'மொழி' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம். மொழி என்றால் ஒருவருக்கொருவர் பேசுவதற்காக பயன்படும் ஒரு கருவி என்பது ஒரு எளிய பொருள். ஆனால் அதைத் தாண்டி, மொழி என்பது பல பரிமாணங்களை கொண்டதாகும்.
மொழி என்பது தனி ஒருவருடைய அடையாளம். மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். மொழி என்பது ஒரு தேசியத்தின் அடையாளம். மொழி என்பது ஒரு இனத்தின் கொள்கைகளின் அடையாளம். மொழி என்பது ஒரு இனத்தின் கோட்பாடுகளின் அடையாளம் .மொழி என்பது ஒரு இனத்தின், எல்லா கலாச்சார, பண்பாட்டுக் கூறுகள், விழுமங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகும்.நான் இப்போது சொன்னது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
இதைத்தாண்டி, தமிழ்மொழி என்று வரும்போது,மற்ற மொழி அறியாத பல தனி சிறப்புகள் இருக்கின்றன .தமிழ் மொழி உலகின் எல்லா மொழிகளிலும் மூத்த மொழியாகும்.பல மொழிகளுக்கு தாயாகும் .மேலும் ,தமிழ் மொழி எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு மொழியாகும்.
மற்ற மொழிகளுக்கு இல்லாத இன்னொரு பெரும் சிறப்பு தமிழுக்கு உண்டு .இந்த சிறப்பு பற்றி பல மொழி அறிஞர்கள் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது என்ன அப்படி ஒரு தனி சிறப்பு ?
அது ,என்னவென்றால் தமிழ் மொழியை பேசும் வரை, அந்த பேசும் இனம் அழியாமல் பாதுகாக்கப்படும் ஒரு உள் அமைப்பு அந்த மொழியில் மறைந்து இருக்கிறது .அதாவது தமிழினத்தை அழியாமல் பாதுகாக்கும் மறைந்திருக்கும் தற்காப்பு கருவிகள் தமிழின் உள்ளே உள்ளன . அது எப்படி என்று பார்ப்போம் !
மற்ற மொழிகளைப் போல தமிழ் மொழியில் குழப்பமான சொல்லமைப்பு/வாக்கிய அமைப்பு இல்லை .தமிழ்மொழியின் சொல்லமைப்பு மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒரு சொல்லின் பொருள் தெளிவாக, அருமையாக, ஒரே அறுதியான பொருளாக இருக்கும். இதனால் எந்த மொழியிலிருந்து மொழி பெயர்க்கும் போதும் தமிழில் ஒரு தெளிவான பொருளே விளங்கும். எடுத்துக்காட்டாக எதிரி ஒருவன் வந்து அவனுடைய மொழியில் ஒன்றை சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம் .அது ,இந்தி என வைத்துக் கொள்வோம் .இந்தி மொழியில்'நேற்று' என்பதற்கு 'கல் 'என்று சொல்வார்கள். 'நாளை' என்பதற்கும் 'கல் 'தான்.ஆக , இந்தி மொழியில்' நாளை வந்தேன் 'என்று கூட சொல்லலாம்! ஆங்கிலத்தில் 'ஹாட்ஸ்பாட் 'என்றால் ' இணையத்தில் ஒரு தயாராக இருக்கும் இணைப்பு புள்ளி 'என்று பொருள் . ஆனால் தமிழில் 'ஹாட்ஸ்பாட் ' என்றால் 'சூடான இடம் 'என்று பொருள் . தமிழின் , இந்த தெளிவான சொல் அமைப்பு , தமிழர்களை ஒருநாளும் தவறான வழியில்/அழிவுப் பாதையில் போகாமல் காப்பாற்றும் ஒரு பெருங் கருவியாகும் .தமிழில் அன்றாட வாழ்வில் ,அறிவுக்கெதிரான ,மூடத்தனமான ,எதிரியை வீழ்த்தும் கபடங்கள் எதுவும் சாத்தியமில்லை .தமிழனின் சிந்தனை அறிவுப் பூர்வமாய் இருப்பதை அம் மொழி உறுதி செய்கிறது .
