Wednesday, 21 November 2018

கலைஞர் உண்மையில் பிராமணர்களின் எதிரியா ?

கலைஞர் பொதுவாக ,தமிழருக்கு நண்பராகவும் ,பிராமணருக்கு  எதிரியாகவும்  ஊடகங்களில் சித்தரிக்கப் படுகிறார் .
எதை வைத்து அவர் தமிழர் நண்பராகவும் ,பிராமணர் எதிரியாகவும்   பார்க்கப்படுகிறார் ?
இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டால் உடன் வரும் பதில் ஒன்று,
 'இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மறக்காமல் அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் கலைஞர் ,தீபாவளிக்கு மட்டும் ஒரு போதும் சொல்ல மாட்டார் '
என்பதாகும் .இந்த  ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் ஒரு பிராமண எதிரி என்று சொல்லிவிட முடியுமா ?
சரி ,ஒருவர் பிராமண எதிரி என்று எப்படி கண்டு பிடிக்கலாம் ?

  1. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூட்டத்தில் அதிகம் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் .
  2. அவருடைய தனி அறிவுரை(Personal advisers ) கூறும் கூட்டத்தில் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் .
  3. பிராமணர் சம்பந்தப்பட்ட சலுகைகள் அவர் ஆட்சியில் அதிகம்  இருக்காது அல்லது இருந்ததும் குறைக்கப்படும் .
  4. பிராமணர்களின் அரசியல் செல்வாக்கு அவர் ஆட்சியில் கணிசமாக குறையும் .
இவைகளெல்லாம் கலைஞர் ஆட்சியில் அல்லது அவர் தனிப்பட்ட வாழ்க்கையில்  நடந்ததா என்பதை இப்போது ஆராயலாம்.வாருங்கள் ,
1.கலைஞரின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் பிராமணர்கள்  உண்டா ? .
கலைஞருக்கு ,சாவி ,கி .வா .ஜகன்னாதன் ,தற்போது இந்து என் .ராம் எல்லாம்  மிகவும் நெருங்கிய பிராமண நண்பர்கள் .அதில் இந்து ராம் தினமும் காலையில் ஒரு முறையாவது பேசும் நண்பராம் .
கலைஞர் மறைவிற்கு பின் இந்து குழுமமே அவர் புகழ் பாடி சிறப்பு இதழ்கள் விட்டனர் .  (இந்து ராமின் புகழாரம் )
இந்து குழுமம், பிராமணரான ஜெயலலிதாவிற்கே இந்த அளவு புகழாரம் சூட்ட வில்லை என்பது  கவனிக்கத்  தகுந்தது .
சரி ,பிராமணர் அல்லாத நண்பர்கள் கலைஞருக்கு யார் ,யார் ?யோசித்து பார்த்தால் 'நண்பர் 'என்று சொல்லும் படி வைரமுத்து ஒருவரை தவிர வேறு யாருமேயில்லை !
2.கலைஞரின் தனி அறிவுரையாளர்கள் /ஆலோசகர்கள் எல்லோரும் பிராமணர்களே !
கலைஞர் ஆட்சியில் நிதி பொறுப்பாளர்கள் /செயலர்கள் எல்லோரும் பிராமணர்களே .அவர் ஆட்சியில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் பிராமணர்களுக்கு  மட்டும் அவர் முக்கிய தலைமை பொறுப்புகள் வழங்குவது வழக்கம் .
3.இனி கலைஞர் ஆட்சியில் பிராமணர்கள் செழித்து வளர்ந்தார்களா அல்லது நசுக்கப் பட்டார்களா என்று பார்ப்போம் .
அவரது ஆட்சியின் ஒரு வருடத்தை எடுத்துக்காட்டாக எடுத்து ,அவர் அரசு விடுமுறை வழங்குவதில் , ஒவ்வொரு அரசியல் பிரிவுக்கும் எவ்வளவு கனமளித்தார் என்பதை பார்ப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------
இதோ 2010 அரசு விடுமுறை பட்டியல் .அரசு விடுமுறை 2010 .
மொத்தம் -24 நாட்கள்.அதில் ,
      எண் . % பிரிவு ---------------------------------நாட்கள் --%

