Sunday, 1 August 2021

சார்பட்டா பரம்பரை --இறுதியில் குத்து வாங்கியது யார் ?

 


சமீபத்தில் அமேசான் ப்ரைம் களத்தில் வெளியிடப்பட்ட தமிழ் படம் என்று சொல்லப்படும் சார்பட்டா பரம்பரை என்ற,  படத்தை பார்த்தேன். இயக்குனர்  பா. ரஞ்சித்தின் இந்த படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே பலர்  விமர்சனம் பலவிதமாக  செய்திருக்கிறார்கள். விகடன் குழு 45 மதிப்பெண் தான்  கொடுத்திருக்கிறது. அந்த மதிப்பெண்ணை பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .நானும் அதை  ஏற்றுக்கொள்ளவில்லை. 

மற்ற விமர்சகர்கள்  சொல்லாத சில  புதிய புள்ளிகளை தான் நான் இங்கு சொல்ல விழைகிறேன். படத்தின் களம் 1970 களின் வடசென்னையாகும். அங்கு முகமது அலி போன்ற  உலகப் பெயர் பெற்ற குத்துச்சண்டை வீரர் அளவுக்கு குத்துச்சண்டை வீரர்கள் இருந்தார்களாம். அவர்கள் 2,3 பரம்பரையாம் . ஒன்று சார்ப்பட்டா பரம்பரையாம் . இன்னொன்று,இடியாப்ப பரம்பரையாம் . இவர்களுக்குள் போட்டி நடக்குமாம்.ஊரே திரண்டு வந்து பார்க்குமாம். இத்யாதி இத்யாதி...

                                         இந்த கதை எப்படி பா. ரஞ்சித்துக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. கூகுள் தேடுதலில் பார்த்தால் சார்பட்டா என்ற சொல்லே உலகில் எங்கும் கிடையாது என்பதுபோல் பதில் வருகிறது. அந்த சொல் தேடுதலில், இந்தப் படத்தை தவிர அந்த சொல்  வேறு எங்குமே காண வரவில்லை.  ஆக, சார்பட்டா பரம்பரை என்று ஒரு பரம்பரை பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை.1970 வாக்கில் எனக்கு தெரிந்து, சென்னையில் குத்துச்சண்டை மைதானம்  boxing ring சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றில் மட்டும்  தான் இருந்தது. அங்கு மிகவும் பணக்கார,உயர் வர்க்க  மாணவர்கள் மாத்திரம் பங்கெடுக்கும் ஒரு  விளையாட்டாக அது இருந்தது. அதைத் தவிர சென்னையில் எங்கும் குத்துச்சண்டை நடந்தததாக சரித்திரப் பதிவுகள் எதுவும் கிடையாது. எனினும், 1976 ல் நெருக்கடி நிலை  முடிந்தபின் பொது இடங்களில் குத்துச்சண்டை போட்டி நடத்தக்கூடாது என்ற அரசு ஆணை வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆக, குத்துச்சண்டை போட்டிகள் பொதுவிடங்களில் அதன் முன்னர்  நடந்ததாக தெரிகிறது .

                                              இனி இந்த படத்தைப் பற்றி பேசலாம். அந்த காலத்தில், பட இயக்குனர்கள் படத்தின் காலத்தை  முதலில் நமக்கு ஏதோ ஒரு வகையில் அறிமுகம் செய்து வைப்பார்கள். அந்த அறிமுகத்தின் பின், நாம் அந்த காலகட்டத்துக்குள் எளிதாக நுழைந்து ஒன்றிவிடுவோம். இப்போதுள்ள இயக்குனர்களுக்கு அந்த மாதிரி திறமை எதுவும் இல்லை. பா. ரஞ்சித் இந்தப்படத்தின் காலப் பின்னணியை எங்கும் அறிமுகப்படுத்தவில்லை.சிறிது நேரத்தில்  நாமாக புரிந்து கொள்ள வேண்டும். புதியதாக நாம் அறியாத  ஒரு விளையாட்டு . அந்த குத்துச்சண்டை விதிகளை பற்றி யாராவது பேசுவதாக ஒரு காட்சியும் இல்லை. அப்படி இருந்திருந்தால் பார்வையாளர்களுக்கு இந்த குத்துச்சண்டை அடிப்படை பற்றி அறிய உதவியிருக்கும். அப்படி ஒரு காட்சி இல்லாததால், குத்துச்சண்டை பற்றி   ஒன்றும் தெரியாமல்  அவர்கள் பாட்டுக்கு குருட்டாம் போக்கில் ரசிகர்கள் பார்க்க வேண்டியது தான். ஆர்யா, ரங்கன் வாத்தியாரின் ரசிகன் என்பதையும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் மனதில் வைத்து ஆராதிக்கும் ஒருவன் என்பதையும் முதலில் தெளிவு படுத்தவில்லை. இயக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளது. பல காட்சிகள் துண்டு துண்டாக, ஒரு தொடர்பில்லாமல் ஒட்டப்பட்டது போல் உள்ளது. ஆர்யா எதற்காக அவ்வளவு குடிக்கிறார், பின்னர் தாயை போய் ஏன் அடிக்கப் போகிறார்,பின்னர் மன்னிப்பு கேட்கிறார்  என்பதெல்லாம் ஒரு தெளிவே  இல்லை. 

ஒரு கட்டத்தில் குழப்பம் அதிகமாகும்போது, படத்தை பார்க்காமல் அதோடு நான் நிறுத்திவிட்டேன்.முழு படத்தையும் பார்க்க என்னால் முடியவில்லை. பின்னணி இசையமைப்பு கொஞ்சம் கூடகாட்சிகளுக்கு  பொருத்தமாக இல்லை. நடிப்பவர்கள் ஒருவரும் தமிழர் சாயலில் இல்லை, ரங்கன் வாத்தியாரை தவிர. வேம்புலி மூக்கு ஏதோ வேறு ஒரு மாநிலம் போல் தோன்றுகிறது. இன்னொரு பெரும் பிழை,தெலுங்கு  நாயக்கர்களை,தமிழ்  தலித்துகளாக காட்டுவது. முதலிரவில் எந்த தலித் பெண்ணும் இப்படி கேவலமாக ஆட மாட்டார்.

