Monday, 2 September 2024

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்--யார் காரணம்?

சமீப காலமாக தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்னும் செய்தி பெரும் கவலை அளிக்கிறது.பச்சிளம் குழந்தைகளை, தள்ளாடும் பாட்டிகளைகூட , ஏன் சொந்த மகளைக்  கூட காமக்கண்ணோடு பார்க்கும் பயங்கர நிலை தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது.  ஆசிரியர் மாணவியை, மாணவன் ஆசிரியையை , பாலியல் கண்ணோடு பார்க்கும் பரிதாப நிலை  நிலை பெற்று இப்போது இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இதற்கெல்லாம்  முக்கிய காரணம் யார் / என்ன? அந்தக் காரணங்களை தமிழர் நாம் உணர்ந்து இருக்கிறோமா? இந்தக் கேள்விக்கு பதில் தருவதற்காக தான் இந்த  ஆழமான ஆராய்ச்சி கட்டுரை.
அறவாழ்வும்  பாலியல் குற்றங்களும்
                                                                                உலகிலேயே அறவாழ்வு என்ற கருத்தியலை கொண்டு வாழும் ஒரே இனம்  தமிழ் இனம் தான்.அப்படி  அறவாழ்வு வாழும் தமிழர்களிடையே, பாலியல் குற்றங்கள் என்பதற்கு எள்ளளவும் இடமே இருந்தது  இல்லை. இதற்கு முதல் சான்றாக,சொல் வளம் மிக்க தமிழ்  மொழியில், RAPE  என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இல்லை என்பது ஒன்றே போதும். கற்பழிப்பு, வன்புணர்வு போன்ற கருத்துக்கள் / சொற்கள் எல்லாம் இதற்காக இப்போது இங்கு வாழும் பிராமணர்கள் மற்றும் அண்டை மாநிலத்தவரால் உருவாக்கப்பட்டவையே . சங்க கால இலக்கியங்களில் இந்த வன்புணர்வை குறிக்கும் சொற்கள் எதுவும் கிடையாது. அப்படி குற்றங்கள் தமிழ் சமூகத்தில் நடக்காததால், அதற்கான சொற்கள் தமிழ் அகராதியில் இல்லை. 
                                      மேலும் காதலை கொண்டாடிய தமிழர்கள், காமத்தை என்றுமே கொண்டாடியது இல்லை .பெண்களை காமத்தோடு பார்ப்பது தமிழர்கள் பண்பாட்டில் என்றுமே இருந்ததில்லை.இன்றும் கிராமங்களில் பெண்கள் படித்துறையில் குளித்துவிட்டு அந்த ஈரத் துணியோடு தான் வீடு வரை நடந்து செல்வார்கள். அவர்கள் போகும் வழியில் ஒரு ஒரு கூட்டம் வக்கிர ஆண்கள் அதை பார்க்க காத்திருப்பது இல்லை. அப்படி நடந்து செல்லும் பெண்களுக்கு பாலியல் குற்றங்களும் நடந்ததாக சரித்திரம் கிடையாது.காந்தி ஒரு முறை சொன்னார் ' என்று இந்தியாவில் ஒரு இளம் பெண் நள்ளிரவில் தனியாக பாதுகாப்பாக செல்ல முடியுமா அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான விடுதலை நாள்' என்று.அவருக்குத் தெரியாது தமிழ்நாட்டில் அது எப்போதுமே  அப்படித்தான் என்று .இன்றும் இளம் பெண்கள் நள்ளிரவு நேரத்தில், தனியாக கால்நடையாக, பழனி பாதயாத்திரை செல்வார்கள். வழியில் அவர்கள் ஓய்வு எடுக்க கட்டப்பட்டுள்ள திறந்த வெளி இடங்களில் தான் கண்ணயர்ந்து தூங்குவார்கள் .இதுவரை அவர்கள் யாருக்கும் பாலியல் தொந்தரவு என்று ஒன்று நடந்தது இல்லை.பல நாட்களாக  தொடர்ந்து இரவு பகலாக  சென்னை மெரினா கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், பல இளம் பெண்கள் இரவில் ஆண்களுடன் சேர்ந்து நிம்மதியாக தூங்கினார்கள். எந்த ஒரு தமிழ் மகனும் ,  எந்த விதமான பாலியல் எண்ணத்தோடும் அவர்களிடம்  நடந்து  கொள்ளவில்லை. மாறாக, அவர்களுக்கு உணவு, நீர், அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் நண்பர்களாக,உடன் பிறந்தோராக செய்து கொடுத்தார்கள் என்பது சரித்திரம்.கீழே காணும் கூட்டம் அதற்கு சான்று.
                                                                        (படம் நன்றி -மின்ட்) 
 ஆக தமிழர்கள் பண்பாட்டில் பாலியல் குற்றங்கள் என்பதற்கு துளியளவும் இடமில்லை என்பது தெளிவு. 
                                                    பின்னர் இந்தப் பாலியல் பார்வை ,இப்படியான தூய்மையான தமிழ் சமூகத்தில் எப்படி நுழைந்தது? யாரால் நுழைக்கப்பட்டது? யாரால் இப்போது அது தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது?வாருங்கள், பார்ப்போம்.
