Sunday, 18 January 2026

பெண்களுக்கு தங்கள் கவர்ச்சி எந்த அளவு ஒரு ஆணை கிளர்ச்சியூட்ட முடியும் என்று தெரியுமா?

 சமீபத்தில் ஒரு பழைய மலையாள படம் பார்த்தேன். படத்தின் பெயர் ரதிநிர்வேதம்(2011).மேற்படையாக பார்த்தால், அது ஒரு பாலியல் கிளர்ச்சி ஊட்டும் மஞ்சள் படம் போல தெரியும். பல காட்சிகள் அவ்வாறுதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால்,இறுதியில் அது சொல்லும் ஒரு பெரும் பாடம், பெண்கள் எல்லோரும் அறியவேண்டிய ஒரு பாடமாக அமைந்து விட்டது. 

                                         படத்தின் நாயகி ரதி சுமார் 23 வயது அழகான பெண்.  நாயகன் அவளை விட 8 வயது குறைந்த ஒரு ஒரு பதின்பருவ விடலை பையன்.இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயது முதல் நன்றாக பழகியவர்கள். ஒருவரை  ஒருவர் ஓடி பிடித்து , கண்ணாம்பூச்சி விளையாடி வளர்ந்தவர்கள். இப்போது பையன் 15 வயதளவில் ,வெளியூரிலிருந்து விடுமுறையை  கழிக்க வீடு  வந்திருக்கிறான் .பெண் என்பதால் அவன் சிறிது தயக்கம் காட்டினாலும்,நாயகி அவனுடன் முன்போலவே  ஓடி பிடித்து விளையாடுவது ,கண்ணாமூச்சி காட்டுவது போன்ற பல விளையாட்டுகளில் கள்ளம் கபடம் இல்லாமல் செய்வது அவனை பாலியலாக தூண்டுகிறது.என்னதான் அவன்  நாயகியை 'சேச்சி, சேச்சி' என்று அழைத்தாலும் ,அவளது  நெருக்கம் அவனை என்னவோ செய்கிறது.திருட்டுத்தனமாக  அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் ,குறிப்பாக அவளுடைய உடம்பின் பாகங்களை ரசிக்க வேண்டும் என்று அவனை அறியாமல் அவன் கண் அவள் மேல் செல்கிறது .அவள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்க்கின்றான்.அவள் வீட்டில் மாவு அரைக்கும் போது மேலாடை இல்லாமல், கேரளாவில் வழக்கமாக இருப்பது போல் ,கால்களையும் நன்றாக தெரியும் படி வைத்துக்கொண்டு ,மாவரைப்பதையும்  இவன் ஒளிந்திருந்து பார்க்கிறான்.வர வர அவனால் அப்படி ஒளிந்து பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை .என்ன முயன்றாலும் இது சிறிது சிறிதாக வளர்ந்து, ஒரு நிலையில் அவளை எப்படியும் அடைந்து விட வேண்டும் ,ஒரு முறையாவது அனுபவித்து விட வேண்டும் என்று எண்ணும் அளவு வளர்ந்து விடுகிறது.இவ்வளவு நடப்பதும் வீட்டில் இருக்கும் வயதான பெண்களுக்கு, அம்மாவுக்கு ,சித்திக்கு,அக்காவிற்கு  யாருக்கும் கொஞ்சம் கூட புரியவில்லை.(பெண்களுக்கு இது புரியாது!) அவர்கள் இந்த இரண்டு பேரையும் அப்படி கண் கொண்டு பார்க்கவும் இல்லை .இந்நிலையில் ஒரு சரியான தருணத்தில், நாயகன் நாயகியை   தன்னை அறியாமல் இறுக கட்டி  அணைக்கிறான். அவள்  தடுக்க நினைப்பதற்குள், வீட்டில் உள்ளவர்கள் நடந்ததை பார்த்து விடுகிறார்கள்.குறிப்பாக பெண்ணின் தாய் பார்த்து விட்டதால்,  பெரும் பூகம்பம் வெடிக்கிறது.

பெண்ணின் தாய் பையனின்  அம்மாவை திட்டி தீர்க்கிறார். இதன் விளைவாக இரு குடும்பங்களிடையே பெரும் பகை உருவாகிறது. இந்த நேரத்தில் தான் நாயகனின் அத்தான் ,இராணுவத்திலிருந்து  விடுமுறைக்காக  வீட்டிற்கு வருகிறார்.
