Thursday, 26 October 2017

தமிழிசை தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா ?

சமூக ஊடகங்களில் தமிழிசை அவர்களின்  தோற்றத்தை கிண்டல் செய்து பல பதிவுகள் பார்த்து வேதனை அடைந்தேன் . தோற்றத்தை கிண்டல் செய்வது அயல் நாடுகளின் கலாச்சாரத்தில் இல்லை .ஏன் ,நம் இந்திய கலாச்சாரத்தில் ,குறிப்பாக தமிழக கலாச்சாரத்தில் அதிகம் உள்ளது ?
ஒருவரின் தோல் நிறத்தைக் கொண்டு ,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் என்று பிரிப்பது சாதிய கலாச்சாரத்தில் உள்ள ஒரு குணம் . தோற்றத்தையும் ,உடல் ஊனத்தையும்  கிண்டல் செய்வது அந்த குணத்தின்   இன்னொரு  வெளிப்பாடே .ஆதலால் தமிழ் கலாச்சாரத்தில் கருப்பாய் இருந்தால் யாரும் கிண்டல் செய்யலாம் என்று ஒரு அனுமதி உள்ளது .கிண்டலுக்கு ஆளாகி வெற்றி அடைந்த நடிகர்கள் வடிவேலு ,செந்தில் ,தவக்களை போன்றவர்கள் .கருப்பட்டி தலையா ,நாய் ,பேய் ...என்ன வேண்டுமென்றாலும் கருப்பாய் இருப்பவரை திட்டிக்கொள்ளலாம் .வெள்ளையாய் இருக்கும் ஹைச் .ராஜாவையோ ,விவேக்கையோ ,சரளாவையோ  அப்படி    திட்ட முடியாது !
ஆக , தோற்றத்தை கிண்டல் செய்வது சாதிய மரத்தின் ஒரு விஷக் கனி . விஷ  மரத்தை வெட்டாமல் , அந்த  கனியை அழிக்கமுடியாது .
(டுவிட்டரில் பதிவான என் கருத்து )

Tuesday, 17 October 2017

காஜல் அகர்வாலும் வீரமா முனிவரும் !

1710 ஆவது ஆண்டில் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு அருட்பணி ஆற்ற  வந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி  ,தமிழரோடு தமிழராக கலந்து  ,தன் பெயரையயே 'வீரமாமுனிவர் 'என்று தமிழாக்கியவர் .தமிழில் கற்று தேர்ந்து ,பல நூல்களை இயற்றியவர் .மொத்தம் இவர் எழுதிய தமிழ்  நூட்கள் 23 ஆகும் .

அருட்பணிக்காக தூர தேசத்திலிருந்து  வந்த இவரே நம் தமிழ் மொழியை கற்று தேர்ந்து ,நூட்கள் எழுதியிருப்பது அவரின்  மதிப்பீடுகளை காட்டுகிறது .ஆனால் ,இன்று பிழைப்பு தேடி இங்கு வந்திருக்கும் நம் நாட்டு வட இந்தியர்கள்  ,தமிழைக் கற்காமல் ,தமிழர் பணத்தை மட்டும் குறி வைப்பது வேதனை அளிக்கிறது .
காஜல் அகர்வால் என்ற  ஒரு தமிழ் பட நடிகைக்கு தமிழில் அடிப்படை பேச்சு கூட வராது .ஆனால் கோடிக்கணக்காக தமிழர் பணத்தை சம்பாதிக்கிறார் .இந்த நிலைக்கு முக்கிய காரணம் ,தமிழர்களின் கண்டு கொள்ளாத குணம் தான் .இந்தி படங்களில் நடிக்க செல்லும் நம் நடிகைகள் எல்லோரும் இந்தி மொழியை கற்றுக் கொண்டு தான் நடிக்க முடியும் .நம் ஊடகங்களும் அவர்களுக்கு வளைந்து கொடுத்து ஆங்கிலத்தில் உரையாடுவது கொடுமை .தமிழ் பட தயாரிப்பாளர்கள் ,நடிக ,நடிகர்கள் கட்டாயம் தமிழ் அறிந்திருக்க வேண்டும் என்று  நிபந்தனையிட வேண்டும் .தமிழ் நாட்டிற்குள் நுழையும் எல்லோரும் தமிழ் கற்க வேண்டும் என்று தமிழர்கள்  எதிர்பார்க்க வேண்டும் .இதுவே தமிழை அழிவினின்று காக்கும் உபாயமாகும் .

