ற  ஒரு பெரிய அன்புடன், மாண்புடன் அவர்களை உள்ளே அனுமதிப்பார்கள். 
அப்படி வெளியே இருந்து வந்த பல சாதிகள், தமிழர்களின் அன்பையும் மாண்பையும் ஒரு ஏமாளித்தனமாக எடுத்துக்கொண்டு, அவர்களை ஆள்வதற்கு முயற்சி எடுத்தார்கள். தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல திருடி,அதைக் கொண்டு அரசியல் லாபம் பெற, பல  உத்திகள்  கையாண்டார்கள் .அதில் ஒன்றுதான் இந்த உத்தி.அது என்னவென்றால், அவர்கள் பெயர்களுடன், தமிழரசன், தமிழ் மகன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை சேர்த்து ,அவர்கள் தமிழர்கள் தான் என்று ஒரு எண்ணத்தை பொதுவெளியில் உருவாக்கினார்கள் .இதனால், அவர்கள் தமிழர்களாகவே  கருதப்பட்டு, பின்னால் அரசியல் வாழ்க்கையில் ,அவர்கள் எளிதாக கோலோச்சி  கொண்டு, தமிழர்களை ஆண்டு அனுபவிக்க ஒரு வழியை அவ்வாறாக  உண்டாக்கினார்கள். பொதுவாக, இந்த பெயர்கள் யாருக்கு வைத்திருப்பார்கள் என்றால்,  அவர்களைப் பார்த்த உடனே அவர்கள் தமிழர்கள் அல்ல என்ற ஒரு சந்தேகம் வரும் சில சாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் .எடுத்துக்காட்டாக, தமிழர்களின் பொதுவான நிறம் கருப்பு அல்லது மாநிறம் என்று சொல்வார்கள் .அப்படி இல்லாமல் வெளு வெளு வென்று ஒருவர் தமிழ்நாட்டில் வந்து 'நான் தமிழன்' என்று சொன்னால், நாம்  நம்புவதற்கு தயங்குவோம் .அந்த தயக்கத்தை போக்குவதற்கு,அவர்கள் தங்கள் பெயரிலேயே, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசன் போன்று வைத்துக் கொள்கிறார்கள்.
இராஜராஜ சோழன் தமிழ்நாட்டை ஆண்ட போது, தமிழ்நாட்டின் வேளாண் நிலங்களை மேலாண்மை செய்வதற்காக, ஒவ்வொரு பெரிய துண்டுகளுக்கும் ஒரு நிலக்கிழார் இருந்தால் நன்றாக இருக்கும்  என்று எண்ணினார். ஆதலால், அதற்காக குஜராத் பகுதியில் இருந்து, குறிப்பாக ராஜ்கோட் போன்ற பகுதிகளிலிருந்து குஜராத்திகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது .அவர்களுக்கு பெரும் பெரும் நிலத்துண்டுகளை கொடுத்து ,அதை மேலாண்மை செய்யும்படியாக பணித்தார். அவர்கள்  எல்லோரும் வெண் தோல் கொண்டவர்கள் . பார்த்தவுடன் ஒரு பார்வையில் ,தமிழர்கள் போல இல்லாமல் இருந்தார்கள். அவர்களை வேளாளர்கள் என்று அழைத்து ,அவர்களுக்கு தமிழ் பெயர் சூட்டி, தமிழில் மிகவும் பற்று கொண்டவர்களாக காட்ட ஆரம்பித்தார்கள். அப்படி பல வேளாளர் குடும்பங்கள், அவர்கள் பெயர்களில் , தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை வைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆக ,தமிழ்நாட்டின் தொல்குடிகளில் காணப்படாத இந்த மாதிரி பெயர்கள் , இப்படி வெளியே இருந்து தமிழ் சமூகத்தில் ஊடுருவிய சாதிகளின் இடையே பரவலாக காணப்படுகிறது என்பதே  ஆராய்ச்சியாளர்கள் கருத்து .இதை நிறுவும் வண்ணமாக, சங்க காலத்தில் ,இப்படியான பெயர்கள் எதுவுமே இருந்ததில்லை என்ற உண்மை கை கொடுக்கிறது.இனியன் சம்பத் என்று அழகான தமிழ் பெயர் இருக்கிறது என்று பார்த்தால் அவர் ஒரு தெலுங்கு நாயுடு! தமிழச்சி தங்க பாண்டியன் என்ற அழகான ஒரு தமிழ் பெயர் இருக்கிறது என்று பார்த்தால் அவர்களின் பின்புலம் தெலுங்கு என்பதை கண்டுபிடிக்கலாம் .லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்று ஒரு அமைச்சர் விஜய் அமைச்சரவையில் இருக்கிறார். அவர் தமிழர் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. அவர் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் புதல்வன் .அப்படி என்றால் அவர் தெலுங்கு அருந்ததியர் சாதியை சேர்ந்தவர்.தமிழன் பிரசன்னா என்று பெயர் இருக்கிறது. விஜய் தமிழன் பார்த்திபன் என்று தற்போது ஒரு அமைச்சர் உள்ளார்.அதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் .இவ்வாறாக ,அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் அதிகமாக காணப்படுகிறது என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
இப்படியான பெயர்கள், தமிழ் மீது,தமிழர்கள்  கொண்ட பற்றினால் மட்டும்  தான் என்ற தவறான எண்ணத்தை இந்த கண்டுபிடிப்பு தகர்த்து எறிகிறது என்பது உண்மை.