                                   நடந்ததை எல்லாம் அறிந்து ,வீட்டின் மூத்த பெண்கள்  எல்லோரையும்  கூப்பிட்டு அவர் கொடுக்கும் அறிவுரை தான் ,எல்லா பெண்களும் அறிய வேண்டிய பெரும்  அறிவுரையாக இருக்கிறது. அவரும் இந்த பருவத்தை கடந்து வந்தவர் தான். அந்த அனுபவம் அவருக்கு இந்த அறிவுரை கொடுக்க கை கொடுக்கிறது. 
                            அவர் சொல்கிறார்' இவ்வளவு நடந்து இருக்கிறது. நீங்கள் இத்தனை பெண்கள் இருக்கிறீர்கள். ஒருவருக்கு கூட இது நடப்பது தெரியவில்லை. ஏன்? ஏனென்றால் உங்களுக்கு பெண்களின் எந்தெந்த செயல்கள் ஒரு பையனுக்கு  கிளர்ச்சியூட்டும், பாலியல் உணர்வை தூண்டும் என்பதை பற்றி ஒன்றுமே தெரியாது. உங்கள் உடம்பு  ஆண்களுக்கு எந்த அளவு கிளர்ச்சி உண்டாக்கலாம் என்பதும்  தெரியாது. ஆதலால்,அவனுக்கு காம உணர்வு  ஊட்டும் படியாக நடந்து கொண்டது அந்தப் பெண் ரதியுடைய குற்றம். அவள்  தான் இந்த உணர்வுக்கு மூல காரணம். இதை ஆரம்பித்து வைத்தது அவள் தான் .அதை கண்டுபிடிக்காமல் இருந்தது உங்கள் குற்றம் .இப்போது பெரும் சிக்கலுக்குள் இந்த பிரச்சனை போய்விட்டது. இவனை உடனே மேற்படிப்பிற்கு வெளியூர் அனுப்பிவிடலாம் 'என்று சொல்கிறார்.

பெண்களுக்கு அவர்கள் கவர்ச்சி எந்த அளவு என்பதை உணர முடியுமா?
                                                                        இந்தக் கேள்விக்கு, இந்த திரைப்படம் சொல்லும் தெளிவான  விடை 'பெண்களுக்கு அவர்கள் கவர்ச்சி எந்த அளவிற்கு ஆண்களை மயக்கலாம், வெறியூட்டலாம் என்பது சிறிது கூட தெரியாது ' என்பதுதான்.தமிழர் பண்பாட்டில் இதை முற்றிலும் உணர்ந்ததால்,பருவம்  அடையும் முன்பே பெண்களுக்கு இதை உணர்த்தி விடுவார்கள்.'பொம்பளையா அடக்கமா இருக்கணும்' என்று சொல்வார்கள். பெண்கள் தங்கள் இஷ்டப்படி கால் மேல் கால் போட்டுக் கொண்டு அல்லது காலை விரித்துக்கொண்டு அல்லது கால் தெரியும்படியாக இருக்க, தமிழர்கள் தங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். பருவம் அடைந்த பின் கட்டாயமாக தாவணி போட்டு விடுவார்கள். தாவணி சிறிது விலகினாலும் உடனே வீட்டில் உள்ள மூத்த பெண்கள் அதை சொல்லிக் காட்டுவார்கள். கண்டிப்பார்கள் . இந்த பழக்கம் பள்ளி வரை சென்று, பெண்களின் தாவணி சிறிது விலகினாலும், உடனே அவர்களுடைய பெண் தோழிகள்  அதை சில விதமான ஜாடை செய்து  காட்டுவார்கள். உடனே அதை புரிந்து கொண்டு ` ,இந்த பெண் அதை இழுத்து விட்டு விடுவாள் .இந்த பழக்கம் ,எப்போது தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்களோ ,  முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பாவாடை தாவணி என்ற உடையையே  இல்லாத மாதிரி .காலப்போக்கில் செய்து விட்டார்கள்!எடுத்துக்காட்டாக கேரளாவில், கீழ்கண்ட மேலாடை   இடாத ரவிக்கை அணிவதை மிகவும் சாதாரணமாக பார்க்கலாம்:
                                                            (படம் நன்றி: கூகுள்)

ஆனால், தமிழ்நாட்டில் இப்படி எந்த பெண்ணையும்,,எங்கும்  பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் மலையாள படங்கள் பரவ பரவ ,இது போன்ற காட்சிகளை சில தமிழ் படங்களிலும் காட்ட ஆரம்பித்தார்கள் .அதன் விளைவு இப்போது பல தமிழ் திரைப்படங்களில் இப்படியான காட்சிகள் மிக சாதாரணமாக  காட்டப்படுகிறது.
