இவ்வளவு நாளும் நடக்காத இந்த பாலியல் வன்முறை இப்போது நடப்பதற்கு காரணம் தான் என்ன ?ஆண்களின் நடத்தை ஏன் இப்படியாக மாறியிருக்கிறது ?உளவியல் காரணங்களா ,அல்லது உடலியல் காரணங்களா ?வாருங்கள்,ஆராயலாம் !
ஆண்களுக்கு பாலியல் உணர்வு என்பது இயற்கையிலே இள வயதில் உருவாகி ,அவ்வப்போது வெளியாவது வழக்கம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .அவர்கள் இனப் பெருக்க மண்டலத்தில் விந்தணுக்கள் உருவாகி ,அதற்கான பையில் நிறைந்தவுடன் ,அவர்களுக்கு பலத்த பாலுணர்வு தலையெடுக்கும் .இந்த வேளையில் அந்த விந்துவை ஏதோ வழியில் வெளியேற்ற வேண்டிய மன நிலையில் ஆண்கள் தள்ளப்படுவார்கள் .இந்நேரத்தில் பெண்களைக் காணும் போது ,அந்தப் பாலுணர்வு அதிகரிக்கும் என்பதும் உண்மை .
'காமம் 'என்பது ஒரு உடற்பசியாகும் .
.இந்த ஆவி மிக பலமானது என்பதால் இந்த ஆவியை கட்டுக்குள் வைப்பது ஒரு தனி மனிதனின் /சமுதாயத்தின் மேலான கடமையாகிறது .இதற்காக பலவிதமான கட்டுப்பாடுகளை நம் முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர் .
நம் அன்றாட வாழ்வில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஊடகங்களின் தாக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது .
எல்லா வயது பெண்களையும் இது விடுவதில்லை .
'நேற்று ராத்திரி எம்மா 'என்று 10 வயது சிறுமி ஆட ,நடுவர் ஒருவர் 'இன்னும் முகத்தில் 'உணர்ச்சி 'தேவை 'என்று கூறும் அவல நிலைக்கு வந்திருக்கிறோம்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி கேவலமாக ஆடவிட்டு ,பின்னர் இதை கண்ணீர் மல்க பாராட்டுவது பெருங் கொடுமை !
தொலைக்காட்சிகள் யாரையும் விட்டு வைப்பதில்லை .பெண்கள் கல்லூரி சென்று இளம் பெண்களை வைத்து கிளு கிளுப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் .திருமணமான பெண்களை கொண்டு ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் நடத்துகிறார்கள் .
ஆக,24 மணி நேரமும் பெண், ஆணின் கண்களில் காமப் பொருளாக தோன்றிக்கொண்டு இருக்கும் ஒரு நிலை இப்போது உள்ளது .விளம்பரங்களில் பெண்கள் வயி று ,மார்பு அதிகமாக காட்டப்படுகிறது .'பிளாக் தண்டர் 'விளையாட்டு பூங்கா விளம்பரத்தில் 14 வயதுசிறுமிகளை நனைத்து ஆட வைக்கிறார்கள் .மருந்து விளம்பரம் கூட ஒரு அழகான பெண்ணை வைத்து தான் இருக்கிறது .திரைப்படங்கள் சொல்லவே வேண்டாம் .'முழு நீள வண்ணப்படம்' என்பது இப்போது 'முழு நீள
நீலப் படமாக'மாறியிருக்கிறது . பள்ளி மாணவிகள் ,சீருடையோடு காதல் செய்வது போல் கூட காட்சி அமைக்கிறார்கள் .புனிதமான கோயிலுக்குள்ளே காம லீலைகள் செய்வது போல காட்டுகிறார்கள் .மொத்தத்தில் காம ஆவி இல்லாத இடமே இல்லை என்பது போல் ஒரு நினைப்பை உண்டாக்கி விடுகிறார்கள் .
இது போதாதென்று ,இன்றைய பெண்கள் அழகு நிலையம் சென்று ,தங்களை இன்னும் கவர்ச்சியாக மாற்றுகிறார்கள் .கவர்ச்சியான உடை அணிந்து ,காம அழைப்பு தரும் பாவத்தில் நிற்கிறார்கள் ,நடக்கிறார்கள் ,பேசுகிறார்கள் .'லெக்கிங்ஸ் 'என்று காலோடு ஒட்டி ,இடுப்பு வரை தெளிவாக காலின் வடிவத்தை கவர்ச்சியாக காட்டும் உடை இப்போது எல்லோரும் அணிகிறார்கள் .அந்தக் காலத்தில் மார்பு முந்தானை சிறிது விலகினாலே ,சக மாணவிகள் ஜாடை காட்டி சரி செய்வார்கள் .இப்போது ,இதை பெற்றோர் சொன்னாலும் கேட்பதில்லை .சக தோழிகள் சொல்வதே இல்லை !மேலும் ஒரு குழு ,பெண்ணுரிமை என்று பேசி ,எப்படியும் உடை அணிவது எங்கள் உரிமை என்று ஆண்களைக் கவரும் விதமாக ஆடை அணிகிறார்கள் .