  1. 3% பிராமணர் பண்டிகைகள் --5 நாட்கள் (20 %)
  2. 0.13% ஜைனர்கள் ------------------------1 நாள் (4%)
  3. 5% தெலுங்கர்கள் ----------------------1 நாள் (4%)
  4. 6% இசுலாமியர் -------------------------4 நாட்கள் (16%)
  5. 6% கிறிஸ்தவர் --------------------------3  நாட்கள் (12%)
  6. 89% தமிழர் --------------------------------3 நாட்கள் (12%)
---------------------------------------------------------------------------------------------------------------
ஆக ,3% உள்ள பிராமணர்களுக்கு தான்  அதிக பட்சமாக 20% விடுமுறை நாட்கள் கொடுக்க பட்டுள்ளன .89% தமிழர்களுக்கே 12 % தான்  வழங்கப்பட்டுள்ளது .ஜைனர்கள் 50000 க்கு கீழ் இருந்தாலும் அவர்களுக்கும் ஒரு நாள் கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் தமிழ்க் கடவுள் முருகனின் தைப் பூசத்திற்கு மலேசியாவிலே கூட விடுமுறை உண்டு ,தமிழ் நாட்டில் கிடையாது ! 
மேலும் ,கலைஞர் ஆட்சியில் ,பிராமண இசை விழாக்கள் ,கல்வி நிறுவனங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன  என்பதை மறுக்க முடியாது .
4.பிராமணர்களின் அரசியல் செல்வாக்கு நன்றாக இருந்ததும் கலைஞரின் ஆட்சியில் தான் .
கலைஞரே அவர் தன் கைப்பட பிராமணர் புகழ் பாடும் 'ராமானுஜர் 'என்ற சரித்திர தொடரை உருவாக்கி அவருடைய சொந்த  தொலைக்காட்சியிலே ஒளிபரப்பினார் . எதிரி என்று காட்டி விட்டு ,பின்னர் அவர்  புகழ் பாடுமளவுக்கு கலைஞர் உயர்ந்து விட்டாரா அல்லது அது அவருடைய பிராமண நட்பின் உண்மை பிரதிபலிப்பா ? என கேள்வி எழத்தான் செய்கிறது  .அதே  கலைஞர்.பெரும் தமிழ் தலைவர்களான அயோத்தி தாசருக்கோ ,வேறு யாருக்குமோ  கூட இவ்வாறாக தொடர் எழுதவில்லை என்பது குறிப்பிட தக்கது .ஒரு குறிப்பிட்ட ஜாதிய செல்வாக்கிற்காக 'பொன்னர் சங்கர் 'கதையையும் எழுதினார் என்பதை மறுக்க முடியாது ..

                                             ஆக ,கலைஞர் பிராமண எதிரி என்ற பிம்பம் அரசியலுக்காக தயாரிக்க பட்ட ஒரு பொய் முகம் .உண்மையில் அவர் பிராமணர்களுக்கு  ஜாதிய முறையில் வழங்கப்பட்ட உயர்  தனி கவுரவத்தை,அவருடைய ஆட்சியில்  தொடர்ந்து அளித்துக் கொண்டிருந்தார்  என்பதே உண்மை .
பாவம் ,தமிழர்கள் !என்ன சொன்னாலும்,அதை உண்மை என்று  நம்பி ஏமாறும் அப்பாவித் தமிழர்கள் ! சமயத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் திராவிடக் கட்சிகளை பற்றி சொல்வது உண்மை தானோ என்று எண்ணத்தோன்றுகிறது !
------------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: இது கலைஞரை பற்றிய ஒரு  முது நிலை  பட்டப்படிப்பு  (அரசியல்)மாணவரின் ஆய்வுக்கட்டுரை .உண்மையா ,இல்லையா என்பதை நாம் தாம் தீர்மானிக்க வேண்டும் .
இதைக்குறித்த வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .
===================================================================



Monday, 5 November 2018

தமிழர்கள் இந்துக்களா ?

சமீப காலங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு தலைப்பு 'தமிழர்கள் இந்துக்களா ?'என்பதாகும் .தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று, உறுதியாக  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் ,மதுரை ஆதீனத்தின் தலைவரும் கூறியிருக்கிறார்கள் .
இதோ அதன் காணொளிப்பதிவுகள் :
சீமான் பேச்சு