Saturday, 4 April 2026

இந்த 2026 தேர்தலில் எந்தெந்த பிரச்சனைகளுக்காக வாக்களிக்க வேண்டும்?

 

                                                                                (படம் நன்றி :இந்து)

இன்னும் 20 நாட்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.நம்முடைய அடுத்த ஐந்து வருடங்களை தீர்மானிக்கக் கூடிய நாள் அது .அடுத்த ஐந்து வருடமும் செங்கோல் ஆளப்போகிறதா அல்லது  இப்போது போல கொடுங்கோல்  நீளப் போகிறதா என்பதை தீர்மானிக்கும் ஒரு நாள். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தவறு. ஏனென்றால் ஒரு கட்சி என்றால், அதற்கு இரண்டு முகங்கள் இருக்கலாம் .ஒரு நபர் என்றாலும்  அவருக்கு ஒரு மறைவான முகம் இருக்கலாம். ஆதலால் ,அதை விட்டுவிட்டு எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக  நாம் வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதே சரி .நாம் பட்டியலிடும் பிரச்சனைகளை தீர்த்து தருகிறேன் என்று சொல்லும் கட்சிகளுக்கு நாம் வாக்களிக்கலாம் .

இதுவரை இருந்த கட்சிகள் பல ,நான் அதைத் தீர்த்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்/ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு தடவை ஏமாறலாம் , இரண்டு தடவை ஏமாறலாம்! அறுபது வருடமாக ஏமாந்தால், அது நம்முடைய அறிவுத்திறனை தான் காட்டுகிறது. ஆக, கடந்த 60 வருடங்களில் ஆட்சி செய்த எந்த கட்சிக்கும் நாம் வாக்களிப்பது அர்த்தமற்றது. ஏனென்றால் ,திமுக என்றாலும் அதிமுக என்றாலும் ஒரு நாணயத்தின் இரு பக்கம்தான். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வைத்து நாம் தீர்மானித்து விடலாம். ஆக, அந்த இரு கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் .அதை தவிர மூன்றாவதாக தமிழக வெற்றி கழகத்தின் நடிகர் விஜய்  வந்திருக்கிறார். அவர் ,எந்த பிரச்சனைகளுக்காக நிற்பார் என்று இதுவரை அவருக்கே தெளிவாக தெரியவில்லை.களப்பணியாற்றுவதிலும் மிகுந்த சுணக்கம் காட்டுகிறார். ஆக, அவர் நம்முடைய பிரச்சனைகளுக்காக போராடுவார் என்று எதிர்பாக்கவும் முடியாது. பிரச்சனைகளை அவர் தெரிந்து இருக்கிறார் என்றும் நினைக்க முடியாது .

முதலில்  நம்முடைய தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு பார்ப்போம்:

