Tuesday, 11 October 2016

காவல் துறையை கேவலப்படுத்துவது முறையா ?

தூங்கா விழிகள் இரண்டு !
நாம் நன்றாக தூங்க வேண்டுமென்று  ,தூங்காமல் விழித்திருக்கும் ,இரண்டு பெரும் துறைகள் உள்ளன .அவை ,நமது நாட்டின் பாதுகாப்பு துறையும் ,நம் ஊரின் காவல் துறையும் தான் .இந்த இரண்டிலும் ,உள்ளூர் காவல் துறை தான் நம்முடன் நெருங்கிய உறவை கொண்டது .அப்படி பட்ட காவல் துறையை கேவலப்படுத்தும் காட்சிகள் தமிழ் திரை படங்களில் அதிகமாக இடம்பெறுகிறது நாம் யாவரும் அறிந்ததே .இது முறையா என்பதே இப்போது நம் கேள்வி .
நடப்பதை தானே காட்டுகிறார்கள் !
'காவல் துறையில் உண்மையில் நடப்பதை தான் திரைப் படங்கள் பிரதிபலிக்கின்றன.இதில் என்ன தப்பு ?'என்று சிலர் சொல்லலாம்.எந்த துறையிலும் தப்புக்கள் நடக்கலாம் .காவல் துறை இதற்கு விதிவிலக்கல்ல .சாலைகளில்  விபத்துக்கள் நடப்பது உண்மை .ஆனால் அதை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் ,சாலை என்றால் விபத்துதான் என்ற உள்ளுணர்வு எல்லோர் மனதிலும் வேரூன்றிவிடும் .அதன் பின் ,அதை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் ஒழிந்து விடும் .நேர்மறை எண்ணங்களை விதைத்தால் ,நேர்மறை விளைவுகள் எதிர்பார்க்கலாம் .எதிர்மறை எண்ணங்களை விதைத்தால், எதிர்மறை விளைவுகள்என்பது சாதாரணமாகிவிடக்கூடும் .எடுத்துக்காட்டாக ,ரத்தத்தை கண்டால் நமக்கு ஏற்படும் ஒரு பயத்தை ,தொடர்ச்சியாக ரத்தத்தை கொண்ட காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தால் ,போக்கி விடலாம் .இதனால் தான் ,விபத்தில் மாட்டியவர்களை ,நேராக காட்டாமல் நிழலாய் காட்டுகிறார்கள் .மேலும் ,எல்லோரும் அதிகாரத்திற்கு அடங்கி நடக்க  வேண்டும் என்ற பெரிய விழுமத்தை ,இவ்வாறான மோசமான சித்தரிப்பு குறைத்துவிடும் .
இவ்வாறு காவல் துறையை மிகவும் மோசமாக சித்தரிப்பதால் , காவல் துறை என்றாலே
  • சட்டத்தை மதிக்கமாட்டார்கள் 
  • சமூக விரோதிகளோடு கூட்டு வைத்திருப்பார்கள் 
  • காவல் நிலையத்திலே கற்பழிப்பார்கள் 
  • விலைமாதோரோடு கூட்டு வைத்திருப்பார்கள் 
  • கையூட்டு பெற்றுக்கொண்டு அபராதிகளை விட்டுவிடுவார்கள் 
  • பணம் கொடுக்காமல் உணவகங்களில் சாப்பிடுவார்கள் 
என்ற ஒரு தப்பான எண்ணம் மக்கள் மனதில் வலுவாக வேரூன்ற செய்துவிட்டார்கள் திரைத்துறையினர் .இதில் முக்கிய பங்கு நகைச்சுவை என்ற பெயரில் ,இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும்  விவேக் ,சந்தானம் ,கௌண்டமணி போன்றவர்களுக்கே .
என்னுடைய அலுவலகத்தில் ,ஒரு முறை ஒரு இளம் பெண் ,சக ஆண் ஊழியர் மேல் ஒரு பொய் குற்றச்சாட்டை பதிவு செய்தார் .அவள் காலையில் அவளுடைய அறையில் தனியே இருந்தபோது ,அந்த ஆண் ஊழியர் ,உள்ளே நுழைந்து ,கதவை தாளிட்டு ,அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார் என்பது தான்  அது .முதலில் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் ,தான் செய்யவில்லை என்று மறுத்தார் .ஆனால் யாரும் அதை நம்பவில்லை .மனம் ஒடிந்து போன அந்த ஊழியர் ,ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே வந்து ,அந்த பெண்ணின் அறையில் நுழைந்து ,அவளை கட்டிப்பிடித்து ,ஒரு முத்தம் கொடுத்து விட்டு ,அவளிடம் "கணக்கு முடிந்தது !"இல்லாததை சொன்னாள் அவள் .இருப்பதாக மாற்றிவிட்டான் அவன் !காவல் துறையும் அது போல் மாறிவிட கூடாது என்பதே என் கவலை .
நல்லதையே காட்டுங்கள் !நல்லதே நடக்கும் !
தணிக்கை துறை என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள் .அது இருந்தால் எப்படி இவ்வாறான காட்சிகள் அனுமதிக்க படுகின்றன என்று புரியவில்லை .நாம் ஒரு சுய தணிக்கை அதிகாரியாக மாறி ,இந்த மாதிரி காட்சிகளுக்கு ,சிறிது விட்டு போகாமல் ,நமது எதிர்ப்பை சமூக ஊடகங்களில் பதிவு செய்வோம் .அப்படியாவது திரைத்துறை திருந்துகிறதா என்று பார்ப்போம் !வரும் தலைமுறைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்கள் என்பதை மறக்க வேண்டாம் .

Tuesday, 4 October 2016

நம்முடைய தேசிய மொழி தான் என்ன ?