இதை நன்கு உணர்ந்த ஆரியர்கள்,தமிழ் இனத்தை அழிக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழி, தமிழை அழிக்க வேண்டும் .தமிழை அழிக்கவேண்டுமானால் ,ஒரு குழப்பமான இன்னொரு மொழியை உருவாக்கி, அந்த மொழியை ,தமிழை விட உயர்ந்ததாக காட்டி , தமிழர்களை ஒத்துக்கொள்ள வைப்பது ஒன்று தான் வழி என்பதை உணர்ந்தார்கள் .அப்படித்தான் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
இந்த சமஸ்கிருதத்தை என்று தமிழர்கள் ஒத்துக்கொண்டு அவர்கள் வாழ்வில் அனுமதித்தார்களோ ,அன்றிலிருந்து தமிழனின் அழிவுப்பயணம் ஆரம்பித்தது.பல நூறு ஆண்டுகள் சமஸ்கிருதத்தை, இவ்வாறாக தமிழர்கள் வாழ்வில் திணித்து ,இன்று தமிழர்களின் அறிவான சிந்தனை திறனை/போக்கை அழித்து ,அவர்கள் வாழ்வில் மெதுவாக மூடத்தனத்தை புகுத்தி ,அதைக்கொண்டு தமிழர்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டினர் ஆரியர்கள் .அந்த சதி திட்டத்தின் ஒரு பாகமாக சாதியை தமிழரிடையே புகுத்தினர்.அவர் தம் திட்டத்தினில் அவர்கள் வெற்றி ஒன்றும் அடையவில்லை என்று சொல்ல முடியாது.
தமிழனின் பல வெற்றி பெறும் திறன்களை சமஸ்கிருதத்தால் அழித்தனர் அவர்கள் . எடுத்துக்காட்டாக தமிழன் எப்பொழுதுமே அறிவுக்கு ஒவ்வாத பெயர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதே இல்லை. 'மான்விழி 'என்றால் 'மான்போல் விழிகளை கொண்டவள் ' என்று பொருள் .' தமிழரசன்'என்றால் ' தமிழுக்கு அரசன் 'என்று பொருள் .இவ்வாறான நேரடி அறிவான சிந்தனையை பறிக்க, சமஸ்கிருத பெயர்களை, தமிழர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு ,விரும்பி சூட வைத்தனர் ஆரியர் . தற்போது தமிழர்கள் பலர் , பொருள் புரியாமல் தங்கள் குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கின்றனர் .பொருள் புரிந்தால் ,யாராவது தன் மகனுக்கு 'பெரிய ஆண்குறி' ( மஹாலிங்கம்) என்றும் ,மகளுக்கு ,'கருப்பி '(ஷ்யாமளா ) என்று வைப்பார்களா !சமஸ்கிருதத்தில் எந்த எந்த மாதிரி அசிங்கமாக தமிழர்களுக்கு பெயர் வைக்கிறார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட கட்டுரையை வாசிக்கவும்.
சமஸ்கிருத பெயர்களின் பொருள்
தமிழர்களில் ஒரு சாரார், இந்த சமஸ்கிருத சதித்திட்டத்தை அடையாளம் கண்டு , அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள் .அதனால் சமஸ்கிருத திணிப்பு மெதுவாக தமிழ்நாட்டில் குறைந்து ,கிட்டத்தட்ட இப்போது இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது .ஏற்கனவே ,தமிழ் நாட்டில் சமஸ்கிருதமாக மாற்றப்பட்ட ஊர் பெயர்களும் பழையபடி தமிழ் ஆக்கப்பட்டுவிட்டது .
ஆக ,சமஸ்கிருதத்தை வைத்து தமிழர்களை அழிக்கும் திட்டம் நிறைவேறாததால் ,இப்போது அதற்கு பதிலாக இந்தியைக் கொண்டு தமிழர்களை அழிக்க மாற்று திட்டம் வகுத்திருக்கிறார்கள் ஆரியர்கள்!