 மொத்தத்தில், இந்த படத்திற்கு,விகடன் கொடுத்த 45 அதிகம் . 25/100 கொடுக்கலாம் என்பது என் கருத்து. சங்கராபரணம், பாகுபலி, கபாலி  போன்ற படங்கள் வெற்றியடைய முக்கிய காரணம், அதை சுற்றி ஊடகங்கள் போட்ட கூச்சல் தான்! அதேபோல பெரும் கூச்சல் போட்டு, சார்ப்பட்டா பரம்பரையும் வெற்றிப்படமாக காட்டிவிட்டார்கள்! ஆனால் உண்மை என்னவென்றால்,இறுதியில் குத்து வாங்கியது யார் என்றால்  படம் பார்த்த ரசிகர்கள் தாம் என்று ஐயமின்றி கூறலாம் ! அதுதான் எனக்கு மிஞ்சியது!

Tuesday, 20 July 2021

தமிழ் திரைப்படம் எடுக்க தகுந்த நாவல்/புதினம் 'ராயனின் கதறல் '--விமர்சனம்

    ராயனின் கதறல்      


                                

                                      சமீபத்தில் ஆங்கிலத்தில் 'ராயனின் கதறல்'என்ற ஒரு ஆங்கில சுயசரிதை புதினத்தை வாசித்தேன்.மிகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது. கதைக்களம் தமிழ் நாடு .காலம் ,1920 ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது . கதையின் நாயகன் ,ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உதித்த கிளர்ச்சியாளன் .உரிமைக்காக போராடுபவன் .அடக்குமுறையை கண்டு அஞ்சாதவன் .மனதில் உறுதிகொண்டவன் .ஆனால் ,வயதில் மூத்த கிழவன் !குட்டி சாம்பான் அவன் பெயர் ! ஜமீன்தாரின் அதிகாரம் ஓங்கியிருந்த காலமது .குட்டி சாம்பான் செய்த ஒரு செயல் ,ஜமீந்தாரை கோபமூட்டுகிறது.அப்படி என்ன செயல் செய்தான்?அரண்மனை நகைகளை திருடிவிட்டானா?ஜமீன்தாரின் பெண்ணை கெடுத்துவிட்டானா?இல்லை,ஜமீன்தாரை அவமானமாய் பேசிவிட்டானா? என்னவென்று தெரியாது .அதை ஒன்றும் சொல்லாமல் வயதான குட்டி சாம்பானை ஒரு மரத்தில் கட்டிவைத்து கதற கதற அடிக்கிறார்கள் ஜமீன்தாரின் ஆட்கள் !

                                 அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த குட்டி சாம்பானை,பட்ட பலமான அடி முற்றிலும் மாற்றிவிடுகிறது .அவனுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் ஜமீந்தார் அவ்வளவு கோபப்பட்டார் என்று.ஏன் ?

                 குட்டி சாம்பான் குடிசை ,ஜமீன்தார் அரண்மனை தெருவுக்கு அடுத்த தெருவில் இருந்தது. அந்தப் பகுதியில் குட்டி சாம்பான் சிறியதாய் ஒரு வீடு கட்ட, ஒரு செங்கல் சூளை அமைத்திருந்தான் .அந்தச் சூளையிலிருந்து எழும்பிய புகை,அனுமதி இல்லாமல்,ஜமீன்தார் அரண்மனைக்குள் சென்றுவிட்டது! அதற்காகத்தான் இந்த தண்டனை!

                       அடியில் துவண்டாலும் ,மனதில் கொஞ்சம் கூட சாம்பான் துவள வில்லை.மாறாக விழுந்த அடிகள் அவன் மனதில் ஒரு புது முடிவு எடுக்க தெம்பு கொடுத்தது.'தவறே செய்யாத தனக்கு தண்டனை ஏன் வந்தது? தன்னுடைய தாழ்ந்த சாதி தானே இதற்கு காரணம் ? சாதியை மாற்றமுடியாது, ஆனால் சமுதாய நிலையை மாற்ற முடியும். ஆம், நான் ஒரு விவசாயக் கூலி, அதனால் தானே அடிக்கிறார்கள்.ஆனால் என் மகன் விவசாயக் கூலியாக இருக்கவிட மாட்டேன். அவனை நல்ல படிக்க வைத்து, சர்க்கார் உத்தியோகத்தில் அமர வைப்பேன் . என்னை அடித்தவர்கள் எல்லாம் என் மகன் முன் கை கட்டி நிற்பார்கள். இந்த,தீண்டத்தகாத என் தலைமுறை,எனக்கு பிறகு ஒரு எஜமான தலைமுறையாக மாறும். இது சத்தியம்',என்று மனதுக்குள் ஒரு முடிவெடுத்தார்.

                      அதன் பின்னர் குட்டி சாம்பான் எப்படி ஒரு புதிய எஜமான தலைமுறையை உருவாக்குகிறார் என்பதுதான் கதை. வழியில் எவ்வளவோ எதிர்ப்புகள்.எவ்வளவோ தடைக்கற்கள். எல்லாவற்றையும் தாண்டி தாண்டி குட்டி சாம்பானின் மகன் ஆதி நன்றாக படித்து, அந்த காலத்திலேயே, சென்னையில் பிரசித்தமான பிரசிடென்சி கல்லூரியில் போய் இன்டர்மீடியட் படிப்பில் சேருகிறான்! அவனுடைய மாவட்டத்திலேயே அவன் ஒருவன் தான் பிரசிடென்சி கல்லூரியில் சேரும் அளவு தகுதி பெற்று இருக்கிறான். இதற்கு உதவி ஒரு பிராமண தலைமை ஆசிரியர் செய்கிறார். கல்லூரி படிப்பின் பின் பிரிட்டிஷ் அரசின், அதிகாரம் வாய்ந்த பத்திர பதிவுத்துறையில் நுழைகிறான் குட்டி சாம்பானின் மகன் ஆதி ! அவன் இப்போது சர்க்கார் ஊழியன். யாரும் அவனை சீண்ட முடியாது.தீண்டத்தகாதவனாக நடத்த முடியாது.அப்படி செய்தால்,அது பிரிட்டிஷ் அரசை அவமதித்ததாக கருதப்படும்!ஆதி பதவி உயர்வு பெற்று மாவட்ட பதிவாளராக ஆகி ஓய்வு பெறுகிறார்.

                             ஆதியின் நான்கு மகன்களும் சுதந்திர இந்தியாவில் நல்ல உயர்ந்த பதவிகளை பெறுகிறார்கள். அதில் இரண்டாவது மகன் சூரஜ் ஒரு பெரிய வங்கியில் நேரடி அதிகாரியாக நுழைந்து, எப்படி சவால்களை சந்திக்கிறான் என்பது கதையின் மீதி பகுதி.சூரஜ் முன்னேற கூடாது என்று உள்ளிருக்கும் ஒரு கூட்டம் சதி செய்கிறது. சூரஜ் அவர்களை, அவர்களின் ஆயுதம் கொண்டே வெல் கிறான். அவர்களிடமி ருந்து சூழ்ச்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்கிறான். அவர்களின் ஆயுதம் கொண்டு அவர்களையே வீழ்த்துவது சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

                      இது திரைப்படமாக எடுப்பதற்கு மிகவும் ஏற்ற படம். அசுரன், கர்ணன் போன்ற படங்களை விட விறுவிறுப்பான கதை. தனுஷ், பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் பார்வைக்கு இந்தத் திரைக்கதையை கொண்டு சென்றால், இதை வைத்து நிச்சயமாக திரைப்படம் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

Tuesday, 29 June 2021

புதிய கல்விக் கொள்கையும் தாய்மொழிகள் அழிப்பும்.