'தேசிய மொழி 'என்றால் என்ன ?ஒரு தேசம் முழுவதும் ,பேசப்படும் மொழி.எல்லோருக்கும் பொதுவாக புரியும் மொழி .இந்தியா முழுவதும் காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை எல்லோரும் அறிந்த மொழி என்ன ?
"இந்தி ?"நிச்சயமாக இல்லை !அது ஒரு ஆட்சியாளரின் கனவு .
"தமிழ் ?"இல்லவே இல்லை !தகுதியுள்ளவைகளுக்கு இந்நாட்டில் இடமில்லை !
பின்னர் என்ன தான் அந்த மொழி ?
காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் ,எல்லோரும் அறிந்த மொழி ஒரே இந்திய மொழி ---'பொய்'ஒன்றுதான் ! 'வாய்மையே வெல்லும் ' என்று எங்கும் எழுதி வைத்துக்கொண்டு ,எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்பவர்கள் நாம் தான் !
குடிமகனும் பொய் சொல்வார் !அரசும் பொய் சொல்லும் !
"வாங்க ,வாங்க ,வாங்க !காபி போடட்டுமா ?"(மனதில் ,'வந்துட்டான்யா !என்ன பண்ணுனாலும் ,இந்த பய வந்துர்ரானே !)
உடனே வந்தவர் "சும்மா வந்தேன் !இப்போதான் டீ குடிச்சேன் "(அவருக்கு டீ வேணும் .ஆனா சொல்லமாட்டார் .)
"என்னைய ஞாபகம் இருக்கா ?"
பதில் "உங்களையெல்லாம் மறக்க முடியுமா ?"(மனதில் 'ஆயிரம் பேரை பார்க்கிறேன் .எல்லோரையும் எப்படி ஞாபகம் வைக்க முடியும் ?கேக்கிற கேள்விய பாரு !')
சரி ,அதை விடுங்க .இவர்களாவது தனி மனிதர்கள்  .இப்போ ,அரசை எடுத்துக்கொள்வோம் .பொய் சொல்லுமா அரசு ?
நீதி மன்றத்திலே போய் பொய் அறிக்கை அரசே தாக்கீது செய்யும் நாடு, நம் நாடு .'(உ -ம்)காவேரி நீர் இருப்பு குறித்து உச்ச நீதி மன்றத்திற்க்கே 'தண்ணி 'காட்டுகிறது கர்நாடகா அரசு .
நடுவண் அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தது .அதன்படி 'கையினால் மனித மலத்தை அள்ளுவதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் 'என்ற நோக்கம் .இதற்கு ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்கள் .அப்போது ,தமிழக அரசு 'தமிழ் நாட்டில் அப்படி பழக்கமே  இல்லை 'என்று ஒரு பெரும் பொய்யய் எழுத்திலே கொடுத்து விட்டனர் ! எப்படி ?
இது இப்படியிருக்க ,இந்தியை 'எப்படியாவது ஆட்சி மொழியாக்கிவிட ,நடுவண் அரசு பலமுறை எண்களையும் கணக்குகளையும்  மாற்றி சொல்லும் நிலை காண்கிறோம்  .சென்னையில் கூட இந்தி  பேசுவது மாதிரி வட இந்திய ஊடகங்கள் பொய் காட்சி போடும்  !
ஆசிரியர் 'ஏன்டா ,நேற்று வகுப்புக்கு வரல ?'என்று கேட்டால் 'எங்க  பாட்டி செத்துட்டாங்க !'என்று மாணவன் அழகாய் பொய் சொல்வான் !பெற்றோரோ ,ஒரு படி மேலே போய் 'ஆமா ,இப்பதான் அடக்கம் பண்ணிட்டு வரோம் !'என்பார்கள் !
தமிழ் திரைப்படங்களிலோ ,பொய் சொன்னாலோ ,ஏமாற்றினாலோ ,தப்பே இல்லை .அது வெறும் சிரிப்புதான் ,போங்க !
எல்லா நாடுகளிலும் இப்படித்தானா ?மற்ற  நாடுகளை எடுத்துக்கொள்வோம் .பல வெளிநாட்டினர்,குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் ,நீதிமன்றங்களில் தாம் செய்த குற்றத்தை ஒத்துகொள்வது என்பது அங்கு வெகு சாதாரணம் .ஏன் ,நம் நாட்டில் மட்டும் ,கத்தியோடு பிடிபட்டால் கூட ஒத்துக்கொள்வதில்லை ?
'எந்த நாட்டிலும் இல்லாத அளவு பொய் பேசும் நாடு இந்தியா' ,என்று வெளி நாட்டினர் நினைப்பது நம்மில் பலருக்கு தெரியாது .காரணம் ,நாம் பொய் பேசுவது நமக்கே பல முறை தெரியாதது தான் !இந்த பொய் பழக்கத்திற்கு  அடிப்படை காரணம் தான் என்ன ?
நம்மில் பலர் ,இம்மாதிரியான கேள்விகளையே வேண்டாமென்று நினைப்பது உண்டு .ஆனால் ,இது தேவை .இது  ஒரு சுய பரிசோதனைதான் .நம்மை நாமே குறைசொல்வதல்ல நோக்கம் .ஆனால் உண்மையை மறைப்பதால் ,நாம் மாறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலே  போய்விடக்கூடும் என்ற கவலையே  இதை சொல்ல தூண்டுகிறது . .
இதில்உங்கள் கருத்து என்ன ?உங்கள் நிலை என்ன  ?பதிவிடலாமே !கலந்துரையாடலாமே !

படம் நன்றி :adirainirubar.blogspot.com 

Monday, 3 October 2016

நண்பா ,ஏன் இந்த வலைப் பூ ?இதோ ,என் பதில் ...


மண்ணுக்குள் பூத்தப் பூக்கள் 
மண்ணோடு மக்கிப்  போம் !
என்னுக்குள் பூத்த பூக்கள் 
இதயத்தில் இறந்து போனால் ..
ஏமாந்து போகாதா ,
மலர் தேடும் தேனீக்கூட்டம் ?

Sunday, 2 October 2016

இடமில்லையேல், இனமும் இல்லை !


"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் !"என்று நாம் பலமுறை நம் பண்பாட்டை பற்றி சொல்லி பெருமை கொள்கிறோம் .இது சரியா ?
                               இந்திய பெருங்கடலில் 'சென்டினல் தீவு ' என்ற ஒரு தீவு உள்ளது .இந்த தீவில் வாழும் மனிதர்கள் ,அவர் தம் கலாச்சாரம் பற்றி வெளி உலகுக்கு ஒன்றுமே தெரியாது .காரணம் ,அந்த தீவினர் வெளி உலகினர் யாரையும் அங்கு அனுமதிப்பதில்லை .வான் வெளியில் நாம் வானூர்தியில் தீவின் மேல்  பறந்து சென்றால் கூட ,உடனே அவர்கள் விஷ அம்புகளை மேல் நோக்கி எய்வார்களாம் !ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் ?
                                        ஏனென்றால், தம்முடைய இடத்தை  இழந்தால் ,அது அவர்கள் இனத்தின்  அழிவின் ஆரம்பம் என்பதை அவர்கள்நன்றாக உணர்ந்திருப்பதால் தான்.அது அப்படியிருக்க, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடியாம் நம் தமிழினத்திற்கு இந்த அடிப்படை உண்மை தெரியாதது உண்மையில் பெரும் ஆச்சர்யம் தான் !இயேசு பிரான் 'தட்டுங்கள் !திறக்கப்படும் !' என்றார் .நாம் தமிழரோ,அதற்கு மேல் ஒரு படி போய் ,தட்டாமலே கதவை திறந்து வைத்தோம் ..நல்லவரும் வந்தார்கள்.கூடே நயவஞ்சகரும் உள்ளே வந்தார்கள் .அடையாளம் தெரியாததால் அனைவரையும் அடுக்களை வரை,நாம்   அன்புடன் அனுமதித்தோம் .