                                    தமிழ் குடும்பங்களில், சொந்த  தங்கை /அக்காவாக இருந்தாலும் பையன்களை நெருக்கமாக பழக விட மாட்டார்கள்.உடை மாற்றும் போதும் ஆண்களை  அறைக்குள்  அனுமதிப்பதில்லை. இரவில் தூங்கும் போது தனித்தனி அறைகளில் தான் படுப்பார்கள். சொந்த அம்மாவை கூட மகன் கட்டி அணைப்பது தமிழ் பண்பாட்டில் இல்லை. இவ்வாறாக ,பல நல்ல பாலியியல் பாதுகாப்பு பழக்கங்களை தமிழ் பண்பாட்டில் காணலாம்.இது போக , தமிழ் குடும்பங்களில்  உள்ள மூத்த பெண்கள் , பையன்களின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்பது உண்டு.
                                 ஆனால் வளர்ந்து வரும் நாகரீகம்,தமிழ் பண்பாட்டில் அன்னி யர்களின் ஆதிக்கம்,ஊடகங்களின் செல்வாக்கு   போன்றவை ,இது மாதிரியான நல்ல பழக்கங்களை மாற்றிக் கொண்டு வருகிறது என்பது ஒரு கவலைக்குரிய விடயம்  தான்.இப்போது மாறிக் கொண்டு வரும் உடைகள், குறிப்பாக, மேற்கத்திய உடைகள், வட இந்திய உடைகள், உடலை மறைப்பது போல இல்லாமல் ,கவர்ச்சியான பாகங்களை எடுத்துக்காட்டுவது போல அமைந்துள்ளது. குறிப்பாக, மேற்கத்திய மேற் சட்டைகள், லெக்கின்ஸ் என்று சொல்லப்படும் காலோடு ஒட்டிய உடை, மற்றும் இடுப்பில் வெட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாக இடுப்பு முழுவதும் தெரிவது போன்ற வட இந்திய உடைகள் ,காம கண்களை தூண்டுகின்றன .
                            தமிழ்நாட்டின் அழகான உடையான ,பாவாடை-தாவணி  தற்போது திரைப்படங்களில், பாடல் காட்சியில் மட்டும் வருகிறது. நேரில் யாவனும் யாரும் அணிந்து பார்க்க முடிவதில்லை. அந்த அளவு அந்த உடையை அழித்துவிட்டார்கள். நான் கூட ராமராஜ் ஆடை நிறுவனத்திற்கு, நீங்கள் வேட்டியை எந்த அளவு பரவலாக்கி இருக்கிறீர்களோ அதுபோல ஏன் பாவாடை தாவணியை  ஆக்கக் கூடாது என்று ட்விட்டர் செய்தி போட்டேன். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லை .அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற  காரணமாக கூட இருக்கலாம் என்று ஒரு நண்பர் சொன்னார் .அது உண்மையா என்று தெரியவில்லை.ஆனால், அந்த நல்ல பண்பாட்டு உடையை மீட்டெடுப்பது தமிழர்களின் கடமை என்று  நான் நினைக்கிறேன்.இந்த உடையின்  குணம் என்னவென்றால், இது அணிந்த பெண்களை ஒரு அழகான பட்டாம்  பூச்சி போல மெருகேற்றி காட்டும், ஆனால்,அதே நேரம்  காமக் கிளர்ச்சி ஊட்டாது
                                                             (படம் நன்றி: கூகுள்)
இறுதியாக இளம் பெண்கள் அறிய வேண்டியது என்னவென்றால் , அவர்கள் இயற்கையாக  ஆண்களை கவரும்/மயக்கும்  படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய அடிப்படை காரணம் இனப்பெருக்கம் தான் . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது .இந்த நிலையில் 
                             பெண்கள்  என்னதான் செய்ய முடியும்  என்று  நீங்கள் கேட்கலாம்.வீட்டில் திருட்டு நடப்பதை நாம் குறைக்க வேண்டுமென்றால், ஒரு பூட்டு போடலாம் .பூட்டு போட்டாலும் உடைத்து திருடலாம். ஆனால், பூட்டு போடுகிறோம். ஏனென்றால் அதை உடைத்து திருடுவது என்பது அதற்கு அடுத்தபடியான  முயற்சி . அதுபோல,பெண்கள்  இந்த இயற்கையான கவர்ச்சியை,மறைக்கும்  உடைகள் மூலம் தான் பூட்டு போட்டு குறைக்க முடியும். 
