Wednesday, 21 January 2026

பொது வெளியில், பெண்கள் ஆண்களை எப்படி நடத்த வேண்டும்?

                                         கடந்த வாரத்தில், கேரளாவில் நெஞ்சம் பதபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .பேருந்து பயணத்தில்,ஒரு பெண் முன்னால்  நின்று கொண்டிருந்த ஒரு ஆணின் முழங்கை, தன்னுடைய மார்பில் படும்போது படும்படியாக வைத்து விட்டு, பின்னர் அவர் வேண்டுமென்று இடித்து விட்டார் என்று பொய் குற்றச்சாட்டு கூறி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையை பெற்று விட்டார்! மறுநாள்,பட்ட அவமானம், மன உளைச்சல் தாங்காமல், அந்த 41 வயது உடைய ஆண் தற்கொலை செய்து கொண்டார் !இதை பல ஆண்கள் கண்டித்து, ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை இது என்று பதிவிட்டு இருக்கிறார்கள் .இந்த மாதிரி சூழ்நிலையில், பொதுவெளியில் பெண்கள் ஆண்களை எப்படி நட த்த வேண்டும் என்பதை குறித்து ஒரு பெரிய விவாதம் ,சமூக ஊடகங்களில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது .அதை குறித்து இங்கே நாமும் ஆராயலாம் .                     

                                                                                                 (படம் :நன்றி கூகுள் )
                                   பொதுவாக ,  ஆண் பெண் உறவுகளில்,பொதுவெளியில் ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை குறித்த சமூக நெறிகள் நன்றாக வகுக்கப்பட்டு, பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது நமக்கு தெரிந்ததே .ஆனால், பொதுவெளியில், பெண்கள் ,ஆண்களை எப்படி நடத்துவது என்பதைக் குறித்து, அப்படியான விரிவான நெறிமுறைகள் எதுவுமே இதுவரை வகுக்கப்படவில்லை என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுவரை அதற்கு ஒரு தேவை இல்லை என்றே  தோன்றுகிறது.ஆனால்,இப்போது, சில சமூக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டதால்,பெண்கள் பொது வெளியில் அதிகமாக உலாவுகிறார்கள் .ஆண்களுடன் அதிகமாக சமூக வெளிகளில்,அலுவலகங்களில், கடைகளில், வியாபாரங்களில் பேச வேண்டி இருக்கிறது .உடன் நடக்க வேண்டி இருக்கிறது.அதனால்,அந்த தேவையை குறித்து நாம் ஆராய வேண்டிய ஒரு அவசிய சூழ்நிலை இப்போது எழுந்துள்ளது.

                                                   ஒரு காலத்தில் இந்த சமூகம் முற்றிலும் ஒரு ஆணாதிக்க சமூகமாக இருந்தது.சமீப காலமாக ,ஆண்-பெண் சமத்துவம் என்ற கோட்பாட்டின் தாக்கம் அதிகமாகி கொண்டே வந்து, இப்போது ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது, எல்லா வகையிலும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று ஒரு தவறான நம்பிக்கையை ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்தில் திணித்து, பெண்களை தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆண்- பெண் என்பவர்கள்,இயற்கையில்,ஒரு ஜோடியாக , ஈருடல் ஓர்  மனமாய், இசைந்து வாழும்,ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்,இரு பாலியல் பிரிவினர் என்பதை முக்கியப்படுத்தாமல், ஆணுக்கு எதிர் பெண் என்று நிலை நிறுத்தி , ஒரு தவறான முழக்கத்தை கொண்டு வந்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஒரு ஞானமில்லா கூட்டத்தினர். அதன் ஒரு விளைவாக,பெண்கள் பொது வெளியில் ஆண்களை எப்படி என்றாலும் நடத்தலாம், அதற்கு அவர்களுக்கு பொதுமக்கள்ஆதரவு கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் உருவாகி இருக்கிறது.இந்த எண்ணம் பரவலாக இருப்பதால் ,பொது வெளியில் உலவும் பெண்களைக் கண்டால் ,ஆண்களுக்கு இப்போது அவர்களை அறியாமல் ஒரு பயம் பற்றிக்  கொள்கிறது .டெல்லி மாநகரத்தில் ஒரு பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், ஒரு ஆண் முன்னால் இருந்த பெண் மீது .மோத வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அந்தப் பெண் ,சற்றும் சிந்திக்காமல்,இவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ,அவனை  அடித்து அவமானப்படுத்தி விட்டார்.எந்தத் தவறும் செய்யாத அந்த ஆண், அந்த அவமானம் தாங்க முடியாமல், பின்னர் தற்கொலை செய்து கொண்டார். உண்மையில் அவர் வேண்டுமென்று மோதவில்லை என்பது பின்னால் விசாரணையில் தெரியவந்தது .ஆனால் ,அதனால் ஒரு பயனும் இல்லை.அந்தப் பெண்ணின் அவசர செய்கையினால் வீணாக ஒரு ஆண் உயிர் போய்விட்டது.ஆனாலும் ,அந்தப் பெண் நடந்த சம்பவத்திற்காக வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்கவில்லை.அப்படிப்பட்ட ஒரு அழுத்தமும் அவளுக்கு சமூக ஊடகங்களால் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், இப்போது சமூக ஊடகங்கள் பெண்களுக்காக பரிந்து பேசும் ஊடகங்களாக மாறி விட்டது .அரசியல் தலைவர்களும் பெண்களின் வாக்குகளுக்காக அவர்கள் என்ன தவறு செய்தாலும் ,அதை எதிர்த்துப் பேசுவதில்லை என்ற நிலை வந்து விட்டது.