                                 இந்தியாவுக்கு 1947ல் விடுதலை  அளித்த ஆங்கிலேயர்கள்,அதே கையோடு அவர்கள் வாழ்ந்த இடத்தையும் ,வீட்டையும்  காலி செய்துவிட்டு,அவர்கள் சொந்த பூமியான  இங்கிலாந்துக்கு போய்விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டை  ஆண்ட தெலுங்கர்கள், அரச ஆட்சி முடிந்துவிட்டாலும் ,  தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு அவர்கள் சொந்த பூமிக்கு திரும்பவில்லை.இன்னும் திரும்ப மனதில்லை. இங்கு இன்னும் இருக்கிறார்கள்.அன்று தெலுங்கு மன்னர்கள் அவர்களுக்கு கொடுத்த தமிழர்களின் இனாம் நிலங்களை இன்னும் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட 1000 க்கு மேலான ஊர், இடம்,தெருப்  பெயர்கள் தமிழ்நாட்டில் இன்னும் தெலுங்கில் தான் இருக்கிறது.போடிநாயக்கனூர், ரெட்டியார்பட்டி, ரெட்டிபாளையம், தெலுங்குபாளையம், கட்டா ரெட்டிபட்டி என்று பல தமிழ்நாடு ஊர் பெயர்கள் தெலுங்கு ஜாதி பெயர்களாகவே  இன்னும் உள்ளது.டால்மியாபுரம் என்ற ஒரே ஒரு வட இந்தியப்  பெயரை, திரும்ப தமிழுக்கு, கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என முதல்வர் கருணாநிதி போராடி வெற்றியும் பெற்றார் .ஆனால்,ஏனோ  இந்த தெலுங்கு பெயர்கள் ஒன்றை  கூட அவர் தமிழாக  மாற்ற முயற்சி செய்யவில்லை.இந்த தெலுங்கர்கள் ,சும்மாவும்  இருக்கவில்லை.இங்கு வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் மேல் இன்னும் ஆதிக்கத்தை செலுத்தி ,தமிழர்கள்  உயரிய பண்பாட்டினை மெல்ல மெல்ல சிதைத்து, போதாதென்று ,  தமிழகத்தை சதியால் ,சாதியால்,பொய்யால் இன்னும்  ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள்.                                                                                             இந்த தெலுங்கர்கள் பண்பாட்டில், அறம் என்பது அறவே கிடையாது. பெண்களை அவர்கள் காமக்  கண்ணோடு பார்ப்பார்கள்.தேவதாசிகளாக மாற்றுவார்கள்.'பத்மினி படிதாண்டா பத்தினியும் அல்ல: நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல 'என்று அடுக்குமொழியில் காமத்தை கக்குவார்கள்.திராவிடம் என்று எங்கு இருக்கிறது என்று கேட்டால் ,பதிலுக்கு அசிங்கமாக பாவாடையை தூக்கி உள்ளே  பாருங்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.மனைவி, துணைவி, இணைவி என்றெல்லாம் பல பெண்களை  வைத்துக் கொள்வார்கள்  .அவர்களுடைய அந்த சகிக்க முடியாத  காமப்  பார்வையை, தமிழ் சமூகத்திலும் மெல்ல மெல்ல,அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வழியாக திணித்து விட்டார்கள்.திணித்தும்  கொண்டிருக்கிறார்கள்.
பாலச்சந்தரின் பாலியல் பார்வை!
                                           இந்த விடயத்தில் முன்னோடி ,குறிப்பாக, பாலச்சந்தர் என்ற கன்னடர் தான் ,சமூகத்தில் அங்கும் இங்குமாக மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒன்றிரண்டு பாலியல் குற்றங்களுக்கு நியாயம் கற்பித்து, படங்கள் எடுத்து, அதற்கு பரிசுகளும் வாங்கி இருக்கிறார் .இவர் படங்களில் திருமணம் தாண்டிய உறவு ,வேலைக்காரியிடம் கள்ளத்தொடர்பு, தூரத்தில் வாழும் இரண்டாவது மனைவி ,அவளது குடும்பம், குடும்பப் பெண்கள் காம வெறியில் அலைவது , ஈடுபடுவது போன்ற வேண்டாத, அருவருக்கத்தக்க உறவுகளை அழகாக,கலைநயத்தோடு, அண்டை  மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழர் அல்லாத நடிகர்களை வைத்து நியாயப்படுத்துவார். மணிரத்தினம் என்ற ஒரு பிராமண இயக்குனர்,தமிழர்களுக்கு காமத்தில் ஒரு புதிய பாதையை காட்டினார். அது என்னவென்றால், ஆண்கள் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் ,அக்கா வயது ,அம்மா வயது, பாட்டி வயது ஆனாலும் ,அவர்களையும்  காமக்கண்ணோடு பார்க்கலாம்/ பார்க்க வேண்டும் என்ற ஒரு புதிய பாதையை காட்டினார். சிறுவர்களை அவர்கள் அக்கா வயதில் உள்ள பெண்களை,' கலக்குது பார் இவ  ஸ்டைலே' என்று பாட வைத்தார் 'ஜென்டில்மேன்' என்ற ஒரு படத்தில்.
(அந்த பாட்டில் வரும் ஒரு காட்சி இது. ஒரு சின்ன பையன் கௌதமியை பார்த்து கொடுக்கும் காம பார்வையை பாருங்கள். அவனிடத்தில் ஒரு 'ஜொள்ளு ' வடிகிறது. எவ்வளவு ஒரு கேவலமான காட்சி!)