. "இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீகாரின் நிலையைப் பாருங்களேன்!"
1. "ஆனால் பீகாரின் தாய்மொழி போச்புரி மற்றும் மைத்திலி.'
'உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான்!"
"அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள்?"
2. "ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி!
வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி, பிரதாப்கர்!
மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப் படுகிறது!"
"அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி."
3. "ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி!"
"அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் !"
4, 'ஆனால் தாய்மொழி ஹரியான்வி!'
"ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி!"
5. "ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி!
'"மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி!"
6. "ஆனால் தாய் மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி,
பகேலி!"
7. 'காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது!"
8. 'ஜம்முவின் தாய்மொழி டோக்ரி, பாடி!'
9. "லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சி மொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது!"
10. "சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி!"
11. "'ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி!
ஆட்சி மொழி இந்தி!"
அ) "மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்பு க்களோ வருவதில்லை!
வரி வடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை மாறி, சுருங்கிவிட்டன!"
ஆ) "இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சி யும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன!"
இ.) "ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகி விட்டது. "
ஈ) "அவர்கள் தாய் மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழி ஆகிப்போயின.'
உ)" கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.'
i) "சரி ! மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை."
ii) "தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.'
iii) 'சரி! கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன!"
iv) "பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்க வேண்டுமல்லவா?"
"நான் உன்னோடு தொடர்பு கொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால் நீ என் மொழியைக் கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான அடக்குமுறை?"
'அந்த அடக்குமுறைதான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது; புதிய. கல்விக் கொள்கை வாயிலாக ..., "
இதை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்!"
இவண்
பகிரதன்
பட்டுக்கோட்டை
---------------------------------------------------------------------------------------------------------------------------





Saturday, 26 June 2021

அப்படி அய்யன்காளி என்னதான் செய்தார் மகாத்மா என்று சொல்வதற்கு ?

(1863,ஆகஸ்ட் 28...-18-6-1941) திருவாங்கூர் மன்னரின் ஆட்சி, கொடிகட்டி பறந்த நாட்கள்...ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, எண்ணற்ற ஒடுக்குமுறைகள், சுமத்தப்பட்டிருந்த, கொடிய நாட்கள்...ஒரு முறை, மகாத்மா காந்தி அய்யன்காளியை சந்தித்த போது கேட்டார்:"Mr.அய்யன்காளி, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்"?அய்யன்காளி பதிலாக"பாபுஜி.. எங்கள் சாதிகளைச் சேர்ந்த 10பேர், நான் இறப்பதற்கு முன்பு, BA பட்டதாரிகளாகி காண வேண்டும்"என்றார்...

மகாத்மாவால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை....ஒடுக்கப்பட்ட மக்கள், மேலாடை அணியக்கூடாது; இடுப்புக்கு கீழே, முழங்கால் வரைமட்டுமே ஆடை அணிய வேண்டும்; பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட மக்கள், பொது வழிகளில் நடக்கக்கூடாது; ஒடுக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் சென்று படிக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட பெண்கள், நகைகள் அணியக்கூடாது; ஒடுக்கப்பட்ட பெண்கள், தாங்கள் கீழ் சாதியினர் என்று அறிவிக்கும் வகையில், கழுத்தில், கல் மாலை தான் அணிய வேண்டும்; காதில், இரும்புத் துண்டுகளை மட்டுமே, கம்மலாக அணிய வேண்டும்; என்றெல்லாம், அன்றைய எசமானர்கள், ஆண்டைகள், #ஆச்சாரங்கள்/#மரபுகள்/#கீழ்வழக்கங்கள் என்ற பெயரில்,ஒடுக்கப்பட்ட மக்களை, குரூரமாக அடக்கி ஆண்டு வந்த காலம் அது...ஒடுக்கப்பட்ட மக்களின் #பெரும்குரலாக ஒலித்தது, #அய்யன்காளியின் குரல்!

#பஞ்சமி எனும் ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு, கல்வி மறுக்கப்பட்ட போது, அந்த இளம் குருத்தை அழைத்துக்கொண்டு ஊரூட்டம்பலம் பள்ளிக்கு சென்ற போது, ஆண்டைகள், அந்த பள்ளிக்கூடத்தை தீ வைத்து கொளுத்தியிருந்தனர்!விடவில்லை அய்யன்காளி.... மலபார் வரலாற்றின் முதல், விவசாயிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்; ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள், வயல்வெளிகள் வறண்டு போய் கிடந்தன;இறுதியில், #பஞ்சமிகள், பள்ளிக்கு சென்றனர்;

ஒடுக்கப்பட்ட மக்கள், நகர வீதிகளில், தெருக்களில், பொது வழிகளில் நடக்கக்கூடாது என்ற ஆண்டைகளின் உத்தரவை, மீற தயாரானார் அய்யன்காளி..

அவர் பிறந்த, வெங்ஙானூரில், கொழுத்த இரண்டு வெள்ளை நிற காளைகள் பூட்டப்பட்ட, வில் வண்டியில், ஜரிகை தலைப் பாகையும், முழு வேட்டி சட்டை, அங்க வஸ்திரத்தோடு, வெங்ஙானூர் வீதிகளில் புயல் வேகத்தில், களமிறங்கியது, அய்யன்காளி என்ற இளம் காளை... ஆண்டைகள் அதிர்ந்து போய் நின்றனர்!பிறகு நகர வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களோடு வீதிகளில் நடந்து சென்றார் அய்யன்காளி...

காட்டுமிராண்டித்தனமாக அய்யன்காளியும், உடன் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்; ஓடி ஒளியவில்லை அய்யன்காளி.... தொடர்ந்தது போராட்டம்....வரலாற்றில், வில் வண்டி போராட்டம் என்று நினைவு கூரப்படுகிறது இந்த போராட்டம்...