                   ஆனால்,மாறாக இதை அறியாத பெண்கள், மாதம்  2000 வரை செலவழித்து, அழகு நிலையத்திற்கு சென்று முடிந்த அளவு தங்கள் அழகினை கவர்ச்சிகரமாக்கி, ஆண்களை கவர்ந்து காம வெறியூட்டும்  கருவிகளாகி  கொண்டிருக்கிறார்கள் .அதனால் ,ஏற்படும் ஆபத்து அவர்களை (பெண்களை) தான் பாதிக்கும் என்பது அவர்களுக்கு பு ரியவில்லை. இப்போதே புள்ளிவிவரத்தை பார்த்தால்,1960 களில்  இருந்தது போல 10,000 மடங்கு அதிகமாக காம குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது புரியும் .சொந்த மகளை ,சொந்த அக்காவை,தங்கையை  பாலியல் துன்புறுத்தல் செய்யும் பரிதாப நிலைமை இப்போது நடந்து கொண்டிருக்கிறது .சிறு குழந்தைகளை கூட வயதான ஆண்கள் கூட  விட்டு வைப்பதில்லை போல தோன்றுகிறது. தினமும் செய்தித்தாளை திறந்தால் கட்டாயம் இது போன்ற வன்புணர்வு செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன.ஆனால் தமிழ் சமூகம் அந்தந்த சம்பவங்களுக்கு ஏதோ ஒரு நாள் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். பின்னர் அடங்கிப் போய் விடுவார்கள். இதன் அடிப்படை காரணம் என்ன ?அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்றெல்லாம் சிறிது கூட  சிந்திப்பதில்லை ..
                      இதற்கெல்லாம் என்ன மூல  காரணம் என்றால் ,காம குற்றங்களுக்கு அடிப்படையாக பெண்கள் ஒரு தூண்டுகோலாக  மாறிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது  தான் .அதை அவர்களால்  உணர முடியவில்லை என்பதுதான் பிரச்சனை .அதை சொன்னால் கேட்கும் மனநிலையில் அவர்கள் இப்போது இல்லை .பெற்றோர்களுக்கு கீழ்படிவதில்லை .சொந்த அப்பா சொன்னால் கூட கேட்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.இது போதாது என்று உடை அணிவது பெண்ணின் சுதந்திரம் என்றும் அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது ,அது பெண் உரிமையில் தலையிடுவதாகும் என்று ஒரு தவறான கருத்து ஊடகங்கள் வழியாக பரப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்பது பெண்களை  தான் என்பதை மறைத்து ஊடகங்கள் இந்த விஷம பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன என்பது வருத்தத்திற்குரிய விடயம்.
காம குற்றங்களை குறைப்பதற்கு பெண்கள் பங்களிக்க முடியுமா?
                      சட்டயியலில்   உரிமையியல்  சட்டம் என்று ஒன்று உள்ளது. ஆங்கிலத்தில் இதை  TORTS  என்பார்கள். அந்த சட்டத்தில் ஒரு கோட்பாடு  உள்ளது. அது என்னவென்றால், ஒரு குற்றம் நடைபெறுவதற்கு ,குற்றவாளி ஏதாவது ஒரு வழியில்  பங்களித்திருந்தால் ,அதை CONTRIBUTORY NEGLIGENCE  என்று சொல்லுவார்கள் .அதாவது, குற்றம் நடக்க  ஏதுவான அசட்டை என்று சொல்லலாம்.எடுத்துக்காட்டாக ,சாலை நடுவே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இரவில் ஒரு வாகனம் அவர் மேல் ஏறி அவர் இறந்து விடுகிறார். இந்த மரணத்தில் இறந்தவர் பாகத்தில் இந்த குற்றத்திற்கு ஏதுவான அசட்டை நடந்திருக்கிறது என்று சட்டத்தில் சொல்லுவார்கள். அவர் சாலை  நடுவே தூங்கவில்லை என்றால் இந்த மரணம்  நேர்ந்திருக்காது என்ற அடிப்படையில் அவ்வாறு சொல்லப்படுகிறது.