  1. தமிழ்நாட்டின் இயற்கை வளக்  கொள்ளை!                                                                    தமிழ்நாட்டின் மலைகள்,ஆற்று மணல் போன்ற இயற்கை வளங்கள், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் கேரளாவுக்கும் ,கர்நாடகாவுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கேரளாவுக்கும் ,கர்நாடகாவுக்கும் சொந்த மலை உள்ளது. அவர்கள் அதை எடுக்காமல்,தமிழ்நாட்டின் வளங்களை, இங்கு ஆட்சி செய்பவர்களை கைக்குள் போட்டு ,எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன்வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 5x 365x 1 = 1825 லக்கம் டன் வருகிறது .இந்தப் போக்கில் போனால் , நம்முடைய எதிர்கால சந்ததிக்கு எந்தவிதமான இயற்கை வளங்களையும் நாம் விட்டு விடாமல், இறந்து விடுவோம் !ஒரு மலை உருவாக 200 கோடி ஆண்டுகள் ஆகிறது என்பது நிபுணர்கள் கருத்து .ஆக, இந்த வளக் கொள்ளையை  தடுத்து நிறுத்தும் கட்சி எந்த கட்சியோ ,அதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்.திமுக, அதிமுக,தவெக  மூன்றுமே நிச்சயமாக இதை நிறுத்தாது.
  2. எல்லா உயிர்க்கும் சுத்தமான விலையில்லா  குடிநீர்!                                                                                                     தமிழ்நாட்டின் எல்லா நீர்நிலைகளும், ஆறுகளும் ,ஆலை  கழிவுகளால் மாசடைந்து, குடிநீர் தகுதியை இழந்து விட்டன .பல நீர்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியாமல் செத்து மிதக்கின்றன .மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு நல்ல குடிநீர் வாங்குவதற்கு மாத்திரம் குறைந்தது 1200 ரூபாய் ஆகிறது. காக்காவும், குருவியும், ஆடுகளும், மாடுகளும், காசு கொடுத்து எப்படி தண்ணீர் குடிக்கும் ?என்ற ஒரு பெரிய கேள்வி இப்போது எழுகிறது . குருவிகள் நீரின்றி செத்து மடிகின்றன. இயற்கையில் சுத்தமான குடிநீர் எல்லோருக்கும்/எல்லா உயிர்க்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று எந்த கட்சி சொல்கிறதோ அதற்கு வாக்களிப்போம் .அதிமுக, திமுக,தவெக  அந்த பட்டியலில் இல்லை.
  3. லாப பணத்தில் மக்களுக்கு  பங்கு கொடுப்பது சரி !கடன் வாங்கி இலவசம் அளிப்பது தவறு!                                                                                                 தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை 10.70 லட்சம் கோடி! வட்டி மாத்திரம் ஒரு லட்சம் கோடி கட்ட வேண்டும்! இந்த சூழ்நிலையில் மேலும் கடனை வாங்கி ,அதை பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தாமல், இலவசங்கள் மக்களுக்கு கொடுப்பதற்கு பயன்படுத்துவது தவறான கொள்கை .அதனால், தமிழ்நாட்டின் கடன் சுமை கூடும் .வட்டி சுமை கூடும் .ஒவ்வொரு குடிமகனுக்கும் கடன் சுமை கூடும் .இலவசங்கள் கொடுக்காத கட்சி தான் தமிழ்நாட்டின்  வளர்ச்சிக்கு நல்ல கட்சியாக இருக்கும். அதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்..
  4. எல்லோருக்கும் ,உலக தர ,கல்வி மற்றும் மருத்துவ சேவைகள்  அரசு தரும் !                                                                                                                                           தற்போது அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் பள்ளிகள் /மருத்துவமனைகளுக்கு நிகராக இல்லை என்பதால் எல்லோரும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று லட்சக்கணக்காக பணம் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது .தனியார் இதனால் லாபம் அடைந்து பணக்காரர் ஆகிறார்கள் .இதற்காக வாழ்வின் சேமிப்பு எல்லாம் கரைத்து பொதுமக்கள் ஏழைகள் ஆகிறார்கள். ஆகவே ,இதை மாற்றி ,எந்த கட்சி ,அரசு அரசு பள்ளிக்கூடங்கள் தனியாருக்கு நிகராக மாற்றுகிறதோ ,அதுபோல அரசு மருத்துவமனைகளை தனியார் அளவுக்கு உயர்த்துகிறதோ  அந்த கட்சிக்கு வாக்களிக்கலாம்.
  5. முழு மதுவிலக்கு /போதை ஒழிப்பு!                                                                            தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தினால் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் .சுமார் 6 லட்சம் விதவைகள் இதனால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் . இதுபோல போதைப் பழக்கத்தினால் ,பலவிதமான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருமளவில் நடக்கிறது .இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் இவைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். எந்த கட்சி முழு மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு  இவைகளை ஆதரிக்கிறதோ, அதற்கு நாம் வாக்களிக்கலாம்.
இன்னும் பல முக்கியமான கொள்கை மாற்றங்கள் தேவைப்பட்டாலும், மேற்கண்ட கொள்கைகளை யார் செயல்படுத்துவதாக சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே நாம் வாக்களிப்போம் .தமிழ்நாட்டை காப்பாற்றுவோம் .ஆளுக்காக வாக்களிக்காதீர்கள் .அவர்கள் பேசும் கொள்கைக்காக வாக்களியுங்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிந்து வாக்களியுங்கள். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் ,அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை செய்து காட்டி விட்டார்கள் என்பதை ஒரு காலமும் மறக்காதீர்கள் .திரும்பவும் அவர்களுக்கே வாக்களித்து, முன்பு செய்த தவறை திரும்பவும் செய்ய வேண்டாம்! ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டின் தலை எழுத்து மாறும் நாள் என்பதை மறக்க வேண்டாம்.நன்றாக விழித்து, சிந்தித்து வாக்களியுங்கள் .நல்லதே நடக்கட்டும்.