                                            இந்த மாதிரி சம்பவங்களின் உச்சமாக, கடந்த 29/11 /2025 அன்று ,சென்னையில் சட்டக் கல்லூரி மாணவி  ஒருவர் ,கிளாம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி, தாம்பரம்  வரை மட்டும்  பயண சீட்டு எடுத்திருக்கிறார். தாம்பரத்திற்கு அப்புறம் சீட்டு  இல்லாமல் பயணிப்பதை பார்த்த  நடத்துனர்,பயண சீட்டு  வாங்க சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு இந்த சட்டக் கல்லூரி மாணவி, 'என்னை தாம்பரத்தில் இறக்கி விட்டிருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் கடமை தவறி விட்டீர்கள் 'என்றெல்லாம் ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது .இந்நிலையில் வாக்குவாதம் முற்றி ,மாணவி கடைசியில் தன்னுடைய செருப்பை கழற்றி, எல்லோர் முன்னிலையிலும் அந்த நடத்துனரை  கன்னத்தில் பளார் பளார் என்று அடித்திருக்கிறார்.இந்த சம்பவம் முழுவதும் உள்ளிருக்கும் காணொளி கேமராவில் பதிவாகி உள்ளது.

                                      இது மாதிரி ஒரு வன்செயல்,தமிழ் சமூக  பெண்கள் ஒரு போதும் செய்யவே மாட்டார்கள்.தாய் வழி சமூக கேரளா பெண்கள்,சில நேரங்களில்  பெற்ற மகனை கன்னத்தில் அறைவார்கள். ஆந்திராவில் ,அக்கா, தங்கைகள் கூட சகோதரன் கன்னத்தில்  அறைவார்கள்.ஆனால், தமிழ்நாட்டில் அம்மாதிரி பழக்கம் எதுவுமே கிடையாது என்பது தமிழர்களின் தந்தை வழி சமூக பண்பாட்டில் உள்ளது. வீட்டிலேயோ  அல்லது பொது வெளியிலோ பெண்கள், ஆண்களை தாக்குவதாக 1960 களில் கேள்வி பட்டதே இல்லை. ஆனால், இப்போது ஒரு பெரிய காரியமே இல்லாத ஒன்றை பெரிதாக்கி, தாக்கும் அளவுக்கு இந்த  பெண்ணுக்கு இந்த கோபமும் துணிச்சலும் தந்தது யார் ?பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?சமூகத்தின்  என்ன குறைபாடு,அவர்களை இது மாதிரி எல்லாம் செய்யத்  தூண்டுகிறது என்பதை இன்று நாம் ஆழமாக  ஆராயலாம்.