மதுரை ஆதீனம் கூற்று

இவர்கள் சொல்வது உண்மை தானா  ?தமிழர்கள் உண்மையில் இந்துக்கள் இல்லையா ?இந்துக்கள் இல்லையென்றால் பின்னர் அவர்கள் யார் ?இதைக் குறித்து இப்போது நாம் விவரமாக ஆராயலாம் .
முதலில் 'இந்துக்கள் 'என்றால் யார் ?.
இந்தியாவின் முதல் குடிகணக்கு (Census) ஆங்கிலேயர்களால் 1872 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது .அப்போது ஆங்கிலேய குடிகணக்கு ஆணையர்,சட்ட மேதை அம்பேத்கர் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார் .அது என்னவென்றால் 'குடிகணக்கு எடுக்கும் போது ஒரு இந்துவை எப்படி அடையாளம் காண்பது ?'
 இந்து மதத்தை கரைத்து குடித்த அம்பேத்கருக்கே அந்த கேள்வி ஒரு பெரிய சவாலாக அமைந்தது !கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவன் .முஸ்லிம் என்றால் நபிகளை பின்பற்றுபவன் .பௌத்தன் என்றால் புத்தரை பின்பற்றுபவன் .இந்து என்றால் ?
இந்து என்றால் யார் என்பதை அடையாளமிட வேண்டுமென்றால் ,அனைத்து இந்துக்களிடமும் காணப்படும் ஒரு பொதுவான அம்சத்தை சொல்லவேண்டும் .ஆராய்ந்து பார்த்தால் அப்படி பொதுவான அம்சம் என்று எதுவும் அம்பேத்காருக்கு புலப்படவில்லை .பொதுவான கடவுள் இல்லை .பொதுவான பண்பாடு இல்லை ,பொதுவான பண்டிகை இல்லை .தீர யோசித்து பார்த்தால் ஒன்றே ஒன்று தான் எல்லா இந்துக்களிடமும் பொதுவாக காணப்பட்ட அம்சமாக இருந்தது .அது என்னவென்றால் 'ஏற்ற தாழ்வான சாதிய சமூக அமைப்பில் பங்கு'என்ற ஒரு அம்சம் தான் .ஆனால் ,அதை குடிமை கணக்கு கேள்வியாக கேட்டு உறுதிப்படுத்தப்பட்ட பதில் பெறமுடியாது .முடிவில் 'இந்து 'என்றால் என்ன என்பதை வரையறை படுத்த முடியாமல் போனதால் 'கீழ்க்கண்டவாறு அடையாளப்படுத்த தீர்மானிக்க பட்டது .
"யார் யார் இசுலாமியர் ,கிறிஸ்தவர் ,ஜைனர் ,பௌத்தர் ,சீக்கியர் பார்சி இல்லையோ ,அவர்கள் இந்து என்று கணக்கெடுக்கப்  படுவர் '
இந்த வரையறை சரியான வரையறை என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,ரோசா மலரை எப்படி வரையறைப்படுத்தலாம் ?பொதுவாக சிகப்பு நிறம் ,நல்ல மணம் ,கிளையில் முள் உள்ள ஒரு மலர் எனலாம் .அதற்கு பதில் ,எது எது மல்லிகை ,முல்லை ,கனகாம்பரம் ,அது ,இது இல்லையோ அது தான் 'ரோசா 'என்று சொன்னால் எப்படி இருக்கும் ?அப்படி சொல்வது  போல் தான் 'இந்து 'என்ற சொல்லின் இந்த வரையறையாகும்.
'இந்து 'என்ற சொல்லின் வேரியல் 
'இந்து 'என்ற சொல் 'சிந்து 'என்ற தமிழ் வேரிலிருந்து உருவான ஒரு சொல்லாகும் .'சிந்து 'என்றால் என்ன பொருள் ?
ஆக ,'சிந்து 'என்றால் 'கடல் ,நீர் ,பெரும் ஆறு என்ற பொருள் படும் .'சிந்து 'நதி கரையில் வாழ்ந்த மக்கள் 'சிந்துக்கள் ' அல்லது மருவிய 'இந்துக்கள் 'ஆவர் .ஆக ,'இந்து 'என்றால் இடம் சார்ந்த பொருள் படும் .அந்த சொல்லிற்கு மதம் சார்ந்த பொருள் முதலில் இருந்தது கிடையாது .விக்கிப்பீடியாவின் படி இந்த'இந்து 'என்ற  பதம் மதம் சார்ந்த பொருள் படும் படியாக முதன் முதலில் பயன்பட்டது கி .பி .7ஆம் நூற்றாண்டில் தான் .பின்னர் ,18வது நூற்றாண்டில் 'இந்துயிசம் 'என்ற ஆங்கில சொல்'இந்தியாவின் மதம் ,சித்தாந்தம் ,கலாச்சாரம்' இவைகளைக் குறிக்கும் சொல்லாக  நுழைக்கப்பட்டது .
தமிழர் இந்துக்களா ?
ஆக ,'இந்து 'என்றால் என்ன என்பதை விபரமாக புரிந்துகொண்டோம் .அந்த சொல்லிற்கு ஒரு ஒத்துக்கொள்ளக்கூடிய வரையறை இல்லை என்பதையும் அறிந்து கொண்டோம் .இப்போது ,நம்முடைய தலைப்புக் கேள்வி 'தமிழர் இந்துக்களா 'என்பதை பற்றி பேசலாம் .
தமிழருடைய பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் 'இந்து 'என்ற சொல் எதிலும் காணப்படவில்லை என்பது தான்,தமிழர் இந்து அல்ல என்பதற்கு  நம்முடைய முதல் சீரிய சான்றாகும் .கீழடி அகழ் ஆய்வில் கூட மதம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது இதற்கு இன்னொரு சான்றாகும் .இந்துக்களின் முக்கிய அடையாளமாகிய சாதிய சமூக முறை தமிழரின் அற வாழ்வில் எப்போதுமே இருந்ததில்லை .தமிழருக்குள் உட்பிரிவுகள் இல்லை என்று சொல்ல முடியாது .ஆனால் ,அது உயர்வு தாழ்வான சாதிய முறையல்ல .தமிழனையும் தமிழனையும் பிரிக்கும் எந்த ஒரு சாதிய அமைப்பில்லை .
தமிழரின் வரலாற்றை தீர ஆய்ந்து பார்த்தால் அவர்களின் மதம் கீழ்க்கண்டவையாக தெரிகிறது :
  1. ஆசீவகம் 
  2. பௌத்தம் 
  3. ஜைனம் 
  4. சைவம் 
  5. வைணவம் 
  6. கிறிஸ்தவம் 
  7. இசுலாம் 
ஆக ,தமிழர் இந்துக்கள் இல்லை என்பதை மேற்கண்ட சான்றுகள் மூலமாக உறுதியாக சொல்லலாம் .