Sunday, 22 March 2026

இம்முறை 1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தானா ?

தமிழ்நாட்டில் தற்போது பட்டியல் இனத்திற்கு 18%  கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது இந்த 18 % ல்  அருந்ததியர் என்ற தெலுங்கு சாதியினருக்கு 3% உள் ஒதுக்கீடு தரப்படுகிறது. அதை தவிர மீதி உள்ள 15 % இடங்களில்,ஆதி தமிழ் குடிகளான ,பரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்தவிதமான உள் இட ஒதுக்கீடும்  கிடையாது. அந்த இடங்களிலும் தெலுங்கு அருந்ததியர்களுக்கு மேலதிகமாக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு  எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம்:

  1. மொத்த பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு = 30 இடங்கள் 
  2. அதில் அருந்ததியர்களுக்கு 3% (3/18=1/6)                  = 05 
  3. அது போக மீதம் இடங்கள்                                           = 25 
  4. அந்த 21 இல் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை =22
  5.  மீதமுள்ள இடங்கள்                                                         =03                                     
இந்த 3 இடங்களை 1.5 கோடி பரையர்+ தேவேந்திர.குல வேளாளர் மக்கள் தாராளமாக பங்கிட்டு கொள்ளலாம். இந்த முறையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்கள். தற்போதைய அரசு, அதை முற்றிலும் ஆதரித்து,2026 ல் வெற்றி பெற்றால், அருந்ததியருக்கான அந்த  உள்ஒதுக்கீட்டை 3% லிருந்து 6%  ஆக்குவதாக வாக்கு கொடுத்திருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது.

இந்த 3% உள் ஒதுக்கீடு  மற்றும் முன்னுரிமை விதி காரணமாக, கிட்டத்தட்ட 90 % இடங்கள் அருந்ததிய மக்களுக்கு சென்று விடுகின்றன என்று புள்ளி விவரங்கள் சான்றளிக்கின்றன. இதன் காரணமாக,தமிழ்  1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர்  மக்களுக்கு ஒரு இடமும் கிடைப்பதே இல்லை என்ற ஒரு பெரும் குறை உள்ளது .விடுதலை சிறுத்தைகள் கட்சி,இதை  பேரளவில் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று முறையிட்டார்கள் .அது உச்ச நீதிமன்றம்  வரை சென்று, உள் ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பாகி விட்டது.முன்னுரிமை விதியை பற்றி அந்த தீர்ப்பில் என்ன சொல்ல ப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியினர்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் குடிகளான 1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர்களுக்கு  நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு, உள் ஒதுக்கீடு 5% தரப்படும் எனவும் , அருந்ததியர்களுக்கு மீதமுள்ள இடங்களில் முன்னுரிமை என்ற விதி நீக்கப்படும் என்றும்  அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதைத் தவிர தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் ஆதி தமிழ் குடிகளுக்கு  இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தங்களது தேர்தல் வரைவு செயல்பாட்டில் கூறியிருக்கிறார்கள்.

இதோ ,ஆதித்தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதிகள்:


வரைவு செயற்பாட்டு பக்கம் 297 லிருந்து நாம் தமிழர் கட்சி,ஆட்சிக்கு வந்தால், ஆதித்தமிழர்களுக்கு என்னென்ன செய்வார்கள் என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள். 