Monday, 9 October 2017

'அசுத்தம் 'என்பது சாதிய கலாச்சாரத்தின் ஒரு கூறு !

'கோரா 'என்பது ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு சர்வதேச கேள்வி பதில் வலைத்தளம் .எந்த கேள்வியும் கேட்கலாம் .பதில் தெரிந்தவர்கள் பதில் கூறலாம் .அதில் ஒரு அமெரிக்கர் கேள்வி கேட்டிருந்தார் .அமெரிக்கர்கள் விடுமுறையை உல்லாசமாக கழிக்க காடுகளில் கூடாரமிட்டு தங்குவார்கள் .அவ்வாறு தங்கும் போது சிறுநீர் கழிக்க எங்கு செல்வது என்பது தான் அவருடைய பெரிய விடை தெரியாத கேள்வி !கேள்வியை பார்த்து நிலை குலைந்து போனேன் நான் !
                      உலகத்திலே 2 வது அழகான மெரினா கடற்கரையிலே கக்கா போகும் இந்தியர்கள் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள் ?யாருமில்லாத காட்டில் கூட சிறுநீர் கழிக்க அஞ்சும் அவர்கள் எங்கே ,அழகான மெரினா கடற்கரையிலே கூட கக்கா போகும் இந்தியர்கள் எங்கே ?
உலகிலே சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழர் கூட எப்படி இவ்வளவு அசுத்தமாக பொது வெளியை வைக்கும் நிலை வந்தது?
இந்த அசுத்தத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அடிப்படை காரணம் தான்என்ன ?
(சுற்றுலா தலமான பாண்டியில் ஒரு காட்சி !)

                          சங்க காலத்திலோ அல்லது அதன் முன்னாலோ தமிழர்கள் சுத்தமாகவே இருந்திருக்க வேண்டும் .நன்றாக குளித்து ,மணப்பொருட்கள் இட்டு ,மலர் சூடி உலாவிய பெண்களை பற்றிய பதிவுகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன .அசுத்தம் என்பது அப்போது இருந்ததாக எந்த வித பதிவுகளும் இல்லை .அப்படி இருந்த தமிழர்கள் ஏன் இப்படி ஒரு அசுத்தமான மக்கள் ஆனார்கள் ?அதன் பின் புலம் தான் என்ன ?
                         இப்போதும் தமிழர்கள் ,சுய சுத்தத்திலோ ,அல்லது இல்லத்தில் சுத்தத்திலோ  எந்த விதத்திலும்  குறை சொல்ல முடியாது .பொது வெளி என்று வரும் போது தான் தமிழர்கள்அசுத்தம் செய்கிறார்கள் .ஏன் அப்படி செய்கிறார்கள் ?
                                  என்னுடைய நண்பர் ஒருவர் கனடா நாட்டிலிருந்து வந்திருந்தார்.அவர் கூறிய ஒரு   தகவல்  சுவையாக இருந்தது .கனடா நாட்டில் பனிப்பொழிவு அதிகம் .சில நேரம் ஒரு அடிக்கு மேல் உயரமான பனிக்கட்டிகள் வீட்டின் முன்புறமுள்ள வீதியை நிரப்புமாம் .கனடா நாட்டு விதிகளின் படி அதை  அந்த   வீட்டு உடமையாளர் தான் அப்புறப்படுத்த வேண்டுமாம் !இவ்வாறாக ஓவ்வொருவரும் அவரவர் வீட்டு முன்னாலிருக்கும் பனிப்பொழிவை அகற்றவேண்டுமாம் !அதாவது ,பொது வெளிகளின் சுத்தத்திற்கு எல்லோரும் பொறுப்பாக்கப்படுகிறார்கள் என்பது தான் இதன் சாரம் .
 இந்திய கலாச்சாரத்தில்  இது எப்படி உள்ளது ?

