தூங்கா விழிகள் இரண்டு !
நாம் நன்றாக தூங்க வேண்டுமென்று ,தூங்காமல் விழித்திருக்கும் ,இரண்டு பெரும் துறைகள் உள்ளன .அவை ,நமது நாட்டின் பாதுகாப்பு துறையும் ,நம் ஊரின் காவல் துறையும் தான் .இந்த இரண்டிலும் ,உள்ளூர் காவல் துறை தான் நம்முடன் நெருங்கிய உறவை கொண்டது .அப்படி பட்ட காவல் துறையை கேவலப்படுத்தும் காட்சிகள் தமிழ் திரை படங்களில் அதிகமாக இடம்பெறுகிறது நாம் யாவரும் அறிந்ததே .இது முறையா என்பதே இப்போது நம் கேள்வி .
நடப்பதை தானே காட்டுகிறார்கள் !
'காவல் துறையில் உண்மையில் நடப்பதை தான் திரைப் படங்கள் பிரதிபலிக்கின்றன.இதில் என்ன தப்பு ?'என்று சிலர் சொல்லலாம்.எந்த துறையிலும் தப்புக்கள் நடக்கலாம் .காவல் துறை இதற்கு விதிவிலக்கல்ல .சாலைகளில் விபத்துக்கள் நடப்பது உண்மை .ஆனால் அதை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் ,சாலை என்றால் விபத்துதான் என்ற உள்ளுணர்வு எல்லோர் மனதிலும் வேரூன்றிவிடும் .அதன் பின் ,அதை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் ஒழிந்து விடும் .நேர்மறை எண்ணங்களை விதைத்தால் ,நேர்மறை விளைவுகள் எதிர்பார்க்கலாம் .எதிர்மறை எண்ணங்களை விதைத்தால், எதிர்மறை விளைவுகள்என்பது சாதாரணமாகிவிடக்கூடும் .எடுத்துக்காட்டாக ,ரத்தத்தை கண்டால் நமக்கு ஏற்படும் ஒரு பயத்தை ,தொடர்ச்சியாக ரத்தத்தை கொண்ட காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தால் ,போக்கி விடலாம் .இதனால் தான் ,விபத்தில் மாட்டியவர்களை ,நேராக காட்டாமல் நிழலாய் காட்டுகிறார்கள் .மேலும் ,எல்லோரும் அதிகாரத்திற்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற பெரிய விழுமத்தை ,இவ்வாறான மோசமான சித்தரிப்பு குறைத்துவிடும் .
இவ்வாறு காவல் துறையை மிகவும் மோசமாக சித்தரிப்பதால் , காவல் துறை என்றாலே
என்னுடைய அலுவலகத்தில் ,ஒரு முறை ஒரு இளம் பெண் ,சக ஆண் ஊழியர் மேல் ஒரு பொய் குற்றச்சாட்டை பதிவு செய்தார் .அவள் காலையில் அவளுடைய அறையில் தனியே இருந்தபோது ,அந்த ஆண் ஊழியர் ,உள்ளே நுழைந்து ,கதவை தாளிட்டு ,அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார் என்பது தான் அது .முதலில் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் ,தான் செய்யவில்லை என்று மறுத்தார் .ஆனால் யாரும் அதை நம்பவில்லை .மனம் ஒடிந்து போன அந்த ஊழியர் ,ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே வந்து ,அந்த பெண்ணின் அறையில் நுழைந்து ,அவளை கட்டிப்பிடித்து ,ஒரு முத்தம் கொடுத்து விட்டு ,அவளிடம் "கணக்கு முடிந்தது !"இல்லாததை சொன்னாள் அவள் .இருப்பதாக மாற்றிவிட்டான் அவன் !காவல் துறையும் அது போல் மாறிவிட கூடாது என்பதே என் கவலை .
நல்லதையே காட்டுங்கள் !நல்லதே நடக்கும் !
தணிக்கை துறை என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள் .அது இருந்தால் எப்படி இவ்வாறான காட்சிகள் அனுமதிக்க படுகின்றன என்று புரியவில்லை .நாம் ஒரு சுய தணிக்கை அதிகாரியாக மாறி ,இந்த மாதிரி காட்சிகளுக்கு ,சிறிது விட்டு போகாமல் ,நமது எதிர்ப்பை சமூக ஊடகங்களில் பதிவு செய்வோம் .அப்படியாவது திரைத்துறை திருந்துகிறதா என்று பார்ப்போம் !வரும் தலைமுறைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்கள் என்பதை மறக்க வேண்டாம் .