இதோ அதன் சுருக்கம்:

  1. தற்போது ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படும் மக்களை, ஆதி தமிழர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
  2. ஊர், சேரி என்ற  இரட்டை வாழ்விடங்களை ஒழித்து ஒன்றான பொது வாழ்விடமாக மாற்றப்படும் .பொது மயான கட்டமைப்பு உண்டாக்கப்படும்.
  3. ஆதித்தமிழர் ஜனத்தொகைக்கு ஏற்ப கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும்  இடப்பகிர்வு  கொடுக்கப்படும். நிதி பகிர்வு அவர்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப இருக்கும்.அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் அவர்களுக்காகவே செலவழிக்கப்படும்.
  4. பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டு, சட்டவழியில்  அதை உரியவர்கள் கைகளுக்கு சேர்ப்போம் .இதை உறுதியோடு செய்வோம்.
  5. அரசு கோயில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு,தொல் குடிகளுக்கு அவர்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப பங்கு கொடுக்கப்படும் .அது போல். கோயில் வணிக நிறுவனங்களிலும் பங்கு கொடுக்கப்படும்.
  6. சாதி எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களை ,சமூக போராளிகள் என்று அழைத்து , அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடும் கொடுக்கப்படும்.
  7. தாட்கோவுக்கு பதிலாக அயோத்திதாசர் பெயரில் குவையம் அமைக்கப்படும்.
  8. அரசு ஒப்பந்தங்கள்,ஏரி மீன் ஏலமிடல், மரவிளைச்சல், வணிக வளாகங்கள் ,இவைகள் எல்லாவற்றிலும் ஆதி தமிழர்களுக்கும் தொல்குடியினருக்கும் இடப்பகிர்வு  அளிக்கப்படும்.

  9. எல்லா சமூகத்தினர் தங்குவதற்கும் பொது விடுதி அமைக்கப்படும்.
  10. பட்டியல் சமூகத்தினர் இடப்பங்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வது சரியல்ல. தேவைப்பட்டால் ,அவர்களுக்கு உரிய பங்கீடு பொது ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படும்.
  11. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையான பட்டியல் பிரிவிலிருந்து அகற்றம் என்பது அரசாணை மூலம் உடனே நிறைவேற்றப்படும்.
  12. ஆணவக் கொலைக்கு எதிராக வாக்குறுதிகள்:                                                           






14.பள்ளிகளில் சேரும் போது மாணவரின் தாய் மொழியை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
ஆதிதமிழர்கள் மதம் மாறினாலும் அவர்களுடைய சலுகைகள் பாதிக்கப்படாது.
15.ஆதி தமிழர்களுக்கு தனியார் துறைகளிலும் இட பகிர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை இடப்படும்.
சீமானுக்கு தமிழ்நாட்டு பட்டியல் இனத்தவர் பெரும் ஆதரவு!
மேற்கண்ட தேர்தல் வாக்குறுதிகள் தவிர, நாம் தமிழர் கட்சியினர், பொதுத் தொகுதியில் 6 பட்டியலின வேட்பாளர்களை  நிறுத்தி,அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் மேல் ஒரு பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள் . விடுதலை சிறுத்தைகளின் தலைவர் அண்ணன் திருமா அவர்கள்' பரை யர் என்று சொல்லிக்கொண்டு யாரும்  இங்கு வரக்கூடாது' என்று சொல்லி,ஒரு கோடி படையர்களை பரையர்களின் வாக்குகளை உதறித் தள்ளி இருக்கிறார்கள் .ஆதலால் ,பரையர்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர், இந்த முறை பெருமளவில் அண்ணன் சீமானுக்கு வாக்களிப்பார்கள் என்று அரசியல்  ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தெரிவிக்கிறார்கள். அது நம்பும்படியாக இருக்கிறது. இதை முறியடிக்க வேண்டுமானால், அண்ணன் திருமா அவர்கள் தங்கள் கட்சிக்கு,திமுக தலைமையிடம் குறைந்தது 10 தொகுதிகள் கேட்க வேண்டும் .சில பொதுத் தொகுதிகளில் பட்டியலின  வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் .அப்படி செய்தால் தான் நாம் தமிழரை இந்த தேர்தலில்  முறியடிக்க முடியும் என்பது தேர்தல் பார்வையாளர்கள் கருத்து.

Thursday, 12 March 2026

இந்தியர்கள் , சின்ன சின்ன காரணத்திற்கு கூட ` உடனே சண்டை போடுவது ஏன் ?

 

                                                (படத்திற்கு நன்றி: பிக்ஸ்சாபை)

இந்தியர்கள் ஒரு சின்ன காரணத்திற்கு கூட  உடனே சண்டை போடுவது, உடனே அதை காணொளியாக பதிவு செய்து எதிராளியை அவமானப்படுத்துவது,மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது, அவர்களுக்கு இவர்களிடம் ஏதாவது வேலை என்றால் முடிந்த அளவு இழுத்து அடிப்பது போன்றவை எதைக் குறிக்கிறது ?ஆங்கிலத்தில் SADISM என்று சொல்லப்படும் இந்த மன நிலை ஏன் இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது?என்ன உளவியல் இந்தியர்களை மட்டும் இப்படி செய்யத் தூண்டுகிறது?

