Monday, 11 June 2018

எம் .ஜி .ஆர் இருந்திருந்தால் 'காலா' வில் நடித்திருப்பாரா ?


எம் .ஜி .ஆர் ஒரு ஏழைப் பங்காளனாக திரையிலும் ,நிஜ வாழ்க்கையிலும் திகழ்ந்தார் என்பதை நாம் மறுக்க முடியாது .எல்லா ஏழைகள் பாத்திரத்திலும் அவர் தோன்றி ஜொலித்திருக்கிறார் .மீனவனாக வருவார் .ரிக்க்ஷா ஓட்டியாக வருவார் .தொழிலாளியாக தோன்றி முதலாளியை எதிர்ப்பார் .உழவனாக வருவார் .'நிழல் வேண்டும் போது ,மரம் ஒன்று உண்டு ;பகை வந்த போது ,துணை ஒன்று உண்டு !'என்றெல்லாம் பாடுவார் !
ஆனால் ,இவர்கள் எல்லோருக்கும் மேலாக துன்பப்படும் /துன்பப்படுத்தப் படும் 'தலித்தாக 'மட்டும் வரவே மாட்டார் !
                                                                                   அது போல் ,கலைஞர் கொடுங்கோல் அரசருக்கு எதிராக கொந்தளிக்கும் வசனங்களை அனலாய் ஊற்றுவார் .அந்தணரின் கொள்கைகளுக்கு எதிராய் பாமரனுக்காக எழுதுவார் .ஆனால் ,ஒரு படத்திலாவது தலித்துக்கு சாதகமாய் ,தீண்டாமைக்கு எதிராய் அவருடைய எழுது கோல் கர்ஜித்தது உண்டா ?
                         நீண்ட   இந்திய திரை வரலாற்றில் சிவாஜியாகட்டும் ,மம்மூட்டியாகட்டும் ,அமிதாப் ஆகட்டும் ,ஏன் ஒருவர் கூட ஒரு  பாதிக்கப்பட்ட தலித்தாக ஒரு படத்தில் கூட நடித்ததில்லை ?
                                        இவர்கள் யாரும் செய்ய மறுத்ததை ரஜினி துணிச்சலுடன் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது .இன்று இந்தியா முழுவதும் 'காலா'வின் வசூலை பற்றி பேசாமல் ,ரஞ்சித்தின் கருத்து புரட்சி பற்றி பேசுவதே அவருக்கு ஒரு பெரிய வெற்றியாகும் .
 '                         திரை துறையும் ஏன் சாதியம் பார்க்கிறது ?'என்ற கேள்வி பாலிவுட் ,கோலிவுட் தளங்களில் பேச்சாக மாற வைத்திருக்கிறார் இயக்குனர் பா .ரஞ்சித் !ஒரு வேளை இந்தப் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தால் கூட  ,அது பா .ரஞ்சித் அவருடைய கருத்து புரட்சிக்கு கொடுத்த விலையாக எடுத்துக்கொள்ளலாமா ? .இல்லை ,தலித் அல்லாதவர் இந்த திரைப் படத்தை ஆணவக் கொலை செய்ததாக எடுத்துக்கொள்ளலாம் !எதுவாயிருந்தாலும் ,திரைத் துறையில் ஒரு மாபெரும் கருத்தியல் புரட்சி நடந்ததை திருப்பி அனுப்ப முடியாது !பற்பசை குழாயிலிருந்து வெளியே பிசுக்கப்பட்ட பசையை போல !

Thursday, 7 June 2018

அந்த காமக்கண்கள் தந்தது யார் ?

ஓவ்வொரு ஆணின்  வாழ்விலும்  பெண்  என்பவள் ஒரு பெரும்  பங்காற்றுகிறாள் என்பதை மறுக்க முடியாது .பிறந்ததும் தாயின் காக்கும் அரவணைப்பு .பின்னர் அன்பு அக்கா .அடிப்பதற்கு ஒரு அழகான குட்டித் தங்கை !பின் இளமையில் கிளுகிளுப்பூட்டும் ஜோடிப் புறவாக ஒரு இளம் பெண் !பின்னர்  மனைவி !மகள் !பேத்தி என்று  !