  • பொது வெளிகளை சுத்தமாக வைப்பது எல்லோருடைய பொறுப்பு  என்று இல்லை .
  • யார் வேண்டுமானாலும் அசுத்தம் பண்ணலாம் .பி .எம் .டபுள் யு  விலிருந்து இறங்கியும் சாலையோரத்தில்சிறு நீர் கழிப்பார்கள்  !
  • அதை சுத்தப்படுத்தும் வேலை /கடமை என்பது  சில தாழ்ந்த   ஜாதிகளுக்கு மட்டுமே உண்டு .
  • ஆக பொது வெளி சுத்தம்  ஒரு  சாதிய வேலை /ஒதுக்கீடு  .
  • கு ப் பை யை போடுவது எல்லோரின்  உரிமை ;அதை அப்புறப்படுத்துவது  மட்டும்  தாழ் சாதியினரின் கடமை என்பது சாதிய வழிமுறையாக உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது .

                                எடுத்துகாட்டாக ,இரண்டு நிகழ்வுகளை கூறுகிறேன் .முதல் நிகழ்ச்சி ,ஒரு இந்திய பள்ளியில் நடந்த பொருட்காட்சி .எல்லா மாணவர்களும் உற்சாகமாய் பங்கெடுத்து ,கடை அமைத்து ,உண்டு ,விளையாடி களித்தார்கள் .இதில் எந்த விதமான சாதிய வேறுபாடுகளும் இல்லை .கடைசியில் விழாவின் வழக்கமான குப்பைகள் ,தாள்கள் ,பழத்தோல்கள் மைதானம் முழுவதும் நிறைத்தன .இது வரை ஆட்டம் போட்ட மாணவர்கள் யாரும் இவைகளை அப்புறப்படுத்த வரவில்லை .வர மாட்டார்கள் !ஏன் ?         குப்பை எடுப்பது ,அது மட்டும்   என் வேலையில்லை ,அது  துப்புரவு தொழிலாளரின்  வேலை !
குப்பையாக்கியது யார் ?நாமில்லையா ?பின்னர் ஏன் இந்த மனநிலை ?
                                         இரண்டாவது நிகழ்ச்சி ,சிங்கப்பூரில்ஒரு சர்வதேச  குடும்ப  முகாம் .முகாமில் காலை ,எல்லோரும் ஒன்றாய் ஓட்டம் ,பின்னர் ஒன்றாய் உணவு !சாப்பிட்ட தட்டுகள் எல்லாம் ஒரே இடத்தில் .அனைவரும் இணைந்து சுத்தப்படுத்த வேண்டும் .நான் ஒரு 10 தட்டாவது கழுவியிருப்பேன் .யாரும் மற்றவர் சாப்பிட்ட தட்டை கழுவமாட்டேன் என்று சொல்லவில்லை !அவ்வளவு ஒரு ஐக்கிய உணர்வு .இவ்வளவிற்கும் அதில் கறுப்பர்கள் ,அமெரிக்கர் ,ஆசிய மக்கள் எல்லோரும் இருந்தனர் .
                                   ஏன் இந்தியர்களால் இப்படி ஐக்கியமாக முடியவில்லை ?ஏனென்றால்சாதியம்  என்பது  ஐக்கியத்திற்கு முதல் எதிரி .அசுத்தம் சாதியத்தின் ஒரு பெரும் கூறு .
இந்த கலாச்சாரக் கூற்றை மாற்றாமல் 'சுத்தமான இந்தியா திட்டம் 'ஒரு நாளும் வெற்றியடைய முடியாது என்பதை நாம் உணரவேண்டும் .இது அமிதாப் சொல்லியோ ,பிரதமர் கையில் விளக்குமாறு கொண்டு நின்று படமெடுத்து   சாதிக்க முடியாது .அல்லது   'நம்மவர் ' கமல்  ஒரு பாட்டு பாடி சாதிக்க முடியாது .