                                         டேய் !அவன் உனக்கு அக்கா டா பாவி !
 அதே மணிரத்தினம், ரோஜா என்ற படத்தில் ,அருவி கரையில் பாட்டிகளை காம ஆட்டம் ஆட வைக்கிறார். இவ்வாறாக ஒரு பெரிய காமப் பார்வையையும், காம வெறியையும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் அல்லாதவர்கள், தமிழ் சமூகத்தில் மெல்ல மெல்ல விதைத்து, அதை இன்று ஆலமரமாக வளர்த்து விட்டிருக்கிறார்கள். 
                                                         My Perfect Husband  என்று ஆங்கில பெயர் கொண்ட  ஒரு தொடர்  இப்போது வந்திருக்கிறது. டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற OTT காட்சி களத்தில் அந்தப் படம்  ஒளிபரப்பப்படுகிறது. அந்தப் படத்தில், மணமாகி,பல  பிள்ளைகள் பெற்ற சத்யராஜ்,பார்க்கும் பெண்கள் எல்லோரிடமும் 'ஜொள்ளு 'விடுகிறார் .பிள்ளைகள் முன்னால் காதல் வசனம் மனைவியிடம் சொல்கிறார்.அவருடைய  பள்ளி நாட்களில் காதல் கொண்ட ஒரு பெண்ணை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார் . அவர் வேலை பார்க்கும் கல்லூரியில் இருக்கும் எல்லா சக ஆசிரியைகளையும் அவர் பாலியல் கண்ணோடு  பார்ப்பது போல் காட்டுகிறார்கள். ஏற்கனவே பிரேமம் என்ற மலையாள படத்தில், மாணவன் தன்னுடைய ஆசிரியை காதலிப்பது போன்று காட்டிவிட்டார்கள். அதாவது,தனக்கு குரு  நிலையில் இருக்கும் ஆசிரியை கூட காதலிக்கலாம் என்ற ஒரு விஷக் கருத்தை விதைத்து விட்டார்கள். இப்போது,பள்ளிகள் எல்லாம்  காதல் கூடங்களாக  காட்டப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல்  அத்துமீறல் செய்யும் செய்தி தமிழ்  நாட்டில் மிக சாதாரணமாக மாறிவிட்டது.
                                                   இந்த மாதிரி விஷ கருத்துக்களை  எல்லாம் இங்கு நுழைப்பது தமிழ்நாட்டில், வாழும் அண்டை மாநிலத்தவர் தான் என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். ஆக ,பாலியல் குற்றங்களுக்கு விதைகளை தூவுவது, காமவெறியை விதைத்து அதற்கு நீர் பாய்ச்சி வளர்த்து விடுவதெல்லாம் ,தமிழ்நாட்டில் பிழைப்பை தேடி வந்திருக்கும் அண்டை மாநிலத்தவர்கள் தான். தமிழ் படங்களின் 75 சதவீத படங்கள் தெலுங்கில் இருந்தும், மலையாளத்திலிருந்து தான் வருகிறது என்பதை மறக்கக்கூடாது.
                                 தமிழர் மரபில் நாயகன், நாயகி என்று இருப்பார்கள்.ஆனால், வில்லன் என்ற ஒரு பாத்திரமே  கிடையாது .சங்ககால இலக்கியங்கள்/ கதைகள் எதிலும் வில்லன் என்ற ஒரு பாத்திரம் இருக்காது.எடுத்துக்காட்டாக கோவலன் கண்ணகி கதையில்  யார் வில்லன்? இப்படி வில்லன் என்று ஒரு பாத்திரத்தை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது அண்டை மாநிலத்தவர் தான். அப்படி வில்லனாக நடிப்பவர்களும்   எல்லோருமே அண்டை மாநிலத்தவர் தான் .எடுத்துக்காட்டாக, எம் .என் .நம்பியாரை சொல்லலாம் .,இப்போது பயங்கரமான தோற்றத்தில் வரும் கிச்சா போன்ற வில்லன்கள் எல்லோருமே மற்ற மாநிலங்களை சார்ந்தவர்கள் தான் என்பதை குறித்துக் கொள்ளவும்.சரி ,இந்த வில்லனுக்கும் ,வளர்ந்து வரும் காம வெறிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.
                                             சரி, இப்போது வில்லன் என்றால் யார் என்று பார்ப்போம். வில்லன் என்பவன் பிறவியிலேயே கெட்டவன். நல்லவனுக்கு எதிரி .அதாவது, நாயகனுக்கு எதிரி. வில்லனிடம் ,வன்முறை காமவெறி போன்றவை இயல்பாகவே இருக்கும். காரணமே இல்லாமல் கதாநாயகியை அவன் கற்பழிக்க முயற்சி செய்வான் . ஏனென்றால் அவன் வில்லன் !ஆக, ஒரு வில்லனை கதையில் நுழைத்து  விட்டால், அவனை கொண்டு கற்பழிக்க வைக்கலாம், காம லீலை செய்ய வைக்கலாம், அவனைக் கொண்டு எந்த கொடூரமான காட்சியையும் நியாயப்படுத்தலாம். அதற்காகத்தான் இந்த வில்லன் என்ற ஒரு இறக்குமதி பாத்திரம் தமிழ்நாட்டில் இருக்கும் அண்டை மாநிலத்தவர் கொண்டு வந்திருக்கின்றனர்!
                                                               எம் .என் .நம்பியார் 
                                                                     பி. எஸ் .வீரப்பா