                                                      தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.தமிழ் சொற்கள் எல்லாம் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் இயல்பானது. அந்த வழியில் ஆண் என்றால் ஆள்பவன் என்று பொருள். பெண் என்றால்  பேணுபவள் என்று பொருள் .தமிழ் சமூகத்தில் இவர்களுக்கு அவர்கள் பெயருக்கு ஏற்றாற்  போல் பொறுப்புகளும் கடமைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.பொதுவெளியை நடத்துவதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா உலக நாடுகளிலும் இதே பழக்கம் தான் இருந்தது/இருக்கிறது. ஆதலால், பொதுவெளியில் ,ஆண்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அவர்களுக்கு முதல் வழி விட வேண்டும் ,அவர்களை துன்புறுத்தக் கூடாது,வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் , போன்ற பல விழுமியங்கள், ஆண்களுக்கு சிறு வயது முதலே கற்றுத் தரப்பட்டன. மேலும் ,இந்த மாதிரி விழுமியங்கள் ,எல்லா கதைகள், இலக்கியங்கள் போன்றவற்றிலும் முக்கியப்படுத்தப்பட்டு, சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டு வேரூன்றி விட்டது. ஒரு பெண் தவறிப்போய் ,ஒரு ஆணை அடித்து விட்டால் கூட, பதிலுக்கு அந்தப் பெண்ணை ஆண் அடிக்கக் கூடாது,அது பேடித்தனம்  என்ற எண்ணம் கூட சிறு வயது முதலே ஆண்கள் மனதில் வேரூன்றி  இருக்கிறது .பெண் என்றால் ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு  பாலியல் இனம் .பெண் என்றால் பெற்ற தாயின் ஒரு உருவம்.அதை துன்புறுத்தக் கூடாது. இரண்டாவதாக  மனித இனத்தின் இனப்பெருக்கத்திற்கு பெண்ணின் முக்கிய பங்கையும் மதிக்க வேண்டும்,பெண்கள் தாயைப் போன்று மதிக்க தகுந்தவர்கள், போன்ற எண்ணங்களும் ஆண்களின் மனதில் பல நூறு ஆண்டுகளாக விதைக்கப்பட்டிருக்கிறது.

                                                        இவ்வாறாக பொதுவெளியில், ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ,ஆண்களை அந்த நல்ல வழியில் நடக்க வைக்கிறார்கள் இந்த ஊடகத்தினர் மற்றும் பொதுமக்கள். இது நாகரிகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. சரி, இது இப்படி இருக்க, ஆண்கள் எவ்வளவோ தியாகங்களை செய்து, பெண்களை காப்பாற்றி, ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்து, பெரிய கடமைகளை செய்து, ஒரு தனிப்பெரும் பங்காற்றுகிறார்கள் . ஆனால், அப்படிப்பட்ட  ஆண்களை, பெண்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று இதுவரை பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் ஒருவரும் உணர்வதில்லை .அதற்கு முக்கியமான காரணம், பெண்கள் சமத்துவமாக பொதுவெளியில், முற்காலத்தில்  இருந்தது இல்லை என்பதுதான். ஆனால், இப்போது பெண்கள் சமமாக பொது வெளியில் எல்லாவிதமான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சொல்லப்போனால் ,அரசியலில் அடிதடி செய்யும் இடங்களில் கூட பெண்களின் பங்கு இப்போது உள்ளது.                                                                                              அப்படிப்பட்ட நிலையில், பொதுவெளியில், பெண்கள் ஆண்களை எப்படி நடத்துவது? குடும்ப சூழ்நிலையில், எப்படி ஆண்களிடம் பெண்கள் நடந்து கொள்வது? இவைகள் எல்லாம் பெண்களுக்கு போதிக்கப்பட்டு ,அதை சமூகத்தின் ஒரு முக்கிய கூறாக  மாற்ற வேண்டும். அப்படி இதுவரை செய்யவில்லை என்பதால் தான் இது போல ,பயண சீட்டு கேட்ட ஆண் நடத்துனரை  பொதுவெளியில் செருப்பால் அடித்து ஒரு இளம் பெண் அவமானப்படுத்தி இருக்கிறார். அவருடைய வயதுக்கு கூட, இந்த இளம் பெண், அதுவும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி, மதிப்பு கொடுக்கவில்லை என்பது அவள் செய்த காரியத்தைக் கொண்டு தெளிவாக தெரிகிறது.இந்தக் கட்டுரைக்கு ஒரு விளக்க படமாக, ஒரு இந்திய பெண். ஒரு ஆணை பொது வெளியில், இல்லை ஏன் வீட்டில் கூட, அடிப்பது போன்ற ஒரு காட்சியை கூகுள் தேடலில் ,எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒன்றுகூட கிடைக்கவில்லை! அதிலிருந்து இந்திய சமூகத்தில் எந்த அளவு இந்த செய்கை  மிகவும் மோசமாக கருதப்படுகிறது என்பது தெளிவாக புரிகிறது.