                                                       வந்தவர்களோ,அதற்காக  நன்றியோடு நடந்து கொள்ளவில்லை .தமிழர் மொழியை திருடினர் ,சிதைத்தனர் .அவர்கள் பண்பாட்டை நம் மேல் திணித்தனர் .இறுதியில் நம்மையே ஆண்டு கொண்டு ,நம்மை இரண்டாம் தர குடிமகன்களாக மாற்றி விட்டனர் !
                                                   இன்று தமிழருக்கு தமிழ் நாட்டில் உரிய இடமில்லை .தமிழ் பேசினால் வேலையில்லை .தமிழரின் நிறமான கருப்பை,கிண்டலுக்கு உள்ளாக்கி  அவர்களையே வெறுக்க வைத்தனர் .மேலும் தமிழர் மண்ணெல்லாம் ஆக்கிரமித்து அவர்களின் வடமொழி பெயரில் குடியிருப்புக்கள் கட்டி கொண்டிருக்கிறார்கள் .தமிழ் நகரம் கோவையில் 'ஸ்ரீ தக்ஷ க்சிப்தா 'என்ற சொல்ல கூட கடினமான ,அசிங்கமான வட மொழி பெயரில் குடியிருப்பு வளாகம் உள்ளது  .அது போல ,நம்மால் தில்லியில் அழகு தமிழில் 'குறிஞ்சி குடியிருப்பு 'என்று பெயரிட்டு   கட்ட தான் முடியுமா ?இது போதாதென்று தமிழ் ஊடகங்கள் எல்லாவற்றிலும் தமிழரை முற்றிலும் ஒழித்து விட்டனர் .தொலை காட்சிகளில் கருப்பு முகமே இல்லாமல் செய்து விட்டனர் .தமிழ் விளம்பரங்களில் கூட வட இந்தியர் வந்து அசிங்கமாக தமிழ் பேசுகிறார்கள் .தமிழனுக்கு மிஞ்சி இருக்கும் தமிழ் நாட்டிலே ,இந்தியில் வியாபாரம் செய்கின்றனர் .சென்னை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் இந்தியில் பேசும் ஊழியர்கள்,'தண்ணீர் ' என்றால் முழிக்கிறார்கள் !தரணி ஆண்ட தமிழன் ,இன்று தமிழகத்தை கூட ஆள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறான் !
                       வடக்கு வாசல் திறந்திருப்பதால் ,தெற்கு நோக்கி தள்ளப்படும் தமிழன் ,குமரிக்கு கீழே கடல் தான் உள்ளது என்பதை மறந்து விட்டான் .கலைஞர் ஒரு முறை கூறினார் "தமிழனுக்கு போரிட தெரியும்;ஆனால் ,யாரிடம் போரிட வேண்டும் என்பது தான் தெரியாது !"உண்மை தான் .தமிழன் இன்னொரு தமிழனை அடித்தது தான் அதிகம் !"தேனீக்கள் கூட அதன் குடியிருப்புகளில் வேறு தேனீக்கள் வந்தால் கொட்டி கொன்றுவிடும் .நாய்களோ அதன் பகுதிகளில் அந்நிய நாய்களை அனுமதிப்பதில்லை .குலைத்து துரத்திவிடும் .உண்மைதான் ,நாமும் மற்ற பகுதிகளுக்கு வாழ செல்கிறோம் .ஆனால் சென்ற இடங்களில் எங்கும் நாம் அவர்களை அடிமைப்படுத்தி ஆளவில்லை .நாம் நல்லவர்கள் .ஆனால் நல்லவர்களை அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத அப்பாவிகள் !
இதைக்குறித்து சிந்திப்போம் !
கள்ளர்களுக்கு கதவை திறந்து வைத்தது போதும் !இடம் காப்போம் !நம் தமிழ் இனம் காப்போம் !திறந்த கதவை ஓங்கி அடைப்போம் !
இருப்பதைக் காப்போம் !இழந்ததை மீட்போம் !

Saturday, 1 October 2016

மின்சாரம் தாக்கி ,பேருந்து மோதி ,......

நம் நாட்டில் மட்டும் ,நாம் செய்யும் தவறுகளை மற்றவர்கள் மேலோ அல்லது மற்றவைகள் மேலோ பழி சுமத்தும் பழக்கம் பல காலமாக வலுவாக வேரூன்றி இருக்கிறது .
'ஏன்டா ,தலை வீங்கி இருக்கு ?'
இதற்கு பதில் 'ஒண்ணுமில்லம்மா ,வரும் போது நிலை இடிச்சிட்டு !'
ஏதோ ,நிலையே இவரை தேடி வந்து இடிச்சிட்டது போல !இவருடைய கவனக் குறைவால் ,இவர் தலையை நிலையில் கொண்டு போய் இடிச்சதை ,ஒத்துக்கொள்ளாமல் ,நிலை மேல் பழி சுமத்துவது நம் பண்பாட்டின் ஒரு கூறு .ஆங்கிலேயர்கள்  தமக்கு தலை வலி வந்தால் கூட 'I guess,I am developing head ache'என்பார்கள் .அதாவது 'நான் தலை வலியை உண்டாக்குகிறேன் 'என்ற பொருளில் சொல்வார்கள் .ஆனால் ,நம் நாட்டிலோ 'மின்சாரம்(அதுவாய் வந்து ) தாக்கும் ,பேருந்து மோதும் ,......எல்லாம் அதுவே நடக்கும் !நடக்கும் சம்பவங்களில் நம்முடைய பங்கு ஒன்றுமே கிடையாது போல  !
இந்த பொறுப்பை தட்டி கழிக்கும் போக்கு ,'எல்லாம் விதியின் செயல் ' என்ற ஒரு மூட நம்பிக்கைக்கு வழி வகுத்திருக்கிறது .
இந்த தவறான போக்கை  முற்றிலுமாய் கைவிட்டு ,நம் பொறுப்புகளை ,தவறுகளை ஒத்துக்கொள்ள பழகுவோம் !அதெல்லாம் விதி என்னும் நிலை தானே மாறும் !

Friday, 30 September 2016

அது ஒண்ணுக்கு மாத்திரம் ,மட்டும் தானா இந்த ஆத்திரம் ?



என்னங்க ,வீட்டை சுத்தி ஒரே குப்பை காடு ?

என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

அவனுக எங்க வேலை செய்றாங்க ?

நம்ம என்னங்க  பண்ண முடியும் !

===========================================

என்னங்க ,தெருவெல்லாம் ஒரே புகை ?

 என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

சொன்னா கேட்கவா போறாங்க ?

நம்ம என்ன பண்ண முடியும் !

===========================================

என்னங்க ,கழிப்பறை இல்லாமே பெண்கள் எங்க போகிறது ?

போராட்டம் எல்லாம் பண்ணிட்டோம் .

என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

நம்ம என்ன பண்ண முடியும் !

=========================================================

என்னங்க ,3 வயசு குழந்தையை பலாத்காரம் பண்ணியிருக்கான் ?

ஆமாங்க ,மோசமான பயலுக !

என்ன பண்றது !பாவம் !அவ்வளவுதான் ! 

நம்ம என்ன பண்ண முடியும் !

