Tuesday, 29 June 2021
புதிய கல்விக் கொள்கையும் தாய்மொழிகள் அழிப்பும்.
Saturday, 26 June 2021
அப்படி அய்யன்காளி என்னதான் செய்தார் மகாத்மா என்று சொல்வதற்கு ?
(1863,ஆகஸ்ட் 28...-18-6-1941) திருவாங்கூர் மன்னரின் ஆட்சி, கொடிகட்டி பறந்த நாட்கள்...ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, எண்ணற்ற ஒடுக்குமுறைகள், சுமத்தப்பட்டிருந்த, கொடிய நாட்கள்...ஒரு முறை, மகாத்மா காந்தி அய்யன்காளியை சந்தித்த போது கேட்டார்:"Mr.அய்யன்காளி, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்"?அய்யன்காளி பதிலாக"பாபுஜி.. எங்கள் சாதிகளைச் சேர்ந்த 10பேர், நான் இறப்பதற்கு முன்பு, BA பட்டதாரிகளாகி காண வேண்டும்"என்றார்...
மகாத்மாவால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை....ஒடுக்கப்பட்ட மக்கள், மேலாடை அணியக்கூடாது; இடுப்புக்கு கீழே, முழங்கால் வரைமட்டுமே ஆடை அணிய வேண்டும்; பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட மக்கள், பொது வழிகளில் நடக்கக்கூடாது; ஒடுக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் சென்று படிக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட பெண்கள், நகைகள் அணியக்கூடாது; ஒடுக்கப்பட்ட பெண்கள், தாங்கள் கீழ் சாதியினர் என்று அறிவிக்கும் வகையில், கழுத்தில், கல் மாலை தான் அணிய வேண்டும்; காதில், இரும்புத் துண்டுகளை மட்டுமே, கம்மலாக அணிய வேண்டும்; என்றெல்லாம், அன்றைய எசமானர்கள், ஆண்டைகள், #ஆச்சாரங்கள்/#மரபுகள்/#கீழ்
#பஞ்சமி எனும் ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு, கல்வி மறுக்கப்பட்ட போது, அந்த இளம் குருத்தை அழைத்துக்கொண்டு ஊரூட்டம்பலம் பள்ளிக்கு சென்ற போது, ஆண்டைகள், அந்த பள்ளிக்கூடத்தை தீ வைத்து கொளுத்தியிருந்தனர்!விடவில்லை அய்யன்காளி.... மலபார் வரலாற்றின் முதல், விவசாயிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்; ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள், வயல்வெளிகள் வறண்டு போய் கிடந்தன;இறுதியில், #பஞ்சமிகள், பள்ளிக்கு சென்றனர்;
ஒடுக்கப்பட்ட மக்கள், நகர வீதிகளில், தெருக்களில், பொது வழிகளில் நடக்கக்கூடாது என்ற ஆண்டைகளின் உத்தரவை, மீற தயாரானார் அய்யன்காளி..
அவர் பிறந்த, வெங்ஙானூரில், கொழுத்த இரண்டு வெள்ளை நிற காளைகள் பூட்டப்பட்ட, வில் வண்டியில், ஜரிகை தலைப் பாகையும், முழு வேட்டி சட்டை, அங்க வஸ்திரத்தோடு, வெங்ஙானூர் வீதிகளில் புயல் வேகத்தில், களமிறங்கியது, அய்யன்காளி என்ற இளம் காளை... ஆண்டைகள் அதிர்ந்து போய் நின்றனர்!பிறகு நகர வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களோடு வீதிகளில் நடந்து சென்றார் அய்யன்காளி...
காட்டுமிராண்டித்தனமாக அய்யன்காளியும், உடன் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்; ஓடி ஒளியவில்லை அய்யன்காளி.... தொடர்ந்தது போராட்டம்....வரலாற்றில், வில் வண்டி போராட்டம் என்று நினைவு கூரப்படுகிறது இந்த போராட்டம்...
புகழ்பெற்ற கல்மாலைப் போராட்டம்;
Sunday, 20 June 2021
ஆங்கில சொற்கள் தமிழிலிருந்து தான் தோன்றியதா ?
நான் அடிக்கடி நினைப்பது உண்டு .ஏன் ,இந்த தமிழர்களுக்கு இவ்வளவு அதீத ஆங்கில மோகம் என்று!சொல்லுக்கு சொல் ஆங்கிலம் இல்லாமல் பேசுவதில்லை . பல வீடுகளில் இப்போது தமிழ் தெரியாது என்று பெருமையுடன் சொல்லும் குழந்தைகள் உள்ளனர் ! அவர்கள் பெற்றோரின் முகத்திலும் அப்படி சொல்வதில் ஒரு பெருமிதம் !'அவளுக்கு தமிழ் தெரியாது !'என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் .வீட்டிற்குள் நுழையும் முன்னே ஒரு குட்டிப் பெண்என்னிடம் ஓடி வந்து , 'கேன் யு ஸ்பீக் இங்கிலிஷ் ?'என்றாள் .நான் 'யெஸ் 'என்றவுடன் அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவேண்டுமே !வரும் தாத்தா ,பாட்டி ,மாமாக்கள் யாருக்கும் இங்கிலிஷ் தெரியவில்லை என்பது அந்த பிஞ்சு மனதின் பெரிய குறை .மொத்தத்தில் ,தமிழருக்கும் ஆங்கிலத்திற்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு , நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் உள்ளதோ என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு .இப்போது அந்த நினைப்பு உண்மையாகி விட்டதோ என்று சொல்லும் படியாக ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது .அதில் எனக்கு வியப்பு இல்லை தான் .