உனக்கு துன்பம் என்றால் அது எனக்கு இன்பம்!

ஒரு முறை சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு முன்பின் தெரியாத சிங்கப்பூர் வாசிகள் எல்லோரும் எங்களுடன் சிரித்து பேசினார்கள். பல சீனர்கள் தமிழை கொஞ்சி கொஞ்சி, அழகாக,ஆனால் கஷ்டப்பட்டு முயற்சி எடுத்து, எங்களிடம் பேசினார்கள் .'அண்ணாச்சி வாங்கோ ! இங்கே உட்காருங்கோ ' என்றெல்லாம் அழகாக பேசினார்கள் .அவர்களுக்கு நாங்கள் வேறு நாட்டவர் என்பது நன்றாக தெரியும் ,ஆனால் ,அவர்களுக்கு எங்கள் மீது  எந்தவித வெறுப்பும் இல்லை. மாறாக எங்களை மிகவும் அன்புடன் நடத்தினார்கள் .ஏன் இந்தியாவில் மட்டும் ,புதிதாக காணும் யாரும்  நம்மிடம் சிரித்து பேசுவதில்லை? அவர்களை  வியாபார நோக்கில் நாடினால் கூட, அந்தப் பணம் நம்மிடமிருந்து கிடைக்க, எந்த அளவு குறைவாக பேச முடியுமோ  அந்த அளவு தான் பேசுகிறார்கள்! எடுத்துக்காட்டாக, நேற்று  என்னுடைய கார் சக்கரம் காற்று இறங்கி ,அதை சரி செய்ய சென்றேன். அந்த சரி செய்தவரிடம் நான் என்ன பேசினாலும் ,பதிலுக்கு அவர்  ஒன்றுமே சொல்லவில்லை !அவர்  பாட்டுக்கு  வேலை செய்து கொண்டிருக்கிறார் ! இது எதனால் ஆயிற்று? என்று கேட்டாலும் ஒன்றும் பதில் இல்லை !என்னிடம் வியாபாரத்தை எதிர்பார்க்கும் அவர்  ஏன் என்னிடம் பேச கூட தயங்க வேண்டும்? இன்னொரு சம்பவம் .எதிர் வீட்டு நபர் ,நான் சிரித்தாலும் சிரிக்க மாட்டார்.ஐந்து வருடத்திற்கு முன்னால் நாங்கள் புதிதாக இந்தத் தெருவுக்கு குடி வந்தோம். வீடு புகு மனை விழாவிற்கு அழைத்த போதும் வரவில்லை .ஒரு நாள் ,அவருக்கு வர வேண்டிய ஆதார் அட்டையை  தவறுதலாக என் வீட்டில் தபால்காரர் போட்டு விட்டு சென்று விட்டார். எனக்கு எதிர் வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாது. ஆதலால் ,வேறு யாருடையதோ என்று எண்ணி,அந்த ஆதார் அட்டையில் இருந்த அலைபேசி எண்ணை அழைத்து ,உங்களுடைய ஆதார்  அட்டை எங்கள் வீட்டில் தவறுதலாக போட்டிருக்கிறார்கள் .உங்கள் வீடு எங்கே இருக்கிறது? வந்து வாங்கிக் கொள்ள முடியுமா? என்று கேட்டேன். நான் வெளியே இருந்து பேசியதால் எதிர் வீட்டுக்காரர் பதில் பேசியது எனக்கு இங்கிருந்து  தெரிந்தது. 'ஆஹா !இவர் ஆதார் அட்டை தான் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்'. உடனே எடுத்துக்கொண்டு அவரிடம் கொண்டு போய் நீட்டினேன். அவர் நன்றி சொல்வார் என்று எதிர்பார்த்தேன். பதிலுக்கு அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.' இந்த தபால்காரன் அதை ஏன் உங்கள் வீட்டில் போட்டான்? 'என்று ஒரு எரிச்சலான கேள்வி!