                       இவர்கள் எல்லோருக்கும் ஆண் தனித்  தனிப்   பார்வை வைத்துள்ளான் .பொதுவாக அன்புக் கண்ணோடு தான் எல்லாப் பெண்களையும்   அவன் பார்க்கிறான் .இதற்கு விலக்கு  உண்டு .அத்தை மகளையோ ,அல்லது காதலியையோ மட்டும் காதல் கண்ணோடு அவன் பார்க்கக்கூடும் .மணமான பின் மனைவியை அவன் காமக்கண்ணோடு  பார்க்கவும்    உரிமையுண்டு .
                                                       இதுவரை இந்த நடை  முறை நம் சமுதாயத்தை நல்ல முறையில் இயக்கி கொண்டிருந்தது .குட்டி பெண்கள் தெருவில் விளையாடி கொண்டிருந்தால் ஆண்கள் அவர்களை அன்புடன் கன்னத்தை தட்டி விட்டு ,மகள் போல் கொஞ்சி விட்டு செல்வது வழக்கம் .
                                          ஆனால் ,சமீப காலத்தில் இந்த பார்வை  மாறி ,கோயிலில் விளையாடிக்  கொண்டிருந்த ஒரு குட்டி பாப்பாவை பூசாரியே மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்திருக்கிறார் . சித்தப்பா ஒருவர் , மகள் முறையில் உள்ள ஒரு  சிறுமியை காமக் கண்களோடு பார்த்திருக்கிறார் .ஆசிரியர் ,மாணவியை மனைவியாக பார்த்திருக்கிறார்.70 வயது பாட்டியை பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள் .குர்கானில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பலர் கூட்டு வன்முறை செய்திருக்கிறார்கள் .இது போல் இன்னும் பல ...
கேள்வி என்னவென்றால் ,இதுவரையில்லாமல் இப்படி ஏன் இப்போது மட்டும் நடக்கிறது ?

                                                                  (படம் :ஒன் இண்டியா )
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?
                                            இவ்வளவு நாளும் நடக்காத இந்த பாலியல் வன்முறை இப்போது நடப்பதற்கு  காரணம் தான் என்ன ?ஆண்களின் நடத்தை ஏன் இப்படியாக  மாறியிருக்கிறது ?உளவியல் காரணங்களா ,அல்லது உடலியல் காரணங்களா ?வாருங்கள்,ஆராயலாம்  !
                                    ஆண்களுக்கு பாலியல் உணர்வு என்பது இயற்கையிலே இள வயதில் உருவாகி ,அவ்வப்போது வெளியாவது வழக்கம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .அவர்கள் இனப் பெருக்க மண்டலத்தில் விந்தணுக்கள் உருவாகி ,அதற்கான பையில் நிறைந்தவுடன் ,அவர்களுக்கு பலத்த  பாலுணர்வு தலையெடுக்கும் .இந்த வேளையில் அந்த விந்துவை ஏதோ வழியில் வெளியேற்ற வேண்டிய மன நிலையில் ஆண்கள் தள்ளப்படுவார்கள் .இந்நேரத்தில் பெண்களைக் காணும் போது ,அந்தப் பாலுணர்வு அதிகரிக்கும் என்பதும்  உண்மை .
                      'காமம் 'என்பது ஒரு உடற்பசியாகும்  .இந்த உடல் பசியை பின் நின்று இயக்குவது தான் 'இச்சை 'எனும் ஒரு ஆவியாகும் .இந்த ஆவி மிக பலமானது என்பதால் இந்த ஆவியை கட்டுக்குள் வைப்பது ஒரு தனி மனிதனின் /சமுதாயத்தின் மேலான கடமையாகிறது .இதற்காக பலவிதமான கட்டுப்பாடுகளை நம் முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர் .