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பின் மை, இவைகள் எல்லாம்  கவலையளிக்கிறது. இவற்றை மாற்ற வேண்டும். ஆனால் சட்டத்தை கொண்டு அது ஒரு நாளும் முடியாது .மரண தண்டனை கொடுத்தாலும் காமவெறி ஒரு நாளும் பயப்படாது. ஏனென்றால் ,அது ஒரு ஆவி. ஆவியை கம்பிகள் பின்னால் போட முடியாது .ஆவிகளை கட்டுப்படுத்த, அறத்தை கொண்டுதான் முடியும்.இதன் முதல் படியாக, பழையபடி தமிழர்கள் தங்கள் அற வாழ்வை நிலை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் அண்டை மாநிலத்தவர் திணிக்கும் கொள்கைகளை உதறி தள்ள வேண்டும் .வெளிப்படையாக எதிர்க்கவேண்டும் .அதை நாம் உள்வாங்கிக்  கொள்ளக் கூடாது .அதை பரப்பும் அவர்கள் ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.அறத்திற்கு எதிரான பரப்புரைக்கு  நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும் .
தமிழ்நாட்டு அரசியல் ,அற வாழ்வு  வாழும் தமிழர்களால் மட்டும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.அப்படி என்றால் தான் நம் வீட்டு சிறுமிகள், அக்கா, தங்கைகள், அம்மா, மனைவி போன்றவர்களை இந்த காமவெறியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ள  வேண்டும் .