                                  காம குற்றங்களுக்கும்  இந்த கோட்பாடு பொருந்தும். வெறியூட்டும் படியாக ஆடை அணிவது அல்லது நடந்து கொள்வது போன்றவை காம குற்றங்களுக்கு வழி வகுக்கலாம்  .நான் சொன்ன எடுத்துக்காட்டில் பாதிக்கப்படுவது அந்த அசட்டையில் ஈடுபட்ட நபர் தான்.அவர் தான்  தண்டனைக்கு உள்ளாகிறார் .ஆனால் காம வெறி குற்றங்களில்  அப்படியல்ல. வெறியூட்டும் நபர் ஒருவராக இருக்கலாம். ஆனால், அதனால் வெறி  ஊட்டப்பட்ட ஆணின்  தாக்குதலுக்கு உள்ளாகும் பெண் வேறு நபராக இருக்கலாம்! எடுத்துக்காட்டாக, நடிகை சமந்தாவின் காம வெறியூட்டும் ஒரு திரைப்பட பாடலை பார்த்துவிட்டு, அந்த வெறியில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி பாப்பாவை,சில நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக சிறு பையன்களை கூட ,அவன் வெறியை தீர்த்துக்கொள்ள  வழியாக்கலாம் .ஆக ,இங்கு தவறு செய்வது ஒரு பெண் , தண்டனை பெறுவது வேறு ஒரு பெண் அல்லது ஆண் என்பது போல ஆகலாம்.
ஆக,அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுக்கலாம்?
  • காமவெறி என்பது ஒரு ஆவியாகும்,அதாவது இச்சையின் ஆவியாகும் .அதை சட்டத்தை கொண்டு அல்லது பிரம்பை கொண்டு கட்டுப்படுத்த முடியாது .ஆவியை கட்டுப்படுத்த ஆவிக்குரிய வழிகளை தான் பின்பற்ற வேண்டும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.
  • இப்போது காம ஆவியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம் .
  • முதலாவதாக பெண்கள் தங்கள் கவர்ச்சியினை முடிந்த அளவு மூடி மறைத்து உடை அணிய வேண்டும்  இறுக்கமான உடைகளை அணிந்து தங்கள் உடலின் வடிவத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கக் கூடாது.
  • அடுத்ததாக அவர்கள் நடந்து கொள்ளும் விதம் ஆண்களை கவரும் விதமாக இருக்கக் கூடாது.எடுத்துக்காட்டாக ,நைட்டி போன்ற  உடைகளை அணிந்து  பெண்கள், பொது வெளியில் வரக்கூடாது. காய்கறி எடுப்பதற்காக குனிந்து தங்கள் முன்னழகை  வெளியே தெரியும் படியாக காட்டக்கூடாது. இது மற்ற ஆண்களின் கண்களை இயற்கையாக  கவரும்.காம உணர்வை தூண்டும்.ஆண்களால்   அந்த உணர்வை  கட்டுப்படுத்த முடியாது என்பது பெண்களுக்கு தெரியாது.
  • இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் ஒரு முக்கியமான கோட்பாடு பெண் உரிமை என்பதாகும் . அது பெண்களுக்கு ஆபத்தான பலவற்றை  செய்யச் சொல்லி கற்பிக்கிறது.அவர்களுக்கு ஒரு அசட்டு தைரியத்தை கொடுக்கிறது .அவர்களால் ஆண்களை ,எந்நேரத்திலும் தனியாக எதிர்கொள்ள முடியும் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து நம்ப வைக்கிறது.வீட்டில் இருக்கும் ஆண்கள் அதாவது பெற்ற அப்பா,அன்பு  அண்ணன்,பாசமிகு  தம்பி ,யார் சொல்வது எதையும் கேட்கத் தேவையில்லை, வெளியே செல்லும்போது அவர்கள் துணை  தேவையில்லை போன்ற தவறான அறிவுரைகளையும் இந்த இயக்கம் கற்பித்து ,பெண்களை ஆபத்தான பாதையில் வழி  நடத்துகிறது.