                                                புதியதாக ஒரு கட்டிடம்  நம் நாட்டில்வருகிறதென்றால் ,யாரும் சொல்லாமல் ,எந்த வித சட்டமும் இல்லாமல் ,ஒரு சிறிய கோயில் எப்படியோ முளைத்து விடுகிறது !இதற்கு 'ப்ப்ரதான்  மந்திர் அபியான் 'என்று ஒரு திட்டமும் இல்லை !ஆனால்  திட்டமிருந்தாலும்   சுகாதார  தேவையான   கழிப்பறை மட்டும் கட்டப்பட மாட்டாது !ஏன் ?
சமீபத்தில் ஒரு 200 படுக்கை வசதியுள்ள பெரிய மருத்துவமனை சென்றிருந்தேன் .2 உணவகங்கள் ,ஒரு கோயில்,50 இருக்கைகள்  ,....எல்லாம் உண்டு .ஆனால் ,இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு ஒரே ஒரு கழிப்பிடம் !ஆணுக்கு ஒன்று !பெண்ணுக்கு ஒன்று !அவசரமென்றால் சுவரில் அடி !
        இதெல்லாம்  மாற வேண்டுமானால்  ஒரு கலாச்சார புரட்சி வேண்டும் .அது மனப்புரட்சி ஆகவேண்டும். அதில் சுத்தம் செய்வது பற்றி பேசக்கூடாது .மாறாக அசுத்தம் செய்யாமல் இருப்பதை பற்றி பேசவேண்டும் .
                             வெளி நாடுகளில் முதலில் அசுத்தம் செய்து விட்டு பின்னர் சுத்தம் செய்வதில்லை .அசுத்தமே செய்யாமல் இருப்பார்கள் .ஊரெல்லாம் துப்பிவிட்டு பின்னர் துடைப்பதல்ல 'தூய்மை இந்தியா இயக்கம் '.துப்பாமல் இருப்பதே நம் நோக்கமாய் இருக்கவேண்டும் .அசுத்தம் செய்யாமல் இருப்பதே 'தூய்மை இந்தியா இயக்கம் '!
                          கங்கையை தினமும்  சுத்தப்படுத்துவதல்ல முக்கியம் ,         எப்போதும்  அசுத்தப்படுத்தாமல் இருப்பதே அதை விட முக்கியம் !தினமும்  5 டன் குப்பையை அகற்றி ,10 டன் குப்பையை போடுவதில் என்ன பயன் ?                                      
               ஆக ,'தூய்மை இந்தியா இயக்கம் 'வெற்றியடைய அமிதாப் தேவையில்லை .விளம்பரம் தேவையில்லை .இந்தியில் ஒரு பெயர் தேவையில்லை .இந்த சாதிய மன நிலை ஒழியவேண்டும் !மனப்புரட்சி வேண்டும் !அது ஓவ்வொரு வீட்டிலுமிருந்து தொடங்க வேண்டும்.ஓவ்வொரு பெற்றோரும் சுற்றுப் புற தூய்மை பற்றி குழந்தைகளுக்கு செயலில் காட்டவேண்டும் .எப்படி யாரும் சொல்லாமல்   சில  செயல்களை கலாச்சாரமாக செய்கிறோமோ ,அது போல் தூய்மையை  நம் கலாச்சாரமாக்க வேண்டும் .அது  ஒன்றே இதற்கு நிரந்தர  தீர்வாக அமையும்  !