                                                                                         இந்திய சமூகத்தில் ஒரு ஆண், ஒரு பொறுப்புள்ள அப்பாவாக, அன்பான அண்ணன், தம்பியாக மேலும் மாமனாக, மச்சானாக, அத்தானாக பல முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட ஆண்களை பெருமைப்படுத்தாமல், ஏதோ அங்கும் இங்குமாக பொறுப்பற்று நடக்கும்,ஒரு  சில ஆண்களை பொதுமைப்படுத்தி, ஆண்கள் எல்லோரும் காமுகர்கள், குடிகாரர்கள் என்பது போல் ஊடகங்கள் சித்தரிப்பது ஒரு பெரிய சமூக சாபக்  கேடு.அதுவும்,குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் அதிகமாக ஆண்களைக் கேவலப்படுத்துகிறது .ஆண்களை பெருமைப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம்  எடுக்கப்படுவதில்லை .இவ்வாறாக தொடர்ச்சியாக ஆண்களை சிறுமைப்படுத்தி காட்டிக் கொண்டு ,பெண்களை உயர்த்தி காட்டிக் கொண்டே  இருக்கிறார்கள். இதனால் ,பெண்கள் தாங்கள் ஏதோ ஆண்களை விட பெரியவர்கள் என்ற ஒரு எண்ணத்தை விதைத்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஊடகத்தினர்.

                                   ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் , உடனே காவல்துறையை அணுகுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, அந்த ஆணை,பெண் அடிப்பது  சரிதான் என்பது போல் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.அப்படிப்பட்ட ஆண்களை, பாதிக்கப்பட்ட பெண்கள், சமூக ஊடகங்களில் காணொளியாக பதிவிட்டு, அவமானப்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நியாயப்படுத்த படுத்தும் ஒரு சூழ்நிலை வந்துள்ளது .குற்றம் நடந்ததா இல்லையா என்பதை குற்றம் சாட்டியவரே தீர்மானிக்க முடியாது, என்பதை மறந்து, இவ்வாறாக ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களை 'சிங்கப்பெண்கள்' என்று சொல்லி பெருமைப்படுத்துகிறார்கள். ஆண்கள் தான் செயல்களில் ஆற்றல் காட்ட வேண்டும் என்பது அவர்களுடைய இயற்கையில் உள்ளது .அது அவர்களின் விந்தணுக்களில் பிரதிபலிக்கிறது .விடுபட்ட விந்தணுக்கள் தான் பெண்ணின் கருமுட்டையை தேடி விறுவிறுவென்று நீந்தி செல்லும்.அது போல , பெண்களின் குணத்தை பிரதிபலிக்கும் விதமாக பெண்களின் கருமுட்டைகள் ஆண்களின் விந்தணுக்களுக்காக ஒரே இடத்தில் காத்துக் கொண்டிருக்கும். இது தான் இயற்கை .இந்த இயற்கையை  மாற்றும் படியாக எதுவும் செய்ய முடியாது. இதற்கு ஏற்றாற்  போல் தான் சமூக செயல்களும் நடக்க வேண்டும். இல்லை என்றால் ஆணின் குணம் பாதிக்கப்படும் .அதனால் இனப்பெருக்க மண்டலமும் சரியாக வேலை செய்யாது. குழந்தைகள் பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்து ,இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.ஜனத்தொகையில் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் 18 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் தற்போது தமிழ்நாட்டில் 12 குழந்தைகள் என்று இறங்கி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