அவைகளில் தலையானவை இதோ :
  • எல்லாப் பெண்களையும்  தாயாக பார்க்க வைப்பது,இந்த ஆவியை மட்டுப்படுத்தும்  ஒரு வழியாகும்  .இன்னும் கூட தென் மாவட்டங்களில் இளம் பெண்களை 'தாய் 'என்று அழைக்கும் முறை கிராம புறங்களில் காணலாம் .குஜராத்தில் எல்லாப் பெண்களையும்  'சகோதரி 'யாக 'பெஹன் 'என்று அழைப்பார்கள் .
  • இன்னும் அறிமுகமில்லா பெண்ணையும் 'அக்கா 'என்று அழைக்கும் முறை கோவையில் காணலாம் .
  • பெண்கள் வெளியே அலைவது ,ஆளில்லா இடங்களுக்கு தனியே செல்வது போன்றவை தடை செய்யப் பட்டிருந்தன .
  • பெண்கள் 'அடக்க ஒடுக்கமாக 'இருப்பது பெற்றோரால் உறுதி செய்யப் பட்டது .அவர்கள் உடலின் கவர்ச்சி பாகங்களை சரியாக மறைப்பது ,உட்காரும் போது ஒழுங்காக அமர்வது போன்றவையும் கற்று கொடுக்கப் பட்டன .
  • பெண்கள் அளவுக்கதிகமாக சீவி முடிச்சி சிங்காரிப்பது பெரியவர்களால் கண்டிக்கப் பட்டது .
  • பெண்கள் எப்போதும் தகப்பன் அல்லது சகோதரனின் பாதுகாப்பில் தான் இருப்பது முன்பு வழக்கமாயிருந்தது .
இப்போது என்ன நடக்கிறது ?
  •  ஊடகங்களின் தாக்கம்
நம் அன்றாட வாழ்வில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஊடகங்களின் தாக்கம் இப்போது  அதிகரித்திருக்கிறது .தற்போதைய திரைப்  படங்களும் ,தொலைக் காட்சியும் பெண்களை ஒரு பாலியல் போகப் பொருளாக சித்தரிக்கின்றன .எல்லா வயது பெண்களையும் இது விடுவதில்லை .குட்டிப் பெண்களை காமப் பாட்டுகளுக்கு, உணர்வோடு ஆட வைக்கின்றன .'நேற்று ராத்திரி எம்மா 'என்று 10 வயது சிறுமி ஆட ,நடுவர் ஒருவர் 'இன்னும் முகத்தில் 'உணர்ச்சி 'தேவை 'என்று கூறும் அவல நிலைக்கு வந்திருக்கிறோம்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி கேவலமாக ஆடவிட்டு ,பின்னர் இதை கண்ணீர் மல்க பாராட்டுவது பெருங் கொடுமை !
                                      தமிழ் பண்பாட்டில் இல்லாத காமப் பார்வையை ,தமிழரல்லாத கலைஞர்கள் தமிழ் நாட்டில் திணித்து கொண்டிருக்கின்றனர் .'சிக்கு புக்கு ரயிலே 'என்ற பாடலில் தான் முதலில் இந்த பார்வை அறிமுகமாகியது .ஒரு சிறுவன் ,தன் அக்கா வயதில் உள்ள பெண்ணை பார்த்து 'கலக்குது பார் இவ ஸ்டயிலே 'என்று பாடுவது போல ஒரு கேவலமான பாட்டு.இது பிரபலமாகி அக்காக்களை காமக் கண்ணோடு பார்க்க சொல்லியது .பின்னர் மணிரத்னம் 'ரோஜா 'படத்தில் அருவிக்கரையில் பாட்டிகளை அசிங்கமாக ஆடவைத்து,பாட்டிகளையும் காமக்கண்ணோடு பார்க்க வைத்தார் .
