Saturday, 26 June 2021

அப்படி அய்யன்காளி என்னதான் செய்தார் மகாத்மா என்று சொல்வதற்கு ?

(1863,ஆகஸ்ட் 28...-18-6-1941) திருவாங்கூர் மன்னரின் ஆட்சி, கொடிகட்டி பறந்த நாட்கள்...ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, எண்ணற்ற ஒடுக்குமுறைகள், சுமத்தப்பட்டிருந்த, கொடிய நாட்கள்...ஒரு முறை, மகாத்மா காந்தி அய்யன்காளியை சந்தித்த போது கேட்டார்:"Mr.அய்யன்காளி, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்"?அய்யன்காளி பதிலாக"பாபுஜி.. எங்கள் சாதிகளைச் சேர்ந்த 10பேர், நான் இறப்பதற்கு முன்பு, BA பட்டதாரிகளாகி காண வேண்டும்"என்றார்...

மகாத்மாவால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை....ஒடுக்கப்பட்ட மக்கள், மேலாடை அணியக்கூடாது; இடுப்புக்கு கீழே, முழங்கால் வரைமட்டுமே ஆடை அணிய வேண்டும்; பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட மக்கள், பொது வழிகளில் நடக்கக்கூடாது; ஒடுக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் சென்று படிக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட பெண்கள், நகைகள் அணியக்கூடாது; ஒடுக்கப்பட்ட பெண்கள், தாங்கள் கீழ் சாதியினர் என்று அறிவிக்கும் வகையில், கழுத்தில், கல் மாலை தான் அணிய வேண்டும்; காதில், இரும்புத் துண்டுகளை மட்டுமே, கம்மலாக அணிய வேண்டும்; என்றெல்லாம், அன்றைய எசமானர்கள், ஆண்டைகள், #ஆச்சாரங்கள்/#மரபுகள்/#கீழ்வழக்கங்கள் என்ற பெயரில்,ஒடுக்கப்பட்ட மக்களை, குரூரமாக அடக்கி ஆண்டு வந்த காலம் அது...ஒடுக்கப்பட்ட மக்களின் #பெரும்குரலாக ஒலித்தது, #அய்யன்காளியின் குரல்!

#பஞ்சமி எனும் ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு, கல்வி மறுக்கப்பட்ட போது, அந்த இளம் குருத்தை அழைத்துக்கொண்டு ஊரூட்டம்பலம் பள்ளிக்கு சென்ற போது, ஆண்டைகள், அந்த பள்ளிக்கூடத்தை தீ வைத்து கொளுத்தியிருந்தனர்!விடவில்லை அய்யன்காளி.... மலபார் வரலாற்றின் முதல், விவசாயிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்; ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள், வயல்வெளிகள் வறண்டு போய் கிடந்தன;இறுதியில், #பஞ்சமிகள், பள்ளிக்கு சென்றனர்;

ஒடுக்கப்பட்ட மக்கள், நகர வீதிகளில், தெருக்களில், பொது வழிகளில் நடக்கக்கூடாது என்ற ஆண்டைகளின் உத்தரவை, மீற தயாரானார் அய்யன்காளி..

அவர் பிறந்த, வெங்ஙானூரில், கொழுத்த இரண்டு வெள்ளை நிற காளைகள் பூட்டப்பட்ட, வில் வண்டியில், ஜரிகை தலைப் பாகையும், முழு வேட்டி சட்டை, அங்க வஸ்திரத்தோடு, வெங்ஙானூர் வீதிகளில் புயல் வேகத்தில், களமிறங்கியது, அய்யன்காளி என்ற இளம் காளை... ஆண்டைகள் அதிர்ந்து போய் நின்றனர்!பிறகு நகர வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களோடு வீதிகளில் நடந்து சென்றார் அய்யன்காளி...

காட்டுமிராண்டித்தனமாக அய்யன்காளியும், உடன் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்; ஓடி ஒளியவில்லை அய்யன்காளி.... தொடர்ந்தது போராட்டம்....வரலாற்றில், வில் வண்டி போராட்டம் என்று நினைவு கூரப்படுகிறது இந்த போராட்டம்...

புகழ்பெற்ற கல்மாலைப் போராட்டம்;

ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்க/வெள்ளி நகைகள் அணியும் உரிமை இல்லை...
தங்கள் கழுத்துகளில், கல்/ஒடு போன்றவற்றை கோர்த்து மட்டுமே மாலையாக அணிய வேண்டும்; காதுகளில் இரும்புத் துண்டுகளை, கம்மல்களாக அணிந்து கொள்ள வேண்டும்;இது, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிவிக்கும் அடையாளமாகவும் இருந்தது...
கல்(லு)மாலை போராட்டத்தில் இறங்கினார் அய்யன்காளி... நீண்ட நெடிய போராட்டம்; அதனால் தான் மக்கள் அவரை, #மகாத்மா #அய்யன்காளி என்று அழைக்கின்றனர்...
சாதியின் பெயரால், வர்ணத்தின் பெயரால், மக்களின் பெரும்பகுதியினர் ஒடுக்கப்பட்ட போது,#ஆச்சாரங்கள், #மரபுகள், #கீழ்வழக்கங்கள் என்ற பெயரில்,இழிவாக நடத்தப்பட்ட போது, அவற்றையெல்லாம், முட்டி மோதி, எதிர் கொண்டு, அனைத்தையும் தகர்த்தெறிந்த,மாவீரன், #மகாத்மா #அய்யன்காளியை #நினைவு கூர்வோம்...

#அய்யன்காளி நினைவு தினம் இன்று...#ShahulHameed
 #மகாத்மா #அய்யன்காளி.....
#மீள்...பதிவு 

No comments:

Post a Comment