                             மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, குடும்பமும் சமூகமும், அமைதியாக இயங்க பெண்கள், சில காரியங்களை மனதில்  கொள்ள வேண்டும். பெண்கள் ,ஆண்களை ,குடும்பத்தில் மற்றும் பொது வெளியில், எப்படி நடத்துவது என்பதைக் குறித்து ஒரு தெளிவான வரையறை வகுக்க வேண்டும். இதைக் குறித்து சமூகவியலாளர்கள் கருத்துக்களை கீழே காணலாம் :

  • பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வாழ்வில் ஒரு பெரும் பங்கை நிறைவேற்றுவது தான் அவர்களுடைய தலையாய கடமையாக கொள்ள வேண்டும் .இயற்கைக்கு எதிராக எந்தவித நிலைப்பாடும் எடுக்கக் கூடாது .எடுத்துக்காட்டாக, இயற்கையில் பெண்கள் என்பவர்கள் குழந்தை பெறுவதற்காகவே , ஒரு தனி பால் இனமாக படைக்கப்பட்டவர்கள். ஆதலால், நான் குழந்தை பெறமாட்டேன்,அது எனக்கு பிடிக்காது ,என்றெல்லாம் சொல்லக்கூடாது. மருத்துவ காரணங்களுக்காக அல்லது குழந்தை பெறுவதில் ஒரு இடர் இருந்தால், அப்படியான ஒரு நிலைப்பாடு எடுக்க வாய்ப்பு இருக்கிறது .இல்லை என்றால், இனப்பெருக்கத்திற்கு எதிராக பெண்கள் நடப்பதை  ஒத்துக் கொள்ள முடியாது .அது மனித இனத்திற்கே  எதிரானது என்பதை பெண்கள் மறுக்கக்கூடாது.குழந்தை பெறுவது என்று சொல்லும் போது, பெற்ற குழந்தைக்கு பாலூட்டுவது, பேணிக் காத்து வளர்ப்பது போன்றவைகளும் அடங்கும் .இவைகளை  துறந்துவிட்டு வேறு வேலைகளுக்கோ ,அல்லது சாதனைகளுக்கோ , அந்த நேரத்தில் செல்லக்கூடாது என்பது இயற்கையின் நியதி .அப்படி சென்றால் , மனித இனத்தின் இனப்பெருக்கம் என்பது பெருமளவில் பாதிக்கப்படும்.இதற்காக கணவனுடன் இசைந்து,வாழ்க்கை நடத்த வேண்டும்.ஆணின் பாலியல் தேவையை, அவர் கேட்கும் போதெல்லாம் நிறைவேற்ற வேண்டும் .வேதாகமத்தில் இதைக் குறித்து மிகவும் அழகான விளக்கம் தரப்பட்டிருக்கிறது .மணமுடித்த பின் பெண்ணின் உடல் மேல் கணவருக்கு உரிமை உள்ளது ;அதுபோல ஆணின் உடல் மேல் மனைவிக்கு உரிமை உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.பாலியல் உறவு வேண்டாம் என்றால் இருவரும் சேர்ந்து சில காரணங்களுக்காக முடிவெடுக்கலாம் என்று உள்ளது.
  • பொதுவெளியில் மற்றும் அலுவல் இடங்களில், பெண்கள் ஆண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். பேருந்து போன்ற நெரிசலான இடங்களில் பயணிக்கும் போது ,இயற்கையாகவே ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்ள நேரிடலாம். அது எல்லாவற்றையும் பாலியல் பார்வையில் பெண்கள் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால், பொதுவெளியில் அவர்கள் பயணம் செய்ய முடியாது . மிகவும் பலமான சந்தேகம் அப்படி நேர்ந்தால், அதைக் குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான புகார் அளிக்கலாம் .அது இல்லாமல் சட்டத்தை பெண்கள் தங்கள் கையில் எடுத்து, ஆண்களை அடிப்பது,சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துவது, போன்ற காரியங்களை செய்யக்கூடாது.தன்னிச்சையான நடவடிக்கைகள், சமூக உறவுகளில் பிளவுகளை ஏற்படுத்தி சண்டை சச்சரவை உண்டாக்கலாம்.