============================================================
நம்ம ஊரு மொட்டை கிணற்றிலே இதோட நாலாவது சாவு .
நாமெல்லாம் சேர்ந்து ஏதாவது பண்ணலாம்ல்ல ?
'என்னத்தை பண்றது ?
பஞ்சாயத்து தான் ஏதாவது பண்ணனனும் .
இதிலே எல்லாம் நாம என்னங்க  பண்ண முடியும் ?' 
---------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க ,அங்கே ஏதோ.... கலப்பு கல்யாணம்னு பேசிக்........?
டேய்ய்ய் !
எவண்டா அது பண்ணினது ?
டேய்ய்ய்ய் ...............
கூட்டுங்கடா நம்ம ஆட்களை !
எடுங்கடா .....விட்டுவிடுவமா அந்த பயலை ?
டேய்ய்ய் !டேய்ய்ய் !
=======================================================================

என்ன ஒரு வேகம் !என்ன ஒரு உணர்ச்சி !
ஆம் ,உணர்ச்சியுள்ளவர்கள் தாம் தமிழர் !

ஆனால் ,எதற்கு உணர்ச்சியுள்ளவராக இருக்கவேண்டுமோ 

அதை எல்லாம் விட்டுவிட்டு 

எதற்கெல்லாமோ 
எழுச்சியுடன் புறப்படும் கூட்டமா நாம் ?
உணர்ச்சி கொள்ளுவோம் !
எரிச்சல் அடைவோம் !
எதற்கு ?

நம்மை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலைக்கு ,

சொம்பை தூக்குவதை விட்டு விட்டு 
வீட்டில்கழிப்பறை கட்டும் பழக்கத்திற்கு  ,

ஒருவரை ஒருவர் மனிதனாக மதிக்கும் பண்பிற்கு  ,

ஊர்பொதுவான வசதிகளுக்கு 

ஒற்றுமையான உழைப்பு !

இதெற்கெல்லாம்  உணர்ச்சிப் படுவோம் !

ஒன்றாய்,நன்றாய்  உழைப்போம் !

Tuesday, 27 September 2016

நல்லது எது ,கெட்டது எது, நமக்காவது தெரியுமா ?


என் குட்டிப் பிள்ளை,பள்ளி முடிந்து  ஆவலுடன் ஓடி வந்தாள் .'அப்பா ,நான் பெரியவளானவுடன் உங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் !'என்று ஒரு குண்டை போட்டாள் !நான் சுதாரித்துக் கொண்டு   'இல்லைடா செல்லம் ,மகள் அப்பாவை கல்யாணம் செய்ய முடியாது ,கண்ணு 'என்றேன் .ஆனால் ,அவள் முகத்தில் இன்னும் ஒரு சந்தேகம் இன்னும் நிழலாடிக்கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது .'யாரோ இவளுக்கு இப்படி தப்பாக சொல்லிகொடுத்திருக்க வேண்டும் .யாராயிருக்கும் ?'என்று நினைத்துக்கொண்டு ,அவளிடம் கேட்டேன் .'ஏன்டா ,அப்படி சொன்னே ?' உடன் அவள் தன் தமிழ் பாடத்தில் உள்ள ஒரு கதையை காட்டினாள் .அதில் ஒரு மகா முனிவர் அவருடைய சொந்த மகளை திருமணம் செய்வதாக ஒரு கதை ! அந்தக் கதை எனக்கும்  தெரியும் .ஆனால் ,அதைப்  போய் சின்ன குழந்தைகளுக்கு பாடத்தில் வைத்த அரசின் மதியை நினைத்து வேதனைப்பட்டேன் .'நல்லது எது, கெட்டது எது என்று பிள்ளைகள் உணர ஆரம்பிக்கும் வயது ,இளம் வயது தான் .இந்த வயதில் ,நாம் தாம் அதை பிரித்து பார்க்க  ,குழந்தைகளுக்கு  சரியாக சொல்லிக்கொடுக்கவேண்டும் .அரசின் மதியீனத்தால் ,நம் எதிர் கால சந்ததி,குழம்பி , வழி கெடும் நிலை வரலாம் .நான் ,மகளிடம் 'அது தப்பான கதை .நம்பவேண்டாம் .ஆனால் பாடத்திற்க்காக மட்டும் படித்துக்கொள் 'என்று சொல்லி ,அவள்  மனதை மாற்றினேன் .
நல்லதை நல்லது என்றும் ,கெட்டதை கெட்டது என்றும்  உணருவோம் !
நம்முடைய பண்பாட்டில் ,கதைகளில் ,பழக்கங்களில் ,பல நல்ல காரியங்களை கெட்டவைகளாகவும் ,பல கெட்ட காரியங்களை நல்லவைகளாகவும் சித்தரிக்கும்,ஒரு போக்கு இருக்கிறது .அது போல் ,எதற்கு கொதிக்க வேண்டும் ,எதற்கு சும்மா இருக்க வேண்டும் என்பதும் தவறாக போதிக்கப்படும் போக்கும் இங்கே காணப்படுகிறது .நான் சிறுவனாக இருந்தபோதே,இவைகளில் பல  எனக்கு  புலப்பட்டன .தீபாவளி கொண்டாடும் நேரத்தில் ,நான் அம்மாவிடம் கேட்டேன் 'ஏம்மா ,ஒருத்தன் செத்ததை போய் கொண்டாடணும் ?'என்று கேட்டதற்கு பதிலாக 'சும்மா ,புளு  புளு ன்னு பேசா தடா ' என்ற அம்மாவின் பதில் என்னை திருப்தி படுத்தவில்லை .அதிலிருந்து ,நானே யோசித்து நாம் பண்பாட்டில் உள்ள தவறான போதனைகளை க்கண்டு பிடிக்க ஆரம்பித்தேன் .அவைகளில் சில இங்கே தருகிறேன் .
தப்பு தப்பா நாம் படித்ததும் ,உணர்ந்ததும்  ..

  • காவேரி ஆறு கமண்டலத்தில் இருந்து வந்தது !
  • அகத்திய முனிவர் தமிழை உருவாக்கினார் !
  • தெய்வங்கள் நல்லவர்களாக இருக்கவே  முடியாது !அவர்கள் திருடுவார்கள்,பெண்கள் பின்னால்  அலைவார்கள்,கொலை செய்வார்கள் ,சதி செய்வார்கள் ,மனைவியை அடிப்பார்கள் .....
  • நாம் எப்படியானாலும் குப்பையை தெருவில் எறியலாம் .அரசுதான் தெருவை  சுத்தமாக வைக்கவேண்டும்  .
  • எத்தனை குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறந்தாலும் ,நாங்கள் அதை மூடி வைக்க மாட்டோம் .ஆனால் போராடுவோம் !
  • தலைமேலிருக்கும் மின்சாரக் கம்பியை கூட கவனிக்காமல் தேர் இழுக்கலாம் .மின்கம்பி பட்டு யாராவது செத்தால் 'அவன் தலையெழுத்து !'என்ற போக்கு .
  • பாலை சாலையில் ஊற்றி போராடலாம் !உணவின்றி சாகும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !
  • பழைய துணிகளை ஏழைகளுக்கு கொடுக்க கூடாது !அவர்கள் வாங்கவும் கூடாது !அதற்கு பதில் பழைய துணிகளை எரிக்கலாம் !
  • ஆட்டோக்காரனுக்கு 10 ரூ அதிகம் கொடுக்கக்கூடாது ,ஆனால் கபாலி படத்திற்கு 2000 ரூ கருப்பு சந்தை சீட்டு வாங்கலாம் !
  • ஒரே தெருதான் .ஆனா ,பக்கத்து வீட்டு க் காரன்  சாகக்  கிடந்தாலும் உதவ மாட்டேன் !சே !அவன் கீழ் ஜாதியி ல்லே !
இன்னும் இதுபோல பல தப்பான போதனைகள் !நீங்களே ஓவ்வொன்றயும் ஆராய்ந்து நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுங்கள் .ஊடகங்கள் உரைக்கும் பொய்களை நம்பிவிடவேண்டாம் .