  • இதில் முக்கியமான புள்ளி என்னவென்றால், தமிழர் பண்பாட்டில் பெண் உரிமை/ பெண் சமத்துவம் என்ற கோட்பாடு ஒருக்காலும்  இருந்தது  கிடையாது.தமிழர் சமூகம் ஆண்வழி சமூகமாக இருந்தாலும், பெண்கள் அவர்களுக்கு கிடைக்கும் எல்லா விதமான பயன்களையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வில் முன்னேறி எல்லா நிலைகளிலும் உயர்ந்து நின்றார்கள். பெரும் புலவர்களாக /கவிஞர்களாக திகழ்ந்தார்கள்.அரசனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்ட கண்ணகி யாகவும் இருந்தார்கள் .அந்த அளவுக்கு தமிழ் பண்பாட்டில் பெண்களுக்கு ஒரு மரியாதையும் அதே நேரம் பாதுகாப்பும் இருந்து கொண்டிருந்தது.தமிழர் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடக்காததால்,தமிழில்  அதற்கான சொற்கள் கூட கிடையாது .எடுத்துக்காட்டாக ,ஆங்கிலத்தில் RAPE  என்று சொல்லப்படும் சொல்லிற்கு  தமிழில் நிகரான சொல் கிடையாது. ஏனென்றால் ,அப்படி ஒன்று தமிழர் சமூகத்தில் நடந்ததில்லை. இப்போது நாமாக அதற்கு ஒரு சொல்லை உருவாக்கி ,வன்புணர்வு கற்பழிப்பு என்றெல்லாம் சொல்கிறோம். இவைகள் ஒன்றும் சங்க கால இலக்கியத்தில் காணப்படவில்லை.இன்றும் கூட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவும் பகலும் ஒரே இடத்தில் படுத்து உறங்கிய இளம் பெண்களும் ஆண்களும் சகோதர நட்பில் தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்த அந்த போராட்டத்தில் ஒரு பாலியல் குற்றம் கூட பதிவாகவில்லை. அதுதான் தமிழரின் உயரிய  பண்பாடு.
  • தமிழ் பெண்களின் இந்த பாதுகாப்பான சூழ்நிலை,உயர்வு எல்லாவற்றையும்  குலைக்கும் விதமாக, தமிழ்நாட்டில் வாழும் பெண் வழி சமூக வேற்று இன  மக்கள், பெண்ணுரிமை, பெண் சமத்துவம் போன்ற வேண்டாத கோட்பாடுகளை ,தமிழ்நாட்டில் நுழைத்து பெண்களுக்கு தீங்கிழைக்கும் பல பழக்கங்களை புகுத்தி ,அவற்றை நல்லது, முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வது என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து ,இப்போது பெண்களுக்கும் /சிறுமிகளுக்கும்   ஒரு பாதுகாப்பில்லாத ,பிரச்சனை சூழ்ந்த ஒரு நிலைமையை கொண்டு வந்து விட்டார்கள்.
  • இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் மிகவும் அருவருக்கத்தக்க ஒரு விடயத்தை,பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், ஆதலால் ஆண்களைப் போல் ,எந்நேரத்திலும் எங்கும் அவர்கள் நினைத்தபடி சுற்றலாம் என்று போதிக்கும் இந்த பெண் சமத்துவ இயக்கத்தோடு தொடர்பு படுத்தலாம் .காம வெறியில் அலையும் ஆண்கள் ,இப்படி எங்கு பார்த்தாலும் எளிதாக சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களை, வயது வேறுபாடு பார்க்காமல், பாட்டிகள், இளம் சிறுமிகள் போன்றவர்களை கூட தன் இச்சைக்கு பலியாக்குவது தற்போது மிக சாதாரணமாகிவிட்டது. 