Tuesday, 1 June 2021
ஸ்டாலின் கீழ் தி .மு .க ஆட்சி --10 நாள் சுவை !
'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு 'என்ற மனம் கவர் மெட்டோடு ஒரு பாடல் தமிழகமெங்கும் தேர்தலுக்கு முன் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போது ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது .தமிழகம் பயந்தது போல் வாக்கு இயந்திரத்தின் கற்பும் பறிபோகவில்லை . ஸ்டாலின் வந்து விட்டார்.ஆட்சி கட்டிலில் ,பெரும்பான்மையோடு அமர்ந்து விட்டார் .
அடுத்த கேள்வி ,ஆக ,அவர் உறுதியளித்த விடியல் தந்துவிட்டாரா ?
இந்த கேள்விக்கு பதிலளிக்க பத்து நாள் உண்மையில் பத்தாது.பொதுவாக ,100 நாள் ஆட்சியை தான் நிறுத்து பார்ப்பார்கள் . ஆனாலும் இந்த பத்து நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செய்தது இனி வரப் போன நாட்களில் அவர் செய்யப்போவதை காட்டும் ஒரு முன்னோட்டமாக எடுத்தோம் என்றால் ,நிச்சயமாக விடியல் வெகு வெளிச்சமாகவே ஆரம்பித்துவிட்டது எனலாம் .இந்த 10 நாளில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.
- இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டு அரசியலில் நுழைத்திருக்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள் .எதிர்க்கட்சி தலைவரை கடைசி வரிசையில் அமர வைத்து அவமானப் படுத்திய சர்ச் பார்க் எனும் பெரிய ஆங்கில கான்வென்டில் படித்த அம்மாவுக்கு நேர்மாறாக,திரு ஓ .பன்னீர்செல்வம் அவர்களுக்கு தேனீர் விருந்து அளித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் .அதேபோல் தினமும் வசைபாடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நாகரீகமாக வரவேற்றது போன்ற பல காரியங்களை செய்கிறார் ஸ்டாலின் அவர்கள் .கலைஞர் இறந்தவுடன் மெரினா கடற்கரையில் அவருக்கு சமாதி அமைக்க ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து கெஞ்சி கூத்தாடி தான் வாங்கினார். ஆனால் இன்று எடப்பாடி அவருடைய அரசு வீட்டை காலி பண்ணாமல் நீடிக்க ஸ்டாலின் அவர்களிடம் கேட்டவுடன் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தது , இரண்டு பேருக்கும் உள்ள ஒரு வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போல் தெளிவாக தெரிகிறது.
- ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறும் நேரம் நல்ல நேரம் அல்ல.கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான நேரம் .அரியணையில் அவர் அமர்ந்த உடன் சூழ்ந்து நிற்கும் பல சவால்கள்.முதல் சவால் கொரோனாவிடமிருந்து இவருக்கு வாக்களித்த பொது மக்களை காப்பாற்ற வேண்டும். இதை ஸ்டாலின் அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டு நல்ல பேர் வாங்கி விட்டார். முதல் இரண்டு நாட்களுக்குள் அதிகாரிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்தை உருவாக்கி ,கொரோனா பரவாமல் தடுத்தார் .இருக்கும் மருத்துவ கட்டமைப்பை திறம்பட பயன் படுத்த வழி வகை செய்தார் .
- தேர்தலுக்கு முன்னர் வாங்கிய புகார் மனுக்களை உடனே சரி செய்ய ஒரு தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தது பாராட்டுக்குரியது .
- ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விஷயத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 93 பேருக்கு தலா ஒரு லட்சம் வைத்து இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .
- பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் முதல் நாளிலே அறிவிக்கப்பட்டது.
- இவ்வாறாக இன்னும் பல நெடுநாள் காத்திருந்த காரியங்கள் உடனே செயல் படுத்தப்பட்டது .முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 10 நாளில் எடுத்த எல்லா முடிவுகளையும் நாம் இந்த பதிவில் அடக்கவில்லை .அதற்கு இடமும் இல்லை.
- எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் உள்ளது .
- முடிவுகள் வேகமாகவும் ,திறம்படவும் எடுக்கப்படுவது சிறப்பு .
- அதிகாரம் முறையற்ற வழிகளில் கசியவில்லை என்பதும் சிறப்பு .