Monday, 26 September 2016

தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் வந்தாலும் ,இதை தமிழனுக்காக கண்டிப்பாக செய்யவும் !

  1. தமிழர்களுக்கு ஆட்சியில் 90% பங்கு 
  2. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதற்கு/எழுதுவதற்கு  தடை 
  3. தமிழில் படித்தவர்க்கு 90% வேலை வாய்ப்பு 
  4. ஊடகங்களில் கருப்பு தமிழர்களுக்கும்  பங்கு 
  5. கருப்பிற்கு எதிரான விளம்பரங்களுக்கு தடை 
  6. வடமொழி பெயர்களுக்கு தடை 
  7. இந்திக்கு தமிழ் நாட்டில் தடை 
  8. நிறுவனங்களில் 90% தமிழர் இட ஒதுக்கீடு 
  9. தமிழ் ,பள்ளிகளில் கட்டாய பாடம் .
  10. பெயர்ப் பலகைகள் தமிழில் மட்டும் கொள்கை .
  11. தமிழில் பேசுவது பெருமை இயக்கம் .                                                                                   

 

Sunday, 25 September 2016

காதல் கொலைகளில் தமிழ் படங்களின் முக்கிய பங்கு என்ன ?

காதல் சம்பந்தப்பட்ட  கொலைகளில்  தமிழ் படங்களின் முக்கிய பங்கு என்ன ?
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலிருக்கிறதா இந்த தலைப்புக் கேள்வி ?இந்த கட்டுரையை முழுதும் வாசித்து பார்த்தால் தலைப்பின் பொருள் நன்றாகவே புரியும் .
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் ,எப்படி அதை எதிர்பாலரிடம் சொல்வது ?அப்படி சொல்லும்போது ,நாம் எப்படி பதில் சொல்வது ?இதற்கெல்லாம் ,மற்ற பாடங்களுக்கு இருப்பது போல் கோனார் உரை கிடையாது .இதற்கெல்லாம் ,இளைஞர்  பதில்தேடுமிடம் ,திரை படங்களாகவே இருந்து கொண்டு இருக்கிறது .திரை படங்கள் இந்த மாதிரி காட்சிகள் அமைத்து ,இளைஞரின் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள் .அந்தக் காலத்தில் நாங்கள் பார்த்த எம் .ஜி .ஆர் . படங்களில் எல்லாம் ,தலைவர் பெண்களை தேடி அலைய மாட்டார் .நாயகிகள் அவரை தேடி வருமாறு நடந்து கொள்வார் !காதலை கொச்சை படுத்த மாட்டார் .அவர் படத்தை பார்த்தால் காதல் உணர்வு வரலாம் ஆனால் பால் உணர்வு கொப்பளிக்காது .பெண்களை மரியாதையுடன் நடத்த கற்று கொடுப்பார் .ஒரு போதும் புண் படுத்தும் வசனங்கள் அவர் படங்களில் வராது .
ஆனால் இன்றைய திரை காட்சிகளின் நிலைமை என்ன ?வசனங்களின் தரம் என்ன ?என்ன மாதிரி விதைகளை அவை விதைக்கின்றன ?கீழே பாருங்கள் ,விடை கிடைக்கும் !
  1. "ஒம் மூஞ்சிக்கெல்லாம் நயன்தாராவா கிடைப்பா ?ஏதாவது தேன் மொழி ,கயல்விழி ன்னு அலைவா !அவளை தேடி போ !"                                                                                                              விதைத்த விஷ விதைகள் : மூஞ்சியை பொறுத்து தான் பெண் கிடைப்பாள் ;சமஸ்க்ரித பெயர் பெண் ன்னா பெண் அழகு ;தமிழ் பெயர்ன்னா அசிங்கம் .                                                                                                           இந்த வசனம் எழுதினவன் ஓவ்வொரு தமிழனையும் கேவலப்படுத்தி இருப்பதோடு ,தோற்றத்தை பற்றி கீழ் தரமாக வர்ணித்திருக்கிறான் .இந்த எண்ணம் இளைஞர் நெஞ்சில் வேரோடி ,தன்னிடம் காதல் சொல்லும் ஆணிடம் மனம் புண் படும் விதத்தில் பதில் சொல்ல வைக்கலாம் .ஸ்வாதி ஏதோ ஒரு புண் படுத்தும் சொல்லை திரும்ப ,திரும்ப சொல்லியிருந்தால் அதற்கு காரணம் அவள் அல்ல ,இந்த வசனம் தான் என்பதை மறுக்க முடியாது .
  2. "எனக்கு கிடைக்காத அந்த சொர்க்கம் ,எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன் !"                       விதைத்த விஷ விதைகள்:'அவளை தீர்த்து விடு'என்ற அறிவுரை .அந்த காலத்தில் 'அவள் எங்கிருந்தாலும் வாழ்க 'என்ற அறிவுரை தான் காணலாம் . 
  3. இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரி யில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.                                                                            விதைத்த விஷ விதைகள்:சேவை செய்யும் செவிலியரைக்கூட 'சைட் ' அடிக்கலாம் என்ற விஷ எண்ணம் 
  4. அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்க்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞ்ச ரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' !                                                                                                                    விதைத்த விஷ விதைகள்:வன்முறை ,அரிவாள் கலாச்சாரம் 
  5. இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப் படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  6. ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  7. அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
  8. ஒரு படத்தில் நாயகன் கருப்பு என்று நாயகி காதலிக்க மறுப்பதாகவும் ,உடனே நாயகன் வெள்ளையாக லேகியம் வாங்கி அதில் குளிப்பதாகவும் ஒரு கேவலமான காட்சி வருகிறது .  'கருப்பு'தமிழனின் பெருமைக்குரிய நிறம் .அதை வெளியிலிருந்து ,வாழ வந்தவர்கள் .நம்மை ஆள வந்தவர்கள் ஆகி ,சிறுமை படுத்தி ,வெளிரிய தோல் நிறத்தை கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் .தமிழ் ஊடகம் முழுவதும் கருப்பு ஒருவரும் இல்லாமல் ஒழித்து விட்டார்கள் .அப்பாவி தமிழனே, தமிழனை நிறத்தை வைத்து கேவலமாக பேச வைத்து விட்டார்கள் .
இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இத நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .காதல் கொலைகளில்  முக்கிய பங்கு தமிழ் திரைக்கு உண்டு என்பது உறுதி .

Saturday, 24 September 2016

தமிழை சிதைக்கும் காரணிகள் !