                               தொலைக்காட்சிகள் யாரையும் விட்டு வைப்பதில்லை .பெண்கள் கல்லூரி சென்று இளம் பெண்களை வைத்து கிளு கிளுப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் .திருமணமான பெண்களை கொண்டு ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் நடத்துகிறார்கள் .ஆக,24 மணி நேரமும் பெண், ஆணின் கண்களில் காமப் பொருளாக தோன்றிக்கொண்டு இருக்கும் ஒரு நிலை இப்போது உள்ளது  .விளம்பரங்களில் பெண்கள் வயி று  ,மார்பு அதிகமாக காட்டப்படுகிறது .'பிளாக் தண்டர் 'விளையாட்டு பூங்கா விளம்பரத்தில் 14 வயதுசிறுமிகளை  நனைத்து ஆட வைக்கிறார்கள் .மருந்து விளம்பரம் கூட ஒரு அழகான பெண்ணை வைத்து தான் இருக்கிறது .திரைப்படங்கள் சொல்லவே வேண்டாம் .'முழு நீள வண்ணப்படம்' என்பது இப்போது 'முழு நீள நீலப் படமாக'மாறியிருக்கிறது . பள்ளி மாணவிகள் ,சீருடையோடு காதல் செய்வது போல் கூட காட்சி அமைக்கிறார்கள் .புனிதமான கோயிலுக்குள்ளே காம லீலைகள் செய்வது போல காட்டுகிறார்கள் .மொத்தத்தில் காம ஆவி இல்லாத இடமே இல்லை என்பது போல் ஒரு நினைப்பை உண்டாக்கி விடுகிறார்கள் .
                              இது போதாதென்று ,இன்றைய பெண்கள் அழகு நிலையம் சென்று ,தங்களை இன்னும் கவர்ச்சியாக மாற்றுகிறார்கள் .கவர்ச்சியான உடை அணிந்து ,காம அழைப்பு தரும் பாவத்தில் நிற்கிறார்கள் ,நடக்கிறார்கள் ,பேசுகிறார்கள் .'லெக்கிங்ஸ் 'என்று காலோடு ஒட்டி ,இடுப்பு வரை தெளிவாக காலின் வடிவத்தை கவர்ச்சியாக காட்டும் உடை  இப்போது எல்லோரும் அணிகிறார்கள் .அந்தக் காலத்தில் மார்பு முந்தானை சிறிது விலகினாலே  ,சக மாணவிகள் ஜாடை காட்டி சரி செய்வார்கள் .இப்போது ,இதை பெற்றோர் சொன்னாலும் கேட்பதில்லை .சக தோழிகள் சொல்வதே இல்லை !மேலும் ஒரு குழு ,பெண்ணுரிமை என்று பேசி ,எப்படியும் உடை அணிவது எங்கள் உரிமை என்று ஆண்களைக் கவரும் விதமாக ஆடை அணிகிறார்கள் .
                            இவ்வாறாக நொடிக்கு நொடி காமப் பசியை தூண்டி,இச்சையின் ஆவியை வளர்த்து ,அதை தீர்க்க வழியில்லாமல் அலையும் ஒரு ஆண் வர்க்கத்தை இந்த ஊடகங்கள் உருவாக்கி வளர்க்கின்றன .கிடைத்தால் கடித்து குதற தயாராக இருக்கும் ஒரு பயங்கர காமப் பசி !
                       இந்தப் பயங்கரப் பசி, தனியே இருக்கும் எந்த வயது பெண்ணையும் குறிபார்க்கும் அளவு உரமூட்டப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது .இந்த இச்சையின் ஆவியை ,இதற்கு ஆளான ஆண்களால் கட்டுப்படுத்த முடியாது .மேலும் ஆவியை மனதால் கட்டுப்படுத்தவும்  முடியாது .அதுபோல் இந்த ஆவியை சட்டத்தாலோ ,தண்டனை பயத்தாலோ கட்டுப்படுத்த முடியாது .அதனால் தான் தூக்கு தண்டனை பயம் கூட ,இந்த குற்றங்களை குறைப்பதில்லை .