இனி ,இந்தி மொழிக் கொள்கை என்பது வெளிப்படையாக ஒரு கபடமில்லாத மொழிக் கொள்கையாக தெரிந்தாலும், உண்மையிலேயே அதனுள் மறைந்து இருக்கும் பலவித கொள்கைகள் வெளியில் தெரிவதில்லை .அவைகளை ஒன்று ஒன்றாக இப்போது காணலாம்.
- இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக இரட்டைக் குடியுரிமை கொள்கையாகும் ! இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் பிறப்பிலே இந்தியாவின் எல்லா வேலை வாய்ப்புகளுக்கும் தகுதி உள்ளவர்களாக பிறக்கிறார்கள் .ஆக , இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் பிறப்பிலே முதல்தர குடிமகனாக ஆகிவிடுகிறார்கள் மற்றவர்கள் பிறப்பிலேயே இரண்டாவது தரமாக மாற்றப்படுகிறார்கள் ! ஆக , இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுகமான இரட்டைக் குடியுரிமைக் கொள்கையாகும்!
- இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக பிறப்பு பாகுபாடு கொள்கையாகும்! மேலே குறிப்பிட்டபடி இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் முதல்தர குடிமக்களாக பிறப்பினால் மாற்றப்படுவதால் ,இந்த மொழிக் கொள்கை பிறப்பினால் பாகுபாடு செயல்படுத்தும் ஒரு Discrimination Policy , பாகுபாடு கொள்கை ஆக மாறிவிடுகிறது.
- இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக வேலை வாய்ப்பு கொள்கையாகும்.
மேலே சொன்னபடி இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக எல்லா இந்தி போட்டி தேர்வுகளிலும் வென்று விடலாம் .மற்றவர்களோ இந்தியை கடினப்பட்டு படித்து , அதை இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அளவுக்கு புரிந்து, அவர்களுடன் போட்டி போட்டு வெற்றியடைய வேண்டும்.இது , ஒரு மீனுடன் ஒரு முயல் நீந்தக் கற்றுக்கொண்டு தண்ணீரில் போட்டி போடுவது போல ஆகும்!ஆக ,இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக வேலை வாய்ப்பு கொள்கையாகும்.
*ஒரு மறைமுக சுயவேலைவாய்ப்பு கொள்கையாகும்.
இதுவரை ஒரு மாநிலத்தின் மொழியை அறிந்தால்தான் அம்மாநிலத்தில் சுய வேலை வாய்ப்பை தேடிக் கொள்ள முடியும். ஆனால் இந்தி மொழி திணிப்பிற்குப் பின் இந்திக்காரர்கள் அல்லாதவர்கள் அவருடைய சொந்த மாநிலத்திலேயே சுயவேலைவாய்ப்பு தேட முடியாத நிலைமை ஏற்படும் .ஆக , இது ஒரு மறைமுக சுயவேலைவாய்ப்பு கொள்கையாகும்.
*இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக மாநில மொழி அழிப்பு கொள்கையாகும் ஒரு இருபது முப்பது ஆண்டுகள் இந்தி மொழியை இந்தியா முழுவதும் புகுத்தி விட்டால் மற்ற மொழிகளெல்லாம் தன்னாலே இறந்து போகும் நிலை ஏற்பட்டுவிடும் .ஏற்கனவே இந்தியினால் பல வட இந்திய மொழிகள் அழிந்துவிட்டன .எடுத்துக்காட்டாக, மார்வாரி,போஜ்புரி போன்ற மொழிகளை கூறலாம் . இந்தி இதுவரை அழித்த மொழிகளின் பட்டியல் கீழே உள்ளது .வாசித்து தெரிந்து கொள்ளவும் .
ஆக ,இந்தித் திணிப்பு கொள்கை என்பது ஒரு மறைமுக மாநில மொழி அழிப்புக் கொள்கை ஆகும்.*இந்தி மொழிக் கொள்கை ஒரு மொழி ஆதிக்க கொள்கையாகும் .