      எந்த ஒரு தமிழ் வார இதழ் வாசித்தாலும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  பார்த்தாலும் , ஒன்று மட்டும் பொது வாக காண ப்படுகிறது ..அது என்ன வென்றால் ,அதில் சுமார் 30% சொற்கள் ஆங்கிலமாக கலந்து இருப்பது தான்  .இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் விரைவில் தமிழ் மொழி ஒரு சிதைப்பட்ட 'தங்க்லீஷ் 'ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது . இதை தமிழர்கள் ஆகிய நாம் எப்படி தடுக்கலாம் ?
தமிழர்களின் அளவில்லா ஆங்கில  மோகம் 
                           தமிழ் நாட்டை பொருத்தவரையில் , ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலிருந்து ஆங்கில மோகமும் நம்மை ஆண்டுகொண்டு இருப்பதை  யாராலும் மறுக்கமுடியாது . இந்த ஆங்கில ஆதிக்கம், நம் சிந்தனையையும் ஆண்டு கொண்டு தமிழை ,தமிழில் பேசுவதை புறந்தள்ளிக் கொண்டிருப்பதை நம் கண் கூடாக காண்கிறோம் .நம் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பெருமையுடன் சேர்த்து ,அவர்களை அதில் பேச ஊக்குவித்து ,எல்லோரிடம் சொல்லி மகிழும் ஒரே இனம் நம் தமிழ் இனந்தான் !  இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ? நம்மை அறியாமலேயே நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறோமா  ? ஏன் இந்த சுய வெறுப்பு ?
என்னுடைய சிங்கை அனுபவம் 
                           சிங்கப்பூர் சென்றி ருந்த போது ,'வாட்ச் ' வாங்குவதற்காக ,ஒரு கடையில் சென்று  நான் 'வாட்ச் ' வேண்டும் என்றேன் .அங்கிருந்த தமிழ்ப்  பெண் 'அண்ணாச்சி ,மணிக் கடிகாரமா ?' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும்  'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள்  ! சிறிது நேரம் கழித்து தான் எனக்கு நான் ஆங்கிலத்திலே பதில் சொல்வதும் , அவர்கள் தூய தமிழ் பேசுவதும்  புரிந்தது ! ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை ? என் மேல் தப்பா ?அல்லது நம்முடைய தமிழ் சமுதாயம் மேல் தப்பா ?
                         இதைப் போல் இன்னொரு சம்பவம் .இந்த முறை இது நடந்தது கன்னியாகுமரியில் .சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் தமிழில் ஏதோ கேட்டார் .நான் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கூறினேன் .இரு முறை என் ஆங்கில பதிலை கேட்டுவிட்டு ,அவர்  என்னிடம் "நீங்க ,தமிழன் தானே ? பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க ?" என்று ஓங்கி  கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு ! சே !இனிமேல் இருந்து தமிழ்ல தான் பேசணும் என்று முடிவெடுத்தது தான் ,அதன் பிறகு ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை என்று சொல்வேன் என்று எதிர் பார்க்காதீர்கள் ! இன்னும் முயன்று கொண்டுதானிருக்கிறேன் ,முடியவில்லை .ஏன் ?
நம்மை இயக்கும் நம் உள் மனது !
                                 நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் சிந்தித்து செய்பவை அல்ல .சுமார்  75% அனிச்சை(reflex) செயலாக நடை பெறுவது தான் .இந்த அனிச்சை செயல்கள் உள்மனதின் ஆழத்தில் திட்டமிடப் பட்டு(programmed) பதிவாயிருக்கிறது .நாம் நினை த்தால் கூட இதை மாற்றுவது கடினம் .உ-ம் .யாராவது என் காலை மிதித்தால் நான் 'அம்மா ' என்று கத்தாமல் 'தாத்தா ' என்று கத் து வே ன் என்று  முடிவெடுத்து பாருங்கள் !என்ன முயன்றாலும்  'அம்மா' என்று தான் கத்த வரும் ! ஏன் என்றால் அதுஉள்மனதின் பதிவு.அதை உள்மனது நுழைந்து தான் மாற்ற முடியும் .உள்மனதில் இதைப்  பதிப்பது யார் ?
உள்மனதை ஊடுருவும் ஊடகங்கள் !
                          நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய நடை ,உடை,பாவனை எல்லாவற்றையும் பாதித்தது என்னுடைய குடும்பம்,ஆசிரியர்,சமூகம் ,அப்புறம் ஒரு அளவுக்கு திரை ப்படங்கள் போன்றவை தான் .என்னுடைய தமிழை தீர்மானித்ததும் இவை தான் .தொலைக் காட்சியோ ,வலைத்  தளங்களோ இல்லாத காலம் அது .என்னுடைய தமிழ் ஆங்கிலம் அதிகம் கலக்காத அழகு தமிழாக இருந்தது .ஆனால் இப்போது என் 1ம் வகுப்பு படிக்கும் பேத்தியிடம் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது ,என்கிற அவல நிலை க்கு தள்ளப் பட்டிருக்கிறோம் .காரணம் ,நம்மை சூழ்ந்திருக்கும் எல்லாம் நம்மை பாதிக்கின்றன .ஆங்கிலக் கல்வி ,ஆங்கிலம் பேசினால்தான் உயர்வு என்று நினைக்கும் ஆசிரியர் ,நண்பர்கள் ,சமூகம் ,ஊடகங்களில் 30% ஆங்கில ஊடுருவல் ,நடிகர்களின் ஆங்கில உரையாடல்கள் இவை யாவும் நம் உள் மனதை ஆள்வதால்,நாம் முடிவெடுத்தாலும் கூட தூய தமிழில் பேசுவது ஒரு பெரிய சவாலாகத் தான் இருக்கிறது .இவைகளில் தொலை காட்சி நிகழ்ச்சிகள், தாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . பல நிகழ்ச்சிகள் பெயரே ஆங்கிலம் கலந்த பெயராகத் தான் இருக்கிறது.தற்போதைய ஊ டகங்கள் ,தொலைக்காட்சி ,வலை  மற்றும் அலை பேசி மூன்றும் உடலோடும் உள்ளத்தோடும் பிரியாத ஒன்றாகிவிட்டன .அதனால் அவைகளின் தாக்கத்தை என்ன முயன்றாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது தெளிவான உண்மை.
'பண்ணி ' தமிழ் படுத்தும் பாடு !
                              தமிழர்கள் எல்லோரும்  இப்போது ஒரு விதமான  'பண்ணி' தமிழுக்கு மாறி விட்டார்கள்.அது என்ன, 'பண்ணி ' தமிழ் ?அது இது தான் !
                    கொஞ்சம் .'ட்ரை ' பண்ணிப் பார்த்து ,முடியலைன்னா 'கட் 'பண்ணிருங்க . 'மிக்ஸ் ' பண்ணும் போது 'கேர் புல்லா ' இருங்க ,அந்த 'லெவல் ' போயிடும்.இந்த தமிழ் நீடித்தால் தமிழ் ' ஐ சி யு வார்டில் '  அட்மிட் ' பண்ணும் நாள் தூரத்தில் இல்லை ! 
               இந்த அவல நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம் ? தமிழை எப்படி காக்கலாம் ? இதுவரை இல்லாத இந்த ஒரு புதிய அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்ளலாம் ?
தமிழைக்  காக்க என்ன செய்யலாம் ?
  • முதலில் தமிழுக்கு பெரிய  அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து ,,அந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக  பரப்ப வேண்டும் .அழிவின் விளிம்பை நோக்கி தமிழ் செல்வதை குறித்து எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .எதற்ககெல்லாமோ விழிப்புணர்வு பேரணி நடத்தும் நாம் இதற்கும் நடத்தலாமே ! 
  • நாம் ஒவ்வோருவரும் அன்றாடம் பேசும் தமிழில் ஆங்கில சொற்களை தவிர்த்து பேச வேண்டும் .இது கடினமாக இருந்தாலும் நம் தாய்க்காக செய்வதாய் நினைத்து கடமையாக செய்ய வேண்டும்.
  • நம் குழந்தைகள் நம்மைப்  பார்த்து கற்றுக்கொள்ளும் .இது அவர்கள் ஆங்கில அறிவை பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
  • நம்முடைய சமூக ஊடகங்கள் பதிவுகள் தூய தமிழில் இருக்க வேண்டியது அவசியம் .அப்படி இல்லாத பதிவுகளை அன்புடன் கண்டிக்கலாம் .இதை நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேன்.
  • தொலை காட்சி நிகழ்ச்சிகள்/வார இதழ்கள் போன்றவற்றில்  ஆங்கிலம் கலந்தால் நாம் எதிர்ப்பை கருத்தாகக் கூறலாம் .
  • தூய தமிழ் நிகழ்ச்சிகள் /இதழ்கள் ஆகியவைகளை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கலாம் .
  • எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிழ்  பேசுவதை நாம்  பெருமையாக  கொள்ள  வேண்டும் .
                              ஆங்கில  புலமையை  வளர்த்து கொள்வதில்  தப்பில்லை .அது  பிழைப்பிற்காக  ! .ஆனால்  தமிழில்   பேசுவது நம்  தாய்க்கு  செய்யும் மரியாதை,ஒரு அன்பு ! .இரண்டு மலையாளிகள்  சந்தித்தால் அவர்கள்  மலையாளத்தில்  பேசுவார்கள் .இரண்டு தெலுங்கர்கள்  சந்தித்தால் தெலுங்கில்  பேசிக் கொள்வார்கள் .ஆனால் இர ண்டு  தமிழர்கள்  சந்தித்தால் மட்டும் அதிகமாக  ஆங்கிலத்தில்  தான் பேசிக்கொள்வார்கள் .
கவிஞர் ஆழிமலரின் குறுங்கவிதை  ஒன்று என்  நினைவுக்கு வருகிறது .
இதோ அந்த கவிதை .
                                                                                   ஆங்கிலம் 
தமிழ் அறிந்த ஒரு தமிழனும் 
தமிழ் அறிந்த  இன்னொரு தமிழனும் 
பேசும் இணைப்பு மொழி !
மறக்க வேண்டாம் !
                            இந்த அவல நிலை மாறி" கல் தோன்றி மண் தோன்றா  காலத்தே, முன் தோன்றி மூத்த குடியின் பெருமையான தமிழைக்  காக்க தலையும் தருவேன்" என்று சொல்லும் தமிழர்கள்  இருக்கும் இந்த தமிழ்நாட்டில்,அது வெறும் சொல்தானோ என்று நினைக்க தோன்றுகிறது .  நான் சொன்ன தெல்லாம் செய்வது மிக எளிது தான் .முதல் செய்கையாக ,இந்த கட்டுரையை ,குறைந்தது 10 நண்பர்களுக்காவது பகிருங்கள் .பள்ளிகளில் பரப்புங்கள் .
இணைந்து தமிழை உயர்த்துவோம் !
.வாழ்க தமிழ் !. 
('வலைத் தமிழ்' தளத்தில் ஏற்கெனவே  பிரசுரமான என் கட்டுரை )