சரி ! இவர் ஏன் நன்றி சொல்வதற்கு, பதில் இப்படி சொல்ல வேண்டும்?ஒரே இ னத்தில் உடன்  வாழும் மக்கள் இப்படி  நடந்து கொள்வதெல்லாம் எதை காட்டுகிறது?ஒருவரை ஒருவர் அறவே வெறுக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைத்தான் அது தெளிவாக காட்டுகிறது . ஒரு அவசர தருணத்திற்கு கூட மகிழ்ச்சியாக பேசுவதற்கு தயங்கக்கூடிய மக்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தான் காட்டுகிறது இது.யாரிடமும் என்ன பேச வேண்டும் என்றாலும் பயமாக இருக்கிறது.தவறு செய்யும் சிறுவரைகூட அதை சுட்டிக்காட்டி  திருத்த முயன்றால் அவர்கள் உடனே முறைக்கும் நிலையை கண்கூடாக காண்கிறோம்.எதற்கும் உடனே சண்டைக்கு வந்து விடுகிறார்கள் என்பது ஒரு பொதுவான புகார். 

இதற்கு அடிப்படை காரணம் தான் என்ன?

இதற்கு அடிப்படை காரணம் என்ன ?வேறு எந்த நாட்டிலும் இது நடப்பதில்லையே !ஜெர்மனியில் விமான நிலையத்தில் நாம் புதிதாக காணும் ஜெர்மனியர்கள் நம்மைப் பார்த்து  புன்னகைத்து, வாழ்த்தி விட்டுப் போகிறார்கள் .ஏன் நம் நாட்டில் மட்டும் எப்படி நடக்கிறது என்று கேட்டால் உண்மையான காரணத்தை இந்தியர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள் .பல இந்தியர்களுக்கு அது தெரியாமலும் இருக்கலாம் அல்லது அவர்கள் உணராமலும்  இருக்கலாம்.

வெளிநாட்டவரின் பார்வை!

ஒரு வெளிநாட்டு பார்வையாளர்,இந்தியாவில் வந்து சில வருடங்கள் தங்கி இருந்து இந்திய சமூக முறையை ஆராய்ச்சி செய்தார். உண்மையான காரணங்களை அவர் ஆழமாக  அலசி சொல்லும் போது, இவ்வாறாக இருக்கிறதா என்று நாம் வியப்படைகிறோம்.முதலில் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த உடனே இன்னொரு சாதிக்காரனுக்கு எதிரியாக பிறந்து விடுகிறான் என்கிறார் அவர்!ஏனென்றால் ஒன்றிலோ ,அந்த சாதிக்காரனுக்கு, இவன் மேல் சாதி அல்லது கீழ் சாதி! எப்படி என்றாலும் எதிரிதான்!இரு நபர்கள் சமமாக இருந்தால் தான் இருவரும் நண்பர்களாக முடியும் .மேலாக இருந்தால் அவன் முதலாளி! கீழாக இருந்தால் அவன் அடிமை! இப்படி பொதுவாக இங்கு பிறக்கும் ஒவ்வொரு இந்தியனும் ,பிறந்த உடனேயே காரணமே இல்லாமல், அவன் பிறந்த சாதியின் அடிப்படையில், இன்னொருவனுக்கு தன்னாலே எதிரியாகி விடுகிறான்! ஆதலால், பார்க்கும் போதே இயல்பாகவே ஒரு சிரிப்பு இருக்காது .வராது .ஒரு முறைப்பு தான் இருக்கும் !எப்படி சண்டை போடலாம் என்று தான் எப்போதுமே அவர்கள் இருவருடைய மனநிலையும் இருக்கும்.இந்த நிலையில் ஒரு சின்ன பொறி தட்டினால் போதும்! உடனே அது பெரும் பிழம்பாய் மாறி,ஒரு பெரிய சண்டையாகி,தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கொலை வரை போய்விடும்!தென்காசி அருகே ஒருவர் அவருடைய சின்ன சரக்கு வாகனத்தை சாலையின் ஓரத்தில்  நிறுத்திவிட்டு பக்கத்துக் கடையில் டீ குடிக்க சென்றார். அவர் திரும்பி  வந்து பார்க்கும்போது ,அவர் வண்டிக்கு நேர்  முன்னாக இன்னொருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு எங்கோ  சென்று விட்டார் .இதனால் ,இவரால் வண்டியை எடுக்க முடியவில்லை. அவர் வரும் வரை இவர் காத்திருக்க வேண்டி இருந்தது. வந்தவுடன் கோபத்தில், ஏன் இப்படி நிறுத்தி விட்டு சென்றீர்கள்? என்று கேட்க ,அவர் பதிலுக்கு ,ஏன் என்று சொல்கிறேன் என்று ஒரு கத்தியை எடுத்து இவர் வயிற்றில் நேராக குத்திவிட்டார் !உடனே  குடல் சரிந்து ,அதே இடத்தில் அவர் அதிக குருதி இழப்பால் இறந்துவிட்டார்! ஒரு சின்ன விஷயம். அந்த வண்டியை நிறுத்தியவர் மேல் தான் தெளிவாக தப்பு உள்ளது என்று தெரிந்தும் ,அவர் ஏன் கத்தி வைத்து இவரை குத்திக் கொல்ல  வேண்டும்?அவர் கோபத்திற்கு காரணம் ,அவர் உள்ளே குடி கொண்டிருக்கும் அந்த பயங்கரமான சாதிய ஆவி தான் !நீ என்ன  என்னை கேள்வி கேட்பது ?என்ற அந்த மனநிலை தான் அவரை இந்த குற்றம் செய்ய தூண்டியது .இதுவே உண்மையான காரணம்.ஒரு தமிழ் படத்தில் ஒரு காட்சி வரும் .ஒரு பட்டியல் இனப் பையனை, ஒரு ஆதிக்க சாதி பையன்,அடி அடி என்று அடித்து   விடுவான்.அடிபட்ட  பையன்  வீட்டிற்கு  அழுது கொண்டே வந்து ,தன் அப்பாவிடம் முறையிடுவான்.' அப்பா ,நாம்  போய் அவனை திருப்பி அடித்து விட்டு வருவோம்' என்று சொல்லுவான் .அதற்கு அவன்  அப்பா, 'அப்படி முடியாத டா கண்ணா! ஏனென்றால் ,அவன் அடிக்க பிறந்த சாதி! நாம் அடிபட பிறந்த சாதி! 'என்று கண்ணீருடன் சொல்வார்! ஒருவருடைய சாதி என்னவென்று அறிய முடியாத சமூக ஊடகங்கள் வழியாக கூட நாம் யாருடனும் நண்பராக முடியாது. உங்கள் கருத்துடன் இன்னொருவர் ஒத்து போனால் கூட உங்களை பின்பற்ற மாட்டார்கள் . சமூக ஊடகங்களில்  எதிர் கருத்து கூறியவரை உடனே தனிநபர் தாக்குதல் தான் நடத்துவார்கள். பதில் கருத்து கூற மாட்டார்கள்.ஏனென்றால், அடிப்படை காரணம் மேலே நான் குறிப்பிட்ட அதே காரணம் தான்.ஆக உண்மையான காரணம், இதை விட்டுவிட்டு ஏதோ காரணங்களை சொல்லுவார்கள். சட்டம் ,ஒழுங்கு என்பார்கள்.அது ,இது, அறியாமை என்றெல்லாம் சொல்வார்கள் .