இவ்வாறாக நொடிக்கு நொடி காமப் பசியை தூண்டி,இச்சையின் ஆவியை வளர்த்து ,அதை தீர்க்க வழியில்லாமல் அலையும் ஒரு ஆண் வர்க்கத்தை இந்த ஊடகங்கள் உருவாக்கி வளர்க்கின்றன .கிடைத்தால் கடித்து குதற தயாராக இருக்கும் ஒரு பயங்கர காமப் பசி !
இந்தப் பயங்கரப் பசி, தனியே இருக்கும் எந்த வயது பெண்ணையும் குறிபார்க்கும் அளவு உரமூட்டப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது .இந்த இச்சையின் ஆவியை ,இதற்கு ஆளான ஆண்களால் கட்டுப்படுத்த முடியாது .மேலும் ஆவியை மனதால் கட்டுப்படுத்தவும் முடியாது .அதுபோல் இந்த ஆவியை சட்டத்தாலோ ,தண்டனை பயத்தாலோ கட்டுப்படுத்த முடியாது .அதனால் தான் தூக்கு தண்டனை பயம் கூட ,இந்த குற்றங்களை குறைப்பதில்லை .
இதுவரை ஆணின் பாதுகாப்பிலே வெளியே வந்த பெண்கள் ,இப்போது சமுதாய சூழல் மாற்றத்தினால் ,படிப்பிற்காகவும் ,வேலைக்காகவும் எங்கும் ,ஏன் சீனா கூட தனியே செல்லும் நிலை உள்ளது .சென்னை போன்ற பெருநகரங்களில் நடு நிசி நேரத்தில் இளம் பெண்கள் தனியே அலைவது சகஜமாகிக் கொண்டிருக்கிறது .ஒரு புறம் சூடான காமப் பசி !இன்னொரு புறம் அதற்கான உணவாக எளிதில் தெரியும் பெண்கள் ! விளைவு ,தினமும் செய்தி தாளில் ஒரு பாலியியல் குற்றம் செய்தியாக வருகிறது .
- என்ன செய்தால் இதை மாற்றலாம் ?
ஊடகங்களை நெறிப்படுத்த ஒரு தணிக்கை முறை அவசியம் .பெற்றோர் தம் குழந்தைகளை ஆபாச நடனம் ஆட அனுமதிக்க கூடாது .அம்மாதிரி நிகழ்ச்சிகளை நாம் சமூக ஊடகங்கள் வழியாக கண்டிக்கலாம் .
முடிந்த அளவு பெண்கள்/சிறுமிகள் தனியே அலைவதை தவிர்க்கலாம் .விருந்துகள் ,வைபவங்கள் இவைகளில் பெண்கள் தனிமையாய் இருக்கும் சூழ் நிலையை தவிர்ப்பது நல்லது.
பெண்கள் தங்கள் நடை ,உடை ,பாவனையில் ஒரு அடக்கம் காட்டவேண்டும் .கவர்ச்சியான பாகங்களை மறைத்து ,உடை அணிவது அவர்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை .
இறுதியாக பெண்களை சகோதரப் பார்வையோடு பார்க்க பள்ளிகளில் பழக்க வேண்டும் .'எப்போது ஒரு பெண்ணை காமப் பார்வையோடு பார்த்தாயோ அப்போதே நீ அவளுடன் மனதளவில் உடல் உறவு செய்து விட்டாய் !'என்று சொன்ன இயேசு பிரானின் சொற்களை எல்லா மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும் .
பல விதமான சமூக காரணங்களால் ,திருமணமான ஆண்கள் கூட பெண் துணையின்றி தனியே வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது .இதை தவிர்த்து குடும்பமாக வாழ்வது இந்த விதமான பாலியியல் குற்றங்களை குறைக்க உதவும் .
பலநாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது .உணவுப் பசியை தீர்க்க உணவகங்கள் இருப்பது போல் ,காமப்பசி தீர்க்கும் சேவை மையங்கள் அமைக்க அரசு அனுமதிக்கலாம் .இவைகள் முறைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நடக்கவேண்டும் .காம வெறியில் அலையும் ஆண்களுக்கு அதை தீர்க்க சட்டப்படியான ஒரு வழி அமைத்து கொடுத்தால் ,பாலியியல் குற்றங்கள் நிச்சயமாக பெருமளவில் குறையும் .
இந்த இச்சையின் ஆவியை கட்டாமல் இன்னும் வளர்த்தால் ,கட்டுக்கடங்காமல் போய் ,சீரிய சமூக பிரச்சனைகள் வரலாம் என்ற எச்சரிக்கை மணி எல்லோருக்கும் கேட்காமல் இருக்கலாம் .ஆனால் ,அது தான் உண்மை !
-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று .நம் குடும்பப் பெண்களை காக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது .ஆதலால் ,ஓவ்வொருவரும் குறைந்தது 10 பேருக்காவது பகிரவும் .நன்றி .