புகழ்பெற்ற கல்மாலைப் போராட்டம்;

ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்க/வெள்ளி நகைகள் அணியும் உரிமை இல்லை...
தங்கள் கழுத்துகளில், கல்/ஒடு போன்றவற்றை கோர்த்து மட்டுமே மாலையாக அணிய வேண்டும்; காதுகளில் இரும்புத் துண்டுகளை, கம்மல்களாக அணிந்து கொள்ள வேண்டும்;இது, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிவிக்கும் அடையாளமாகவும் இருந்தது...
கல்(லு)மாலை போராட்டத்தில் இறங்கினார் அய்யன்காளி... நீண்ட நெடிய போராட்டம்; அதனால் தான் மக்கள் அவரை, #மகாத்மா #அய்யன்காளி என்று அழைக்கின்றனர்...
சாதியின் பெயரால், வர்ணத்தின் பெயரால், மக்களின் பெரும்பகுதியினர் ஒடுக்கப்பட்ட போது,#ஆச்சாரங்கள், #மரபுகள், #கீழ்வழக்கங்கள் என்ற பெயரில்,இழிவாக நடத்தப்பட்ட போது, அவற்றையெல்லாம், முட்டி மோதி, எதிர் கொண்டு, அனைத்தையும் தகர்த்தெறிந்த,மாவீரன், #மகாத்மா #அய்யன்காளியை #நினைவு கூர்வோம்...

#அய்யன்காளி நினைவு தினம் இன்று...#ShahulHameed
 #மகாத்மா #அய்யன்காளி.....
#மீள்...பதிவு 

Sunday, 20 June 2021

ஆங்கில சொற்கள் தமிழிலிருந்து தான் தோன்றியதா ?

 நான் அடிக்கடி நினைப்பது உண்டு .ஏன் ,இந்த தமிழர்களுக்கு இவ்வளவு  அதீத  ஆங்கில மோகம் என்று!சொல்லுக்கு சொல் ஆங்கிலம்  இல்லாமல் பேசுவதில்லை .  பல வீடுகளில் இப்போது  தமிழ் தெரியாது என்று பெருமையுடன் சொல்லும் குழந்தைகள் உள்ளனர்  ! அவர்கள் பெற்றோரின் முகத்திலும் அப்படி சொல்வதில்  ஒரு பெருமிதம் !'அவளுக்கு தமிழ் தெரியாது !'என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் .வீட்டிற்குள் நுழையும் முன்னே ஒரு குட்டிப் பெண்என்னிடம் ஓடி வந்து , 'கேன் யு ஸ்பீக் இங்கிலிஷ் ?'என்றாள் .நான் 'யெஸ் 'என்றவுடன் அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவேண்டுமே !வரும் தாத்தா ,பாட்டி ,மாமாக்கள் யாருக்கும்  இங்கிலிஷ் தெரியவில்லை என்பது அந்த பிஞ்சு மனதின் பெரிய குறை .மொத்தத்தில் ,தமிழருக்கும் ஆங்கிலத்திற்கும்   ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு , நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் உள்ளதோ என்று  நான் அடிக்கடி  நினைப்பதுண்டு .இப்போது அந்த நினைப்பு உண்மையாகி விட்டதோ என்று சொல்லும் படியாக ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது .அதில்  எனக்கு வியப்பு இல்லை தான் .

                          சிறு வயதில் இருந்தே 'எட்டிமொலஜி 'என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'வேர்ச்சொல்லியல் 'என் நெஞ்சம் கவர்ந்த ஆர்வம் .என்னுடைய 15 வயதிலே,என் நண்பர்கள் இரட்டை சடை பின்னால் அலைந்து கொண்டிருக்கும் போது ,நான் என்னுடைய அப்பாவின் சேம்பேர்ஸ் ஆங்கில அகராதியை எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடுவேன் .தினமும்  10 கிரேக்க வேர்ச்சொற்கள் படிப்பேன் .மனதில் வைத்துக்கொண்டு, பின்னர் அரசு மருத்துவ மனை சென்று அங்கு இருக்கும் ஆங்கிலப்  பெயர் பலகைகளை வாசித்து ,அதன் பொருளை ஊகிப்பேன் .எடுத்துக்காட்டாக ,'காது-மூக்கு -தொண்டை 'நிபுணரை,மருத்துவ துறை  ஆங்கிலத்தில்  'ஓட்டோ ரைனோ லரிங்கோலோஜிஸ்ட் 'என்பார்கள்   .எனக்கு கிரேக்க வேர்ச்சொல் தெரிந்ததால் 'ஓட்டோ =காது ,ரைனோ=மூக்கு , லரிங்கோ=தொண்டை ,லோஜிஸ்ட் =நிபுணர் 'என்று  எளிதில் கண்டுபிடித்து விடுவேன் !யாரிடமும் கேட்காமல் நானே கண்டுபிடிப்பது உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் .
                              பின்னர் வளர்ந்து நான் வங்கித்துறையில் பணியாற்றினாலும் ,வேர்ச்சொல் ஆர்வம் என்னிடம் வேர்கொண்டிருந்தது .2003 ல் ,  நாம் தமிழில் அன்றாடம் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ‘பழைய ‘ என்ற சொல் .இது  எப்படியோ ,கிரேக்க மொழியில் புகுந்து ,’பலயோ ‘என்று இருப்பதை , கண்டு பிடித்து வியப்படைந்தேன் .இந்த கிரேக்க சொல் ,ஆங்கிலத்தில்’ பலயோ ஸூலஜி ‘போன்ற பல ஆங்கிலச் சொற்களில் பயனாகிறது.இந்த சம்பந்தத்தைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினேன் .
என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில்  இந்த சொல் தமிழில் உள்ள சொல் தான் என்று உறுதியானது .அதை தகுந்த ஆதாரங்களுடன் 2003 வது வருடத்தில்,அமெரிக்காவில் இருந்து வெளியாகும்Linguist List ‘லின்குய்ஸ்ட் லிஸ்ட் ‘என்ற சர்வ தேச மொழி தளத்தில் பதிவு செய்தேன் .உலக மொழியிலாளர்களின் கவனத்தை இந்த பதிவு ஈர்த்தது .பல புகழ் பெற்ற மொழியிலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ,இதைக் குறித்து பல விதமான ஐயங்களை எழுப்பினார்கள் . மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் பேரா .லாரி ட்ராஸ்க் அவர்களும் இதில் உண்டு .அவைகளுக்கு எல்லாம் தகுந்த பதில் தந்து ,கிரேக்க தமிழ் தொடர்பு ஒரு ஜனன தொடர்பு என்பதையும் நிரூபித்தேன் .என்னுடைய முடிவுரையை முழுதுமாக '‘லின்குய்ஸ்ட் லிஸ்ட்'இதழ் வெளியிட்டது .(காண்க :ஜூன் 9,2003-14.1630.https://linguistlist.org/issues/14/14-1630.html )
                                              இதன் தொடர்ச்சியாக ,கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அதன் முடிவுகளை ,Proto-Indo-European Language-Face Unveiled'அதாவது ,' 'புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி --முகத்திரை வீழ்ந்தது !'(
புத்தகம் வாங்க இதை அழுத்தவும்  )என்ற ஆங்கில  புத்தகமாக கடந்த 2019ல்   வெளியிட்டிருக்கிறேன் .
                                       இந்த புத்தகத்தில் தமிழுக்கும் இந்தோ யுரோப்பியன் மொழிகளுக்கும் பொதுவான சொற்களை பட்டியலிட்டு காட்டியிருக்கிறேன் .அந்த பொதுவான சொற்கள் அன்றாடம் பயன்படும் சொற்களாகவும் ,பாலியல் பற்றிய சொற்களாகவும் இருப்பது இந்தோ யுரோப்பியன் மொழிகள் தமிழுக்கு எந்த அளவில் உறவு கொண்டுள்ளன என்பதை நிருபிக்கும் படியாக அமைந்துள்ளது .
ஆக ,தமிழ் தான் இந்தோ யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி என்பது இந்த புத்தகத்தில்சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது
.உங்களுக்கு தெரியுமா ,இந்த ஆங்கில சொற்களின் மூலம் தமிழ் தான் என்று ?
காட் God , ,போலீஸ் Police ,சாத்தான் Satan,Supreme....இன்னும் இது போல பல தமிழ் வேர்ச் சொற்கள்  ! இதை விட பெரிய விஷயம் ,வெளியே சொல்ல கூசும் தமிழ் கெட்ட வார்த்தைகள் எல்லாம் புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழியில் அப்படியே உள்ளது .'பீப் 'பாடலின் அந்த சொல் கூட உள்ளது !ஆங்கிலத்தில் பரவலாக பயன் படும் அந்த 4 எழுத்து கெட்ட வார்த்தைக்கு சரியான வேர்ச்சொல் ஆங்கிலத்தில்  இல்லை .ஆனால் ,அது தமிழில் உள்ளது !ஆக ,கெட்ட வார்த்தைகளே தமிழிலிருந்து சென்றிருந்தால் ,நல்ல வார்த்தைகளுக்கு சொல்லவா வேண்டும் !அவை 100 கணக்காக உள்ளன !
மறுக்க முடியாத ஆதாரங்கள் !
இந்த நூலில் தரப்பட்டிருக்கும் ஆதாரங்கள் யாராலும் மறுக்க முடியாதவை என்பதே இதன் தனி சிறப்பு .எடுத்துக்காட்டாக ,ஒரு சொல்லை விவாதத்திற்கு  எடுத்துக்கொள்வோம் .