  • தனியே அலையும் பெண்கள் !
இதுவரை ஆணின் பாதுகாப்பிலே வெளியே வந்த பெண்கள் ,இப்போது சமுதாய சூழல் மாற்றத்தினால் ,படிப்பிற்காகவும் ,வேலைக்காகவும் எங்கும் ,ஏன் சீனா கூட தனியே செல்லும் நிலை உள்ளது .சென்னை போன்ற பெருநகரங்களில் நடு நிசி நேரத்தில் இளம் பெண்கள் தனியே அலைவது சகஜமாகிக் கொண்டிருக்கிறது .ஒரு புறம் சூடான காமப் பசி !இன்னொரு புறம் அதற்கான உணவாக  எளிதில் தெரியும் பெண்கள் ! விளைவு ,தினமும் செய்தி தாளில் ஒரு பாலியியல் குற்றம் செய்தியாக வருகிறது .
  • என்ன செய்தால் இதை மாற்றலாம் ?
ஊடகங்களை நெறிப்படுத்த ஒரு தணிக்கை முறை அவசியம் .பெற்றோர் தம் குழந்தைகளை ஆபாச நடனம் ஆட அனுமதிக்க கூடாது .அம்மாதிரி நிகழ்ச்சிகளை நாம் சமூக ஊடகங்கள் வழியாக கண்டிக்கலாம் .
                          முடிந்த அளவு பெண்கள்/சிறுமிகள்  தனியே அலைவதை தவிர்க்கலாம் .விருந்துகள் ,வைபவங்கள் இவைகளில் பெண்கள் தனிமையாய் இருக்கும் சூழ் நிலையை தவிர்ப்பது நல்லது.
பெண்கள் தங்கள் நடை ,உடை ,பாவனையில் ஒரு அடக்கம் காட்டவேண்டும் .கவர்ச்சியான பாகங்களை மறைத்து ,உடை அணிவது அவர்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை .
                            இறுதியாக பெண்களை சகோதரப் பார்வையோடு பார்க்க பள்ளிகளில் பழக்க வேண்டும் .'எப்போது ஒரு பெண்ணை காமப் பார்வையோடு பார்த்தாயோ அப்போதே நீ அவளுடன் மனதளவில் உடல் உறவு செய்து விட்டாய் !'என்று சொன்ன இயேசு பிரானின் சொற்களை எல்லா மாணவர்களுக்கும்  போதிக்க வேண்டும் .
                          பல விதமான சமூக காரணங்களால் ,திருமணமான ஆண்கள் கூட பெண் துணையின்றி தனியே வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது .இதை தவிர்த்து குடும்பமாக வாழ்வது இந்த விதமான பாலியியல் குற்றங்களை குறைக்க உதவும் .
                          பலநாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது .உணவுப் பசியை தீர்க்க உணவகங்கள் இருப்பது போல் ,காமப்பசி தீர்க்கும் சேவை மையங்கள் அமைக்க அரசு அனுமதிக்கலாம் .இவைகள் முறைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நடக்கவேண்டும் .காம வெறியில் அலையும் ஆண்களுக்கு அதை தீர்க்க சட்டப்படியான ஒரு வழி அமைத்து கொடுத்தால் ,பாலியியல் குற்றங்கள் நிச்சயமாக பெருமளவில் குறையும் .
                           இந்த இச்சையின் ஆவியை கட்டாமல் இன்னும் வளர்த்தால் ,கட்டுக்கடங்காமல் போய் ,சீரிய சமூக பிரச்சனைகள் வரலாம் என்ற எச்சரிக்கை மணி எல்லோருக்கும் கேட்காமல் இருக்கலாம் .ஆனால் ,அது தான் உண்மை !
-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று .நம் குடும்பப் பெண்களை காக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது .ஆதலால் ,ஓவ்வொருவரும் குறைந்தது 10 பேருக்காவது பகிரவும் .நன்றி .