Friday, 22 September 2017

'திராவிடம் 'என்ற பெரும் சூழ்ச்சி !

திராவிடம் 'என்றால் வடமொழியில் 'தமிழ் 'என்று பொருள் .உலக சரித்திரத்தில் தமிழின் ,தமிழர்களின் பங்கை மறைக்க பலவிதமான கற்பனை பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .அதில் முக்கியமானது 'திராவிடம்' என்ற ஒரு சொல் .மற்ற சொற்கள் -கிரந்தம் ,தேவநாகரி ,பாலி ,பிராமி என்பவையாகும் . 'திராவிடம்' என்ற ஒரு சொல்லைக்கொண்டு 'தமிழ் 'என்ற சொல் எங்கும் வராமல் பார்த்துக்கொண்டார்கள் .உலக மொழிகளை பட்டியலிடும்போது ,சிறிய மொழிகளின் பெயர்களெல்லாம் மொழிக் குடும்பங்களின் பெயராக வரும் (.உ -ம் )துப்பியன் ,டை -கடை என்றெல்லாம் மொழிக் குடும்பங்கள் உள்ளன .ஆனால் 'தமிழ் மொழி குடும்பம் 'என்று இல்லை .அது இல்லாமல் இருப்பதற்காக கண்டுபிடிக்க பட்ட கற்பனை சொல் தான் 'திராவிடம் 'என்ற சொல்.
மிகச்சிறிய மொழிகளெல்லாம் பெரிது படுத்தப்பட்டு ,`மிக பெரிய மொழியான தமிழை சிறுமைப்படுத்த பயன் படும் மகா சொல் 'திராவிடம்' .எடுத்துக்காட்டாக,விக்கிப்பீடியாவில் தமிழை பற்றிய பகுதி இப்படி சொல்கிறது .'Tamil (English: /ˈtæmɪl/தமிழ் Tamiḻ [t̪ɐmɨɻ]About this sound pronunciation ) is a Dravidian language .....' இது போல் கன்னட மொழியை பற்றி வாசியுங்கள் .தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் .ஆனால் 'தமிழ்' என்று ஒரு சொல் கூட வராமல் ஒரு முழு பக்கம் கன்னடத்தை பற்றி வாசிக்கலாம் .கன்னடம் ஒரு திராவிட மொழி என்று ஆரம்பிக்கிறது அந்த கட்டுரை !
அது போல் ,முருகன் 100% சுத்த தமிழ் கடவுள் .முருகனை திராவிட கடவுள் என்கிறது சித்தா .காம் என்ற மலையாள வலைத்தளம்! சித்த மருத்துவத்தை 'திராவிட கலை 'என்கிறது அது !.ஆக தமிழின் பங்கை மறைக்க கண்டுபிடிக்கப்பட்ட பெருங் கருவி இந்த சொல் .'திராவிடம்' என்று வருமிடமெல்லாம் 'தமிழ் 'என்று போட்டு பாருங்கள் ,நான் சொல்வது நன்கு புரியும் . ஓவ்வொரு முறை 'திராவிடம் 'என்ற சொல் பயன் படும் போது 'தமிழ் 'என்ற சொல் அமுக்கப்படுகிறது !
இந்த 'திராவிடம் 'என்ற சொல் எப்படி தோன்றியது என்பது எல்லாம்முக்கியமல்ல .எதற்காக உருவாக்கப்பட்டது என்பது தான் முக்கியம் . தமிழையே ஒரு திராவிட மொழியென்று அலட்சியமாக சொல்ல அந்த சொல் பயனாகிறது.அதாவது நேற்று தோன்றிய ஒரு மொழியும் ,கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடியின் மொழியும், ஒரே அடைப்புக்குள் 'திராவிட மொழி 'என்று சொல்லும் வசதியை இந்த ஒரு சொல் தருகிறது .
தமிழர்கள் யாவரும் இந்த சூழ்ச்சியை உணர்ந்து ,'திராவிடம் 'என்ற சொல்லை தவிர்த்து ,பதிலாக 'தமிழ்'என்ற சொல்லை பயன் படுத்துவது நல்லது .தமிழ் மொழிக் குடும்பம் ,தமிழர் நாகரிகம்,தமிழ் ....என்றே சொல்லவேண்டும் என்று சபதமேற்போம்
.'அச்சம் என்பது மடமையடா !அஞ்சாமை தமிழனின் உடமையடா !'என்று பாடுவோம் !இவ்வாறு நாம் கூறுவதால் நாம் எந்த வகையிலும் கன்னடர்களுக்கோ ,தெலுங்கர்களுக்கோ ,மலையாளிகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்துவதில்லை .அவர்கள் யாரும் தம்மை திராவிடர் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை .கர்நாடகாவிலோ ,கேரளாவிலோ ,ஆந்திராவிலோ திராவிட கழகங்கள் இல்லை .அவர்கள் அவர்கள் தாம் ;நாம் நாம் தான் !
' திராவிடர்' என்ற சொல் ஒழிந்தால் அவர்களுக்கும் நல்லது தான் .ஏனென்றால் ,அவர்களுடைய தனி மொழி அடையாளங்கள் வலுப்பெறும் .அவர்களுடைய கலாச்சாரம் வலுப்பெறும் .சமுதாயத்தில்அவரவர் பங்கு அங்கீகரிக்க படும் .தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் இது நல்லதாகும் .'இந்தி எதிர்ப்பு ' போன்ற பொது பிரச்சனைகளில் அனைவரும் ஒன்று பட்டு போராடலாம் .தடையில்லை .

Monday, 18 September 2017

தமிழ் தேசியம் என்றால் என்ன ?

========================================================================
========================================================================
========================================================================
=======================================================================
=====================================================================
====================================================================
========================================================================
========================================================================
======================================================================
======================================================================
======================================================================
=======================================================================
=======================================================================
========================================================================
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++