ஆங்கிலம் -நேவி(Navy) ; தமிழ் -நாவாய்  !
இதில் உண்மையான வேர்ச்சொல் எது ?

ஆங்கிலத்தில் நேவி(Navy) என்ற சொல்லின் வேராக 
https://www.etymonline.com/word/navy 'எட்டிமான்லயன்'Etymonline என்ற அகராதி இவ்வாறாக கூறுகிறது :.

Navy (n )
early 14c., "fleet of ships," especially for purposes of war, from Old French navie "fleet; ship," from Latin navigia, plural of navigium "vessel, boat," from navis "ship," from PIE root *nau- "boat." Meaning "a nation's collective, organized sea power" is from 1530s. The Old English words were sciphere (usually of Viking invaders) and scipfierd (usually of the home defenses). Navy blue was the color of the British naval uniform. Navy bean attested from 1856, so called because they were grown to be used by the Navy.

இதில் நேவி(Navy) என்றால் 'கடற்படை' என்ற பொருள் வருகிறது .ஆனால் ,எப்படி அந்த பொருள் வந்தது என்று தெளிவாக இல்லை .புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி வேராக 'nau 'என்றால் 'படகு 'என்று சொல்லப்படுகிறது .ஆனால் ,புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழியிலோ அல்லது அதன் பிள்ளை மொழிகளிலோ எங்கும் படகுக்கு அப்படி சொல் இல்லை .இதைக்குறித்து நான் கிரேக்க வேர்ச்சொல் நிபுணர்களிடம் உறுதி செய்தேன் .

இனி தமிழ் சொல் 'நாவாய்'என்பதை எடுத்துக்கொள்வோம் .தமிழில் 'நாய் 'என்றால் 'முன் இழுத்து செல் 'என்ற 'lead 'என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராகும் .'நாய் 'வளர்ப்பவர்களுக்கு தெரியும் ,அது நம்மை முன்னே இழுத்து செல்லும் குணமுடையது என்று .ஆதலால் அதன் பெயர் 'நாய் ';நாயகன் கதையை  முன் நடத்தி செல்பவன் .நாய்க்கர் ,நாயர் படையில் முன்னின்று போரிடுபவர் .இந்த வழியில் 'நாவாய் ' என்பது கடற்படையின் முதல் கப்பல் .வழிகாட்டும் கப்பல் .ஆங்கிலத்தில் pilot 'பைலட் 'கப்பல் .பின்னர் கப்பல் தொகுதிக்கே இந்த சொல் பயனாகிவிட்டது .
ஆங்கில நேவி(Navy) சொல் கி.பி .1530 ல் தான் பயனுக்கு வந்திருக்கிறது  ; தமிழ் -நாவாய் கி .மு .காலத்திலே பயனில் உள்ள சொல் .

சென்னைப் பல்கலைக்கழக அகராதி  'நாவாய்'என்றால் என்ன பொருள் கூறுகிறது ?
ஆக , 'நாவாய்' என்ற சொல் ,தமிழ் சொல் தான் என்பது மறுக்கமுடியாது .
                              இதைப்போல் பல சொற்கள் ,இதுவரை அறியாத வேரியலுடன் ,இந்த  நூலில் தந்திருக்கிறேன் .புத்தகம் வாசித்து முடிக்கும் போது ,ஆங்கிலம் மட்டுமல்ல இந்தோ ஐரோப்பிய மொழிகள் யாவுமே தமிழின் பேத்திகள் தான் என்பது தெளிவாகும் .ஏனென்றால் ,புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழியே தமிழின் பிள்ளை தான் என்பது தெளிவு ! 
                           தற்போதைய மொழி வகுப்பின் படி ,தமிழை இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை .காரணம் ,மொழிக் குடும்பங்கள் வகுக்கப்பட்ட அந்தக் காலங்களில் ,இந்த தெளிவுகள் இல்லாததால் இருக்கலாம் .இவ்வளவு சொற்கள் பொதுவாகவும் ,தெளிவான வேருடனும் இருப்பதால் ,தமிழை இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேர்க்கும் படியான தேவை எழுவதை சுட்டிக் காட்டி ,பன்னாட்டு மொழியிலாளர்களுக்கு விரைவில் எழுதப் போகிறேன் . தெளிவுகளை ஆராய்ந்து அவர்கள் இதைக் குறித்த ஒரு நல்ல  முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------





Tuesday, 1 June 2021

ஸ்டாலின் கீழ் தி .மு .க ஆட்சி --10 நாள் சுவை !