நாம் நன்றாக தூங்க வேண்டுமென்று ,தூங்காமல் விழித்திருக்கும் ,இரண்டு பெரும் துறைகள் உள்ளன .அவை ,நமது நாட்டின் பாதுகாப்பு துறையும் ,நம் ஊரின் காவல் துறையும் தான் .இந்த இரண்டிலும் ,உள்ளூர் காவல் துறை தான் நம்முடன் நெருங்கிய உறவை கொண்டது .அப்படி பட்ட காவல் துறையை கேவலப்படுத்தும் காட்சிகள் தமிழ் திரை படங்களில் அதிகமாக இடம்பெறுகிறது நாம் யாவரும் அறிந்ததே .இது முறையா என்பதே இப்போது நம் கேள்வி .
நடப்பதை தானே காட்டுகிறார்கள் !
'காவல் துறையில் உண்மையில் நடப்பதை தான் திரைப் படங்கள் பிரதிபலிக்கின்றன.இதில் என்ன தப்பு ?'என்று சிலர் சொல்லலாம்.எந்த துறையிலும் தப்புக்கள் நடக்கலாம் .காவல் துறை இதற்கு விதிவிலக்கல்ல .சாலைகளில் விபத்துக்கள் நடப்பது உண்மை .ஆனால் அதை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் ,சாலை என்றால் விபத்துதான் என்ற உள்ளுணர்வு எல்லோர் மனதிலும் வேரூன்றிவிடும் .அதன் பின் ,அதை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் ஒழிந்து விடும் .நேர்மறை எண்ணங்களை விதைத்தால் ,நேர்மறை விளைவுகள் எதிர்பார்க்கலாம் .எதிர்மறை எண்ணங்களை விதைத்தால், எதிர்மறை விளைவுகள்என்பது சாதாரணமாகிவிடக்கூடும் .எடுத்துக்காட்டாக ,ரத்தத்தை கண்டால் நமக்கு ஏற்படும் ஒரு பயத்தை ,தொடர்ச்சியாக ரத்தத்தை கொண்ட காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தால் ,போக்கி விடலாம் .இதனால் தான் ,விபத்தில் மாட்டியவர்களை ,நேராக காட்டாமல் நிழலாய் காட்டுகிறார்கள் .மேலும் ,எல்லோரும் அதிகாரத்திற்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற பெரிய விழுமத்தை ,இவ்வாறான மோசமான சித்தரிப்பு குறைத்துவிடும் .
இவ்வாறு காவல் துறையை மிகவும் மோசமாக சித்தரிப்பதால் , காவல் துறை என்றாலே
- சட்டத்தை மதிக்கமாட்டார்கள்
- சமூக விரோதிகளோடு கூட்டு வைத்திருப்பார்கள்
- காவல் நிலையத்திலே கற்பழிப்பார்கள்
- விலைமாதோரோடு கூட்டு வைத்திருப்பார்கள்
- கையூட்டு பெற்றுக்கொண்டு அபராதிகளை விட்டுவிடுவார்கள்
- பணம் கொடுக்காமல் உணவகங்களில் சாப்பிடுவார்கள்
என்னுடைய அலுவலகத்தில் ,ஒரு முறை ஒரு இளம் பெண் ,சக ஆண் ஊழியர் மேல் ஒரு பொய் குற்றச்சாட்டை பதிவு செய்தார் .அவள் காலையில் அவளுடைய அறையில் தனியே இருந்தபோது ,அந்த ஆண் ஊழியர் ,உள்ளே நுழைந்து ,கதவை தாளிட்டு ,அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார் என்பது தான் அது .முதலில் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் ,தான் செய்யவில்லை என்று மறுத்தார் .ஆனால் யாரும் அதை நம்பவில்லை .மனம் ஒடிந்து போன அந்த ஊழியர் ,ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே வந்து ,அந்த பெண்ணின் அறையில் நுழைந்து ,அவளை கட்டிப்பிடித்து ,ஒரு முத்தம் கொடுத்து விட்டு ,அவளிடம் "கணக்கு முடிந்தது !"இல்லாததை சொன்னாள் அவள் .இருப்பதாக மாற்றிவிட்டான் அவன் !காவல் துறையும் அது போல் மாறிவிட கூடாது என்பதே என் கவலை .
நல்லதையே காட்டுங்கள் !நல்லதே நடக்கும் !
தணிக்கை துறை என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள் .அது இருந்தால் எப்படி இவ்வாறான காட்சிகள் அனுமதிக்க படுகின்றன என்று புரியவில்லை .நாம் ஒரு சுய தணிக்கை அதிகாரியாக மாறி ,இந்த மாதிரி காட்சிகளுக்கு ,சிறிது விட்டு போகாமல் ,நமது எதிர்ப்பை சமூக ஊடகங்களில் பதிவு செய்வோம் .அப்படியாவது திரைத்துறை திருந்துகிறதா என்று பார்ப்போம் !வரும் தலைமுறைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்கள் என்பதை மறக்க வேண்டாம் .