Sunday, 19 May 2024

தமிழ் இனத்தின் முக்கிய பாதுகாப்பு அரண் என்ன?

 உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் மொழிக்கு பலவிதமான சிறப்புகள் உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அந்த மொழியை பேசும் தமிழ் இனத்தை அழிவினின்று பாதுகாக்கும் ஒரு பெரும் படையாகவும், பாதுகாப்பு அரணாகவும் தமிழ் மொழி இருப்பது தான்

அதாவது தமிழை கைவிடாமல், எல்லா சூழ்நிலையிலும், தமிழையே பேசிக் கொண்டிருந்தால், தமிழினத்தை ஒரு காலத்திலும் அழிக்க முடியாது  என்னும் பெரும் உண்மையை தமிழ் இனம் உணர்ந்ததால் தான் , தமிழை எப்போதும் போற்றி பெருமைப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

 இப்படி தமிழ் மொழி, தமிழர்களுக்கு ஒரு பெரும் பாதுகாப்பு படையாக  செயல்படுவதை அறிந்த தமிழினத்தின் எதிரிகள், தமிழ் இனத்தை வீழ்த்த ஒரே வழி, அவர்களுடைய மொழியை முதலில் அழிப்பது தான் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் /வைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஆரியர்கள், வடமொழியை புகுத்தி தமிழ் இனத்தை அழிக்க முற்பட்டார்கள். இப்போது பல ஆரியர் அல்லாதவர்கள், குறிப்பாக  தெலுங்கர்கள்,அதே உத்தியை பயன்படுத்தி, வடமொழியான சமஸ்கிருதத்தை கொண்டு, தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆக , தமிழர்கள் தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற  எளிதான ஒரு வழி என்னவென்றால், எல்லோரும் சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மட்டும் பேச வேண்டும். உடனே, இனத்தின் விடுதலை ஆரம்பமாகிவிடும்.

 தமிழர்களுக்கு எதிராக போரிடுபவர்கள், ஒரு நாளும் படைக்கலன்களோடு வந்து நேரடியாக போராடுவதில்லை . அப்படி வந்தால் அது  தமிழர்களுக்கு எதிரான போர் என்று தெரிந்துவிடும். மாறாக, மறை முகமாக கருத்தியல் ரீதியாக போர் தொடுத்து, அதை தொடர்ந்து தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மறைமுகப் போர் என்பதால், அதனால் தாக்கப்பட்டு பலவீனப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அது தெரிவதில்லை. அப்படி ஒரு உணர்வு வருவதும் இல்லை.இதை அவர்கள் தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அந்த மறைமுக போருக்கு,முக்கியமான ஆயுதம் என்னவென்றால்  சமஸ்கிருத சொற்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  சமஸ்கிருத சொல்லுக்கு அழிக்கும்/குழப்பும்  பெரும்  திறன் உள்ளது என்பது இதை தீர ஆராய்ச்சி செய்த மொழி அறிஞர்களுக்கு மட்டும்தான்  தெரியும். 

நான் என்ன சொல்கிறேன் என்பது பலருக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம். ஆதலால் அதை விளக்கு முகமாக ஒரு சிறிய எடுத்துக்காட்டை சொல்லுகிறேன்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி சொன்ன ஒரு கருத்து அகில இந்திய அளவில் பேசு பொருளாக மாறி நீதிமன்றத்திற்கு கூட சென்று விட்டது. அவர் சொன்ன கருத்துக்கு எதிராக பலர்  காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்கள் .அவர் அப்படி என்ன தான்  சொன்னார்.

"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் "என்று பேசினார்.

ஆதாரம் :https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-sanatana-dharma-row-did-rahul-gandhi-call-a-senior-dmk-leader-on-the-issue-536093.html

"சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்."என்று அவர் சொன்னதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது .இதோ சனாதனம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு அகராதி தரும் பொருள்.


ஆதாரம்: Sanskrit Dictionary  

ஆக, சனாதனம் என்கிற ஒரு சொல்லே  சமஸ்கிருதத்தில் கிடையாது என்பது தெளிவாகிறது. அப்படி இல்லாத ஒரு சொல்லுக்கு, ஒரு இல்லாத பொருளை கற்பித்து ,ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் அதை பொருள் கொள்வது, சமஸ்கிருதத்தின் ஒரு தனி குழப்பும்/அழிக்கும்  திறன் என்று சொல்லலாம். இந்த சொல்லுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு பொருள் இல்லாத வரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதை பொருள் கொள்ளலாம். அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் அவர் பேசியது தவறு என்று சொல்ல முடியும் ?