  • அது போதாது என்று தன் காமவெறியை தீர்த்துக் கொள்ள பெற்ற மகளையே பலியாக்கும்  ஒரு கொடூரம் வேறு இப்போது அரங்கேறிக்   கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு அறமற்ற தீய எண்ணம் தமிழர் பண்பாட்டில்  வருவதற்கு எந்த வித இடமும்  இல்லை .ஆனால்,அதை மீறி  வந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? குடும்பத்து பெண்களிடம் கூட  உன்னுடைய காமப் பசியை தீர்த்துக் கொள்ளலாம் என்ற கொடூரமான எண்ணம் தமிழ் சமூகத்தில் எப்படி நுழைந்தது ?ஆய்ந்து பார்த்தால் இதற்கு காரணம் என்ன  என்பது தெரிய வரும், தமிழ்நாட்டில் வாழும் வேறு மொழி பேசும்  சிறுபான்மையினர்,அவர்தம் பண்பாட்டு கூறுகளை ,மெதுவாக ,அவர்கள்  கட்டுப்பாட்டில் உள்ள  அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் வழியாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு   இனத்தின் தலைவர்' உனக்கு காம இச்சை வந்து விட்டால் , நீ உன் அக்காவுடன், தங்கையுடன் வீட்டில் உள்ள எந்த பெண்களிடம் உறவு கொண்டு தீர்த்துக் கொள் 'என்று சொல்லி இருக்கிறார் என ஒரு பொய் பிரச்சாரம் தமிழக ஊடகங்களில் செய்யப்படுகிறது. யாரும் இப்படி நிச்சயமாக சொல்லி இருக்க முடியாது.அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த ஒருவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?ஆனால், பிரச்சனை அதுவல்ல .இப்போது அவர் சொல்லியிருக்கிறாரா இல்லையா என்பது  முக்கியமில்லை. பிரச்சனை என்னவென்றால், அப்படி ஒரு தீய எண்ணத்தை அது தமிழக பண்பாட்டில் விதைத்து விட்டது என்பதுதான் .வீட்டில் இருக்கும் சொந்த மகளை ,அக்காவை, தங்கையை, ஏன் அம்மாவை கூட காமப்  பார்வை பார்க்க சொல்லி,அது தவறில்லை என்று ஒரு தீய எண்ணத்தை அது விதைத்து விட்டது. அந்த தீய எண்ணத்தை பலப்படுத்துவது போல் ,தமிழ்நாட்டில் படங்கள் எடுக்கும் அவர்கள் (இனத்தால் தமிழர் அல்லாதவர்கள்), இந்த எண்ணத்தை திரைப்படங்கள் வழியாக பரப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக ,அக்கா மாதிரி இருக்கும் கௌதமியை பார்த்து , ஒரு குட்டி பையன்' சிக்கு புக்கு ரயிலே ,கலக்குது பார் இவ ஸ்டைலே ' என்று பாடும்படியான  ஒரு காட்சி. அதுபோல பாட்டிமார்கள் எல்லோரும் சேர்ந்து அருவி கரையில் காம கவர்ச்சியோடு ஆடுவது போல ஒரு காட்சி .மாணவர் தன் ஆசிரியையை காமக்கண்ணோடு பார்ப்பது போல ,ஆசிரியர் தன் மாணவியை காமக்கண்ணோடு பார்ப்பது போல, இளம் சிறார்கள் எதிர்பாலரை கா ம கண்ணோடு பார்ப்பது போல, இப்படி எல்லாம் காட்சிகள் அமைக்கிறார்கள். குறிப்பாக ,மலையாள திரைப்பட இயக்குநர்கள்  மற்றும் கதாசிரியர்கள் இப்படி பல திரைப்பட  காட்சிகள் அமைக்கிறார்கள் . தமிழர் அல்லாதவர்கள் இப்படி கேவலமாக படங்கள்  எடுத்து,தமிழ் நாட்டில்  பரவலாக்குகிறார்கள்.
  • இவ்வளவு ஒரு கேவலமான நடத்தை தமிழர்களின் அற பண்பாட்டில் எந்த காலத்திலும்  இருந்தது இல்லை.ஆனால், இப்போது பெற்ற மகளையே கற்பழிக்கும் குற்றம் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயமான காரணம் இதுதான் என்பதை நாம் உணரலாம்.தன் காம வெறியை தீர்த்துக் கொள்ள குடும்பத்திற்குள்ளே ஒரு எளிய வழி கண்முன்னே  இருக்கிறது என்ற கேவலமான ஒரு எண்ணத்தை இது பலமாக விதைத்து விட்டது.                                                                                                                                                    மேற்கண்ட கொடுமைகளிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால்,தமிழர்கள் தங்களுடைய அறவாழ்வுக்கு பழையபடி திரும்ப வேண்டும். தந்தை வழி சமூகத்தை பலப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான ஆட்சியை விரட்டி அடித்து விட்டு, தமிழர் தலைவர்களை ஆட்சிக்  கட்டிலில் அமர்த்த வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ் சமூகம் இந்தக் கொடுமைகளிலிருந்து பிழைக்கும், என்பது தமிழ் ஆர்வலர்கள் கருத்து.
                                

No comments:

Post a Comment