மேலே குறிப்பிட்டபடி இந்திக்காரர்கள் எல்லாம் முதல்தர குடிமக்களாகவும் ,மற்றவர்கள் இரண்டாந்தர குடிமக்கள் ஆகவும் மாற்றும் இந்த கொள்கை ஒரு மறைமுக ஆதிக்க கொள்கையாகும்.
*இந்தி மொழி கொள்கை திறமையையும் வளமையும் நசுக்கும் கொள்கையாகும் இந்தி மொழி என்பது மிக சமீபத்தில் உருவான ஒரு மொழி .தமிழோ சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான, உலகிலேயே மூத்த மொழி .தமிழ் எல்லா வகையிலும் உயர்ந்து ,சிறந்து விளங்கும் ஒரு மொழியாகும். இந்தி மொழியில் 'நாளை' என்பதற்குக் கூட ஒரு சொல் கிடையாது.' நேற்று 'என்பதும்' நாளை 'என்பதும் , ஒரே சொல்லான 'கல்' என்ற சொல்லே குறிக்கும் .தமிழிலோ யானைக்கு 60 சொற்களும் ,சிங்கத்திற்கு 24 சொற்களும் உள்ளன. அவ்வளவு வளமையான மொழி தமிழ் .ஆக ,இந்தி மொழி என்பது ஒரு வளர்ச்சியடையாத ஒரு காட்டுவாசி மொழி என்னும் நிலையில்தான் உள்ளது. இந்த காட்டுவாசி மொழி ,தமிழைப் போல் ஒரு மூத்த மொழியை ஆள நினைக்கும் போது ,அதில் திறமையையும் வளமையும் நசுக்கப்படும் என்பது உறுதி .
*தமிழ் எதிர்ப்பு கொள்கை,ஒரு 'பாரம்பரிய எதிர்ப்பு 'கொள்கை !
உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவின் தனிப் பெருமையாகும் .அவ்வாறான பெருமையை ,மத்திய அரசு உலக ரீதியாக ஒரு சுற்றுலா கவர்ச்சியாக காட்டி உலக மக்களை இந்தியாவிற்கு ஈர்க்கலாம் . அதை விட்டுவிட்டு இந்தியாவின் பழமையான தமிழை எப்படி அழிக்கலாம் என்று திட்டம் போட்டு அதற்காக இந்தியை புகுத்தி அழிப்பது என்பது ஒரு 'பாரம்பரிய எதிர்ப்பு 'கொள்கையாகும்.
*இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக இன அழிப்பு கொள்கையாகும்!
எந்த ஒரு மொழியும் அந்த குறிப்பிட்ட இனத்தின் முக்கியமான அடையாளமாகும். அந்த இனத்தின் கொள்கைகள் ,கோட்பாடுகள், இலக்கியங்கள்,வாழும் முறைகள், பண்பாட்டு நெறிகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய ஒரு சொல் தான் 'மொழி' என்பது. ஆக ஒரு மொழியை அழித்தால் அந்த இனத்தை அழிப்பதற்கு சமமாகும். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆக ,இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக இன அழிப்பு கொள்கையாகும்!
*இந்தி மொழிக் கொள்கை என்பது 'தலைமைப் பண்புகளை அழிக்கும் 'மறைமுக கொள்கையாகும்.
தமிழ் மொழி உலகத்தின் மூத்த மொழி என்பதால் தனிச் சிறப்புகள் பல உள்ளன. தமிழ் மொழி தன் வளமையினால் ,செழுமையினால் ,பல் துறை தலைவர்களை உருவாக்கியிருக்கிறது .இந்தி மொழி என்பது ஒரு இனம் இல்லாத உருவாக்கப்பட்ட மொழி .அது இதுவரை பெருந்தலைவர்கள் யாரையும் உருவாக்கியது இல்லை .தலைமைப் பண்புகள் உருவாக்கக்கூடிய திறனோ ,வளமோ இந்திக்கு இல்லை .கீழே காணும் துறை தலைவர்கள் பட்டியலில் , நம் இந்திய தேசிய தலைவர்களில் ஒரே ஒருவர்தான் இந்திமொழி பின்னணியில் இருந்து வந்திருக்கிறார். மற்ற எல்லோரும் மற்ற மொழி சமூகத்தினர் என்பதை நாம் உணர வேண்டும்.