அப்படி ஒரு குழப்பமான  சிந்தனையை விதைக்கும் திறன் தான் சமஸ்கிருத சொற்களுக்கு உள்ளது. இப்போது இதையே தமிழாக்கி பேசினால் என்ன ஆகும்? முயன்று பாருங்கள். தமிழில் அப்படி ஒன்றும் பேச முடியாது. தமிழில் என்ன பேசினாலும் அதற்கு ஒரு நேரடி பொருள்தான் கற்பிக்க முடியும். குழப்பமான பொருள் கற்பிக்க முடியாது. இந்த ஒரு சொல்லைக் கொண்டு சமஸ்கிருத சொற்களின்  திறனை ஓரளவு புரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அதுபோல இன்னொரு சொல்லை பார்ப்போம். JUSTICE  என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராக சமஸ்கிருதத்தின் சொல் 'தர்மம்' என்பதாகும் . ஆனால், தர்மம் என்பதன் மக்கள் புரிந்து கொண்ட பொருள் என்னவென்றால்' அநியாயம்'என்பதாகும் .ஏனென்றால், தர்மம் என்றால்' சாதிக்கேற்ற நீதி', அப்படியென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி!அது ஆங்கிலத்தில் INJUSTICE .ஆக ,JUSTICE என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் INJUSTICE என்ற ,நேர் எதிர்மறையான பொருள் கொண்ட ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள்!😂😂

 இனி, இதை போல் தமிழ் இனத்திற்கு முக்கியமான இன்னொரு சொல்லுக்கு வருவோம்.தமிழ்நாட்டில் வாழும் மற்ற மாநிலத்தவர், குறிப்பாக தெலுங்கர்கள், கடந்த சுமார் 50 வருடங்களாக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால்,தெலுங்கர்கள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பல தமிழர்கள் இன்னும் உணரவில்லை. உணர முடியவில்லை.பல தமிழர்கள் அந்தத் தகவலையே  சந்தேகத்துடன் தான் கேட்கிறார்கள். பல தமிழர்கள் அதை இன்னும் நம்புவதில்லை. இதற்கு என்ன காரணம்? 

 இப்படி 5% தெலுங்கர்கள் ,85% தமிழர்களை எளிதாக ஆள்வதற்கு, அவர்களிடம் தனியாக ஒரு பெரும் படையோ அல்லது ராணுவமோ  இல்லை .தெலுங்கு விட்டலாச்சாரியா படங்களில் வருவது போல் ஒரு மாய மோகினியும்  மந்திரக்கோலும் இல்லை.பின்னர் எதைக் கொண்டு அவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள் ?

அவர்களின் வெற்றிக்கு காரணம் ஒரே ஒரு  சமஸ்கிருத சொல் தான் ! அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மந்திரச்சொல். அதைக் கொண்டுதான் வீழ்த்த முடியாத  தமிழ் இனத்தை வீழ்த்தி விட்டார்கள்!அந்த மந்திர சொல் தான் திராவிட என்னும் சொல்.அப்படி அந்தச் சொல்லில்   என்னதான் இருக்கிறது? இதோ இதை படித்து பாருங்கள்.புரியும் .