 உண்மையான காரணத்தை எப்படித்தான் மாற்றுவது?

உண்மையான காரணத்தை மாற்ற வேண்டுமென்றால், சாதிய கட்டமைப்பு குலைய வேண்டும் .அது உடைந்தால் தான் அது மாறும். சின்ன குழந்தைகளை கூட ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் அடிக்கிறார்கள். வீணாக பழி போடுகிறார்கள். மதிப்பெண்களை குறைக்கிறார்கள் .சாப்பாடு டப்பாவை தூக்கி எறிகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்த சாதி மனப்பான்மை என்ற ஆவி தான். அதை மாற்றாமல் ஒன்றும் ஆகாது, மாறாது  என்கிறார் அவர் .எதையும் மாற்ற வேண்டுமென்றால் முதலில் அது இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.ஆனால், இந்தியர்கள் இப்படி ஒரு சாதிய பாகுபாடு, இந்திய சமூகத்தில் உள்ளது என்பதை ஒருபோதும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் .இந்திய அரசு கூட ஒத்துக் கொள்ளாது .டர்பனில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் இந்தியாவில் சாதிய பாகுபாடு என்று ஒன்று கிடையவே கிடையாது என்று இந்திய அரசு ஒரு அறிக்கை விட்டது. ஆதலால் ,இதே போல ,  சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.இது ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் .இந்தியா ஒரு நாளும் இதை  ஒழிக்காமல் ஒரு நல்ல ஒற்றுமையான, வலிமையான,சமூகமாக வளர முடியாது ,மற்ற நாடுகளுடன் போட்டி போட முடியாது என்பதுதான் கண் முன்னே காணும் ஒரு பெரும் உண்மை. இதை மறைப்பதால்  அல்லது மறுப்பதால் நாம் ஒன்றையும்  சாதிக்க முடியாது என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும் .நம்முடைய தலையெழுத்து  இதன் நடுவே அமைதியாக வாழ முயற்சி செய்வது தான் !