- வால்மீகி
- வேத வியாசர்
- திருவள்ளுவர்
- நேரு குடும்பத்தினர்
- மோடி
- அமித்ஷா
- அமிதாப் பச்சன்
- லதா மங்கேஷ்கர்
- அடல் பிகாரி வாஜ்பாய்
- மகாத்மா காந்தி
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- ராஜேந்திர பிரசாத்
- ராதாகிருஷ்ணன்
- ரவீந்தரநாத் தாகூர்
- கருணாநிதி
- ஜெயலலிதா
- மம்தா பானர்ஜி
- சத்திரபதி சிவாஜி
- சாம்ராட் அசோகன்
- கௌதம புத்தர்
- ஹோமி பாபா
- ஜே .ஆர் .டி .டாட்டா
- முகேஷ் அம்பானி
- சிவ நாடார்
- அண்ணாதுரை
- காமராஜர்
- சர் சி வி ராமன்
- இன்னும் பல .
ஆக , இந்தி மொழிக் கொள்கை என்பது 'தலைமைப் பண்புகளை அழிக்கும் 'மறைமுக கொள்கையாகும்.
*இந்தி மொழிக் கொள்கை ஒரு ஜாதிய கொள்கையாகும் .
'ஜாதிய கொள்கை' என்றால் பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மேலானவராகவும் ம் மற்றொருவரை கீழானவராகவும் வகுப்பதாகும் .இந்தி மொழிக் கொள்கையினால் இந்திக்காரர்கள் எல்லாம்' மேல் ஜாதியாக,முதல் வகுப்பினராக ' பிறப்பினால் ஆகிறார்கள். ஆகவே இது ஒரு மறைமுக ஜாதிய கொள்கையாகும்.
*இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக குடியமர்த்தல் கொள்கையாகும் .
இந்தி மொழிக் கொள்கையை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் கடைப்பிடித்தால், இந்தி மொழிக்காரர்கள் பலர் தமிழ்நாட்டில் குடி அமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது . குடியமர்த்தப்பட்ட அவர்கள் வாக்குரிமை பெற வாய்ப்பிருக்கிறது .சில காலம் ,கழித்து தமிழ்நாட்டின் நிலப்பரப்பு அவருடைய கைகளில் சென்று விடும் வாய்ப்பு பெரிதாக உள்ளது.ஆக , இந்தி மொழிக் கொள்கை என்பது போரின்றி நிலப்பரப்பை அபகரிக்கும் ஒரு மறைமுக 'territory expansion policy 'ஆகும்.
மொத்தத்தில்,
இந்த இந்தி மொழிக் கொள்கை என்பது நம் தேசிய ஒற்றுமைக்கு பெரும் ஆபத்தாகும். தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இதை,முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டியது தமிழர்கள் ஓவ்வொருவரின் கடமை .இல்லையெனில் ,தமிழர்கள் அழிவது உறுதி.
வரும் 2021 தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே முக்கியம் .அதை கருத்தில் கொண்டு,எந்த காரணம் கொண்டும் இந்தி மொழியை திணிப்பதில் குறியாக உள்ள பா .ஜ .க விற்கோ ,இல்லை இந்திக்காரர்களை மெதுவாக தமிழக அரசுப் பணிகளில் அமர்த்திய அ.தி.மு.க.வுக்கோ வாக்களிக்கக் கூடாது என்பதை ஓவ்வொரு தமிழனும் உறுதி செய்ய வேண்டும் .இந்த ஒரு விஷயத்திலாவது தமிழர்கள் யாவரும் ஒற்றுமையாக இல்லாவிட்டால் தமிழகம் அழிவது உறுதி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது ஒரு வாழ்வா ,சாவா போராட்ட கட்டம் என்பதை நாம் உணர விட்டால் ,நாம் வாழ தகுதியற்றவர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது .அதனால் , இந்த பதிவை குறைந்தது ஒரு பத்து தமிழருக்காவது பகிரவும்.நன்றி .