Friday, 23 September 2016

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பரிதாப முகத்திற்கு காரணம் என்ன ?

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பரிதாப முகத்திற்கு காரணம் என்ன ?சீனா முதலிடத்தில் இருக்கும் போது ,கேவலம் ஒரு பதக்கம் கூட நாம் வாங்க முடியாமல் இருப்பத்திற்கு  காரணம் என்ன ?
நாம் இங்கு  இருப்பவர்களில் நல்ல தகுதி உள்ளவரை அனுப்புகிறோமோ ?நீச்சல் போட்டிக்கு ஆள் எடுக்க ,நீரிலே பிறந்து ,நீரிலே வளர்ந்து ,நீரிலே மடியும் ஏழை மீனவரை தேர்ந்தெடுத்து,உற்சாகப்படுத்தி , வெளி நாட்டவரை கொண்டு பயிற்சி கொடுத்து ஒலிம்பிக்கிற்கு அனுப்பலாம் .மலை இனத்தவரை வில் /சுடுதல் போட்டிக்கு அனுப்பலாம்.ஆனால் நாமோ மேல் ஜாதி ,இந்தி மொழி ,வடஇந்தியன் ,பணக்காரன் என்றல்லாம் பார்த்து ,தகுதியில்லாதவர்களை அனுப்பினால் ,0 பதக்கம் தான் கிடைக்கும் !இந்தியர்கள் ,மற்ற இந்தியர்களை தேர்ந்தெடுப்பது ஏதாவது ஒரு வழியில் 'ஆள் ' பார்த்து எடுப்பது என்பது வாடிக்கை .இது மாறும் வரை இந்திய ஒலிம்பிக்கில் தலையை தொங்க போடவேண்டியது தான் ! இந்த இந்திய போட்டியாளர்  பட்டியலை பாருங்கள் .தென் இந்தியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

தகுதியானவர்களை தேர்ந்தெடுப்போம் !தலை குனிந்த இந்தியாவை ,தலை நிமிர்த்துவோம் !


படம் நன்றி :கூகுள் 

பயப்படாதீர்கள் !இந்தியினால் தமிழ் நிச்சயமாக அழியாது !

தமிழ் அழிவதென்றால் ,நிச்சயமாக அது இந்தியினால் இருக்காது !பின்னே எதினால் அழியும் ?யாரினால் அழியும் ?
 இதை வாசியுங்கள் ,நீங்கள் அறியாத உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் !
=======================================================================  
தமிழ் தாயின் புலம்பல் !
==========================
ஒரே பயமாக இருக்கிறது !
நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது !
என்ன ஆகுமோ தெரியவில்லை !
மயக்கமாக வருகிறது !
மனமெல்லாம் ஒரு சஞ்சலம் !
நினைக்கவே இல்லை !
என் சொந்த பிள்ளைகள் தான் !
 இப்படி செய்வார்களா ?
என்னிடம் பால் குடித்தவர்கள் தான்  ,
என்னால் வளர்ந்தவர்கள் தான்  ,
என்னை அழிக்க நினைப்பார்களா ?
சே !இருக்காது !
'வெறும் மனப் பிரமையாகத்தான் இருக்கும் '..
என்று கூட நினைத்தேன் !