 


                   'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு 'என்ற மனம் கவர் மெட்டோடு ஒரு  பாடல் தமிழகமெங்கும் தேர்தலுக்கு முன் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போது ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது .தமிழகம் பயந்தது போல் வாக்கு இயந்திரத்தின் கற்பும் பறிபோகவில்லை . ஸ்டாலின் வந்து விட்டார்.ஆட்சி கட்டிலில் ,பெரும்பான்மையோடு அமர்ந்து விட்டார் .

அடுத்த கேள்வி ,ஆக ,அவர் உறுதியளித்த  விடியல் தந்துவிட்டாரா ?

                                இந்த கேள்விக்கு பதிலளிக்க பத்து நாள் உண்மையில் பத்தாது.பொதுவாக ,100 நாள் ஆட்சியை தான் நிறுத்து பார்ப்பார்கள் . ஆனாலும் இந்த பத்து நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செய்தது இனி வரப் போன நாட்களில் அவர் செய்யப்போவதை  காட்டும் ஒரு முன்னோட்டமாக எடுத்தோம்  என்றால் ,நிச்சயமாக விடியல் வெகு வெளிச்சமாகவே  ஆரம்பித்துவிட்டது எனலாம் .இந்த 10 நாளில்  அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.

  • இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டு அரசியலில் நுழைத்திருக்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள் .எதிர்க்கட்சி தலைவரை கடைசி வரிசையில் அமர வைத்து அவமானப் படுத்திய  சர்ச் பார்க் எனும் பெரிய ஆங்கில கான்வென்டில் படித்த அம்மாவுக்கு  நேர்மாறாக,திரு  ஓ .பன்னீர்செல்வம் அவர்களுக்கு  தேனீர் விருந்து அளித்து  முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் .அதேபோல் தினமும்  வசைபாடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  நாகரீகமாக வரவேற்றது போன்ற பல காரியங்களை செய்கிறார் ஸ்டாலின் அவர்கள் .கலைஞர்  இறந்தவுடன் மெரினா கடற்கரையில் அவருக்கு சமாதி அமைக்க ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து கெஞ்சி கூத்தாடி தான் வாங்கினார். ஆனால் இன்று எடப்பாடி அவருடைய அரசு வீட்டை காலி பண்ணாமல் நீடிக்க ஸ்டாலின் அவர்களிடம்  கேட்டவுடன் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தது , இரண்டு பேருக்கும் உள்ள ஒரு வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும்  உள்ளது போல் தெளிவாக தெரிகிறது.
  • ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறும் நேரம் நல்ல நேரம் அல்ல.கொரோனாவின்  இரண்டாவது அலையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான நேரம் .அரியணையில்  அவர் அமர்ந்த உடன்  சூழ்ந்து நிற்கும்  பல சவால்கள்.முதல் சவால் கொரோனாவிடமிருந்து இவருக்கு வாக்களித்த பொது மக்களை காப்பாற்ற வேண்டும். இதை  ஸ்டாலின் அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டு நல்ல பேர் வாங்கி விட்டார். முதல் இரண்டு நாட்களுக்குள் அதிகாரிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்து  ஒரு கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்தை உருவாக்கி ,கொரோனா பரவாமல் தடுத்தார் .இருக்கும் மருத்துவ கட்டமைப்பை திறம்பட பயன் படுத்த வழி வகை செய்தார் .
  •  தேர்தலுக்கு முன்னர் வாங்கிய புகார் மனுக்களை உடனே சரி  செய்ய ஒரு தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தது பாராட்டுக்குரியது .
  •  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விஷயத்தில் நீதிபதி  அருணா ஜெகதீசன் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பல  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 93 பேருக்கு தலா ஒரு லட்சம் வைத்து இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .
  • பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் முதல் நாளிலே அறிவிக்கப்பட்டது.
  •  இவ்வாறாக இன்னும் பல நெடுநாள் காத்திருந்த காரியங்கள் உடனே செயல் படுத்தப்பட்டது .முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 10 நாளில் எடுத்த எல்லா முடிவுகளையும் நாம் இந்த பதிவில் அடக்கவில்லை .அதற்கு  இடமும் இல்லை.
  • எல்லாவற்றிலும் ஒரு  வெளிப்படைத்தன்மையும்  நம்பகத்தன்மையும் உள்ளது . 
  • முடிவுகள் வேகமாகவும் ,திறம்படவும் எடுக்கப்படுவது சிறப்பு .
  • அதிகாரம் முறையற்ற வழிகளில் கசியவில்லை என்பதும் சிறப்பு .

முதல்வரை சூழ்ந்திருக்கும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்ன ?முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று விட்டார் .ஆனால், இன்னும் பல சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது .அவைகள்  என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

  •  முதலாவதாக மத்திய அரசிடம் மாநிலம் பெறவேண்டியதை சரியான உத்தியில் பெறுவது .இதைப் பொறுத்தவரையில் இதுவரையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்ட கொரோனா  கட்டுப்பாடு மருந்துகள், மற்ற உதவிகள் எல்லாம் திருப்திகரமாகவே  வந்து கொண்டிருக்கிறது .முந்திய ஆட்சியை விட மத்திய அரசு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கொஞ்சம் சீக்கிரமாகவே செயல்படுவதாக தெளிவாக தெரிகிறது. ஆனாலும், குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு தனி கவனிப்பு நடப்பதை மறுக்க முடியவில்லை. இதையெல்லாம் மெதுவாக,ஆனால் ஒரு கண்டிப்புடன் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்பதில்  சந்தேகமில்லை.
மொத்தத்தில் இந்த பத்து நாள் ஆட்சிக்கு நாம் எளிதாக ஐந்துக்கு நாலு நட்சத்திரம் என்று மதிப்பீடு கொடுக்கலாம். இந்த கஷ்ட காலத்திலும் இவ்வளவு செய்தார் என்பது பெருமைக்குரிய விஷயம் .



