என்னங்க ,வீட்டை சுத்தி ஒரே குப்பை காடு ?
என்ன பண்றது !அவ்வளவுதான் !
அவனுக எங்க வேலை செய்றாங்க ?
நம்ம என்னங்க பண்ண முடியும் !
===========================================
என்னங்க ,தெருவெல்லாம் ஒரே புகை ?
என்ன பண்றது !அவ்வளவுதான் !
சொன்னா கேட்கவா போறாங்க ?
நம்ம என்ன பண்ண முடியும் !
===========================================
என்னங்க ,கழிப்பறை இல்லாமே பெண்கள் எங்க போகிறது ?
போராட்டம் எல்லாம்
பண்ணிட்டோம் .
என்ன பண்றது !அவ்வளவுதான் !
நம்ம என்ன பண்ண முடியும் !
=========================================================
என்னங்க ,3 வயசு குழந்தையை பலாத்காரம் பண்ணியிருக்கான் ?
ஆமாங்க ,மோசமான
பயலுக !
என்ன பண்றது !பாவம் !அவ்வளவுதான் !
நம்ம என்ன பண்ண முடியும் !
ஆனால் ,எதற்கு உணர்ச்சியுள்ளவராக இருக்கவேண்டுமோ
அதை எல்லாம் விட்டுவிட்டு
நம்மை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலைக்கு ,
ஒருவரை ஒருவர் மனிதனாக மதிக்கும் பண்பிற்கு ,
ஊர்பொதுவான வசதிகளுக்கு
ஒற்றுமையான உழைப்பு !
இதெற்கெல்லாம் உணர்ச்சிப் படுவோம் !
ஒன்றாய்,நன்றாய் உழைப்போம் !
No comments:
Post a Comment