Monday, 3 May 2021

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிறித்தவ பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்?



இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்! அவைகளில் சிலவற்றை நாம் என்னவென்று பார்ப்போம்...பா ர்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,

வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிடிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு புதிய சட்டத்தை
ஏற்றி நம் அடிமை வாழ்க்கையை மாற்றத் தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804 யில் பெண் சிசுக்கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்.
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஆனால் ஒரு பிராமணன் தன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். அதற்கு தண்டனை கிடையாது. அவனால்
கெடுக்கப்பட்ட பெண் கடவுளுக்கு அவள் உடலை அர்ப்பணித்ததாக கருதப்படுவாள். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது!
சூத்திரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாட்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பிராமணன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்திரனும்
கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை
1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பார்ப்பனிச இந்து மனு தர்ம சட்டத்தின் கொடுமைகள் அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்து மனு தர்ம சட்டத்தை ரத்து செய்ய சாதி கொடுமைகளை வேரறுக்கப் போராடியவர் ஐயா #தந்தை #பெரியார்.
இவர் மட்டும் இல்லை என்றால் பார்ப்பானைத் தவிர மற்ற சமுதாய மக்கள் இன்னும் ஆதிவாசிகளாக தான் இருப்போம்.
இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் மகாத்மா
ஜோதிராவ் புலே அவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது, அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
சூத்திரனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.
மீடியாக்கள் இருக்கலாம்
ஆள் பலம்
படை பலம்
பண பலம்
ஏன் அரசாங்க பலம் கூட
இருக்கலாம்.
ஆனால், பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கருத்தியல் ஆயுதங்கள் உண்டு.

- பகிர்வு

No comments:

Post a Comment