  • எந்த காரணம் கொண்டும் பெண்கள் ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டு கொண்டுவரக் கூடாது.ஒரு ஆண், ஒரு பெண் மீது கொண்டுவரும் புகாரை சமூகம் அவ்வளவு எளிதாக நம்பாது. ஆனால், ஒரு பெண் ஆண்மீது பொய்யான ஒரு புகாரை கொண்டு வந்தால் ,இந்த சமூகம், ஆண்கள் உட்பட எல்லோரும் உடனே அந்த பெண்ணுக்கு சாதகமாக வருவார்கள் .ஆதலால், பொய் குற்றம் சாட்டப்பட்ட ஆண், பல இடங்களில் ஒரு உதவியும் இல்லாமல், ஒருவரும் அவரை நம்பாமல், மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார். ஆதலால் ,அப்படிப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டையும் பெண்கள் கொண்டுவரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.டெல்லியில் அவ்வாறு ஒரு பொய் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஆண் மிகவும் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் .அதன் பின்னர் தான் அது பொய் குற்றச்சாட்டு என்று பொது வெளியில்  தெரிந்தது .அதன் பின்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை!சமீபத்தில் கேரளாவில் இது போல ஒரு சம்பவம் நடந்து  பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார் .குற்றவியல் சட்டத்தில் முக்கியமான அடிப்படை புள்ளி என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற நோக்கத்தை(mens rea )  குற்றம் சாட்டுபவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதாவது  வெறுமனே ஒரு சந்தேக அடிப்படையில் ,அவரை குற்றவாளி ஆக்க முடியாது .இரண்டாவதாக, குற்றம் சாட்டுபவர் அவரே நீதிபதியாகி,குற்றம் உண்மைதான் என்று, அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்து,குற்றம் சாட்டப்பட்டவரை அவமானப்படுத்த முடியாது.சட்டத்தில் இது குறித்து தெளிவான பார்வை உள்ளது .ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து போகலாம்; ஆனால் ,ஒரு நிரபராதி த ண்டிக்கப்படக்கூடாது என்பதே அந்தக் கொள்கை. ஆக, இது மாதிரியான காரியங்களில் பெண்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது. அதிகபட்சமாக ,வேண்டுமானால் காவல்துறை புகார் அளிக்கலாம்.பெண்களே  அவர்கள் குற்றசாட்டை  நியாயப்படுத்தி,சுய  நீதிபதியாக முடியாது.
  • ஆண் என்பதை தாண்டி அவர்களுடைய வயதுக்கும் பெண்கள் ஒரு மரியாதை கொடுக்க வேண்டும்.  குறிப்பாக தந்தை வயது உள்ளவர்கள், முதியோர்கள் போன்றவர்களை அவமானப்படுத்தும் படியாக  ஒரு போதும்  நடந்து கொள்ளக் கூடாது.கொங்கு பகுதியில் முதிய ஆண்களை பார்த்தவுடன், அப்பா என்று தான் பெண்கள் அழைப்பார்கள். அதுபோல வயதில் மூத்தவர்களை உடனே அண்ணா என்று சொல்லிவிடுவார்கள். இது ஒரு நல்ல பழக்கமாக தெரிகிறது.தமிழ்நாடு முழுவதும் இந்த முறையை பின்பற்றலாம்.
  • மொத்தத்தில் ஆண்கள் சமுதாயத்தின் ஆளுமைகள். பெண்கள் அவர்களுக்கு அடுத்தாற்  போல் தான் இயற்கையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இயற்கையை மதித்து, இரு பாலர்களும் இசைந்து வாழும் படியாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் ,ஆண்களின் மேல் ஆதிக்கம் செலுத்த ,அதுவும் பொதுவெளிகளில் செலுத்த நினைப்பது சரியில்லை என்பதுதான் பொது கருத்து. மேற்கண்ட எல்லாவற்றையும் சரியாக செய்தால் ,சமூகம் , அமைதியாக ஒரு சண்டை சச்சரவின்றி  நடந்து கொண்டிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அதை நோக்கி நாம் எல்லோரும் பயணிப்போம்.

No comments:

Post a Comment