இது ஒருபுறமிருக்க,இன்னும்  செய்யவேண்டிய பல காரியங்கள் உள்ளன. குறிப்பாக, இதுவரை அவர்    தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு என்பதை குறித்து ஒன்றும் சொல்லவில்லை. அதை செய்ய வேண்டும் .இரண்டாவதாக அவருடைய வெற்றிக்கு இரவு பகல் பாராது  உழைத்த தொண்டர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். இந்த ஐந்து வருட ஆட்சியில் அதிமுகவை இல்லாத கட்சியாக மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வுக்கு  மதிப்பளித்து தமிழர்களுக்கு ஆட்சியில்  அதிக உரிய பங்கு கொடுக்க வேண்டும்.

எனினும்  தமிழர்களுக்கு ஒரு விடியல்  வந்துவிட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.


Friday, 21 May 2021

தெலுங்கு உண்மையிலே சுந்தர தெலுங்கா ?

             


                       

                                தமிழ் பாடல்கள் கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது .சரி ,ஒரு மாற்றத்திற்கு ஒரு திராவிட (தெலுங்கு )பாட்டை கேட்போமே என்று ஒன்றை போட்டேன். ராம் சரண் ,கட்டை கால் சட்டையில் ,ஏதோ ஒரு பெயர் தெரியாத ஒரு கதாநாயகி குட்டை பாவாடையில், இருவரும் சேர்ந்து ஆடும் ஒரு செம பாடல்.

"குக்குரு குக்குரு குக்குரு 

குடுகுடு குடுகுடு 

அண்டி வண்டி ஹண்டி 

பண்டியோடு கண்ட்லு 

அப்புலு தட புடு "

                                  என்று கட புட  ஒலியுடன்  ஒரு தெலுங்கு  பாட்டு கேட்டேன் .நடனம் செம அழகாக இருந்தது. நாயகன் ,நாயகி அழகாக ஆடினார்கள்.காட்சி அமைப்பு பிரமாதமாக இருந்தது. ஆனால், சுந்தர தெலுங்கு தான் கடமுட கடமுட என்று ஆட்டுக்கல்லில் கருங் கல்லை போட்டு  அரைத்து போல  ஒரு தொனி  ! காதெல்லாம் வலிப்பது போல ஒரு உணர்வு !

                                             கேட்டு முடித்தவுடன் ,தெலுங்கு மொழியில் மெல்லிய ஒலி  என்று ஒன்று  கிடையாதோன்னு  நினைக்க வைத்தது அந்த பாடல் .இந்த ஒரு பாடல்  வைத்து  ஒரு மொழியின் இனிமையை தீர்மானிக்க முடியாது அல்லவா . ஆதலால்,ஒரு சின்ன மொழி  ஆராய்ச்சியில் இறங்கினேன் .

                                  தெலுங்கில் அதிகமாக சொற்களெல்லாம் லு ,டு ,போன்ற தொனியில் தான் முடிகிறது .அதாவது ,உயிர் மெய் எழுத்து தொனிதான் அதிகம் .ஆனாலும் , ஏனோ ஒரு இனிமையே  இல்லாமல் கட கட குடு குடு  என்ற  ஒரு சத்தத்தில் தான் மொத்தத்தில் கேட்கிறது .ஏன் ?

                                              தெலுங்கு சொற்களின் ஒலி நயத்தை ஆராயலாம் .எடுத்துக்காட்டாக ,ஏழுமலையான் என்கிற அழகான தமிழ் சொல் ,ஏடு கொண்டல வாடு என்று பல் உடைவது போல் தெலுங்கில் தொனிக்கிறது .எஸ்.பி.பி  என்று அன்பாக தமிழர்களால்  அழைக்கப்படும் தெலுங்கு பாடகர் எஸ். பி .பாலசுப்பிரமணியம் அவர்களின் முழு தெலுங்கு பெயரை  சொன்னால்  பல் உடைந்து விடும்! இதோ அவர் முழு பெயர்:Sripathi Panditaradhyula Balasubrahmanyam ஸ்ரீபட்டி பண்டிட்டாராட்யுலா பாலசுப்ரமணியம் !அப்பாடா ,ஏன் அவர் பெயரை எஸ்.பி.பி என்று  சுருக்கி வைத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறதா? 

இவர் பெயர் மட்டுமில்லை, தெலுங்கு பெயர்கள்  அதிகமாக இப்படித்தான் இருக்கிறது.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

  • நண்டமுறி தாரக ராம ராவ் (என் .டி .ஆர் )
  • அல்லரி நரேஷ் 
  • டெஜ்ஜா சஜ்ஜா 
  • பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் 
  • விஸ்வக் சென் நாயுடு 
  • சமந்தா அக்கினினி 
  •  கண்டசாலா