திராவிடம் என்ற பெரும் சூழ்ச்சி 

 இந்த அரசை 'திராவிட மாடல் 'அரசு என்று சொல்கிறார்கள்.நாங்கள் 'திராவிட'இனத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள் . இப்போது நடப்பது 'திராவிட ஆட்சி 'என்று சொல்கிறார்கள். உண்மையில் தெலுங்கர்கள் தான் ,இந்த திராவிட முகமூடி அணிந்து நம்மை ஆள்கிறார்கள் என்பது  ஏன் நமக்கு தெரிவதில்லை?ஏனென்றால், தமிழர்களும் அந்த திராவிட இனம் தான்  என்று  காலம் காலமாய் பொய் சொல்லி தமிழர்களை எல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள் . நான் கூட என் பள்ளி நாட்களில், தமிழர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக அவ்வாறு சொல்லி, தமிழர்கள்,தெலுங்கர்கள் எல்லாம் ஒரே இனம் தான். இந்த இனத்தின் பெயர் தான் திராவிடம் என்று ஒரு மா பெரும் பொய்  சொல்லி,அதைக் கருவியாக  கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆக, 5% தெலுங்கர் நம்மை ஆளும் போது, நம் திராவிட இனம் தான் நம்மை ஆளுகிறது என்ற ஒரு மாயையை உருவாக்கி நம்ப வைத்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், அவர்களை எப்படி வீழ்த்துவது? முள்ளை முள்ளால் தான் எடுக்க  முடியும். அதுபோல சொல்லை சொல்லால் தான் வீழ்த்த முடியும். எந்த சொல்லினால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ,அந்தச் சொல்லை தமிழர்கள் பயன்படுத்தாமல், அதற்குப் பதில், அதற்கு நிகரான தமிழ் சொற்களை பயன்படுத்தினால் போதும். உடனே விடுதலை ஆரம்பமாகிவிடும் .எப்படி ?

 தமிழர்கள் எல்லோரும் தங்களுடைய பேச்சில்/ வழக்கில் தமிழ் சொற்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் .எந்த காரணம் கொண்டும் சமஸ்கிருத சொல் பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்யும் போது ,'திராவிட மாடல்' என்பது தமிழாக்கினால் 'தெலுங்கர் மாடல் 'என்று வரும்! ஆக,தமிழர் மாடல் அல்ல என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். 'திராவிடர் ஆட்சி' என்று சொன்னால் அதை தமிழில் 'தெலுங்கர் ஆட்சி'என்று சொல்ல வேண்டியிருக்கும் . உடனே தெரிந்து விடும், 85 சதவீத தமிழர்களை 5 சதவீத தெலுங்கர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற பெரும் உண்மை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிடும். 'திராவிட கழகம்' என்றால்' தெலுங்கர் கழகம்'என்று தமிழில் வந்துவிடும். 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று சொன்னால் 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று பொருள்படும்.ஆக தமிழர் கட்சி அல்ல திமுக என்பது தெரிந்து விடும். தமிழர் கட்சி என்றால் ' தமிழர் முன்னேற்ற கழகம் 'என்று பெயர் வைக்கலாமே !ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி எழும். 

இந்த கருத்து உருவாக்கம் வலுப்பெற்று இறுதியில் ,தமிழர் VERSUS  தெலுங்கர் என்னும் அரசியல் நிலைப்பாடு  வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். கே.என். நேரு என்றால் தெலுங்கர் என்று சொல்ல வேண்டி இருக்கும். கருணாநிதி என்றால் தெலுங்கர்  என்று சொல்ல வேண்டியிருக்கும்.வைகோ , வெங்கடேசன், விஜயகாந்த் எல்லோரும் தெலுங்கு மன வாடு கூட்டம் என்பது மக்களுக்கு தெரிய வரும்.

 மொத்தத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மைகள் எல்லாம் அம்பலம் ஆகிவிடும். தேர்தல் சமயத்தில் தமிழர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்,தெலுங்கர்களுக்கு வேண்டாம் என்ற முறையில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யலாம். தெலுங்கர்கள் இதுவரை செய்து வந்த ஏமாற்று வேலை ஒவ்வொன்றும் தெரிய ஆரம்பிக்கும். இறுதியில் தமிழ் தேசியம் மலரும்.

 அந்த ஒரு சொல் அப்படி ஒரு பெரிய மந்திரம் சொல்லாக இருக்கிறது. எங்கெங்கு திராவிடம் என்று சொல் வருகிறதோ  அங்கங்கு அதற்கு ஏற்ற தமிழ் சொல்லை பயன்படுத்தி பாருங்கள்.வெற்றி நிச்சயம். இதை ஒரு தனித்தமிழ் இயக்கமாக கொண்டு வந்து பிரபல படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி எப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது,தமிழை விட்டுவிட்டு வேறு மொழி சொற்களை பயன்படுத்தினால் தமிழனை அடிமையாக்கி விடலாம் என்ற  பெரும்  உண்மையை தமிழர்  உணர ஆரம்பிப்பார்கள்.இறுதியில் ,தமிழினால் பாதுகாக்கப்பட்ட, ஒரு வீழ்த்த முடியாத, இனமாக தமிழர்கள் மாறிவிடுவார்கள். அப்படித்தானே அவர்கள் இருந்தார்கள் சமஸ்கிருதம் என்ற மொழி வரும் வரை!