ஆனால் ,
உற்று பார்த்தால் ....
உண்மை தான் !
அவர்கள் கைகளில் பளபளக்கும் கத்திகள் ...
எல்லாம் என்னை தாக்க !
பெற்ற தாயை தாக்க !

உண்மைதான் !
முதலில் 'நான் யார் ?'என்று 
நீங்கள் கேட்பது புரிகிறது !
என்னைத் தெரியவில்லை ?
நான்,உங்கள் தாய் !
தமிழ்த் தாய் !
புலம்புவது நான் தான் !
உங்கள் தாய் தான் !

அவர்கள் கைகளில் இருக்கும் கத்திகள் ?
'ஆங்கிலம்' என்ற கூர்மையான கத்திகள் !
சொல்லுக்கு சொல் 
அதைக் கொண்டு 
என்னைக் குத்துகிறார்கள் !

குத்தி ,குத்தி அதை 'என்ஜாய் ' பண்ணுகிறார்கள் !
இருக்கட்டும்,இது அவர்கள் காலம்  !

அந்தக் காலத்தில்
 திரவியம் தேட வெளி நாடு 
 சென்ற என் பிள்ளைகள் 
தமிழை ,
தேடி  சென்ற  நாடுகளில் விட்டார்கள் !
நட்டார்கள் !
அவர்கள் மொழியை என்னில் நட வில்லை !

ஆனால் இன்று என் பிள்ளைகள் ,
அலுவல் ஆங்கிலத்தை
அங்கே  விடாமல் 
 அழைத்து வந்து ,
தத்து எடுத்து 
எனக்குள் நுழைத்து ,
என்னை பித்தாக்குகிரார்கள் !
அசுத்தப் படுத்துகிறார்கள் !

என் பிள்ளைகளே !
ஆங்கிலத்தில் தமிழை கலந்து 
அயல் நாட்டில் போய்  பேசி பாருங்கள் !
அடியும்  உதையும் தான் 
அளவின்றி கிடைக்கும் !

தமிழில்  ஆங்கிலத்தை கலந்து தமிழ் நாட்டில்  பேசி  பாருங்கள் !
பரிசும்,பாராட்டும் பலரால் கிடைக்கும் !
சே !என்ன கேவலம் ! 
அதுவும் நான் பிறந்த 
என் தமிழ் நாட்டில்  !

எனக்கென்று பரிந்து பேச யாருமே இல்லையா ?
எங்கே என் தமிழ் பால் குடித்த   பிள்ளைகள் ?
கவி பேரரசும்,கவிக்கோவும் எங்கே  !
கண் காணும் தூரத்தில்
 கலைஞர் கூட காண வில்லையே  !
எதற்கெல்லாமோ குரல் எழுப்பும் சீமான் எங்கே ?
வைகோ ,தொல் எல்லாம் எங்கே ?
 
என்னை வைத்து
 இனி வாக்கு வாங்க
முடியாதென்று நினைத்தார்களோ  ?
தெரியவில்லை !
தொலைக் காட்சியும் உடகங்களும்
 ஆங்கிலதிற்கு அடிமை
 முகவர்களாக ஆகி 
என்னை முற்றிலும் விலக்குவது ,
உங்களுக்கு தெரிகிறதோ ,இல்லையோ 
எனக்கு தெளிவாக  தெரிகிறது !

ஒரு குவளைப் பாலிற்கு ஒரு துளி விடம் போதும் !
முற்றிலும் அழித்து அதை முழுதாய் ஒழிக்க !
நீங்களோ துளி துளியாய் 
ஆங்கில விடத்தை 
என் தொண்டைக் குழிக்குள் தொடர்ந்து இடுகிறீர்கள் !

'முயன்று ' என்று தமிழில் சொன்னால்  புரியாதா ?
ஏன் 'ட்ரை ' என்கிறீர்கள் ?
அப்படி சொல்லி 'முயன்று' பார்த்தீர்களா ?
அலை பேசி எண் கேட்டால் 
ஒன்பது,ஆறு ,மூணு ,ஐந்து ,ஏழு ...என்று சொன்னால் புரியாதா ?
ஏன் 'நயன் ,சிக்ஸ்,த்ரீ , ......சே !

எதற்காக என்னை
திட்டம் போட்டு அழிக்கிறீர்கள்  ?
பணத்திர்க்காகவா ?
பவிசிர்க்காகவா ?
எதற்காக எனக்கு கல்லறை கட்டுகிறீர்கள் ?
எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும் !

கல்லறை கட்டும் பணியில்
  'கர சேவை 'செய்பவர் யார்,யார் ?

இதோ அவர்கள் பட்டியல் !
அனைத்து தொலைக் காட்சிகளும் .பதிப்புகளும் !
திரைத் துறையும் ,அதன் கலைஞர்களும் !
தின செய்தி தாள்களும் ,கல்விக்கூடங்களும் !
ஊடகங்களும் ,தொழில் நுட்பமும் !
ஆசிரியர்களும் ,மாணவர்களும் !
அரசாங்கமும் ,எதிர்க் கட்சியும் !
பணக்காரனும் ,பாமரனும் !
நீங்களும் ,உங்கள் பிள்ளைகளும் !
மொத்தமாய் சேர்ந்து ,ஒற்றுமையாய் 
எனக்கு குழி தோண்டுகிறீர்கள் !
தமிழர்கள் மற்ற எல்லாவற்றிலும் 
பிரிந்து இருந்தாலும்,
எனக்கு குழி தோண்டுவதில் என்ன ஒரு ஒற்றுமை !

சென்னைப் பிரளயத்தில் 
இமயமாய் உயர்ந்து நின்று 
எல்லோரையும் காப்பாற்றிய இளைஞர்களே !
இந்தி மிரட்டிய போது 
எனக்காக போராடிய இதயங்களே !
எங்கு சென்றீர்கள் என் இன்னலான இந்த  நேரத்தில் ?
பொங்கி எழுங்கள் !

ஆங்கிலத்தை அலுவலில் மட்டும் அழுங்கள் !
இல்லத்திலே ,
உங்கள் உள்ளத்திலே ,
நான் மட்டும் ,
உன் தாய் மட்டும் ,
தமிழ் தாய் மட்டும்,
 தங்கட்டும் !
நாவில் தமிழ் மட்டும் 
நடமாடட்டும் !

எனக்காகக தோண்டி கொண்டிருக்கும் ,
குழியில் 
ஆங்கில மோகத்தைப் போட்டு ,
முழுதுமாய் 
குழியை மூடுங்கள் !
'கல் தோன்றாக் 
காலத்தில் தோன்றிய 
என்னை 
இன்னும் மேன்மை படுத்துங்கள் !
நான் தாய் என்றாலும் ,
கன்னித் தமிழ் தான் !

ஆங்கிலத்தை அறவே விலக்குங்கள் !
என் வலியெல்லாம் மாறும் !
வளமாய் வாழ்வேன் !
இன்னும் பல ஆயிரமாண்டு ! 
நானும் வாழ்வேன் !
நீங்களும் வாழ்வீர்கள் !
Photo