                        சரி, ஆட்கள் பெயர்கள் தான் எப்படி இருக்கிறது, ஊர்ப்பெயர்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சிக்குள்  இறங்கினேன்.அதுவும் ரேணிகுண்டா, ஏராகுண்டலு, காஜுவாகு,  அணக்கபள்ளி ,விஜயவாடா ,காக்கிநாடா ,ராஜமுந்திரி  போன்ற சடுகுடு பெயர்கள்தான் அதிகம் உள்ளன. அனந்தப்பூர், சித்தூர் போன்ற அழகான பெயர்கள் எல்லாம் தமிழ் மொழி அடிப்படையில் அமைந்தவை தான். ஆக ஆட்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் இவை எல்லாமே  தெலுங்கிலே ஒரு கடினமான தொனியிலே  அமைந்துள்ளது தெளிவு .                                                                        ஆக ,எதைவைத்து தெலுங்கை சுந்தர தெலுங்கு என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை. பாரதியார் ஒரு பாடலில் 'சுந்தர தெலுங்கினில்' என்று  பாடலுக்காக ,எதுகை மோனைக்காக பயன்படுத்தியிருக்கிறார் .
"சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்."
 இந்த பயன்பாடை  ஒரு மொழியின் குணத்தை சொல்லும் சொல்லாக  எடுக்க முடியாது. அந்த ஒற்றை சொல் கொண்டு 'சுந்தர தெலுங்கு' என்று பேசு பொருளாக்கி, ஊதி விட்டார்கள் ஊடகத்தார் .தமிழ் மொழியின் இயல்பு, இனிமை, இசை போன்ற பேச்சு, இவை ஒன்றும் தெலுங்கு இதில் கிடையாது. ஆக இதிலும் ஊடகங்கள் சதிசெய்து தமிழை பின் தள்ளிவிட்டு, தெலுங்கை சுந்தரத் தெலுங்கு  என்று தமிழரிடையே அடையாளப்படுத்தி விட்டார்கள் . 
                               இந்தியாவில் மொழியியலில் ,வாழ்வியலில் எல்லாவற்றிலும்    தமிழைத் தவிர எல்லா  மொழிகளையும்  முன்னிலைப்படுத்தும் ஒரு போக்கு இந்திய மொழியியலில் பலநூறு  ஆண்டுகளாக உள்ளது.இது ,ஊடகங்கள், தமிழின் மௌன எதிரிகளான பிராமணர்கள் கையில் இருந்ததன் விளைவு என கொள்ளலாம் .
                         நான் இதை எழுதுவதற்கு காரணம் ,தெலுங்கின் மேல் உள்ள  வெறுப்பினால் அல்ல. தமிழின் பெருமையை தமிழ் நாட்டிலே மறைக்க, தெலுங்கை முன்னிறுத்தி, நம்மை முட்டாளாக்க நினைப்பதை வெளிக்கொணரவே என்பதே  என்று  கூறிக் கொள்கிறேன் .தமிழின் பெருமையை ,தமிழ் மொழி குடும்பத்தினரான தெலுங்கர் ,கன்னடர் ,மலையாளிகள் யாரும் ஒரு தடவை கூட ,தவறி கூட சொன்னதில்லை .ஆனால் ,தமிழர்களை  அவர்கள் மொழியை பற்றி அப்படித் தந்திரமாக சொல்ல வைக்கிறார்கள் .
தமிழை ,தமிழர்களை குறித்து  தெலுங்கர் ,கன்னடர் ,மலையாளிகள் எப்படி சொல்லுகிறார்கள் ? தெலுங்கர்கள் ,தமிழ் மொழியை கேவலப்படுத்த ,அதை 'அரவம் 'என்கிறார்கள் .அரவம் என்றால் பாம்பு .தமிழ் பேசினால் பாம்பு அசைவது போல் உள்ளதாம் !கன்னடர்கள் தமிழர்களை 'கொங்கா 'என்றும் மலையாளிகள் தமிழர்களை 'பாண்டி'யென்றும்  கிண்டலாக கூப்பிட ,தமிழர்கள்  மட்டுமே இவர்களை மரியாதையுடன் ,பட்டப் பெயரின்றி அழைக்கிறோம் .ஆக தமிழர்கள், தாம் ஏமாளிகள் என்பதை மாற்றிக் காட்டுவோம் .நம் தமிழின் பெருமையை பற்றி பேசுவோம் .சுந்தர தெலுங்கு என்று சொன்னதை நம்ப வேண்டாம் . 

Monday, 3 May 2021

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிறித்தவ பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்?



இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்! அவைகளில் சிலவற்றை நாம் என்னவென்று பார்ப்போம்...பா ர்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,

வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிடிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு புதிய சட்டத்தை
ஏற்றி நம் அடிமை வாழ்க்கையை மாற்றத் தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804 யில் பெண் சிசுக்கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்.
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஆனால் ஒரு பிராமணன் தன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். அதற்கு தண்டனை கிடையாது. அவனால்
கெடுக்கப்பட்ட பெண் கடவுளுக்கு அவள் உடலை அர்ப்பணித்ததாக கருதப்படுவாள். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது!
சூத்திரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாட்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பிராமணன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்திரனும்
கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை
1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பார்ப்பனிச இந்து மனு தர்ம சட்டத்தின் கொடுமைகள் அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்து மனு தர்ம சட்டத்தை ரத்து செய்ய சாதி கொடுமைகளை வேரறுக்கப் போராடியவர் ஐயா #தந்தை #பெரியார்.
இவர் மட்டும் இல்லை என்றால் பார்ப்பானைத் தவிர மற்ற சமுதாய மக்கள் இன்னும் ஆதிவாசிகளாக தான் இருப்போம்.
இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் மகாத்மா
ஜோதிராவ் புலே அவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது, அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
சூத்திரனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.
மீடியாக்கள் இருக்கலாம்
ஆள் பலம்
படை பலம்
பண பலம்
ஏன் அரசாங்க பலம் கூட
இருக்கலாம்.
ஆனால், பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கருத்தியல் ஆயுதங்கள் உண்டு.

- பகிர்வு

Wednesday, 7 April 2021

பிராமணாள் கபே ---மற்றவா உள்ளே வராதீங்கோ !



ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.

பிராமணர் அல்லாதார்
உள்ளே சென்று
உட்கார்ந்து சாப்பிட முடியாது.
எடுப்புச் சாப்பாடுதான்
வாங்கிச் சென்று
வெளியே சாப்பிட வேண்டும்.
சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.
இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை
வைக்கப்பட்டு இருந்தது.
இது மட்டுமல்ல.
இருப்புப் பாதைகள் போடப்பட்டு,
இரயில் பயணம்
தொடங்கிய காலத்தில்,
நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக
உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என
இந்து மத வேதியக் கூட்டம்
இரயில்வே நிர்வாகத்தைக்
கேட்கும் அளவுக்குப்
பேதங்கள் மோசமாக இருந்தன.
*இயக்கத்தின் தொடக்கம்*
இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க ‘திராவிடர் சங்கம்’ என்று புதுப் பெயர் பெற்றது
பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம்,
காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
பிராமணர் அல்லாதோர் நிலை
அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%.
கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன?
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!
கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன?.
1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.
திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால்,
1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது.
இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார்.
பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.
ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம்.
டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!
*திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்*
திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள்.
2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து மேற்கொண்டுவரும் மாற்றங்கள்.
3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.
*இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உருவாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு.*
ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.
*நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்*
■ நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).
.■ பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).
■ கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.
.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).
.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).
.கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).
.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).
.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).
*சமூகமாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்*
கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே
இருந்த நிலையில்,
பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;
பனகல் அரசர் என்ன செய்தார்?
ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை
இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர்
பனகல் அரசரையே சேரும்.
சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300,
தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.
இந்த பேதம் நீக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.
நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.
பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான்,
1921-ல் பள்ளிகளில்
இலவச நண்பகல் உணவு அளித்தார்.
இதற்காக
சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை
நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.
இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.
இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது.
பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.
பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன்.
தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.
*திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்*
திமுகவின் முதல் முதல்வரான அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார்.
1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்.
3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு.
4. அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை.
(# பதிவர் பெயர் தெரியவில்லை. பதிவர் இக்கட்டுரையை படித்தால் பின்னூட்டமிடவும்..)
0 comment